Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவுby rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
மனைவியின் அழுகிய பிணத்துடன், 5 நாட்கள் குழந்தைகளுடன் வசித்த திகில் தந்தை
3 posters
Page 1 of 1
மனைவியின் அழுகிய பிணத்துடன், 5 நாட்கள் குழந்தைகளுடன் வசித்த திகில் தந்தை
குடி பழக்கத்தால் ஏற்பட்ட குடும்ப தகராறில் மர்மமான முறையில் இறந்த மனைவியின் அழுகிய பிணத்துடன், 5 நாட்கள் குழந்தைகளுடன் வசித்த திகில் தந்தையிடம், சிக்கித் தவித்த பரிதாப குழந்தைகளை, போலீசார் மீட்டனர்.
சென்னை மாதவரம் பொன்னியம்மன் மேடு முனுசாமி நகர், 3வது தெருவைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி, 38. தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சரஸ்வதி, 28. கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. லோகேஸ்வரி, 8. சந்தோஷ், 4. என்று குழந்தைகள் உள்ளனர். தனியார் பள்ளியில் முறையே 3 மற்றும் எல்.கே.ஜி. வகுப்புகளில் படித்து வருகின்றனர். குடி பழக்கத்திற்கு அடிமையான பார்த்தசாரதியுடன் அவரது மனைவிக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மனமுடைந்த சரஸ்வதி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கூட சகஜமாக பழகுவதில்லை.
கடந்த 27ம் தேதியும் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது பார்த்தசாரதி மனைவியை அடித்துள்ளார். படுக்கை அறை கட்டில் மீது ஏறி, சரஸ்வதி மின் விசிறியில் புடவையால் தூக்கிட்டுக் கொண்டார். போதை தெளிந்த பார்த்தசாரதி, அதிர்ச்சி அடைந்தார். மனைவியை காப்பாற்ற கத்தரியால் புடவையை வெட்டினார். பாரம் தாங்காத சரஸ்வதியின் உடல் கட்டில் மீது அமர்ந்த நிலையில் விழுந்தது. இதைப் பார்த்த குழந்தைகள் பீதியில் உறைந்தன. பிணத்தை அப்படியே விட்டு, அறைக்கதவை பூட்டிய அவர், போலீசுக்கு தகவல் தெரிவிக்க பயந்து குழந்தைகளுடன் அமைதியாக இருந்து விட்டார். சம்பவம் நடந்த போது பலத்த மழை, வெள்ளம் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் குழந்தைகள் வீட்டில் இருந்தனர். விஷயத்தை வெளியில் சொல்லி விடுவார்களோ என்ற பயத்தில், பார்த்தசாரதி குழந்தைகளைக் கண்காணித்தபடி வீட்டில் இருந்து விட்டார்.
தாய் இறந்த துக்கம், தந்தையின் மர்மமான செயல்பாடுகளால் வீட்டில் நிலவும் மயான அமைதியில் பீதியடைந்த குழந்தைகள், தவித்துக் கிடந்தனர். குழந்தைகளுக்கு உணவு வழங்குவது உள்ளிட்ட வழக்கமான நடவடிக்கையால் வீட்டை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தார். மழை காரணமாக சரஸ்வதியின் உடல் பூட்டியிருந்த அறையில் இருந்து துர்நாற்றம் ஏதும் வெளியாகவில்லை. மழை விட்டு, நேற்று முன் தினம் வெயில் அடித்ததால், துர்நாற்றம் வீசியதை அக்கம் பக்கத்தினர் உணர்ந்தனர். நேற்று மாலை இது அதிகளவில் இருந்தது.
