சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா வெற்றி ரெய்னா, கோக்லி அபாரம் Khan11

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா வெற்றி ரெய்னா, கோக்லி அபாரம்

3 posters

Go down

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா வெற்றி ரெய்னா, கோக்லி அபாரம் Empty இங்கிலாந்துக்கு எதிரான 4-வது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா வெற்றி ரெய்னா, கோக்லி அபாரம்

Post by *சம்ஸ் Mon 24 Oct 2011 - 6:32

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா வெற்றி ரெய்னா, கோக்லி அபாரம் 371ec28e-31ef-4795-8679-780e56b952d3_S_secvpf
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் 3 ஆட்டங்களிலும் அசத்திய இந்திய அணி `ஹாட்ரிக்' வெற்றியை பெற்று தொடரை கைப்பற்றி விட்டது. இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 4-வது ஒரு நாள் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது.

இந்திய அணியில் காயமடைந்த உமேஷ் யாதவுக்கு பதிலாக வருண் ஆரோன் இடம் பெற்றார். இங்கிலாந்து அணியில் இரு மாற்றமாக டெர்ன்பேச், ஸ்வான் நீக்கப்பட்டு போர்த்விக், ஸ்டூவர்ட் மீகெர் சேர்க்கப்பட்டனர். இதில் வருண், மீகெர் ஆகியோருக்கு இது தான் முதலாவது சர்வதேச போட்டியாகும். இயான் பெல்லுக்கும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

இந்த போட்டியின் முடிவு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்ற போதிலும் ஆறுதல் வெற்றியை பெறும் நோக்குடன், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. இதன்படி பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து கேப்டன் அலஸ்டயர் குக்கும், கீஸ்வெட்டரும் முதல் 2 ஓவர்களை மெய்டனாக்கினார்கள். இதன் பிறகு அடுத்த சில ஓவர்களில் கீஸ்வெட்டர் திடீர் தாக்குதல் நடத்தினார். வினய்குமார், அஸ்வின் ஓவர்களில் தலா ஒரு சிக்சர் பறந்தன. ஆனால் அவரது அதிரடிக்கு ஆயுசு குறைவு. குக் 10 ரன்கள்(19 பந்து) எடுத்த நிலையில் தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். பிரவீன்குமார் வீசிய அடுத்த ஓவரில் கீஸ்வெட்டரும் (29 ரன், 18 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) எல்.பி.டபிள்யூ.க்கு வீழ்ந்தார்.

இதைத்தொடர்ந்து ஜோனதன் டிராட்டும், கெவின் பீட்டர்சனும் அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இவர்கள் ஓரளவு அணியை சகஜ நிலைக்கு கொண்டு வந்தனர். 18.4 ஓவர்களில் இங்கிலாந்து 100 ரன்களை கடந்தது. இந்த ஜோடியின் ஆட்டம், இங்கிலாந்து அணி 300 ரன்களை நெருங்கலாம் என்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால் ஆபத்தான இந்த ஜோடியை ஸ்கோர் 112 ரன்களை (21.3 ஓவர்) எட்டிய போது, வினய்குமார் உடைத்தார். அவரது பந்து வீச்சில் டிராட் (39 ரன், 48 பந்து, 5 பவுண்டரி) ஸ்டெம்பை பறிகொடுத்தார்.

இதைத் தொடர்ந்து, வேகம் குறைந்த இந்த ஆடுகளத்தில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வினும், ரவீந்திர ஜடேஜாவும் எதிரணிக்கு கடுமையான சோதனையை கொடுத்தனர். பீட்டர்சன் (41 ரன், 61 பந்து, 3பவுண்டரி, ஒரு சிக்சர்), அடுத்து வந்த ரவி போபரா (8 ரன்), பேர்ஸ்டோ (9 ரன்), சமித் பட்டேல் (14 ரன்) ஆகியோர் வரிசையாக சுழற்பந்து வலையில் சிக்கினர். இந்த தொடரில் 3-வது முறையாக சுழற்பந்து வீச்சில் இங்கிலாந்தின் பலவீனம் வெளிப்பட்டது. இருப்பினும் இறுதி கட்டத்தில் டிம் பிரிஸ்னன் தாக்குப்பிடித்து ஆடியதால், அந்த அணி 200 ரன்களை தாண்டியது. அறிமுக வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் தனது பங்குக்கு கடைசி 3 விக்கெட்டுகளையும் கிளீன் போல்டாக்கி கலக்கினார்.

கடைசி விக்கெட்டாக வெளியேறிய பிரிஸ்னனும் (45 ரன், 45 பந்து, 6 பவுண்டரி) அடக்கம். முடிவில் இங்கிலாந்து அணி 46.1 ஓவர்களில் 220 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய தரப்பில் அஸ்வின், வருண் ஆரோன் தலா 3 விக்கெட்டுகளும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். பின்னர் 221 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு தொடக்கம் மோசமாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர் பார்த்தீவ் பட்டேல் (8 ரன்), அடுத்து வந்த கவுதம் கம்பீர்(1 ரன்) இருவரும் ஸ்டீவன் பின்னின் பந்து வீச்சுக்கு இரையானார்கள்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரரும், உள்ளூர் நட்சத்திருமான ரஹானேவும் (20 ரன், 37 பந்து) நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 46 ரன்னுக்குள் 3 விக்கெட் (13.5 ஓவர்) சரிந்ததால் இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இந்த சூழலில் விராட் கோக்லியும், சுரேஷ் ரெய்னாவும் 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து, அணியை சிக்கலில் இருந்து படிப்படியாக மீட்டெடுத்தனர். அணிக்கு ஆபத்பாந்தவன்களாக கைகொடுத்த இருவரும், இங்கிலாந்தின், `முதல் வெற்றி' கனவை சிதைத்தனர்.

இங்கிலாந்தின் பந்து வீச்சை மிக நேர்த்தியாக சமாளித்தது மட்டுமின்றி, அவ்வப்போது பந்தை எல்லைக்கோட்டிற்கு விரட்டி ரசிகர்களையும் குஷிப்படுத்தினர். இதில் மிகவும் அதிரடி காட்டிய ரெய்னா 80 ரன்கள் (62 பந்து, 12 பவுண்டரி) விளாசி ஆட்டம் இழந்தார். ரெய்னா-கோக்லி ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 113 பந்துகளில் 131 ரன்கள் குவித்தது வெற்றிப்பாதையை சுலபமாக்கியது. இதன் பின்னர் கோக்லியுடன் கேப்டன் டோனி ஜோடி இணைந்தார். இருவரும் அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

கோக்லி பவுண்டரி அடித்து இலக்கை எட்ட வைத்தார். இந்திய அணி 40.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 223 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கோக்லி 86 ரன்களுடனும் (99 பந்து, 11 பவுண்டரி), கேப்டன் டோனி 15 ரன்களுடனும் (18 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர். ரெய்னா ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டி கொண்ட தொடரில் 4-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கொல்கத்தாவில் நாளை நடக்கிறது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா வெற்றி ரெய்னா, கோக்லி அபாரம் Empty Re: இங்கிலாந்துக்கு எதிரான 4-வது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா வெற்றி ரெய்னா, கோக்லி அபாரம்

Post by நண்பன் Mon 24 Oct 2011 - 9:14

மிக்க மகிழ்ச்சி மீதி உள்ள போட்டிகளையும் அடித்து நொறுக்கி இங்கிலாந்தை பெட்டி கட்டி அனுப்பி விடுங்கள் இந்திய வீரர்களுக்கு வாழ்த்துக்கள் இங்கிலாந்துக்கு எதிரான 4-வது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா வெற்றி ரெய்னா, கோக்லி அபாரம் 331844


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா வெற்றி ரெய்னா, கோக்லி அபாரம் Empty Re: இங்கிலாந்துக்கு எதிரான 4-வது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா வெற்றி ரெய்னா, கோக்லி அபாரம்

Post by jasmin Mon 24 Oct 2011 - 11:27

அடிக்கு அடி குத்துக்கு குத்து என்பது இதுதான் இங்கிலாந்தில் பிட்சில் அவர்கள் விளையாடி [பிட்ச் தாயாரிப்பதில் அவர்களுக்கு சாதகம் ] இருப்பது இப்போது தெரிகிற்து அல்லவா
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா வெற்றி ரெய்னா, கோக்லி அபாரம் Empty Re: இங்கிலாந்துக்கு எதிரான 4-வது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா வெற்றி ரெய்னா, கோக்லி அபாரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி அவுஸ்திரேலியா 51 ஓட்டங்களால் வெற்றி
» அணியில் இடம் பெறப்போவது யார்? ரெய்னா, கோக்லி மற்றும் பதானுக்கு இடையே கடும் போட்டி
» இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி:சச்சின் நீக்கம்
» 3–வது ஒரு நாள் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா சுருண்டது: இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி
» வங்காளதேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டி: ஜிம்பாப்வே அணி அபார வெற்றி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum