சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

மாய மோதிரம் (7) - இருகூர் இளவரசன் Khan11

மாய மோதிரம் (7) - இருகூர் இளவரசன்

Go down

மாய மோதிரம் (7) - இருகூர் இளவரசன் Empty மாய மோதிரம் (7) - இருகூர் இளவரசன்

Post by *சம்ஸ் Thu 20 Oct 2011 - 6:36

இதுவரை: முகுந்தன், மணிகண்டன், கணேசன் மூவரையும் கடத்தினார் குஷ்வந்த் சிங். இவர்களை காணாது தவித்தார் ஆசிரியர். இனி-

பள்ளிக்கூடம் செல்லும் பாதையில் வேன் போகாமல் வேறுபாதையில் செல்வதை உணர்ந்தான் முகுந்தன்.
""சார்... பள்ளிக்கூடம் வேற ரூட்ல இருக்கு... வேன் வேற ரூட்ல போகுது!'' என்றான் முகுந்தன்.
""தெரியும் முகுந்தன்... ஏற்கனவே, உன் பிரண்ட்ஸ் வாத்தியார் திட்டுவார், அடிப்பார்ங்கற பயத்துல இருக்காங்க, அதனால உங்க வாத்தியாரை என் இடத்துக்கு வரஅழைத்து, நான் சமாதானம் பேசறேன். படிக்கற பசங்க பயமில்லாமல் படிச்சாத் தானே படிப்பு நல்லா வரும் இல்லையா?''
""ஆமாங்க சார்... ஆனா, எங்க வாத்தியார் ரொம்ப நல்லவர். அவர் அன்பாதான் நடந்துக்குவார். இவனுங்க தினமும் படிக்காமலும், எழுதாமலும் வந்ததாலதான் கொஞ்சம் கண்டிப்பா நடந்துக்கிட்டாரு சார்,'' என்றான்.
""எப்படியோ, நடந்தது நடந்திடுச்சு. இனிமே சமாதானம் பண்ணாம அனுப்பறது அவ்வளவு சரியா இருக்காது, நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க, உங்களுக்கு நான் இருக்கேன்!'' என்றார் சிங்.
வேன் பெங்களூர் சாலையில் அதிவேகமாகச் சென்றது. வெகுநேரம் வேன் போய்க் கொண்டிருந்தது. பாதையின் அந்தப்புறமும், இந்த புறமும் வீடுகளோ, கடைகளோ எதுவும் காணப்படவில்லை. பச்சை பசேலென்று காட்டுப் பகுதியாகவே தென்பட்டது.
குஷ்வந்த் சிங் சற்று தூரம் எனக் கூறித்தான் வேனை ஓட்டிக்கொண்டிருந்தார். ஆனால், வேன் சென்னையில் விட்டு வெகுதூரம் சென்று கொண்டிருப்பதை முகுந்தன் உணர்ந்தான்.
""சார்... எங்க போயிட்டு இருக்கீங்க?'' எனக் கேட்டான் முகுந்தன்.''
""என்னோட இடத்துக்குத்தான். அங்க உங்க ஆசிரியரை வர வைக்கிறேன். கவலைப்படாதீங்க... இப்ப உங்களுக்குப் பசிக்குதுன்னா சொல்லுங்க... சாப்பிட இந்த வேன்ல பிஸ்கட், பிரட், கேக், பால் இதெல்லாம் இருக்குது,'' என்றார்.
முகுந்தன் யோசித்தான்.
""டேய்... எனக்கு பசிக்குதுடா,'' என்றான் மணிகண்டன்.
""ஆமாண்டா... எனக்கும் பசிக்குதுடா,'' என்றான் கணேசன்.
ஒரு பெரிய புளியமரத்தின் நிழலில் வேனை நிறுத்தினார் சிங்.
வேனிலிருந்து இறங்கினார்.
அந்தப் பகுதி வனாந்திரமாய் தெரிந்தது. ரோட்டில் லாரிகளும், கார்களும், அவ்வப்போது பஸ்களும் சென்று கொண்டும்,வந்து கொண்டுமாய் இருந்தன.
ஒரு ஸ்வீட் பாக்ஸ் ஒன்றை எடுத்துத் திறந்தார் சிங். அதில் லட்டுகள் நிறைந்து காணப்பட்டன.
""இந்தாங்க, இஷ்டம் போல எடுத்துக்குங்க,'' என்றார் சிங்.
மணிகண்டனும் இரண்டு லட்டுகளையும் கணேசன் இரண்டு லட்டுகளையும் எடுத்துக்கொண்டனர். முகுந்தன் யோசித்து, ஒரு லட்டை எடுத்தான்.
""சாப்பிடுங்க...கேக் தர்றேன்!'' என்றார் சிங்.
அவசர அவசரமாக லட்டை சாப்பிட்டு முடித்தனர்.
வேறு ஒரு கேக் பாக்ஸைத் திறந்தார் சிங். கேக்கின் மீது கிரீமும், அதன்மீது ஜெர்ரீ பழமும் தெரிந்தது.
""கூச்சப்படாதீங்க, உங்கள் இஷ்டப்படி எடுத்துக் கொள்ளுங்கள்,'' என்றார்.
இரண்டு, இரண்டு கேக்குகளாக எடுத்துச் சாப்பிட்டனர். கேக்களும், லட்டுகளும் மிகவும் சுவையாக இருந்தது. காரும், பெரியவீடுமாய் இருப்பவர் சிங். இவர் தரும் தின்பண்டங்கள் சாதாரணமானதாவா இருக்கும். ஏதோ இன்று தங்களுக்கு அதிர்ஷ்டம் அடித்தது என்றே மூவரும் நினைத்தனர். பிறகு, ஒரு பிளாஸ்க்கை எடுத்தார். பிளாஸ்டிக்கிலான மூன்று டம்ளர்களை எடுத்துப் பிளாஸ்கிலிருந்து பாலை ஊற்றிக் கொடுத்தார். இதமான சூடும் நல்ல இனிப்புமாய் பால் மிகுந்த சுவையைத் தந்தன. மூன்று பேரும் அதைச் சுவைத்துச் சுவைத்துக் குடித்தனர்.
""கார்ல ஏறிக்குங்க... '' என்றார் சிங்.
""சார்... நாங்க கார்ல ஏறிக்கிறோம், ஆனா ஸ்கூலுக்கு உங்க வண்டியை ஓட்டுங்க, எதுன்னாலும் ஸ்கூல்ல போயி பேசிக்கலாம். எங்க வாத்தியார் உங்களை நேர்ல கண்டாலே பயப்படுவார். அதுமட்டுமில்ல, நீங்க எங்களுக்காக சப்போர்ட் பண்ணிப் பேசினா அதுக்கப்புறம் எங்களை ஸ்கூலை விட்டு அனுப்பறேன்னு சொல்லவே மாட்டார்,'' என்று மணிகண்டன் சொன்னான்.
""ஆமாம் சார்... நீங்க எங்க வாத்தியாரை கொஞ்சமாய் மிரட்டினால் போதும் சார்,'' என்றான் கணேசன்.
""இதப்பாருங்கப்பா... நீங்க என்கிட்ட வந்து சேர்ந்துட்டீங்க இல்ல, இனிமே நீங்க எதுக்காவும் கவலைப்படவேண்டாம். உங்களுக்காக நானிருக்கேன். என்னை மீறி உங்களை யாரும் எதுவும் செய்திட முடியாது. நீங்க வண்டியில, "ஜம்மு'ன்னு உட்காருங்க. மத்தத்தை நான் பார்த்துக்கறேன்,'' என்றார் சிங்.
முகுந்தனும், மணிகண்டனும், கணேசனும் வண்டியின் பின் இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்தனர். சிங் தான் உட்கார்ந்திருந்த டிரைவர் சீட்டில் உட்கார்ந்து வேனைச் செலுத்தினார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மாய மோதிரம் (7) - இருகூர் இளவரசன் Empty Re: மாய மோதிரம் (7) - இருகூர் இளவரசன்

Post by *சம்ஸ் Thu 20 Oct 2011 - 6:36

வண்டி சற்று தூரம்தான் சென்றிருக்கும் முகுந்தனுக்குத் தூக்கம் வருவது போல இருந்தது. விழிகள் மூடுவதும், திறப்பதுமாய் இருந்தான். பக்கத்திலிருக்கும் மணிகண்டனும், கணேசனும் தூங்கிவிட்டிருந்தைப் பார்த்தான். சற்று நேரத்தில் முகுந்தனுக்கும் தூக்கம் வந்தது.
சிங் வண்டியை ரோட்டு ஓரமாக நிறுத்தி மூவரையும் பார்த்தார். மூவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். இது உறக்கம் அல்ல... சிங் கொடுத்த பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்திருந்தார். அதனால் ஏற்பட்ட மயக்கம்தான் என்பது முகுந்தனுக்கோ, மணிகண்டனுக்கோ, கணேசனுக்கோ தெரியவில்லை.
சிங் தனக்குள் சிரித்துக்கொண்டார். முகுந்தனோ மற்ற இந்த இரண்டு சிறுவர்களோ தனது காரில் ஏறியதை யாரும் பார்க்கவில்லை என்பது சிங்குக்கு நன்றாகத் தெரியும். மற்றவர்களைப் பொறுத்தவரையில் இந்தப் பிள்ளைகள் பள்ளிக்கூடம் சென்றவர்கள் என்றே நினைப்பர். பெங்களூர் 160 கிலோ மீட்டர் என்கிற ஒரு அறிவிப்புப் பலகையைக் கடந்து சிங்கின் கார் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தது.
ஆசிரியர் முத்துக்குமார் தன் வகுப்பில் டென்சனாகி அங்கும், இங்குமாக நடந்து கொண்டிருந்தார். மணிகண்டனும், கணேசனும் கோபித்துக் கொண்டு பள்ளிக்கூடம் வராமல் இருப்பதற்குக் காரணம் தான்தானே! இது தலைமை ஆசிரியர்களுக்கோ, மற்றவர்களுக்கோ தெரிந்தால் தன் மீது நடவடிக்கை எடுத்து விடுவார்களே... என்கிற பயம் அவரது மனதில் எழுந்தது. எப்படியோ இரண்டு மாணவர்களையும் அழைத்து வர முகுந்தன் சென்றிருக்கிறான். எப்படியாவது அழைத்துவந்து விட்டால் அந்த மாணவர்களுக்கு சமாதானம் சொல்வதோடு, இனிமேல் கடுமையாக நடந்து கொள்ள மாட்டேன் என்கிற விஷயத்தையும் பேசியாக வேண்டும் என, நினைத்தார். அவ்வப்போது கிளாஸ் ரூமை விட்டு வெளியே வந்து பார்த்தார். பள்ளிக்கூடத்தின் காம்பவுண்டு சுவர் அருகே இருந்த கேட் திறந்தே இருந்தது. இதோ வந்து விடுவார்கள்... இதோ வந்து விடுவார்கள் என்று ஆசிரியர் வெகுநேரமாகக் காத்து நின்றார்.
முகுந்தனும் வரவில்லை, மற்ற இரு மாணவர்களும் வரவில்லை என்றதும் ஆசிரியர் மனதில் பயம் கவ்விக்கொண்டது. நெஞ்சு பட படத்தது. உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டியது. இண்டர்வெல் பெல் அடிக்கப்பட்டு, பிறகு, மாணவர்கள் வகுப்பில் கூடினர். முகுந்தன் சொன்ன இடம் வரையில் தாமே சென்று பார்த்து விட்டு வந்தால் என்ன? என நினைத்தார் ஆசிரியர். காத்துக்காத்துப் பொறுமையை இழந்து விட்டார். அவரது வகுப்பில் இருக்கும் மாணவி சித்ராவை அழைத்தார்.
""சித்ரா... மாணவர்களை சத்தம் போடாமல் பார்த்துக்கொள். யாரேனும் குறும்பு செய்தால் அவர்கள் பெயரை ஒரு பேப்பரில் எழுதி வை. நான் முகுந்தன், மணிகண்டன், கணேசனையும் சந்தித்து அழைத்து வருகிறேன்,'' எனக்கூறி வகுப்பு அறையை விட்டு வெளியேறினார்.
தான் வந்த பைக்கை எடுத்துச் சென்றால் தலைமையாசிரியர் பார்த்து விடுவார். "எங்கே செல்கிறீர்?' என விசாரித்தால், அவருக்கு விஷயத்தைச் சொல்லியாக வேண்டும். தலைமை ஆசிரியருக்கு விஷயம் தெரியாமலே இருக்கட்டும். தன்னால் எழுந்த பிரச்னையைத் தானே தீர்த்துக் கொள்ளலாம் என, நினைத்து வேகமாக நடந்தே சென்றார். கேட்டைக் கடந்து ரோட்டுக்கு வந்து நின்றார். அவர் கண்களுக்கு எட்டிய தூரம் வரையில் முகுந்தனோ, மற்றவர்களோ தெரியவில்லை.
முகுந்தன் சொன்ன மரத்தடி நோக்கி நடத்தார். ஏறக்குறைய ஒரு கிலோமீட்டர் தூரத்தை அதிவேகமாக நடந்து பதினைந்து நிமிடத்தில் அடைந்து விட்டார். அங்கு யாரையும் காணவில்லை.
"இந்த இடத்தைத்தானே முகுந்தன் சொன்னான். யாரையும் காணவில்லையே... வேறு எங்கு சென்றிருப்பார்கள்? ஒருவேளை அவரவர்கள் வீட்டிற்கே சென்றிருப்பார்களோ... ஆசிரியரால் அங்கு நிற்க முடியவில்லை. மனதில் பலவிதமான கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தது. மணிகண்டனும், கணேசனும் பள்ளிக்கூடம் வரவில்லை. ஆனால், முகுந்தன் பள்ளிக்கூடம் வந்திருந்தான். பெயர் பதிவேட்டில் அவன் பள்ளிக்கூடம் வந்ததற்கான குறியீடும் போட்டு ஆயிற்று. பள்ளிக்கூடம் வந்தவனை பள்ளிக்கூடம் நடக்கும் நேரத்தில் எங்கே அனுப்பினீர்கள்? என்று கேட்டால் அவர்களுக்கு என்ன பதில் சொல்வது? என்கிற பயம் வேறு ஆசிரியருக்கு எழுந்தது.
""ஆண்டவா... எப்படியாவது இந்தப் பிள்ளைகள் பள்ளிக்கூடம் வந்து சேர்ந்துவிட வேண்டும்,'' என்று மனதிற்குள் வேண்டிக்கொண்டு பள்ளிக்கூடம் நோக்கித் திரும்பினார்.
சிங்கின் கார் ஓசூர் என்கிற ஊர்ப்பக்கமாய் வந்து மெயின் ரோட்டிலிருந்து ஒரு திருப்பத்தில் திரும்பி சென்றது. உயரமான யூக்காலிப்ஸ் மரங்களுக்கு நடுவே, இந்த மண்பாதையில் அந்தக் கார் சென்றது. காம்பவுண்டு உள்ள ஒரு கட்டிடம் தெரிந்தது. அந்தக் காம்பவுண்டில் கறுப்பு நிறத்தில் பெரிய கேட். கேட்டில் வாட்ச்மேனாக பச்சை நிற பேண்டு, சட்டை தொப்பியுடன் ஒருவன் நின்றிருந்தான்.
சிங்கின் காரைப் பார்த்ததும் அந்த வாட்ச்மேன் சல்யூட் அடித்தான். பிறகு கேட்டைத் திறந்து விட்டான். கேட்டிற்குள் அந்தக் கார் சென்றதும் கேட்டை மூடிக்கொண்டான்.
பச்சை நிற யூனிபார்மில் பல ஆட்கள் அந்தக் காம்பவுண்டுக்குள் அங்கு இங்குமாய் நடமாடிக் கொண்டிருந்தனர்.
சிங் ஒரு இடத்தில் காரை நிறுத்தினார்.
காரின் அருகே ஒருவன் வந்து நின்றான்.
""பாஸ்... நமஸ்தே பாஸ்,'' என்றான்.
""நமஸ்தே... வண்டிக்குள்ள மூணு பசங்க மயக்கமாய் இருக்காங்க... இவங்களை ஒரு ரூம்ல அடைச்சு வெச்சு பயன்படுத்திக்குங்க!'' என்றார்.
மயக்கமாய் இருக்கும் முகுந்தன், மணிகண்டன், கணேசன், மூவரையும் அங்கிருந்த ஆட்கள் காரிலிருந்து தூக்கிக் கொண்டு ஒரு கட்டிடத்திற்குள் சென்றனர்.
- தொடரும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum