சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Today at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

மூளையும் முக்கியம்! Khan11

மூளையும் முக்கியம்!

2 posters

Go down

மூளையும் முக்கியம்! Empty மூளையும் முக்கியம்!

Post by ராசாத்தி Mon 14 Nov 2011 - 23:13

மூளையும் முக்கியம்!

ஒருவர் கைகால்கள் செயலிழந்து போகும்போது அதைப் பாரிசம் அல்லது பக்கவாதம்
என்று வீட்டில் உள்ளவரே கணித்து சிகிச்சையை தள்ளிப் போடுகின்றனர். அதற்கு
ஒரு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஏனென்றால் அதனால் உடனடியாக இறப்பு
ஏற்படாது அன்ற எண்ணம். அதே இருதயப்பகுதியில் வலி என்றால் பதறி புரண்டு
மருத்துவரைப் பார்க்க ஓடுகின்றனர். ஏன் இந்தப் பாகுபாடு?

இதய நோயாளி நடக்கலாம், பேசலாம், தன் வேலைகளை செய்து கொள்ளலாம். ஆனால் கை,
கால் பாரிசம் ஆனவரோ, அவர்களின் அன்றாட செயல்களை செய்துக்கொள்வது சிரமம்.
அதற்கு அடுத்தவரின் துணை வேண்டுகிறது. மனதளவில் பாரிசம் ஏற்பட்டவர்கள்
வாழ்நாள் முழுவதும் குன்றி குறுகி நிற்கின்றனர். ஏன் இந்த பாகுபாடு..?

ஆங்கிலத்தில் GOLDEN HOUR என்று கூறப்படும் நேரம் மிகவும் முக்கியமானது.
ஒருவர் விபத்தில் அடிபட்டாலோ, இதய நோயால் மாரடைப்பு ஏற்பட்டாலோ, அல்லது
பாரிசம் ஏற்பட்டாலோ, அந்த முதல் ஒரு மணி நேரக் கவனிப்பு அவருடைய
குணமடைதலுக்கு துணை செய்கின்றது. பாரிசம் ஏற்பட்டவர், முதல் ஒரு மணி
நேரத்தில் மருத்துவம் பெற்றால் அவருடைய குறை முற்றிலும் குணமாகலாம். ஏன்
எல்லோரும் போல் நன்றாக நடந்து பேசி வேலை செய்யமுடியும்.

உதாரணமாக எங்கள் மருத்துவமனைகளில் ஒரு 35 வயது நபர் இடது பக்க
பாரிசத்துடன் 15 நிமிடங்களில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்து,
அவருக்கு சிகிச்சை உடனடியாக தொடரப்பட்டது, அவர் 10 நாட்களில் முழுவதுமாக
குணமாகி வீட்டுக்கு சென்றார். இன்று அவர் என்ன தொழில்
செய்துக்கொண்டிருந்தோரோ அதையே தொடர்ந்து செய்து வருகின்றார்.

பாரிசத்திற்கு இன்னொரு காரணம் உண்டு. அதாவது மூளையில் மண்டை ஒட்டிற்கும்
மூளைக்கும் இடையே இரத்தம் சேர்ந்து அது அழுத்தம் கொடுக்கின்றது. அதை
Subdural Hematoma என்பர்.

எதனால் ஏற்படுகின்றது? (Chronic subdural Hemation) தலைக்காயம் பட்டால்
ஏற்படலாம், ஆனால் 6 வாரத்தில் இருந்து. 11\2 வருடம் வரை வரலாம். இது
மெதுவாக கசிந்து கட்டியாகும்போது தான் தன்மையை காட்டுகின்றது. அது
பெரிதாகும்போது எந்த பகுதியில் உள்ளதோ அதற்கு எதிர்பகுதி கை கால்கள் செயல்
இழந்து போகின்றன. கோமா நிலை ஏற்படுகின்றது.

இந்த நோயாளியை உடனடியாக CT scan படம் எடுத்து பார்த்தால், இந்த காரணம்
தெரியும். அதை உடனடியாக அறுவை சிகிச்சையின் மூலம் அப்புறப்படுத்தினால்
நோயாளி தன் சுய நினைவை அடைந்து, கை, கால் பாரிசம் குறைந்து நன்றாக
குணமடைவர்.

எங்களிடம் ஒரு 70 வயது பெரியவர் கொண்டுவரப்பட்டார். அவர் நினைவு இல்லாமல்
கோமா நிலையில் இருந்தார். அவருக்கு வலது கை கால்களில் செயல் இல்லை.
அவருடைய மூளைப்படம், இடது மூளைப்படத்தில் இரத்தக்கட்டி இருப்பது
தெரிந்தது. அதன் அளவு பெரியதாக இருந்ததால் இடது மூளை வலது மூளையை
தள்ளிக்கொண்டு இருந்தது. நோயாளியின் மகன்கள் அவர் குணமடைவாரா என்று
கவலைப்பட்டுக் கொண்டிருந்தனர். அவர்களிடம் இந்த அறுவை சிகிச்சையினால் அவர்
முற்றிலும் குணமடைவார். மற்றும் அறுவை சிகிச்சை செய்யும் போதே அவர் நினைவு
பெறுவார் என்று கூறி அறுவை சிகிச்சை செய்தேன். மூளையின் சவ்வை
திறக்கும்போது இரத்தம் வெளிவந்தது. அவ்வாறு வெளிவரும்போதே அவர் நினைவு
திரும்பியது, சப்தம் போட ஆரம்பித்தார். அறுவை சிகிச்சை முடிந்து
வெளிவரும்போது அவரின் மகன்களுடன் பேசினார். 5 ஆண்டுகளுக்கு பின்னும்
நன்றாக நடந்துகொண்டு சராசரி மனிதனாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

பாரிசம் என்பது கை, கால், செயல் இழப்பை குறிக்கின்றது. அதற்கான காரணங்கள்
ஏராளம். அதை மூளை படம் எடுப்பதால் தெரிந்து கொள்ளலாம். (Chronic subdural
hematoma) நாள்பட்ட இரத்த கசிவினால் ஏற்பட்ட பாரிசம் அறுவை சிகிச்சை
செய்தவுடன் குணமடையும். குடிப்பழக்கம் இருப்பவருக்கு இந்த இரத்த கசிவு
சுலபமாக வருவதுண்டு. எனவே குடிப் பழக்கத்தை நிறுத்த பழகிக்கொள்ள வேண்டும்.
பாரிசம் ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சைக்கு நரம்பியல் நிபுணரிடம் கொண்டு
செல்லுங்கள்.

உணர்வுபூர்வமாக எந்த விஷயத்தையும் அணுகுவதை விட அறிவு பூர்வமாக அணுகுவது
தெளிவைத் தரும் தானே? எதைக் குறிப்பிடுகிறேன் என்கிறீர்கள்...? இதய
நோய்க்கு தரும் முக்கியத்துவத்தை மூளை நோய்க்கும் தர வேண்டும் என்பதைத்
தான் அதோடு குடிப்பழக்கம் குடியை மட்டும் கொடுப்பதில்லை. மூளையையும் பதம்
பார்க்கிறது. குவாட்டர், லார்ஜ், ஸ்மால் இந்த வார்த்தைகளோடு இனி பாரிசம்
என்ற வார்த்தையையும் சேர்த்து சியர்ஸ் சொல்லுங்கள். குடிப்பழக்கம் தானாக
ஓடிவிடும்.


நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்









ராசாத்தி
ராசாத்தி
புதுமுகம்

பதிவுகள்:- : 327
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

மூளையும் முக்கியம்! Empty Re: மூளையும் முக்கியம்!

Post by நிலாம் Mon 14 Nov 2011 - 23:22

பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி
நிலாம்
நிலாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum