சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Today at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Today at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Today at 19:24

» பல்சுவை 5
by rammalar Today at 17:48

» பல்சுவை - 4
by rammalar Today at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Today at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Today at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Today at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Today at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Today at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Today at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Today at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01

உ.பி. மாநிலத்தை நான்காக பிரிக்கும் தீர்மானம் நிறைவேறியது லக்னோ Khan11

உ.பி. மாநிலத்தை நான்காக பிரிக்கும் தீர்மானம் நிறைவேறியது லக்னோ

Go down

உ.பி. மாநிலத்தை நான்காக பிரிக்கும் தீர்மானம் நிறைவேறியது லக்னோ Empty உ.பி. மாநிலத்தை நான்காக பிரிக்கும் தீர்மானம் நிறைவேறியது லக்னோ

Post by *சம்ஸ் Wed 23 Nov 2011 - 6:28

உ.பி. மாநிலத்தை நான்காக பிரிக்கும் தீர்மானம் நிறைவேறியது
லக்னோ:
உ.பி, மாநிலத்தை நான்கு சிறிய மாநிலங்களாக பிரிப்பது தொடர்பான தீர்மானம், எதி ர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே, குரல் வாக்கெடுப் பின் மூலம் அம்மாநில சட்ட சபையில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. இந்த நடவடிக்கையை “மாயாவதியின் தேர்தல் ஸ்டண்ட்” என, எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

உ.பி, மாநிலத்தை நிர்வாக வசதிக்காக பூர்வாஞ்சல், பச்சிம் பிரதேசம், பண்டகல்கண்ட, அவாத் பிரதேசம் என, நான்கு சிறிய மாநிலங்களாக பிரிக்க திட்டமிட்டுள்ளதாக, முதல்வர் மாயாவதி கடந்த வாரம் அறிவித்து இருந்தார். இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதமும் எழுதியிருந்தார்.

இந்நிலையில் உ.பி., சட்டசபையின் குளிர்கால கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தெரிவாகியது. அப்போது, சமாஜ்வாடி, பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள், கடும் அமளியில் ஈடுபட்டனர். “மாயாவதி அரசு மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது.

உடனடியாக பதவி விலக வேண்டும்’ என்ற முழக்கங்களை எழுப்பியபடி, சபையின் மையப் பகுதிக்கு வந்து, அமளியில் ஈடுபட்டனர். மாநில அரசுக்கு எதிராக, நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப் போவதாகவும் அவர்கள் கூறினர். தொடர்ந்து அமளி நிலவியதால், சபாநாயகர் சுக்தியோ ராஜ்பார், மதியம் 12.20 வரை சபையை ஒத்தி வைத்தார்.

மீண்டும் சபை கூடியபோதும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியை தொடர்ந்தனர். அப்போது சபைக்கு வந்திருந்த முதல்வர் மாயாவதி, உ.பி., மாநிலத்தை, நான்கு சிறிய மாநிலங்களாக பிரிக்க வகை செய்யும் தீர்மானத்தை தாக்கல் செய்தார்.

கடும் அமளிக்கு இடையே, மாயாவதி கொண்டு வந்த தீர்மானம் குரல் ஒட்டெடுப்பு மூலம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. அத்துடன், கால வரையின்றி, சபையை ஒத்திவைப்பதாகவும் சபாநாயகர் அறிவித்தார்.

இதனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் செய்வதறியாது திகைத்தனர். அவர்கள் கொண்டு வர திட்டமிட்டிருந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கும் வேலை இல்லாமல் போய் விட்டது. மாநிலத்தை நான்காக பிரிக்கும் விவகாரத்தில், தங்களின் எதிர்ப்புகளை கூட, சபையில் பதிவு செய்ய முடியவில்லை என, எதிர்க்கட்சி, உறுப்பினர்கள் ஆவேசத்துடன் தெரிவித்தனர்.

உ.பி., முதல்வர் மாயாவதி, கூறியதாவது, நிர்வாக வசதிக்காக மாநிலத்தை பிரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அப்போது தான் வளர்ச்சி பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ள முடியும். இதுகுறித்து மத்திய அரசுக்கு ஏற்கனவே தெரிவித்து விட்டோம். ஆனால் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வேறு வழியில்லாமல், கட்டாயத்தின்பேரில், இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம், மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு மாயாவதி கூறினார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» உ.பியை பிரிக்கும் தீர்மானத்தை திருப்பியனுப்பியது மத்திய அரசு
» குளிர்கால கூட்டத்தொடரில் 10 மசோதாக்கள் நிறைவேறியது
» ஃபேஸ்புக்கில் பிரதமர் பற்றி கார்ட்டூன்: லக்னோ எந்திரவியலாளர் கைது
» சிக்கிம் மாநிலத்தை 3.9 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியது
» தெலுங்கானா மாநிலத்தை உருவாக்க அப்பகுதி காங்கிரஸ் தலைவர் காலக்கெடு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum