சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 7:10 pm

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 7:08 pm

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 7:04 pm

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 7:01 pm

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 12:30 am

» கதம்பம்
by rammalar Yesterday at 6:46 pm

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 6:32 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 5:46 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 5:42 pm

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue Apr 30, 2024 8:53 pm

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue Apr 30, 2024 3:34 pm

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue Apr 30, 2024 3:10 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue Apr 30, 2024 8:46 am

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue Apr 30, 2024 8:40 am

» பல சரக்கு
by rammalar Tue Apr 30, 2024 12:11 am

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon Apr 29, 2024 11:58 pm

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon Apr 29, 2024 9:31 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon Apr 29, 2024 8:30 pm

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon Apr 29, 2024 3:49 pm

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon Apr 29, 2024 3:42 pm

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon Apr 29, 2024 3:32 pm

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon Apr 29, 2024 9:55 am

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon Apr 29, 2024 9:46 am

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun Apr 28, 2024 11:56 pm

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun Apr 28, 2024 11:27 pm

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun Apr 28, 2024 8:22 pm

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun Apr 28, 2024 8:15 pm

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun Apr 28, 2024 4:31 pm

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun Apr 28, 2024 4:29 pm

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun Apr 28, 2024 3:00 pm

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun Apr 28, 2024 2:46 pm

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun Apr 28, 2024 12:19 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun Apr 28, 2024 11:48 am

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun Apr 28, 2024 11:44 am

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun Apr 28, 2024 11:42 am

தமிழில் கேள்வி கேட்க வேண்டும் என்ற சசிகலாவின் கோரிக்கை ஏற்கபடுமா Khan11

தமிழில் கேள்வி கேட்க வேண்டும் என்ற சசிகலாவின் கோரிக்கை ஏற்கபடுமா

Go down

தமிழில் கேள்வி கேட்க வேண்டும் என்ற சசிகலாவின் கோரிக்கை ஏற்கபடுமா Empty தமிழில் கேள்வி கேட்க வேண்டும் என்ற சசிகலாவின் கோரிக்கை ஏற்கபடுமா

Post by நேசமுடன் ஹாசிம் Fri Dec 09, 2011 1:18 pm

சொத்து குவிப்பு வழக்கு விசாரணையில், சசிகலாவிடம் தமிழில் கேள்வி கேட்க வேண்டும் என்ற அவருடைய கோரிக்கை ஏற்கபடுமா? என்பதை வரும் 13ம் தேதி முடிவு செய்வதாக பெங்களூர் தனி நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார். முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதா, கடந்த அக்டோபர் 20, 21 மற்றும் நவம்பர் 21, 22ம் தேதிகளில் நேரில் ஆஜராகி, நீதிபதி கேட்ட 1,339 கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

கடந்த மாதம் 29ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதால், கேள்விகளை தமிழில் தயாரித்து கொடுக்க வேண்டும் என்று கோரப்பட்டது. அதை நிராகரித்த நீதிபதி, மொழி பெயர்ப்பாளர் மூலம் கேள்வி கேட்டு பதிவு செய்யப்படும் என்று கூறி விசாரணையை டிசம்பர் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அதன்படி, இந்த வழக்கு நீதிபதி மல்லிகார்ஜுனையா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதா நேரில் ஆஜராகாமல் இருக்க விலக்கு கேட்டு அவருடைய வக்கீல் பி.குமார் மனு கொடுத்தார். அதை நீதிபதி ஏற்றார். வழக்கில் 2, 3, 4வது குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் ஆஜராகினர். சசிகலாவின் வக்கீல் சந்தான கோபால் தாக்கல் செய்த சிறப்பு மனுவில், ‘சசிகலா 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதால் அவருக்கு போதிய ஆங்கில அறிவு கிடையாது.

வழக்கு ஆவணங்கள் பல ஆயிரம் பக்கங்கள் ஆங்கிலத்தில் உள்ளதால், அதை படித்து நீதிபதியின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் திறன் அவருக்கு இல்லை. ஆகவே, வழக்கு தொடர்பாக அவரிடம் கேட்கப்படும் கேள்விகளை முன்கூட்டியே தமிழ் மொழியில் தயாரித்து தர வேண்டும். மேலும், தனது கட்சிக்காரர் தமிழில் சொல்லும் பதிலை தமிழிலேயே பதிவு செய்ய வேண்டும்’ என்று கோரினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு வக்கீல் ஆச்சார்யா, ‘‘இந்த வழக்கை 15 ஆண்டுகளாக என்னென்ன காரணம் சொல்லி வழக்கை இழுத்தடிக்க முடியுமோ, அவ்வளவு இழுத்தடித்தனர். உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் ஜெயலலிதா நேரில் ஆஜராகி நீதிபதியின் கேள்விகளுக்கு பதிலளித்தார். இப்போது, 2வது குற்றவாளியிடம் கேள்வி கேட்க வேண்டிய நிலையில், ஆங்கிலம் தெரியாது, தமிழில் கேள்வி கேட்க வேண்டும் என்பது வழக்கை இழுத்தடிக்கும் முயற்சியாகும்.

2வது குற்றவாளிக்கு உதவ, இந்த இவ்வழக்கு ஆவணங்கள் தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழி மாற்றம் செய்த வக்கீல் ஹர்ஷாவை நீதிமன்றம் நியமித்துள்ளது. சசிகலாவின் பதிலை தமிழில் பதிவு செய்ய வேண்டும் என்பதை ஏற்க கூடாது. அவருடைய பதிலை ஆங்கிலத்தில் பதிவு செய்ய வேண்டும்’’ என்றார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி மல்லிகார்ஜுனையா, ‘‘தமிழில் பதில் சொல்வதுடன், அதை தமிழில் பதிவு செய்ய வேண்டும் என்ற சசிகலாவின் கோரிக்கை மீது 13ம் தேதி தீர்ப்பு கூறுகிறேன்’’ என கூறி, விசாரணையை ஒத்திவைத்தார்.


தமிழில் கேள்வி கேட்க வேண்டும் என்ற சசிகலாவின் கோரிக்கை ஏற்கபடுமா Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum