சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Today at 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Today at 20:52

» பல்சுவை - 5
by rammalar Today at 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Today at 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Today at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Today at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

மணவாழ்க்கையில் முறிவை ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்கள் Khan11

மணவாழ்க்கையில் முறிவை ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்கள்

3 posters

Go down

மணவாழ்க்கையில் முறிவை ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்கள் Empty மணவாழ்க்கையில் முறிவை ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்கள்

Post by gud boy Thu 17 Nov 2011 - 5:16

இன்றைய திருமணம் எங்கு நிச்சயிக்கப்படுகிறதென்ற கேள்விக்கு விடை தேடும் முன்னரே வாழ்க்கை கேள்விக்குறியாகி விடுகிறது. நகலான நடைமுறை வாழ்வுதான் எல்லாவற்றிலும் வியாபித்திருக்கிறது. நிலையான, கருத்தொருமித்த மணவாழ்வு நிலைத்து நிற்க தவமிருந்து பெறும் வரத்துக்குச் சமனாகிவிடுகிறது.

ஆண், பெண் என்ற இணைப்பில் கணவன், மனைவி என்ற உறவு எத்தனை வீதமானவை கலங்கமற்று ஜொலிக்கின்றன? எத்தனை வீதமானவை முலாம் பூசப்பட்டுத் தவிக்கின்றன?

அன்பு-அரவணைப்பு-விட்டுக் கொடுத்தல்-புரிந்துணர்வு-காதல் இவைகளெல்லாம் எத்தனை சதவீதமானவை மணவாழ்க்கையில் கையெழுத்து இடுகின்றன என்பதனை விரல்விட்டு எண்ணி விடலாம். ஆனால், பெரும்பாலானவர்களின் வாழ்க்கையில் இவை எல்லாவற்றுக்கும் விடை கொடுத்து வெகுநாட்களாகின்றன. அபபடியானதொரு போலி வாழ்க்கை முறைதான் மணவாழ்வில் பெரும்பாலும் கலக்கப்படுகிறது.

இன்றைய வாழ்வின் முக்கிய இலட்சியமாகவிருப்பது, படிப்பது, வேலை செய்வது,திருமணம் செய்து கொள்வது, ஓர் இருப்பிடத்தை அமைத்துக் கொள்வது எனச் சுருங்கி விட்டது. அதனையும் மீறி பல உள்ளார்ந்த உணர்வுகளைச் சென்றடையும் முன்னரே மனிதனின் இந்த அடிப்படைத் தேவைகளிலேயே காலமும் நேரமும் கரைந்து போய்விடுகிறது. மணவாழ்க்கை இணக்கமாக அமையாவிட்டால் வாழ்க்கையில் வெற்றி பெறுவது இயலாத ஒன்றாகிவிடும்.

தனக்காக, தன்குடும்பத்துக்காக உண்மையான அன்புடன் வாழ்வதனை விட்டுவிட்டு பிறரின் மதிப்பு, கௌரவம், புகழுக்காக வாழும் இமிடேஸன் வாழ்க்கைiயும் மணமுறிவுக்கு முக்கிய காரணமாக அமைகிறது.

பெரும்பாலும் மணவாழ்க்கையில் ஏனிந்த உறவு முறிவு? கணவன்- மனைவிக்கு இடையில் ஏனிந்த இடைவெளி? ஒரே படுக்கையில் விரோதிகளாக வாழ்வதனை விடத் தனித்து வாழலாம் என்ற வெறுப்பு உணர்வு எல்லாவற்றிலும் வியாபித்திருக்க என்ன காரணம்?

திருமணத்தில் வெற்றி கண்டவரும் திருமணத்தி;ல் கசப்பினை அனுபவிதத்வர்களுக்கும் இடையிலுள்ள வேறுபாடுகளை உளவியல் அடிப்படையில் நோக்கினால் நட்புக்குத் தேவையான ஒத்த அக்கறைகள், விருப்பங்கள், ஆர்வங்கள், நோக்கங்கள் ஆகியவை திருமண வெற்றிக்கு ஆதாரங்களாக விளங்குகின்றன. மேலும் மத நம்பிக்கை, பழக்க வழக்கங்கள், பழமையைப் பேணுவது வாழ்வின் தத்துவங்கள். நண்பர்கள்;, குழந்தைகளைப் பராமரித்தல், பொருளாதாரம் ஆகியவற்றில் மனம் ஒத்து இணைக்கமுடையவர்களாக இருக்கின்றனர்..

மகிழ்வற்ற மணவாழ்க்கைகை; கொண்டவர்களிடம் கேட்டால் பெண்களிடமுள்ள ஆர்வம் எதிர்பார்ப்புகள், ஆசைகள், தாம்பத்தியம் பற்றிய எண்ணங்கள் ஆகியன வேறுபட்டிருப்பதே குடும்ப முரண்பாட்டுக்கு காரணங்களாக கூறப்படும்.

சின்னச் சின்ன விடயங்களைக் கூடப் புரிந்து கொள்ள முடியாமைக்கு என்ன காரணம்? இப்படித்தான் வாழ வேண்டும் என்ற வரையறை கரைந்து போய்விட்டதா? மேலும் குடும்ப உறவுகள் சீர்குலைவதற்கான உளவியல் ரீதியான காரணங்களைப் பார்த்தால் ஆண், பெண் இருபாலாருமே தங்களுக்கான எல்லையைக் கடந்து வரும்போது உறவுச் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். ஓர் ஆணின் மனநிலையும் பெண்ணின் மனநிலையும் முற்றிலும் மாறுபட்டவை.

நல்ல திருமணங்கள் எப்படித் தோற்றுப் போகும் என்ற கேள்விக்கு எளிதாக ஒரு விளக்கம் வேண்டுமென்றால,; வெளிப்பார்வைக்கு நல்லது போன்று தோன்றிய திருமணத்தின் உள்ளே சில குறிப்பிடத்தக்க குற்றங்களும் குறைபாடுகளும் இருந்திருக்கக் கூடும் என்பதுதான்.

ஒரு மண முறிவு அல்லது மணவிலக்கு (divorce) நிகழ்கின்ற போது பொருந்தாத திருமணம் முறிந்து விட்டது என்று எண்ணுவதுதான் நடைமுறை வழக்கு. ஆனால், எல்லா விதத்திலும் பொருத்தமாக அமைந்த திருமணம் கூட உடைந்து போகின்றனவே. அது ஏன்? சம்பந்தப்பட்டவர்களின் எதிர்பார்ப்புகள் எல்லை மீறுவதே இதற்குக் காரணம். இந்த எல்லை மீறிய எதிர்பர்ப்பு மனக்குறையையும் அதிருப்தியையும் ஏற்படுத்தலாம்.

மனக்குறைகள் எதனால் ஏற்படுகின்றன ?

மனக்குறைகள் எதனால் ஏற்படுகின்றன என்று பார்த்தால்,

1. எதிப்hர்ப்புகள் உயர்ந்து கொண்டே சென்று அதனை எட்டா முடியாத விடயம் என்றாகும் போது...

2. மணம் முடித்த ஆணும் பெண்ணும் சமுதாயத்துக்கு ஒரு தொகுப்பாகத் தென்பட்டாலும் உள்ளுக்குள் தாங்கள் இருவரும் வௌ;வேறு தனித்துவம் உடையவர்கள் என்று எண்ணத் தலைப்படும்போது...

3. மனைவி என்பவள் தன்னுடைய ஆளுகைக்கு உட்பட்டவள் என்ற நினைப்பு ஆண்டாண்டு காலமாக ஆணின் உள்ளத்தில் ஊறியுள்ளது. எவ்வளவுதான் பேச்சாற்றல், விழிப்புணர்வு என்று வந்தாலும் அதிலிருந்து வேறுபட்டு பெண்ணுக்குச் சாதகமாகச் சிந்திப்பதற்கு அவரின் மனம் இடம் தராதபோது..

4. தோற்றுப் போகும் திருமணத்தில் பாலுறவு பற்றிய எதிர்பார்ப்புகளும் அடங்குகிறது. ஒருவா மற்றவரின்; உள்ளுணர்வுகளை, உணர்ச்சிகளை அறிந்து வைத்திருக்காத போதுஸ

5. மணம் முடித்த கையுடன் (வேலை நிமித்தம்) அதிக காலம் பிரிந்திருப்பதும் நெறி தவறி வழி மாற இடமுண்டு. விவாகரத்துக்கு இது இடமளிக்கின்றபோது

6. அடுத்ததாக இளவயது திருமணங்களை எடுத்துக் கொள்ளலாம். சிறுவயதில் பொருத்தமில்லாத ஒருவரைத் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் குறிப்பிட்ட வயதுக்கு அப்புறம் அவர்களது ஆழ்மன விருப்பத்துக்கு ஏற்ற ஒருவரைப் பார்க்கும்போது மனம் தடுமாடுகிறார்கள். அதீத எதிர்பார்ப்புடன் திருமண பந்தத்தை உருவாக்கி அந்த எதிர்பார்ப்பு பூஜ்யமாகிப் போகும்போது அடுத்த உறவை நாடுகிறார்கள். உளவியல் ரீதியான இந்தக் காரணங்களைத் தொடர்ந்து விவாகரத்துகளும் அதிகரித்து தனித்து வாழும் ஆண், பெண் எண்ணிக்கைகளும் அதிகரித்து பிரச்சினைகளும் அதிகமாகும்.

7. கட்டாயத் திருமணம். கவர்ச்சி கலந்த கண்டதும் காதல். கல்வி, குடும்ப பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், ஏமாற்றங்கள், சந்தேகம் இவைகள் கூட இணைந்த வேகத்தில் பிரிவுக்கு வழியமைக்கின்றன.

பொதுவாக இருபது வயதுக்கு முன் திருமணம் செய்பவர்களின் மணவாழ்க்கை வெற்றி பெறுவது அரிது. அதே போல் முப்பது வயதுக்கு மேல் மணம் புரியும் பெண்களும் 35 வயதுக்கு மேல் மணம் புரியும் ஆண்களும் நீடித்த மகிழ்வான மணவாழ்வு நடத்துவதில்லை என்று மணமுறிவு பற்றிய புள்ளி விபரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. எனவே, மணவாழ்வின் வெற்றிக்கு ஒரு குறிப்பிட்ட வயது சிறப்பாகக் கருதப்படுகிறது. அதற்கு மன எழுச்சி முதிர்ச்சியே அடிப்படையாக அமைகிறது.

மண வாழ்க்கை கசப்பதற்கும் முறிவதற்கும் இன்னுமொரு காரணி பொருளாதாரம். மணவாழ்வில் பொருளாதார வசதிகள் அதிகம் பங்கு பெறாத நிலையில் கடன், வேலை இல்லாத் திண்டாட்டம் இவைகளும் சிக்கலை ஏற்படுத்தலாம். அதேநேரம், குடும்பத்துக்காக உழைக்கிறேன் என்ற நாமத்துடன் பணம், பணம் என்று ஓடி ஓடி உழைத்து குடும்பத்தை ஒரு வங்கியாக நினைக்கும் பட்சத்தில் மனைவி, பிள்ளைகள் தூரமாகி பணம் மாத்திரம் அருகில் துயில்கொள்ளும் நிலையே ஏற்படும். கணவனிடம்தான் அன்பு, அரவணைப்பு, ஆறுதல், உடல் ;சார்ந்த தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும். அவனே எட்டாத தூரத்தில் இருக்கும் பட்சத்தில் மனைவியானவளின் எண்ணங்கள், அபிலாஷைகள், எதிர்பார்ப்புகள் அனைத்தையும் யாரிடம் போய் சொல்ல முடியும்? அவள் மூன்றாம் நபரின் அன்பை நாடுவதும் வாழ்க்கையின் ஒருவித துரதிர்ஷ்டம்தான். தனிமை,பிரிவு,பிரச்சினைகள் தலைதூக்குகின்றன.

மேலும் மணவாழ்வு பொருத்தத்தில் கணவனும் மனைவியும் அவர்கள் கற்ற கல்வித்துறையில் சமத்துவத் தன்மையுடன் காணப்பட்டால் மகிழ்சி பெருகும். உயர்ந்த கல்வியும் மணவாழ்வுக்கு மகிழ்சி அளிக்கக்கூடியது.

அடுத்தாக, விவாதங்கள், பொறாமை, ஒழுக்கமின்மை போன்றவற்றால் மணவாழ்வில் துன்பமே மிகுதியாக இருக்கிறது. என்று 1500 வரலாறுகளை ஆராய்ந்த அமெரிக்க சமூகப் பணி நிறுவனத்தின் ஆராய்;ச்சி எடுத்துக் காட்டுகிறது. ஒன்பது சத வீதத்தினர் பொறாமையினாலும் முப்பது சத வீதத்தினர் ஒழுக்கமின்மையாலும் நாற்பத்தியொரு சதவீதத்தினர் தூற்றுதலினாலும் தங்கள் மணவாழ்வு முறிந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். மேலும், கணவன்-மனைவி இருவரில் ஒருவர் தாம்பத்திய வாழ்க்கையில் அதிக நாட்டம் உள்ளவராக இருந்து மற்றொருவர் அந்த நாட்டத்துக்கு இணையான ஜோடியாக இல்லாமல் போகும்போதுதான் பிரச்சினைகள் பூதாகரமாக எழுகின்றன. விரிசல்கள் ஆழமாகின்றன. அந்தரத்துக்கும் அன்புடன் நேரத்தை ஒதுக்குவதும் மணவாழ்வை வெல்லும் வழி.

ஆகவே, அடிப்படையான வாழும் கலையைக் கற்றுக் கொண்டால் மணவாழ்வு இனிமை சேர்க்கும். பொதுவாக பொருத்தமான திருமணமானாலும் பொருந்தாத திருமணமானாலும் நிறைவேறாத ஆசைகளைக் கணக்கில் கொண்டு எடைபோட்டோமேயானால் எந்தத் திருமணமும் ஈடுகொடுக்காது. எல்லோருடைய வாழ்விலும் இன்பங்களும் துன்பங்களும் ஏற்றத் தாழ்வுகளும் கருத்து முரண்பாடுகளும் உள்ளன. அவற்றை ஈடு செய்து கொண்டு போவதுதான் அறிவுடமை.

முதலில் வீடு வீடாக இருக்க வேண்டும். நீதிமன்றமாக மாறக் கூடாது. சட்டங்கள் இயற்றி கணவனோ மனைவியோ வழக்கறிஞராகவும் நீதிபதியாகவும் மாறக் கூடாது. அதன் முடிவுகள் தீர்ப்புகள் திருத்தப்படாமலேயே மனமுறிவுக்கான தண்டனையை அனுபவிக்க நேரிடும். ஆகவே, அனைத்தினையும் சமாளித்துச் செல்வோம் என்ற எண்ணம் உறுதியாகின்ற போது திருமணங்கள் தோற்றுப் போகமாட்டாது.

நன்றி: வீரகேசரி வாரவெளியீடு

source: http://fathimanaleera.blogspot.com/

http://www.nidur.info
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

மணவாழ்க்கையில் முறிவை ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்கள் Empty Re: மணவாழ்க்கையில் முறிவை ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்கள்

Post by jasmin Thu 17 Nov 2011 - 10:42

நல்ல செய்தி அழகான பகிர்வூ சிந்திக்க தூண்டும் கருத்துக்கள்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

மணவாழ்க்கையில் முறிவை ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்கள் Empty Re: மணவாழ்க்கையில் முறிவை ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்கள்

Post by அ.இராஜ்திலக் Thu 17 Nov 2011 - 10:44

நல்ல பகிர்வு பாராட்டுகள் !

அ.இராஜ்திலக்
புதுமுகம்

பதிவுகள்:- : 131
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

மணவாழ்க்கையில் முறிவை ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்கள் Empty Re: மணவாழ்க்கையில் முறிவை ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum