சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Today at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

பெரும் பாவங்கள்! Khan11

பெரும் பாவங்கள்!

Go down

பெரும் பாவங்கள்! Empty பெரும் பாவங்கள்!

Post by முனாஸ் சுலைமான் Sun 30 Oct 2011 - 19:43

பெரும் பாவம், சிறிய பாவம் என்றால் என்ன? இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? இவற்றை தவிர்த்துக் கொள்வது எப்படி? போன்றவற்றை புரிந்து கொள்வதற்காக எழுதப்பட்ட ஒரு சிறிய முயற்சி. நம் வாழ்க்கையின் தரம், இவற்றைப் பற்றிய அறிவை அறிந்துக் கொள்வதில் தான் உள்ளது.

அல்லாஹ் திருமறையில் நம்முடைய “பெரும்பாவங்களை தவிர்ந்து கொள்ளாத வரையில் நம்முடைய சிறிய பாவங்களை மன்னிக்கமாட்டான்” என்று கூறுகிறான் (4:31)

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் “இந்த வசனத்திற்கு விளக்கம் அளிக்கையில், நாம் பெரும் பாவங்களை விட்டும் தவிர்ந்து கொண்டிருக்கும் நிலையில், ஐந்து நேரத் தொழுகை அவற்றுக்கு இடையே உள்ள சிறிய பாவங்களை களைந்து விடுகிறது. பெரும் பாவங்கள் நம்முடைய அமல்களை வீணாக்கி விடும்” என்று கூறினார்கள்.

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள். இன்னும் இத்தூதருக்கு கீழ்ப்படியுங்கள் – உங்கள் செயல்களை பாழாக்கி விடாதீர்கள். (அல்-குர்ஆன் 47:33)

அறிஞர்கள், பெரும் பாவங்களின் தொகுப்பை பல நூல்களில் விளக்கி உள்ளனர். அவற்றில் ஒன்று தான் இமாம் அத்தஹபி அவர்களின் நூல். அது சுருக்கமாக தொகுக்கப்பட்டு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் தரப்பட்டுள்ளது.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

பெரும் பாவங்கள்! Empty Re: பெரும் பாவங்கள்!

Post by முனாஸ் சுலைமான் Sun 30 Oct 2011 - 19:44

பெரும் பாவங்கள்!

1) அல்லாஹ்வுக்கு இணை வைத்தல்

வணக்கங்களில் அல்லாஹ்வுக்கு இணைவைத்தல் பெரிய (பாவமாகும்) இணைவைப்பு ஆகும்.
சிறிய இணைவைப்பு – ரியா : -

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: “தஜ்ஜாலின் அபாயத்தை விட அதிகமான ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கவில்லையா? ஒரு மனிதன் தொழுகைக்காக நின்று, மக்கள் தன்னை பார்க்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய தொழுகையை அழகாக்குகிறார்” (இப்னு மாஜா)

2) கொலை செய்தல் (25:68)

3) சூனியம் செய்தல். (2:102)

4) தொழுகையை விட்டு விடுதல். (19:59)

5) ஜகாத் கொடுக்காமல் இருத்தல். (3:180)

6) காரணமில்லாமல் ரமலான் மாதத்தில் நோன்பு வைக்காமல் இருத்தல்.

7) வசதி இருந்தும் ஹஜ் செய்யாமல் இருத்தல்.

8.) பெற்றோருக்கு மாறு செய்தல். (17:23)

9) சொந்த பந்தங்களின் உறவை முறித்தல். (47:22)

10) விபச்சாரம் செய்தல். (17:30)
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

பெரும் பாவங்கள்! Empty Re: பெரும் பாவங்கள்!

Post by முனாஸ் சுலைமான் Sun 30 Oct 2011 - 19:45

11) ஆண் புணர்ச்சி செய்தல்.

12) வட்டி வாங்குதல் & கொடுத்தல் (2:275)

13) அனாதைகளின் சொத்தை அபகரித்தல். 4(10)

14) அல்லாஹ்வின் மீதும் தூதர் மீதும் இட்டுக்கட்டுதல்.(39:60)

15) போர்க்களத்தில் இருந்து புறமுதுகு காட்டி ஓடுதல். (8:16)

16) ஒரு அரசனாக இருந்து கொண்டு தவறு செய்தல், ஏமாற்றுதல், அடக்கு முறைசெய்தல். (அஷ் ஷுஅரா:42)

17) தற்பெறுமை, ஆணவம் கொள்ளுதல். (அந் நஹ்ல்:23)

18) பொய் சாட்சி சொல்லுதல் (25:72)

19) போதை வஸ்துக்களை குடித்தல் (5:90)

20) சூதாடுதல் (5:90)

21) குற்றமில்லாத பெண்கள் மீது அவதூறு சொல்லுதல் (24:23)

22) போரில் கிடைத்த பொருளில் இருந்து மோசடி செய்தல் (3:161)

23) திருடுதல் (5:38)

24) கொள்ளை அடித்தல் (5:33)

25) தவறான சத்தியம் பிரமாணம் செய்தல்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

பெரும் பாவங்கள்! Empty Re: பெரும் பாவங்கள்!

Post by முனாஸ் சுலைமான் Sun 30 Oct 2011 - 19:45

யாராவது ஒருவர் சத்தியப் பிரமாணம் செய்யச் சொல்லும்போது, ஒரு முஸ்லிமின் சொத்தை அபகரிப்பதற்காக தவறான சத்தியம் செய்தல், அவர் மறுமை நாளில் அல்லாஹ்வை சந்திக்கும் போது அல்லாஹ்வி கோபத்துக்கு ஆளாவார் (சஹீஹ் அல் ஜாமிஆ)

26) அடக்கு முறையை கையாளுதல்.

27) சட்டவிரோதமாக வரி விதித்தல்

திவாலானவர் யார் என்று தெரியுமா? மறுமை நாளில் தொழுது, நோன்பு நோற்று ஜகாத் கொடுக்கப்பட்ட ஒருவர் கொண்டுவரப்படுவார். ஆனால் அவர் மற்றவர்களை ஏசி, அவதூறு கூறி அவர்களுடைய சொத்துக்களை தவறான வழியில் எடுத்து, அவர்களின் இரத்தத்தை பூமியில் சிந்தியவராவார். அவர்களின் நல்ல அமல்கள் எடுக்கப்பட்டு அநீதி இழைக்கப் பட்டவர்களுக்கு கொடுக்கப்படும். அது முடிந்து விட்டால் இவர்களுடைய தீமைகள், பாவங்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டு நரகத்தில் வீசப்படுவார். (சஹிஹ் அல் ஜாமிஆ 87)

28) தடுக்கப்பட்ட உணவை உட்கொள்ளுதல். (2:188)

29) தற்கொலை செய்து கொள்ளுதல். (4:29)

30) தொடர்ந்து பொய் சொல்பவர் (3:61)

31) இஸ்லாமிய சட்டங்களை விட்டுவிட்டு மற்ற சட்டங்களை வைத்து ஆட்சி செய்பவர் (5:44)

32) லஞ்சத்தில் ஈடுபடுதல் (2:188)

33) பெண்கள் ஆண்களைப்போல அல்லது ஆண்கள் பெண்களை போல தோன்றுதல்

‘ஆண்களைப் போல தோன்றும் பெண்கள் மீதும் பெண்களைப் போல தோன்றும் ஆண்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக’ என முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (சஹீஹ் அல் ஜாமிஆ)

34) ‘தய்யூத்’ ஆக இருப்பது

‘தய்யூத்’ என்பவர், தன் வீட்டுப் பெண்களை அநாகரிகமான செயல்களைச் செய்வதற்கு அனுமதிப்பவரும், பொறாமைப்படுபவரும், இரண்டு பேர்களுக்கிடையே அருவருக்கத் தக்க செயல்களைச் செய்வதற்கு ஏற்பாடு செய்பவரும் ஆவார்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

பெரும் பாவங்கள்! Empty Re: பெரும் பாவங்கள்!

Post by முனாஸ் சுலைமான் Sun 30 Oct 2011 - 19:45

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

“தொடர்ந்து மது அருந்துபவர், ஓடிப் போன அடிமை, தம் குடும்பத்தார்கள் செய்யும் தீய செயல்களைக் கண்டு திருப்தியடைந்தவர் ஆகிய இந்த மூவருக்கும் அல்லாஹ் சுவர்க்கத்தைத் தடை செய்திருக்கிறான்”

35) திருமணம் முடித்து, மனைவியை மற்றவர்களுக்காக கொடுப்பது.

36) சிறுநீர் கழித்துவிட்டு சுத்தம் செய்யாமல் இருப்பது.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஒரு கல்லறையின் பக்கம் சென்ற போது சொன்னார்கள், “இவர்கள் இருவரும் மிகப் பெரும் விஷயத்துக்காக தண்டிக்கப் படவில்லை; ஒருவர் சிறுநீர் கழித்து சுத்தம் செய்யவில்லை; மற்றவர் கோள் சொல்லிக் கொண்டிருந்தார்” (சஹீஹ் அல் ஜாமிஆ)

37) மற்றவர்களுக்கு காண்பிப்பதற்காக செயல்படுவது (107:4-6)

38) உலக லாபத்துக்காக அறிவைப் பெறுதல் (2:160)

39) உடன் படிக்கையை முறித்தல் (8:27)

40) ஒருவர் செய்த உபகாரத்தை சொல்லிக் காட்டுவது (2:27)

41) களா கத்ரை மறுப்பது (54:49)

42) ஒட்டுக் கேட்பது (49:12)

43) கட்டுக் கதைகளை பரப்புவது (54:10)

44) மற்றவர்களை ஏசுவது ஒரு முஸ்லிமை ஏசுவது பாவமாகும், கொலை செய்வது இறை நிராகரிப்பாகும் (சஹிஹ் அல் ஜாமிஆ)

45) வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பது

நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்று என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: அவற்றில் ஒன்று வாக்குறுதி கொடுத்தால் அதற்கு மாறுசெய்வான். (புகாரி)
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

பெரும் பாவங்கள்! Empty Re: பெரும் பாவங்கள்!

Post by முனாஸ் சுலைமான் Sun 30 Oct 2011 - 19:46

46) குறி சொல்பவர்களையும், ஜோசியத்தையும் நம்புவது.

“யார் ஒருவர் குறி சொல்பவரிடம் சென்று அவர் சொல்வதை நம்புகிறாரோ அவருடைய 40 நாள் தொழுகையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள மாட்டான்” என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

47) கணவனுக்கு மாறுசெய்வது (4:34)

48) துணிகளில், திரைச்சீலைகளில் உருவ படங்களை வரைதல்.

49) ஒருவரின் இறப்புக்காக அடித்துக் கொள்ளுதல், கதறி அழுதல், துணிகளை கிழித்துக் கொள்ளுதல், முடிகளை இழுத்தல்.

50) அநீதி இழைத்தல்

51) மற்றவர்களின் இயலாமையை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளுதல்.

52) அண்டை வீட்டார்களை துன்புறுத்துதல்.

“தன்னுடைய துன்புறுத்தலில் இருந்து யார் ஒருவரின் அண்டை வீட்டுக்காரர் பாதுகாப்பு பெறவில்லையோ அவர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்”

53) முஸ்லீமை ஏசுவது, அவர்களை தொந்தரவு செய்வதும் (33:58)

54) கனுக்காலுக்கு கிழே ஆடை அணிவது

முஹம்மது நபி (ஸல்) அவர்கள், “யார் கனுக்காலுக்கு கிழே ஆடை அணிகிறார்களோ அவர்கள் நரக நெருப்பில் வீசப்படுவார்கள்” என்று கூறினார்கள். (புகாரி)

55) அல்லாஹ்வின் அடிமையை தொந்தரவு செய்வது.

56) தங்கம், வெள்ளி அணியும் ஆண்கள்

57) அடிமையை விட்டுவிட்டு ஓடி விடுவது

58) அல்லாஹ்வுக்கு அல்லாமல் மற்றவர்களுக்காக பலியிடுவது

59) உண்மைக்கு புறம்பாக, ஒருவரை இன்னாருடைய தந்தை என்று கூறுவது.

60) மற்றவர்களுக்கு காட்டுவதற்காக விவாதம் செய்வது.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

பெரும் பாவங்கள்! Empty Re: பெரும் பாவங்கள்!

Post by முனாஸ் சுலைமான் Sun 30 Oct 2011 - 19:46

61) அளவையில் மோசம் செய்தல் (83:1-3)

62) அல்லாஹ்வின் திட்டத்தில் இருந்து பாதுகாப்பு பெற்றதாக நினைப்பது

63) பன்றியின் இறைச்சி, இரத்தம் சாப்பிடுவது

64) காரணமில்லாமல், பள்ளி வாசலை விட்டு விட்டு, தனியாக தொழுவது

65) ஜும்ஆ தொழுகை, மற்றும் ஜமாஅத் தொழுகைகளை காரணமில்லாமல் தொடர்ச்சியாக தொழாமல் இருப்பது

66) செல்வாக்கை பயன்படுத்தி மற்றவர்களை தொந்தரவு செய்வது

67) பித்தலாட்டங்கள், வஞ்சகங்கள் செய்வது

68) முஸ்லீம்களை வேவு பார்ப்பது

69) சஹாபாக்களை நித்தனை செய்வது.

ஆங்கில மூலம் : www.allaahuakbar.net

ஜசஹ்கல்லாஹ் கைர்: சகோதரர் M. அன்வர்தீன்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

பெரும் பாவங்கள்! Empty Re: பெரும் பாவங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum