Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவுby rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
ரவுடிகள் கூட செய்யத் தயங்கும் காரியத்தை மேயர் மல்லிகா செய்துள்ளார்
Page 1 of 1
ரவுடிகள் கூட செய்யத் தயங்கும் காரியத்தை மேயர் மல்லிகா செய்துள்ளார்
"காலைக்கதிர்' நாளிதழ் ஈரோடு அலுவலகத்தில், அத்துமீறி நுழைந்த, மாநகராட்சி மேயர் மல்லிகா, தவறான செய்தி வெளியிட்டதாகக் கூறி, ரகளையில் ஈடுபட்டார். போட்டோகிராபர் சண்முகசுந்தரத்தை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். "காலைக்கதிர்' சார்பில் புகார் கொடுத்தும், ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படும் போலீசார், மெத்தனப்போக்கை கடைபிடிக்கின்றனர்.
ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போட்டோகிராபரிடம், டாக்டர், விபத்து அறிக்கையை பதிவு செய்து, மருத்துவமனையில் உள்ள போலீஸ் அவுட் போஸ்ட்டுக்கு அனுப்பினார். பிரஸ் கிளப், பத்திரிகையாளர் சங்கத்தினர் முன்னிலையில், போலீஸ் எஸ்.பி., பன்னீர்செல்வத்திடம் புகார் செய்யப்பட்டது. அன்று இரவு, டவுன் இன்ஸ்பெக்டர் வேலுமணி, சண்முகசுந்தரத்திடம் வாக்குமூலம் பெற்றார். மற்றவர்களிடமும் விசாரணை நடத்த அலுவலகம் வருவதாக கூறிச் சென்ற போலீசார், அதன் பின் வரவில்லை.
வழக்கு பதியவில்லை
இன்ஸ்பெக்டரை தொடர்பு கொண்ட போது, "இரு தரப்பிலும் விசாரணை நடத்தி விட்டுத்தான் வழக்கு பதிவு செய்ய முடியும்' என்றார். எஸ்.பி.,யிடம் புகார் கொடுத்து, உள்நோயாளியாக ஒருவர் அனுமதிக்கப்பட்டு, புகைப்பட ஆதாரங்கள் இருந்தும், இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை.
"காலைக்கதிர்' அலுவலகத்தில் ரகளையில் ஈடுபட்ட மேயர் மல்லிகா மற்றும் அவருடன் வந்தவர்கள் மீது, இந்திய தண்டனைச் சட்டம் 143 (சட்ட விரோதமாக கும்பலாக கூடுதல்), 447 (அத்துமீறி நுழைதல்), 426 (தவறான செயல்களை கையாளுதல்), 506/2 (கொலை மிரட்டல் விடுத்தல்), 323 (சிறிய காயத்தை ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்க முடியும். இதில், 506/2 என்பது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவு.
தாக்குதலால் காயமடைந்தவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, அவரது வாக்குமூலம் பதிவான நிலையில், சி.ஆர்.பி.சி., 154ன்படி, வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இந்த விதிமுறைகள் எதையும் கடைபிடிக்காமல், ஈரோடு போலீசார் சட்ட விதிகளுக்கு புறம்பாக, ஆளுங்கட்சி மேயருக்கு ஆதரவாகச் செயல்படுகின்றனர்.
"டிராபிக்' ராமசாமி கோரிக்கை
இச்சம்பவம் குறித்து, சமூக ஆர்வலர், "டிராபிக்' ராமசாமி, தமிழக முதல்வர் ஜெயலலிதா, தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், போலீஸ் டி.ஜி.பி., மற்றும் உள்ளாட்சி நிர்வாகத் துறை செயலர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:
ஈரோடு அ.தி.மு.க., மேயர் மல்லிகா பரமசிவம், ஈரோடு "காலைக்கதிர்' அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அலுவலக போட்டோகிராபரை தாக்கி, கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இப்படி, "ரவுடியிசம்' செய்பவர் பிரதமராக இருந்தாலும், மேயராக இருந்தாலும், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருக்க, சட்டத்தில் இடமில்லை.
நிதானமற்று, பொறுப்பில்லாமல் செயல்பட்டுள்ள ஈரோடு மேயருக்காக, அம்மாவட்ட கலெக்டரும், எஸ்.பி.,யும், கட்டப்பஞ்சாயத்து செய்யத் தேவையில்லை. புகாரின் அடிப்படையில், ஈரோடு மேயர் மீது வழக்கு பதிவு செய்து (முடிந்தால் எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய வேண்டும்) விசாரிக்க வேண்டும். இவ்வாறு டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார்.
இம்மனு, சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் தலைமை நீதிபதிகளுக்கும், ஈரோடு கலெக்டர் மற்றும் எஸ்.பி.,க்கும் அனுப்பப்பட்டுள்ளது.
ஆந்திர பத்திரிகையாளர் சம்மேளனம்
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ஆந்திரா பத்திரிகையாளர் சம்மேளனம் தலைவர் வெங்கடேஸ்வரலு, செயலர் கன்னைய நாயுடு ஆகியோர் வெளியிட்ட கண்டன அறிக்கை:
இந்தியாவில் இது மாதிரி எங்கும் நடந்ததில்லை. பத்திரிகைகளில் ஒருவரைப் பற்றி செய்திகள் வந்தால், ஆத்திரப்படாமல் பதிலளிக்க வேண்டும் அல்லது மறுப்பு தெரிவிக்கலாம்; வழக்கு தொடரலாம். தன்னைப் பற்றி பத்திரிகையில் செய்திகள் வருவதையை ஏற்றுக்கொள்ளாமல் ஆத்திரப்படும் மேயர் மல்லிகா, பொதுமக்கள் குறைகளை எப்படி தீர்க்கப் போகின்றார்? பிரச்னைகளுக்காக பொதுமக்கள் போராட்டம் நடத்தினால், அவர்களை அடித்து விரட்டுவார் போல உள்ளது அவரது செயல்கள்.
சாதாரணமாக ரவுடிகள் கூட செய்யத் தயங்கும் காரியத்தை மேயர் மல்லிகா செய்துள்ளது, பத்திரிகை சுதந்திரத்தை மிரட்டிப் பார்க்கும் செயலாகும். பத்திரிகை சுதந்திரத்தை குழி தோண்டி புதைக்கும் மேயர் மல்லிகா, தான் செய்த தவறுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். சம்பந்தப்பட்ட பத்திரிகை சார்பில் போலீசில் புகார் கொடுத்தும், வழக்கு பதிவு செய்யவில்லை என்பது கொடுமை. போலீஸ் துறையை தன் கையில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்த பிரச்னையில் தலையிட்டு, மேயர் மல்லிகாவை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளனர்.
ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போட்டோகிராபரிடம், டாக்டர், விபத்து அறிக்கையை பதிவு செய்து, மருத்துவமனையில் உள்ள போலீஸ் அவுட் போஸ்ட்டுக்கு அனுப்பினார். பிரஸ் கிளப், பத்திரிகையாளர் சங்கத்தினர் முன்னிலையில், போலீஸ் எஸ்.பி., பன்னீர்செல்வத்திடம் புகார் செய்யப்பட்டது. அன்று இரவு, டவுன் இன்ஸ்பெக்டர் வேலுமணி, சண்முகசுந்தரத்திடம் வாக்குமூலம் பெற்றார். மற்றவர்களிடமும் விசாரணை நடத்த அலுவலகம் வருவதாக கூறிச் சென்ற போலீசார், அதன் பின் வரவில்லை.
வழக்கு பதியவில்லை
இன்ஸ்பெக்டரை தொடர்பு கொண்ட போது, "இரு தரப்பிலும் விசாரணை நடத்தி விட்டுத்தான் வழக்கு பதிவு செய்ய முடியும்' என்றார். எஸ்.பி.,யிடம் புகார் கொடுத்து, உள்நோயாளியாக ஒருவர் அனுமதிக்கப்பட்டு, புகைப்பட ஆதாரங்கள் இருந்தும், இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை.
"காலைக்கதிர்' அலுவலகத்தில் ரகளையில் ஈடுபட்ட மேயர் மல்லிகா மற்றும் அவருடன் வந்தவர்கள் மீது, இந்திய தண்டனைச் சட்டம் 143 (சட்ட விரோதமாக கும்பலாக கூடுதல்), 447 (அத்துமீறி நுழைதல்), 426 (தவறான செயல்களை கையாளுதல்), 506/2 (கொலை மிரட்டல் விடுத்தல்), 323 (சிறிய காயத்தை ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்க முடியும். இதில், 506/2 என்பது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவு.
தாக்குதலால் காயமடைந்தவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, அவரது வாக்குமூலம் பதிவான நிலையில், சி.ஆர்.பி.சி., 154ன்படி, வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இந்த விதிமுறைகள் எதையும் கடைபிடிக்காமல், ஈரோடு போலீசார் சட்ட விதிகளுக்கு புறம்பாக, ஆளுங்கட்சி மேயருக்கு ஆதரவாகச் செயல்படுகின்றனர்.
"டிராபிக்' ராமசாமி கோரிக்கை
இச்சம்பவம் குறித்து, சமூக ஆர்வலர், "டிராபிக்' ராமசாமி, தமிழக முதல்வர் ஜெயலலிதா, தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், போலீஸ் டி.ஜி.பி., மற்றும் உள்ளாட்சி நிர்வாகத் துறை செயலர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:
ஈரோடு அ.தி.மு.க., மேயர் மல்லிகா பரமசிவம், ஈரோடு "காலைக்கதிர்' அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அலுவலக போட்டோகிராபரை தாக்கி, கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இப்படி, "ரவுடியிசம்' செய்பவர் பிரதமராக இருந்தாலும், மேயராக இருந்தாலும், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருக்க, சட்டத்தில் இடமில்லை.
நிதானமற்று, பொறுப்பில்லாமல் செயல்பட்டுள்ள ஈரோடு மேயருக்காக, அம்மாவட்ட கலெக்டரும், எஸ்.பி.,யும், கட்டப்பஞ்சாயத்து செய்யத் தேவையில்லை. புகாரின் அடிப்படையில், ஈரோடு மேயர் மீது வழக்கு பதிவு செய்து (முடிந்தால் எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய வேண்டும்) விசாரிக்க வேண்டும். இவ்வாறு டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார்.
இம்மனு, சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் தலைமை நீதிபதிகளுக்கும், ஈரோடு கலெக்டர் மற்றும் எஸ்.பி.,க்கும் அனுப்பப்பட்டுள்ளது.
ஆந்திர பத்திரிகையாளர் சம்மேளனம்
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ஆந்திரா பத்திரிகையாளர் சம்மேளனம் தலைவர் வெங்கடேஸ்வரலு, செயலர் கன்னைய நாயுடு ஆகியோர் வெளியிட்ட கண்டன அறிக்கை:
இந்தியாவில் இது மாதிரி எங்கும் நடந்ததில்லை. பத்திரிகைகளில் ஒருவரைப் பற்றி செய்திகள் வந்தால், ஆத்திரப்படாமல் பதிலளிக்க வேண்டும் அல்லது மறுப்பு தெரிவிக்கலாம்; வழக்கு தொடரலாம். தன்னைப் பற்றி பத்திரிகையில் செய்திகள் வருவதையை ஏற்றுக்கொள்ளாமல் ஆத்திரப்படும் மேயர் மல்லிகா, பொதுமக்கள் குறைகளை எப்படி தீர்க்கப் போகின்றார்? பிரச்னைகளுக்காக பொதுமக்கள் போராட்டம் நடத்தினால், அவர்களை அடித்து விரட்டுவார் போல உள்ளது அவரது செயல்கள்.
சாதாரணமாக ரவுடிகள் கூட செய்யத் தயங்கும் காரியத்தை மேயர் மல்லிகா செய்துள்ளது, பத்திரிகை சுதந்திரத்தை மிரட்டிப் பார்க்கும் செயலாகும். பத்திரிகை சுதந்திரத்தை குழி தோண்டி புதைக்கும் மேயர் மல்லிகா, தான் செய்த தவறுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். சம்பந்தப்பட்ட பத்திரிகை சார்பில் போலீசில் புகார் கொடுத்தும், வழக்கு பதிவு செய்யவில்லை என்பது கொடுமை. போலீஸ் துறையை தன் கையில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்த பிரச்னையில் தலையிட்டு, மேயர் மல்லிகாவை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளனர்.
Similar topics
» நாளிதழ் அலுவலகத்தில் புகுந்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த ஈரோடு பெண் மேயர் மல்லிகா
» கமிஷனர் அலுவலகத்தில் பிரபல ரவுடிகள் இருவர் திடீர் சரண்
» நன்மையான காரியத்தை செய்ய நினைத்தாலே நன்மை எழுதப்படுகின்றது: -
» சுவர்க்கம் செல்வதற்கேற்ற ஒரு காரியத்தை எனக்குக் கூறுங்கள்' என்றார்
» இவர் யாரை திருமணம் செய்துள்ளார்
» கமிஷனர் அலுவலகத்தில் பிரபல ரவுடிகள் இருவர் திடீர் சரண்
» நன்மையான காரியத்தை செய்ய நினைத்தாலே நன்மை எழுதப்படுகின்றது: -
» சுவர்க்கம் செல்வதற்கேற்ற ஒரு காரியத்தை எனக்குக் கூறுங்கள்' என்றார்
» இவர் யாரை திருமணம் செய்துள்ளார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|