மாதவரம் போலீசில் புகார் செய்தனர். துணைக் கமிஷனர் ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு, இரவு 9 மணி அளவில் சென்றனர். அப்போது, பார்த்தசாரதி "டிவி' நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருக்க, குழந்தைகள் பயத்தில் அமர்ந்திருந்தனர். போலீசாரைக் கண்டதும், ஐந்து நாட்களாக தவித்த குழந்தைகள் போலீசாரிடம் தஞ்சம் அடைந்தன. சரஸ்வதி பிணம் கிடந்த அறையை திறந்ததும், குழந்தைகள் அலறி அடித்து வீட்டிற்கு வெளியில் ஓடினர். போலீசார் விசாரணை நடத்தினர்.
பார்த்தசாரதி, போலீசாரிடம் கூறுகையில், ""எனது மனைவி இறந்தது குறித்து, அதே பகுதியில் இருக்கும் எனது அக்காவிற்கு தகவல் தெரிவித்தேன். ஆனால், உடல் நலம் பாதிப்பு காரணமாக அவர், நான் சொன்னதை சரியாக புரிந்து கொள்ளவும் இல்லை. இங்கு வரவும் இல்லை,'' என்றார். பிணம் கிடந்த அறையில், அம்மிக்குழவி இருந்ததாலும், சம்பவம் குறித்து, உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்காததாலும் சந்தேக மரணத்தின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைரேகை தடயவியல் நிபுணர்கள் மேற்கண்ட வீட்டில் ஆய்வு நடத்தினர். குழந்தைகள், பார்த்தசாரதியின் அக்காவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஐந்து நாட்கள், அந்த வீட்டில் மரண பயத்துடன் இருந்த குழந்தைகளுக்கு, மருத்துவ பரிசோதனை மற்றும் தொற்று நோய் பாதிப்பு சிகிச்சை அளிப்பது அவசியம் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
சென்னை மாதவரம் பொன்னியம்மன் மேடு முனுசாமி நகர், 3வது தெருவைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி, 38. தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சரஸ்வதி, 28. கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. லோகேஸ்வரி, 8. சந்தோஷ், 4. என்று குழந்தைகள் உள்ளனர். தனியார் பள்ளியில் முறையே 3 மற்றும் எல்.கே.ஜி. வகுப்புகளில் படித்து வருகின்றனர். குடி பழக்கத்திற்கு அடிமையான பார்த்தசாரதியுடன் அவரது மனைவிக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மனமுடைந்த சரஸ்வதி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கூட சகஜமாக பழகுவதில்லை.
கடந்த 27ம் தேதியும் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது பார்த்தசாரதி மனைவியை அடித்துள்ளார். படுக்கை அறை கட்டில் மீது ஏறி, சரஸ்வதி மின் விசிறியில் புடவையால் தூக்கிட்டுக் கொண்டார். போதை தெளிந்த பார்த்தசாரதி, அதிர்ச்சி அடைந்தார். மனைவியை காப்பாற்ற கத்தரியால் புடவையை வெட்டினார். பாரம் தாங்காத சரஸ்வதியின் உடல் கட்டில் மீது அமர்ந்த நிலையில் விழுந்தது. இதைப் பார்த்த குழந்தைகள் பீதியில் உறைந்தன. பிணத்தை அப்படியே விட்டு, அறைக்கதவை பூட்டிய அவர், போலீசுக்கு தகவல் தெரிவிக்க பயந்து குழந்தைகளுடன் அமைதியாக இருந்து விட்டார். சம்பவம் நடந்த போது பலத்த மழை, வெள்ளம் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் குழந்தைகள் வீட்டில் இருந்தனர். விஷயத்தை வெளியில் சொல்லி விடுவார்களோ என்ற பயத்தில், பார்த்தசாரதி குழந்தைகளைக் கண்காணித்தபடி வீட்டில் இருந்து விட்டார்.
தாய் இறந்த துக்கம், தந்தையின் மர்மமான செயல்பாடுகளால் வீட்டில் நிலவும் மயான அமைதியில் பீதியடைந்த குழந்தைகள், தவித்துக் கிடந்தனர். குழந்தைகளுக்கு உணவு வழங்குவது உள்ளிட்ட வழக்கமான நடவடிக்கையால் வீட்டை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தார். மழை காரணமாக சரஸ்வதியின் உடல் பூட்டியிருந்த அறையில் இருந்து துர்நாற்றம் ஏதும் வெளியாகவில்லை. மழை விட்டு, நேற்று முன் தினம் வெயில் அடித்ததால், துர்நாற்றம் வீசியதை அக்கம் பக்கத்தினர் உணர்ந்தனர். நேற்று மாலை இது அதிகளவில் இருந்தது.
மாதவரம் போலீசில் புகார் செய்தனர். துணைக் கமிஷனர் ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு, இரவு 9 மணி அளவில் சென்றனர். அப்போது, பார்த்தசாரதி "டிவி' நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருக்க, குழந்தைகள் பயத்தில் அமர்ந்திருந்தனர். போலீசாரைக் கண்டதும், ஐந்து நாட்களாக தவித்த குழந்தைகள் போலீசாரிடம் தஞ்சம் அடைந்தன. சரஸ்வதி பிணம் கிடந்த அறையை திறந்ததும், குழந்தைகள் அலறி அடித்து வீட்டிற்கு வெளியில் ஓடினர். போலீசார் விசாரணை நடத்தினர்.
பார்த்தசாரதி, போலீசாரிடம் கூறுகையில், ""எனது மனைவி இறந்தது குறித்து, அதே பகுதியில் இருக்கும் எனது அக்காவிற்கு தகவல் தெரிவித்தேன். ஆனால், உடல் நலம் பாதிப்பு காரணமாக அவர், நான் சொன்னதை சரியாக புரிந்து கொள்ளவும் இல்லை. இங்கு வரவும் இல்லை,'' என்றார். பிணம் கிடந்த அறையில், அம்மிக்குழவி இருந்ததாலும், சம்பவம் குறித்து, உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்காததாலும் சந்தேக மரணத்தின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைரேகை தடயவியல் நிபுணர்கள் மேற்கண்ட வீட்டில் ஆய்வு நடத்தினர். குழந்தைகள், பார்த்தசாரதியின் அக்காவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஐந்து நாட்கள், அந்த வீட்டில் மரண பயத்துடன் இருந்த குழந்தைகளுக்கு, மருத்துவ பரிசோதனை மற்றும் தொற்று நோய் பாதிப்பு சிகிச்சை அளிப்பது அவசியம் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
Re: மனைவியின் அழுகிய பிணத்துடன், 5 நாட்கள் குழந்தைகளுடன் வசித்த திகில் தந்தை
ஐயோ பாவம் அந்தக் குழந்தைகள் நல்ல நேரம் மழை விட்டது இல்லை என்றால் குடி காரன் இன்னும் என்ன என்ன முடிவு எடுத்திருப்பானோ தெரியல குடி குடியைக் கெடுத்து விட்டது இது ஊரில் உள்ள நிறையப்பேருக்கு பாடமாக கூட அமையலாம் தகவலுக்கு நன்றி ஹாசிம்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மனைவியின் அழுகிய பிணத்துடன், 5 நாட்கள் குழந்தைகளுடன் வசித்த திகில் தந்தை
மடையன் இப்படியா செய்வான் அயோக்கியன்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வசித்த இல்லம்.
» அழுகிய முட்டை நாற்றம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்'!
» குவைத்தில் இலங்கைப் பெண்ணின் அழுகிய சடலம்
» பாட்டி பிணத்துடன் ஒரு வாரம் வாழ்ந்த 2 வயது குழந்தை
» தந்தை....! அப்பா...! தந்தை.....!
» அழுகிய முட்டை நாற்றம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்'!
» குவைத்தில் இலங்கைப் பெண்ணின் அழுகிய சடலம்
» பாட்டி பிணத்துடன் ஒரு வாரம் வாழ்ந்த 2 வயது குழந்தை
» தந்தை....! அப்பா...! தந்தை.....!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|