சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கால பைரவர் யார்?
by rammalar Today at 14:06

» பூக்கள்
by rammalar Today at 8:35

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Today at 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Today at 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Today at 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Today at 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Yesterday at 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Yesterday at 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Yesterday at 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Yesterday at 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Yesterday at 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Yesterday at 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Yesterday at 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04

» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11

» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05

» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02

» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28

» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45

» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39

» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52

» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37

» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09

» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Wed 26 Jun 2024 - 6:55

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Wed 26 Jun 2024 - 4:43

ஜனாதிபதிக்கு எதிராக ஆஸியில் தாக்கல் செய்யப்பட்ட போர்க்குற்ற வழக்கு நிராகரிப்பு _	 Khan11

ஜனாதிபதிக்கு எதிராக ஆஸியில் தாக்கல் செய்யப்பட்ட போர்க்குற்ற வழக்கு நிராகரிப்பு _

Go down

ஜனாதிபதிக்கு எதிராக ஆஸியில் தாக்கல் செய்யப்பட்ட போர்க்குற்ற வழக்கு நிராகரிப்பு _	 Empty ஜனாதிபதிக்கு எதிராக ஆஸியில் தாக்கல் செய்யப்பட்ட போர்க்குற்ற வழக்கு நிராகரிப்பு _

Post by முனாஸ் சுலைமான் Thu 27 Oct 2011 - 4:12

ஜனாதிபதிக்கு எதிராக ஆஸியில் தாக்கல் செய்யப்பட்ட போர்க்குற்ற வழக்கு நிராகரிப்பு _	 Mahinda-800_7 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக அவுஸ்திரேலிய மெல்பேர்ன் நகரில் தாக்கல் செய்யப்பட்ட போர்க்குற்ற வழக்கை அவுஸ்திரேலியாவின் சட்ட மா அதிபர் நிராகரித்துள்ளார்.

இதன்படி குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாதென நிராகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பிறந்த பொறியியலாளரான 63 வயதுடைய அருணாசலம் ஜெகதீஸ்வரன் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

வடக்கில் இடம்பெற்ற யுத்தத்தின் போது பொதுமக்களின் வீடுகள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், ஆலயங்கள், சமூக நிலையங்கள் அனைத்தின் மீதும் இலங்கை வான், தரை, கடற்படை தாக்குதல் நடத்தி ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களை படுகொலை செய்ததாக தெரிவிக்கும் ஜெகதீஸ்வரன் தான் 2007 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரை வடக்கில் ஒரு தொண்டர் உத்தியோகத்தராக பணியாற்றிய போது அவற்றை நேரில் பார்த்ததாக தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

வன்னியில் இடம்பெற்ற இனப் படுகொலைகள் மற்றும் போர்க் குற்றங்களுக்கு தான் ஒரு கண்கண்ட சாட்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதி குற்றவாளியா சுற்றவாளியா என்பதை தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் மனுவினூடாக நீதிமன்றத்தை கோரியுள்ளார்.

இந்த நிலையில் ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடர சட்டமா அதிபரின் அனுமதி தேவை என அவுஸ்திரேலிய பிரதமர் கூறியிருந்த நிலையில் வழக்குத் தொடர சட்டமா அதிபர் ரொபட் மிக்லேன் அனுமதி மறுத்துள்ளார்.

உள்நாட்டு சட்டம் மற்றும் சர்வதேச சட்டத்தின் கீழ் அவுஸ்திரேலியாவின் கடப்பாடுகளை மீறி வழக்குத் தாக்கல் செய்ய முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அவுதிஸ்திரேலிய அரசின் அனுமதியில்லாமல் இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியாது என்று அவுஸ்திரேலியப் பிரதமர் ஜுலியா கிலாட் தெரிவித்துள்ளார்.

மெல்பேர்ன் நீதிமன்றத்தில் இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக அருணாசலம் ஜெகதீஸ்வரன் என்பவர் தொடுத்துள்ள போர்க்குற்ற வழக்குத் தொடர்பாகவே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சட்டமா அதிபரின் ஆலோசனையின்றி இதுபோன்ற எந்தவொரு விவகாரம் குறித்தும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்று அவர் ஏபிசி வானொலிக்குத் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக அவுஸ்திரேலிய சட்டமா அதிபருக்கு எந்தவொரு கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் ஜெகதீஸ்வரனின் சட்டவாளர்கள் தாம் இது பற்றி அவுஸ்திரேலிய சட்டமா அதிபருக்கு எழுத்து மூலமான கோரிக்கை விடுத்துள்ளதாக கூறியுள்ளார்கள்.

அவுஸ்திரேலிய சட்டமா அதிபர் மக் கிளெல்லன்ட்டின் பேச்சாளர் இது தொடர்பான எந்தக் கோரிக்கையும் சட்டமா அதிபருக்கு அனுப்பப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் அவுஸ்திரேலிய சமஸ்டி காவல்துறைப் பேச்சாளர் தமக்கு இது பற்றிய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தாம் அது குறித்துப் பரிசீலனை செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.

அதேவேளை அனைத்துலக சட்டங்களின்படி தமது நாட்டுக்கு வருகை தரும் அரச தலைவர்களின் இராஜதந்திர சிறப்புரிமையைப் பாதுகாப்பதற்கான பொறுப்பு அவுஸ்திரேலிய அரசுக்கு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது அரசாங்கம் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான கரிசனைகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருவதாகவும் அவுஸ்திரேலியப் பிரதமர் ஜுலியா கிலாட் ஏபிசி வானொலியிடம் தெரிவித்துள்ளார். _
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum