Latest topics
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதைby rammalar Yesterday at 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Yesterday at 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Yesterday at 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Yesterday at 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Yesterday at 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Yesterday at 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Yesterday at 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Yesterday at 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Yesterday at 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Yesterday at 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Yesterday at 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31
» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50
» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53
» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by rammalar Thu 20 Jun 2024 - 6:55
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by rammalar Thu 20 Jun 2024 - 6:52
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by rammalar Thu 20 Jun 2024 - 6:48
» முத்த மழை!- புதுக்கவிதை
by rammalar Thu 20 Jun 2024 - 6:42
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by rammalar Thu 20 Jun 2024 - 4:21
» 4 பந்து 6 ரன்.. W,W,1B,0.. கடைசி ஓவர் கலக்கல்.. தெ.ஆ-வை இந்திய பெண்கள் அணி வீழ்த்தி திரில் வெற்றி
by rammalar Thu 20 Jun 2024 - 4:14
இஸ்லாம் புனித மார்க்கம்.2
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
இஸ்லாம் புனித மார்க்கம்.2
First topic message reminder :
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:
(பிறர் மீது) கெட்ட எண்ணம் கொள்வது குறித்த உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், கெட்ட எண்ணம் தான் பேச்சுகளிலேயே மிகவும் பொய்யானதாகும். (மற்றவர்களின் குற்றங் குறைகளை) துருவித் தருவி ஆராயாதீர்கள். ஒட்டுக்கேட்காதீர்கள். ஒருவரோடொருவர் பகைத்துக்கொள்ளாதீர்கள். (அல்லாஹ்வின் அடியார்களே!) சகோதரர்களாய் இருங்கள்.
நூல் : புகாரி 5143
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:
(பிறர் மீது) கெட்ட எண்ணம் கொள்வது குறித்த உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், கெட்ட எண்ணம் தான் பேச்சுகளிலேயே மிகவும் பொய்யானதாகும். (மற்றவர்களின் குற்றங் குறைகளை) துருவித் தருவி ஆராயாதீர்கள். ஒட்டுக்கேட்காதீர்கள். ஒருவரோடொருவர் பகைத்துக்கொள்ளாதீர்கள். (அல்லாஹ்வின் அடியார்களே!) சகோதரர்களாய் இருங்கள்.
நூல் : புகாரி 5143
Re: இஸ்லாம் புனித மார்க்கம்.2
54:48. அவர்களுடைய முகங்களின் மீது அவர்கள் நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படும் நாளில், “நரக நெருப்புத் தீண்டுவதைச் சுவைத்துப் பாருங்கள்” (என்று அவர்களுக்கு கூறப்படும்).
Re: இஸ்லாம் புனித மார்க்கம்.2
மக்கள் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! உங்கள் மீது நாங்கள் எப்படி ஸலவாத்து சொல்வது? என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹூம்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அஸ்வாஜிஹி வ துர்ரியத்திஹி கமா ஸல்லய்த்த அலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீதுன் மஜீத் இறைவா! இப்ராஹீம் அவர்களுடைய குடும்பத்தார் மீது நீ கருணை புரிந்ததைப் போன்று முஹம்மத் அவர்கள் மீதும் அவர்களுடைய மனைவிமார்கள் மற்றும் அவர்களுடைய சந்ததிகள் மீதும் கருணை புரிவாயாக! இப்ராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தார் மீது நீ உன் அருள் வளத்தைப் பொழிந்ததைப் போன்று முஹம்மதின் மீதும் அவர்களுடைய மனைவிமார்கள் மீதும் அவர்களுடைய சந்ததிகள் மீதும் உன் அருள் வளத்தைப் பொழிவாயாக! நிச்சயம் நீயே புகழுக்குரியவனும் கண்ணியம் நிறைந்தவனும் ஆவாய் என்று சொல்லுங்கள் என பதிலளித்தார்கள்.
புகாரி- 3369: அபூ ஹூமைத் அஸ்ஸாஇதீ (ரலி
புகாரி- 3369: அபூ ஹூமைத் அஸ்ஸாஇதீ (ரலி
Re: இஸ்லாம் புனித மார்க்கம்.2
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மத் கமா ஸல்லைத அலா இப்றாஹீம வஅலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீதும் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மத் கமா பாரக்த அலா இப்றாஹீம வஅலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீதும் மஜீத்’ ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
(அல்லாஹ்வே! நீ இப்றாஹீம் (அலை) அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தார் மீதும்ஸலவாத்துச் சொன்னது போல், முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தார் மீதும் ஸலவாத் சொல்வாயாக! அல்லாஹ்வே! நீ இப்றாஹீம் (அலை) அவர்கள் மீதும் அவர்கள் குடும்பத்தார் மீதும் ‘பரக்கத்’ (அபிவிருத்தி) செய்தது போல் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தார் மீதும் பரக்கத் செய்வாயாக!’ ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
(அல்லாஹ்வே! நீ இப்றாஹீம் (அலை) அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தார் மீதும்ஸலவாத்துச் சொன்னது போல், முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தார் மீதும் ஸலவாத் சொல்வாயாக! அல்லாஹ்வே! நீ இப்றாஹீம் (அலை) அவர்கள் மீதும் அவர்கள் குடும்பத்தார் மீதும் ‘பரக்கத்’ (அபிவிருத்தி) செய்தது போல் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தார் மீதும் பரக்கத் செய்வாயாக!’ ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
Re: இஸ்லாம் புனித மார்க்கம்.2
எல்லாப் படைப்பினங்களையும் அல்லாஹ் படைத்தான்; அல்லாஹ்வைப் படைத்தவன் யார்?" என்று நீட்சியடையும் கேள்வி கேட்கும் குழப்ப நிலைக்கு மக்கள் உள்ளாவார்கள். (உங்களுள்) ஒருவருக்கு இதுபோன்ற குழப்ப எண்ணம் ஏற்பட்டால் 'நான் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டேன்' என்று கூறி (அதில் அவர் உறுதி அடைந்து) கொள்ளட்டும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி).நூல் :முஸ்லிம் 190
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி).நூல் :முஸ்லிம் 190
Re: இஸ்லாம் புனித மார்க்கம்.2
உங்களில் ஒருவரிடம் ஷைத்தான் வந்து, இதைப் படைத்தவன் யார்?; இதைப் படைத்தவன் யார்? என்று (ஒவ்வொன்றாகக்)கேட்டுக்கொண்டே வந்து, உன் இறைவனைப் படைத்தவன் யார்? என்று கேட்கும் கட்டத்தை எட்டுவான். அப்போது அவர் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரி (அவனது கேள்விகளை) முடிவுக்குக் கொண்டு வந்து விடவும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).நூல் :முஸ்லிம் 191
Re: இஸ்லாம் புனித மார்க்கம்.2
உங்களில் ஒருவர் தம்முடன் அம்பை எடுத்துக்கொண்டு நம்முடைய பள்ளிவாசலில் அல்லது நம்முடைய கடைவீதியில் நடந்து சென்றால், அவர் ‘அவற்றின் முனைகளை (மறைத்து)ப் பிடித்துக்கொள்ளட்டும்’ அல்லது ‘தம் கைக்குள் (அதன் முனையை) மூடி வைத்துக் கொள்ளட்டும்’. அவற்றில் எதுவும் முஸ்லிம்களில் யாரையும் கீறி விடக்கூடாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :7075 அபூ மூஸா (ரலி) .
Re: இஸ்லாம் புனித மார்க்கம்.2
ஒருவர் அம்பை எடுத்துக் கொண்டு பள்ளியில் நடந்ததைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் ‘அதன் (கூரான) முனைப் பகுதியைப் பிடித்துக் கொள்வீராக!” என்று கூறினார்கள். புஹாரி :451 ஜாபிர் (ரலி).
Re: இஸ்லாம் புனித மார்க்கம்.2
"ஒரு நாள் வரும், அன்று நீ குளிக்க மாட்டாய், உன்னை குளிப்பாட்டுவார்கள்.... நீ உடை அணிய மாட்டாய், உனக்கு அணியப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய், உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழமாட்டாய், உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய், உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று........ உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் உள்ள அனைவரும் சென்று விடுவார்கள்".....
கண்டிப்பாக அந்த நாள் வரும், அந்த நாள் தான் உனது இறுதி நாளாக இருக்கும்...
"அந்த நாள் இறைவனை தொழாதவனுக்கும், இஸ்லாமிய வழிபாடுகளை பின்பற்றாதவனுக்கும் மிக மிக மோசமான நாளாக இருக்கும்".
அதுவே,
"இறைவனை தொழுது வழிபடுவனுக்கும், இஸ்லாமிய நெறி முறைகளை ஒழுங்காக பின்பற்றி நடப்பவனுக்கு... இறைவனை சந்திக்கப்போகும் மிக மிக அற்புதமான நாளாக இருக்கும்".
எனவே... எனதருமை சகோதரனே.... தயங்காதே.... தாமதிக்காதே.....
நேற்று என்பது முடிந்து விட்டது.... நாளை என்பது நம் கையில் இல்லை...
நாளை நாம் உயிருடன் இருப்பதும் நிச்சயம் இல்லை....
"நாளை", "நாளை" என்று நாளை கடத்தாமல், இன்றே
இப்பொழுதே.....
"உனக்காக தொழுகை நடத்தும் முன், நீ தொழ ஆரம்பித்துவிடு"..
கண்டிப்பாக அந்த நாள் வரும், அந்த நாள் தான் உனது இறுதி நாளாக இருக்கும்...
"அந்த நாள் இறைவனை தொழாதவனுக்கும், இஸ்லாமிய வழிபாடுகளை பின்பற்றாதவனுக்கும் மிக மிக மோசமான நாளாக இருக்கும்".
அதுவே,
"இறைவனை தொழுது வழிபடுவனுக்கும், இஸ்லாமிய நெறி முறைகளை ஒழுங்காக பின்பற்றி நடப்பவனுக்கு... இறைவனை சந்திக்கப்போகும் மிக மிக அற்புதமான நாளாக இருக்கும்".
எனவே... எனதருமை சகோதரனே.... தயங்காதே.... தாமதிக்காதே.....
நேற்று என்பது முடிந்து விட்டது.... நாளை என்பது நம் கையில் இல்லை...
நாளை நாம் உயிருடன் இருப்பதும் நிச்சயம் இல்லை....
"நாளை", "நாளை" என்று நாளை கடத்தாமல், இன்றே
இப்பொழுதே.....
"உனக்காக தொழுகை நடத்தும் முன், நீ தொழ ஆரம்பித்துவிடு"..
Re: இஸ்லாம் புனித மார்க்கம்.2
11:94. (தண்டனைக்குரிய) நம் கட்டளை வந்த போது, ஷுஐபையும் அவருடன் ஈமான் கொண்டவர்களையும் நமது ரஹ்மத்தை கொண்டு நாம் காப்பாற்றினோம்; அநியாயம் செய்தவர்களை (பேரிடியின்) முழக்கம் பிடித்துக் கொண்டது; அவர்கள் தம் வீடுகளில் இருந்தவாறே காலையில் (இறந்து) கிடந்தனர்.
Re: இஸ்லாம் புனித மார்க்கம்.2
7:163. (நபியே!) கடற்கரையிலிருந்த (ஓர்) ஊர் மக்களைப்பற்றி நீர் அவர்களைக் கேளும் - அவர்கள் (தடுக்கப்பட்ட ஸப்து) சனிக்கிழமையன்று வரம்பை மீறி (மீன் வேட்டையாடி)க் கொண்டிருந்தார்கள்; ஏனென்றால் அவர்களுடைய சனிக்கிழமையன்று (கடல்) மீன்கள், அவர்களுக்கு(த் தண்ணீருக்கு மேலே தலைகளை வெளியாக்கி)க் கொண்டு வந்தன - ஆனால் சனிக்கிழமையல்லாத நாட்களில் அவர்களிடம் (அவ்வாறு வெளியாக்கி) வருவதில்லை - அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக அவர்களை நாம் இவ்வாறு சோதனைக்குள்ளாக்கினோம்.
Re: இஸ்லாம் புனித மார்க்கம்.2
2:65. உங்க(ள் முன்னோர்க)ளிலிருந்து சனிக் கிழமையன்று (மீன் பிடிக்கக் கூடாது என்ற) வரம்பை மீறியவர்களைப்பற்றி நீங்கள் உறுதியாக அறிவீர்கள். அதனால் அவர்களை நோக்கி “சிறுமையடைந்த குரங்குகளாகி விடுங்கள்” என்று கூறினோம்.
Re: இஸ்லாம் புனித மார்க்கம்.2
உங்ளில் ஒருவர் தமது இஸ்லாத்தை அழகாக்கிக் கொண்டால் அவர் செய்யும் ஒவ்வொரு நன்மையும் பத்து மடங்கிலிருந்து எழுநூறு மடங்கு வரை பதிவு செய்யப்படும். அவர் செய்யும் ஒவ்வொரு தீமைக்கும் அந்த தீமையின் அளவு போன்றே பதிவு செய்யப்படும் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
புகாரி-42: அபூஹுரைரா(ரலி)
புகாரி-42: அபூஹுரைரா(ரலி)
Re: இஸ்லாம் புனித மார்க்கம்.2
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பற்றி அறிவிக்கையில் (பின்வருமாறு)கூறினார்கள்: அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும்(அவை இன்னின்னவை என நிர்ணயித்து)எழுதிவிட்டான். பிறகு அதனை விவரித்தான். அதாவது ஒருவர் ஒரு நன்மை செய்ய வேண்டும் என (மனத்தில்)எண்ணிவிட்டாலே- அதை செயல்படுத்தாமல் விட்டாலும் சரி- அவருக்காக தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாக அல்லாஹ் பதிவு செய்கிறான். அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும் விட்டால்,அந்த ஒரு நன்மையைத் தன்னிடம் பத்து நன்மைகளாக,எழுநூறு மடங்காக, இன்னும் அதிகமாக அல்லாஹ் பதிவு செய்கிறான். ஆனால் ஒருவர் தீமை செய்ய எண்ணி,(அல்லாஹ்வுக்கு அஞ்சி)அதைச் செய்யாமல் கை விட்டால்,அதற்காக அவருக்குத் தன்னிடம் ஒரு முழுநன்மையை அல்லாஹ் எழுதுகிறான். எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்து விட்டாலோ,அதற்காக ஒரேயொரு குற்றத்தையே அல்லாஹ் எழுதுகிறான்.
புகாரி-6491: இப்னு அப்பாஸ் (ரலி)
புகாரி-6491: இப்னு அப்பாஸ் (ரலி)
Re: இஸ்லாம் புனித மார்க்கம்.2
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஒட்டுமுடி வைத்துவிடும் பெண்கள், ஒட்டுமுடி வைத்துக்கொள்ளும் பெண்கள், பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள் ஆகியோரை அல்லாஹ் சபிக்கிறான். (தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துகிறான்.)
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
புஹாரி : 5933
ஒட்டுமுடி வைத்துவிடும் பெண்கள், ஒட்டுமுடி வைத்துக்கொள்ளும் பெண்கள், பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள் ஆகியோரை அல்லாஹ் சபிக்கிறான். (தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துகிறான்.)
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
புஹாரி : 5933
Re: இஸ்லாம் புனித மார்க்கம்.2
நபி(ஸல்) அவர்கள் ஒட்டுமுடி வைத்து விடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக் கொள்பவளையும் ('அல்லாஹ் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்தட்டும்' என்று) சபித்தார்கள். அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்
புஹாரி: 5936
புஹாரி: 5936
Re: இஸ்லாம் புனித மார்க்கம்.2
ஒருவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் (அறையின்) கதவிடுக்கில் எட்டிப் பார்த்தார். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் (இரும்பாலான) ஈர்வலிச் சீப்பொன்று இருந்தது. அதனால் தம் தலையை அவர்கள் கோதிக் கொண்டிருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அவரைப் பார்த்தபோது ‘என்னை நீ பார்க்கிறாய் என்று நான் (முன்பே) அறிந்திருந்தால், இந்தச் சீப்பினால் உன் கண்ணைக் குத்தியிருப்பேன். (அடுத்தவர் வீட்டுப் பெண்களைப்) பார்க்க நேரிடும் என்பதற்காகவே அனுமதி கேட்பது சட்டமாக்கப்பட்டது” என்று கூறினார்கள்.
புஹாரி : 6901 ஸஹ்ல் பின் ஸஆது(ரலி
புஹாரி : 6901 ஸஹ்ல் பின் ஸஆது(ரலி
Re: இஸ்லாம் புனித மார்க்கம்.2
ஒருவர் நபி (ஸல்) அவர்களின் அறைகளில் ஒன்றின் வழியாக எட்டிப் பார்த்தார். (இதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள் நீளமான அம்பின் ‘கூர்முனையுடன்’ அல்லது ‘கூர்முனைகளுடன்’ அவருக்குத் தெரியாமல் அவரை நோக்கிச் சென்று (அவரின் கண்ணில்) குத்தப்போனதை இப்போதும் நான் பார்ப்பது போன்று உள்ளது.
புஹாரி : 6242 அனஸ்(ரலி).
புஹாரி : 6242 அனஸ்(ரலி).
Re: இஸ்லாம் புனித மார்க்கம்.2
3:110. மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள். இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள். வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும் – அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராயும் இருக்கின்றனர். எனினும் அவர்களில் பலர் (இறை கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர்
Re: இஸ்லாம் புனித மார்க்கம்.2
என் சமுதாயத்தினரில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் ஆணை (இறுதிநாள்) தம்மிடம் வரும் வரை (சத்தியப் பாதையில் சோதனைகளை) வென்று நிலைத்திருப்பார்கள். (இறுதி நாள் வரும்) அந்த நேரத்திலும் அவர்கள் மேலோங்கியவர்களாகவே இருப்பார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி :3640 முகீரா இப்னு ஷுஅபா (ரலி).
புஹாரி :3640 முகீரா இப்னு ஷுஅபா (ரலி).
Re: இஸ்லாம் புனித மார்க்கம்.2
3:104. மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் – இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.
Re: இஸ்லாம் புனித மார்க்கம்.2
14:33. (தவறாமல்), தம் வழிகளில் ஒழுங்காகச் செல்லுமாறு சூரியனையும் சந்திரனையும் அவனே உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். மேலும், அவனே இரவையும் பகலையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான்.
Re: இஸ்லாம் புனித மார்க்கம்.2
14:33. (தவறாமல்), தம் வழிகளில் ஒழுங்காகச் செல்லுமாறு சூரியனையும் சந்திரனையும் அவனே உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். மேலும், அவனே இரவையும் பகலையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான்.
Re: இஸ்லாம் புனித மார்க்கம்.2
21:33. இன்னும் அவனே இரவையும், பகலையும்; சூரியனையும், சந்திரனையும் படைத்தான்; (வானில் தத்தமக்குரிய) வட்டவரைக்குள் ஒவ்வொன்றும் நீந்துகின்றன
Re: இஸ்லாம் புனித மார்க்கம்.2
உங்களில் ஒருவர் உறங்கும்போது பிடரியில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போடுகிறான். ஒவ்வொரு முடிச்சின் போதும் இரவு இன்னும் இருக்கிறது, உறங்கு என்று கூறுகிறான். அவர் விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்கிறது. அவர் உளூச் செய்தால் இன்னொரு முடிச்சு அவிழ்கிறது. அவர் தொழுதால் மற்றொரு முடிச்சும் அவிழ்கிறது. அவர் மகிழ்வுடனும் மன அமைதியுடனும் காலைப் பொழுதை அடைகிறார். இல்லையெனில் அமைதியற்றவராக, சோம்பல் நிறைந்தவராகக் காலைப் பொழுதை அடைகிறார்’.
புஹாரி: 1142 அபூஹூரைரா (ரலி
புஹாரி: 1142 அபூஹூரைரா (ரலி
Re: இஸ்லாம் புனித மார்க்கம்.2
நபி (ஸல்) அவர்களிடம் காலை விடியும் வரை (தொழுகைக்கும் எழுந்திருக்காமல்) இரவில் தூங்கிய ஒரு மனிதரைப் பற்றிக் கூறப்பட்டது. அதற்கு அவர்கள், ‘அந்த மனிதரின் இரண்டு காதுகளிலும் – அல்லது அவரின் காதில் – ஷைத்தான் சிறுநீர் கழித்துவிட்டான்” என்று பதிலளித்தார்கள்.
புஹாரி:3270 இப்னு மஸ்வூத் (ரலி)
புஹாரி:3270 இப்னு மஸ்வூத் (ரலி)
Page 3 of 4 • 1, 2, 3, 4
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» இஸ்லாம் புனித மார்க்கம்.
» இஸ்லாம் இது புனித மார்க்கம்.
» இஸ்லாம் புனித மார்க்கம்.01
» இஸ்லாம் புனித மார்க்கம்.02
» இஸ்லாம் புனித மார்க்கம். 03
» இஸ்லாம் இது புனித மார்க்கம்.
» இஸ்லாம் புனித மார்க்கம்.01
» இஸ்லாம் புனித மார்க்கம்.02
» இஸ்லாம் புனித மார்க்கம். 03
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|