சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

பல்லாவரத்தில் வாழைப்பழம் தொண்டையில் சிக்கியதால் மாணவன் பரிதாப சாவு Khan11

பல்லாவரத்தில் வாழைப்பழம் தொண்டையில் சிக்கியதால் மாணவன் பரிதாப சாவு

2 posters

Go down

பல்லாவரத்தில் வாழைப்பழம் தொண்டையில் சிக்கியதால் மாணவன் பரிதாப சாவு Empty பல்லாவரத்தில் வாழைப்பழம் தொண்டையில் சிக்கியதால் மாணவன் பரிதாப சாவு

Post by நண்பன் Tue 6 Dec 2011 - 8:37

பல்லாவரத்தில் வாழைப்பழம் தொண்டையில் சிக்கியதால் மாணவன் பரிதாப சாவு 49d4909a-7938-4c6c-bdf7-690ae7af2457_S_secvpf

சென்னையை அடுத்த கீழ்க்கட்டளை அம்பாள் நகர் ஸ்ரீராமானுஜம்
அப்பார்ட்மெண்டை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். தனியார் கம்ப்யூட்டர்
நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி
பாக்யலட்சுமி.

இவர்களுடைய ஒரே மகன் ஹரிஸ் சாய்நாதன்
(வயது 3 1/2). இவன் பல்லாவரத்தில் உள்ள ஒரு பள்ளியில் எல்.கே.ஜி படித்து
வந்தான். நேற்று காலை 8.45 மணிக்கு கிருஷ்ணகுமார் மகனை காரில் பள்ளியில்
விட்டு விட்டு வேலைக்கு சென்றார். காலை 10.15 மணிக்கு தேநீர் இடைவெளியில்,
பிறந்தநாள் கொண்டாடிய மாணவன் ஒருவன் அனைத்து மாணவர்களுக்கும் சாக்லெட்
கொடுத்தான். அதை வாங்கி ஹரிஸ் சாய்நாதன் சாப்பிட்டான்.

அதன்
பின்னர், ஹரிஸ் சாய்நாதன் வீட்டில் இருந்து கொண்டு வந்த பழம்,
பிஸ்கட்டுகளை சாப்பிட்டான். வாழைப் பழத்தைச் சாப்பிட்டபோது, அது திடீர்
என்று அவனது தொண்டையில் சிக்கிக்கொண்டது. இதனால் மூச்சுக்குழாயில் அடைப்பு
ஏற்பட்டு மூச்சு திணறி அவன் மயங்கி விழுந்தான்.

இதை
பார்த்த வகுப்பு ஆசிரியை ஈஸ்வரி, ஆயா கண்மணி, உடற்பயிற்சி ஆசிரியர்
சந்துரு ஆகியோர் ஹரிஸ் சாய்நாதனை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு
ஆட்டோவில் அழைத்து சென்றனர். அங்கு ஹரிஸ் சாய்நாதனை பரிசோதித்த டாக்டர்கள்
அவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

உடனே இது
குறித்து அவனுடைய பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மகனின்
உடலை பார்த்து கதறி அழுதது நெஞ்சை உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக
கிருஷ்ணகுமார் பல்லாவரம் போலீசில் புகார் செய்தார்.

புகாரில்,
பள்ளியில் முதலுதவி சிகிச்சை அளிக்ககூட டாக்டர் இல்லாத நிலையில் ஹரிஸ்
சாய்நாதன் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்று தெரிவித்து இருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக
பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிஸ் சாய்நாதனின் உடலை பிரேத
பரிசோதனைக்கு குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத
பரிசோதனை அறிக்கையின்படி மாணவனின் மரணம் குறித்து உரிய நடவடிக்கை
எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

சென்னை
புறநகர் பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள்
படித்தாலும் எந்த பள்ளியிலும் மாணவர்களுக்கு முதலுதவி அளிக்கும்
மருத்துவர்கள் கிடையாது.

அதேபோல தீ விபத்து தடுப்பு
கருவிகள் உள்பட உயிர்காக்கும் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
எதுவும் இல்லை. இவற்றை சரிபார்க்க வேண்டிய கல்வி துறை அதிகாரிகள் அந்த
பணிகளை செய்வதில்லை. பல பள்ளிகளில் அளவுக்கு அதிகமாக மாணவர்களை சேர்த்து
விட்டு அவர்களை உரிய முறையில் கவனிப்பதில்லை.

5
வயதிற்குட்பட்ட குழந்தைகளை எல்.கே.ஜி., யூ.கே.ஜி. என சேர்த்து விட்டு
பள்ளியில் ஆசிரியைகள் கவனக்குறைவாக இருப்பதால் பல அசம்பாவிதங்கள்
நடைபெறுகின்றன. இதற்கு கல்வித்துறை உரிய உத்தரவுகளை வழங்கி மாணவர்களின்
பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பல
தனியார் பள்ளிகளில் கழிப்பிடங்கள் சுகாதாரமற்ற முறையில் உள்ளன. இதனால்
பள்ளிக்குழந்தைகள் சிறு வயதிலேயே சிறுநீர் தொற்றுநோய்களால்
அவதிப்படுகின்றனர். கழிப்பறைகள் சுத்தமாக உள்ளதா? என்பதை உள்ளாட்சி
அமைப்பினர் ஆய்வு செய்வதில்லை. இவற்றிற்கெல்லாம் கல்வித்துறை அதிகாரிகள்
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாலை மலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பல்லாவரத்தில் வாழைப்பழம் தொண்டையில் சிக்கியதால் மாணவன் பரிதாப சாவு Empty Re: பல்லாவரத்தில் வாழைப்பழம் தொண்டையில் சிக்கியதால் மாணவன் பரிதாப சாவு

Post by jasmin Tue 6 Dec 2011 - 10:56

கேட்கவே பயங்கரமாக இருக்கிரதே ..பரிதாபம்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

பல்லாவரத்தில் வாழைப்பழம் தொண்டையில் சிக்கியதால் மாணவன் பரிதாப சாவு Empty Re: பல்லாவரத்தில் வாழைப்பழம் தொண்டையில் சிக்கியதால் மாணவன் பரிதாப சாவு

Post by நண்பன் Tue 6 Dec 2011 - 11:07

jasmin wrote:கேட்கவே பயங்கரமாக இருக்கிரதே ..பரிதாபம்
பல்லாவரத்தில் வாழைப்பழம் தொண்டையில் சிக்கியதால் மாணவன் பரிதாப சாவு 224381 பல்லாவரத்தில் வாழைப்பழம் தொண்டையில் சிக்கியதால் மாணவன் பரிதாப சாவு 224381 பல்லாவரத்தில் வாழைப்பழம் தொண்டையில் சிக்கியதால் மாணவன் பரிதாப சாவு 876805 பல்லாவரத்தில் வாழைப்பழம் தொண்டையில் சிக்கியதால் மாணவன் பரிதாப சாவு 876805


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பல்லாவரத்தில் வாழைப்பழம் தொண்டையில் சிக்கியதால் மாணவன் பரிதாப சாவு Empty Re: பல்லாவரத்தில் வாழைப்பழம் தொண்டையில் சிக்கியதால் மாணவன் பரிதாப சாவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வாழைப்பழம் தொண்டையில் சிக்கியதால் மாணவன் மரணம்
» ரஷியாவில் ரெயில்–பஸ் மோதல் 19 பேர் பரிதாப சாவு
» பேஸ் புக்கில் வெளியிட தண்டவாளத்தில் படுத்த மாணவன் தலை துண்டாகி சாவு
» சுவரில் தலையை மோதியதால் 3ஆம் வகுப்பு மாணவன் சாவு: ஆசிரியர் கைது
» பரீட்சை எழுதிய மாணவன் விபத்தில் சிக்கி மூளைச் சாவு! ஏழு பேருக்கு உடல உறுப்புகள் தானம்!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum