Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
45 ஆண்டுக்கு பிறகு அதே புயல் ; அதே வேகம்...
Page 1 of 1
45 ஆண்டுக்கு பிறகு அதே புயல் ; அதே வேகம்...
பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை
வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியை ‘தானே‘ புயல் தாக்குமா என்ற உச்சகட்ட நிலை நெருங்கி விட்டது. சூறைக்காற்று, கடல் கொந்தளிப்பை ஏற்படுத்தி வரும் இந்த புயல் இன்று காலை கரை கடக்கும்.
இந்த தீவிரப்புயல் சென்னைக்கு 180 கிமீ தென்கிழக்கிலும், புதுச்சேரிக்கு 200 கிமீ தொலைவிலும் நிலை கொண்டு இருந்தது. பின் மேற்கு திசையில் நகரத் தொடங்கியுள்ளது. இதனால் நாகப்பட்டினம்&புதுச்சேரி இடையே இன்று அதிகாலை கரையைக் கடக்கும். கரையைக் கடக்கும் போது மணிக்கு 135 கிமீ வேகத்தில் காற்று வீசும்.
கடலில் சீற்றம் அதிகமாக இருப்பதுடன், இயல்பான கடல் அலைகளைவிட 1 மீட்டர் முதல் 1.5 மீட்டர் அளவு உயரம் அலைகள் எழும். அதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். புயல் கரையை கடக்கும் வரை தரைக் காற்று மணிக்கு 65 முதல் 75 கிமீ வேகத்தில் வீசும். கடலோரத்தில் வசிப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை செய்யபட்டுள்ளது.
அக்டோபர் 20ம் தேதி தொடங்கி டிசம்பர் 31ம் தேதியுடன் முடிந்துவிடுகிறது. இந்த கால இடைவெளியில் பெய்யும் மழை வடகிழக்கு பருவமழை என்று கூறுகிறார்கள். இதற்கு பிறகு பெய்யும் மழை குளிர்கால மழையாக வானிலை ஆய்வு மையம் எடுத்துக் கொள்கிறது. வடகிழக்கு பருவமழை காலங்களில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் தான் அதிக அளவில் காற்றழுத்தம், புயல் ஆகியவை உருவாகி பலத்த மழை பெய்யும்.
டிசம்பர் மாத இறுதியில் பெரும் பாலும் புயல் தோன்றுவது அரிதான விஷயம். அதிலும் ஒரே தேதியில் தோன்றுவது அதைவிட அரிதானது. கடந்த 45 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை அச்சுறுத்தும் வகையில், வங்கக் கடலில் டிசம்பர் 26ம் தேதி ஒரு புயல் உருவாகி தாக்கியது. அப்போது கடலில் சென்ற ஒரு கப்பல் தரைதட்டி சென்னை அண்ணா சமாதி பின்புறம் ஒதுங்கியது. அதேபோல 2011 டிசம்பர் 26ம் தேதி இப்போது ‘தானே’ புயல் உருவாகியுள்ளது.
வட தமிழகத்தை சேர்ந்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, நாகை, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யும். ஒரு சில இடங்களில் 250 மி.மீட்டருக்கு அதிகமாகவும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குடிசை வீடுகள் பாதிப்பு, பயிர் சேதம் இருக்கும். மின்சாரம், தொலை தொடர்பு துண்டிப்பு ஏற்படும். நெல், மணிலா, வாழை உள்ளிட்ட பயிர்களுக்கு அதிக பாதிப்பு இருக்கும். கடலில் இருந்து சில இடங்களில் கடல் நீர் புகும் வாய்ப்பும் உள்ளது. புயல் கரையை கடக்கும்வரை மழை தொடரும். இதையடுத்து புதுச்சேரி, கடலூர் துறைமுகத்தில் அதிகபட்ச புயல் எச்சரிக்கை கூண்டு எண் 10 ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, எண்ணூர் துறைமுகங்களில் 9ம் எண் கூண்டும், நாகப்பட்டினத்தில் 8ம் எண் கூண்டும் ஏற்றப்பட்டுள்ளன. பாம்பன், தூத்துக்குடியில் 3ம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன.
வட மாவட்டங்களில் 250 கடலோர கிராமங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பும் செய்யப்பட்டுள்ளது. கலெக்டர்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகங்கள் முழு வீச்சில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். போலீசார், தீயணைப்பு படையினர், உள்ளாட்சி ஊழியர்களும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட தேவையான உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளன.
மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்க தேவையான அளவில் பள்ளிகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்குத் தேவையான உணவு தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. தானே புயல் கரையை கடக்கும்போது ஏற்படும் சேதத்தில் இருந்து மீட்பு நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
புயலின் தீவிரம் எப்படி?
தேதி காற்றின்வேகம் தீவிரம்
(கிமீ/மணிக்கு) நிலை
28ம் தேதி 90&110 தீவிர புயல் காற்று
29ம் தேதிகாலை 130&155 மிகதீவிரமான புயல் காற்று
29ம்தேதி மாலை 130&155 மிகதீவிர புயல் காற்று
29ம்தேதிஇரவு 120&145 மிகதீவிர புயல் காற்று 30ம்தேதிமதியம் 80&100 புயல் காற்று
30ம்தேதி இரவு 65&75 புயல் காற்று
31ம் தேதி காலை 45&55 ஆழ்ந்த காற்றழுத்தம்
31ம் தேதி இரவு 30&50 குறைந்த காற்றழுத்தம்
‘ஜல்’லை முறியடிக்குமா ‘தானே?’
கடந்த ஆண்டு உருவான ‘ஜல்’ புயலை பார்க்கும் போது, மேல் அடுக்கில் காற்று முறிவு அதிகமாக இருந்ததால், அது வலுவிழந்து கரை கடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் ‘தானே’ புயலின் நிலை அப்படி இல்லை. 27 டிகிரி செல்சியஸ் கடல் வெப்பம் இருந்தால் ‘தானே’ புயலும் படிப்படியாக வலுவிழக்கும். நேற்றைய நிலவரப்படி 26.5 டிகிரி செல்சியஸ் கடல் வெப்ப நிலை இருந்ததால் படிப்படியாக இதுவும் வலுவிழக்க வாய்ப்புள்ளது.
சேறு, மணலுடன் சீற்றம்
‘தானே’ புயல் காரணமாக கடல் மட்டத்தில் மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்தில் காற்று வீசியது. இதனால் கடலில் சீற்றம் காணப்பட்டது. ஒரு சில இடங்களில் கடல் அலைகள் கடலில் உள்ள சேறுடன் தரைக்கு வந்தது. இதற்கு காரணம் ஆழம் குறைவாக இருப்பதுதான். இருப்பினும், ‘தானே’ புயல் தீவிரப் புயலாக மாறியுள்ளதால், காற்றில் அழுத்தம் கடலை நோக்கி அதிகமாக வருவதால் கடலில் ஆழம் குறைவான இடங்களில் அலைகள் ஏற்படும் போது சேற்றையும், மணலையும் எடுத்து வருகிறது.
பெயர் வந்தது எப்படி
பசிபிக் கடல் பிராந்தியத்தில் உருவாகும் புயல்களுக்கு சர்வதேச வானிலை ஆய்வு நிறுவனம் பெயர் சூட்டி வருகிறது. ஒவ்வொரு பிராந்தியத்திலும் உள்ள நாடுகள் ஒன்று சேர்ந்து புயலுக்கு பெயர் வைத்து அதை சர்வதேச வானிலை நிறுவனம் அங்கீகரித்து வெளியிடுகிறது. இதன்படி வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் உருவாகும் புயல்களுக்கும் பெயர்கள் சூட்டப்பட்டன.
இந்த பெயர் சூட்டும் பட்டியலில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஏமன், தாய்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன. 2004 முதல் நமது பிராந்தியத்தில் உருவாகும் புயல்களுக்கு இந்த நாடுகள் இட்ட பெயர்களை வைத்துள்ளனர். இப்போது வந்துள்ள ‘தானே’ புயலுக்கு மியான்மர் நாடு பெயர் சூட்டியுள்ளது. அந்த நாட்டின் ஜோதிட நிபுணர் மின்தானேகா பெயரைத்தான் சுருக்கி இப்படி வைத்துள்ளனர்.
வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியை ‘தானே‘ புயல் தாக்குமா என்ற உச்சகட்ட நிலை நெருங்கி விட்டது. சூறைக்காற்று, கடல் கொந்தளிப்பை ஏற்படுத்தி வரும் இந்த புயல் இன்று காலை கரை கடக்கும்.
இந்த தீவிரப்புயல் சென்னைக்கு 180 கிமீ தென்கிழக்கிலும், புதுச்சேரிக்கு 200 கிமீ தொலைவிலும் நிலை கொண்டு இருந்தது. பின் மேற்கு திசையில் நகரத் தொடங்கியுள்ளது. இதனால் நாகப்பட்டினம்&புதுச்சேரி இடையே இன்று அதிகாலை கரையைக் கடக்கும். கரையைக் கடக்கும் போது மணிக்கு 135 கிமீ வேகத்தில் காற்று வீசும்.
கடலில் சீற்றம் அதிகமாக இருப்பதுடன், இயல்பான கடல் அலைகளைவிட 1 மீட்டர் முதல் 1.5 மீட்டர் அளவு உயரம் அலைகள் எழும். அதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். புயல் கரையை கடக்கும் வரை தரைக் காற்று மணிக்கு 65 முதல் 75 கிமீ வேகத்தில் வீசும். கடலோரத்தில் வசிப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை செய்யபட்டுள்ளது.
அக்டோபர் 20ம் தேதி தொடங்கி டிசம்பர் 31ம் தேதியுடன் முடிந்துவிடுகிறது. இந்த கால இடைவெளியில் பெய்யும் மழை வடகிழக்கு பருவமழை என்று கூறுகிறார்கள். இதற்கு பிறகு பெய்யும் மழை குளிர்கால மழையாக வானிலை ஆய்வு மையம் எடுத்துக் கொள்கிறது. வடகிழக்கு பருவமழை காலங்களில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் தான் அதிக அளவில் காற்றழுத்தம், புயல் ஆகியவை உருவாகி பலத்த மழை பெய்யும்.
டிசம்பர் மாத இறுதியில் பெரும் பாலும் புயல் தோன்றுவது அரிதான விஷயம். அதிலும் ஒரே தேதியில் தோன்றுவது அதைவிட அரிதானது. கடந்த 45 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை அச்சுறுத்தும் வகையில், வங்கக் கடலில் டிசம்பர் 26ம் தேதி ஒரு புயல் உருவாகி தாக்கியது. அப்போது கடலில் சென்ற ஒரு கப்பல் தரைதட்டி சென்னை அண்ணா சமாதி பின்புறம் ஒதுங்கியது. அதேபோல 2011 டிசம்பர் 26ம் தேதி இப்போது ‘தானே’ புயல் உருவாகியுள்ளது.
வட தமிழகத்தை சேர்ந்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, நாகை, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யும். ஒரு சில இடங்களில் 250 மி.மீட்டருக்கு அதிகமாகவும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குடிசை வீடுகள் பாதிப்பு, பயிர் சேதம் இருக்கும். மின்சாரம், தொலை தொடர்பு துண்டிப்பு ஏற்படும். நெல், மணிலா, வாழை உள்ளிட்ட பயிர்களுக்கு அதிக பாதிப்பு இருக்கும். கடலில் இருந்து சில இடங்களில் கடல் நீர் புகும் வாய்ப்பும் உள்ளது. புயல் கரையை கடக்கும்வரை மழை தொடரும். இதையடுத்து புதுச்சேரி, கடலூர் துறைமுகத்தில் அதிகபட்ச புயல் எச்சரிக்கை கூண்டு எண் 10 ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, எண்ணூர் துறைமுகங்களில் 9ம் எண் கூண்டும், நாகப்பட்டினத்தில் 8ம் எண் கூண்டும் ஏற்றப்பட்டுள்ளன. பாம்பன், தூத்துக்குடியில் 3ம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன.
வட மாவட்டங்களில் 250 கடலோர கிராமங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பும் செய்யப்பட்டுள்ளது. கலெக்டர்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகங்கள் முழு வீச்சில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். போலீசார், தீயணைப்பு படையினர், உள்ளாட்சி ஊழியர்களும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட தேவையான உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளன.
மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்க தேவையான அளவில் பள்ளிகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்குத் தேவையான உணவு தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. தானே புயல் கரையை கடக்கும்போது ஏற்படும் சேதத்தில் இருந்து மீட்பு நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
புயலின் தீவிரம் எப்படி?
தேதி காற்றின்வேகம் தீவிரம்
(கிமீ/மணிக்கு) நிலை
28ம் தேதி 90&110 தீவிர புயல் காற்று
29ம் தேதிகாலை 130&155 மிகதீவிரமான புயல் காற்று
29ம்தேதி மாலை 130&155 மிகதீவிர புயல் காற்று
29ம்தேதிஇரவு 120&145 மிகதீவிர புயல் காற்று 30ம்தேதிமதியம் 80&100 புயல் காற்று
30ம்தேதி இரவு 65&75 புயல் காற்று
31ம் தேதி காலை 45&55 ஆழ்ந்த காற்றழுத்தம்
31ம் தேதி இரவு 30&50 குறைந்த காற்றழுத்தம்
‘ஜல்’லை முறியடிக்குமா ‘தானே?’
கடந்த ஆண்டு உருவான ‘ஜல்’ புயலை பார்க்கும் போது, மேல் அடுக்கில் காற்று முறிவு அதிகமாக இருந்ததால், அது வலுவிழந்து கரை கடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் ‘தானே’ புயலின் நிலை அப்படி இல்லை. 27 டிகிரி செல்சியஸ் கடல் வெப்பம் இருந்தால் ‘தானே’ புயலும் படிப்படியாக வலுவிழக்கும். நேற்றைய நிலவரப்படி 26.5 டிகிரி செல்சியஸ் கடல் வெப்ப நிலை இருந்ததால் படிப்படியாக இதுவும் வலுவிழக்க வாய்ப்புள்ளது.
சேறு, மணலுடன் சீற்றம்
‘தானே’ புயல் காரணமாக கடல் மட்டத்தில் மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்தில் காற்று வீசியது. இதனால் கடலில் சீற்றம் காணப்பட்டது. ஒரு சில இடங்களில் கடல் அலைகள் கடலில் உள்ள சேறுடன் தரைக்கு வந்தது. இதற்கு காரணம் ஆழம் குறைவாக இருப்பதுதான். இருப்பினும், ‘தானே’ புயல் தீவிரப் புயலாக மாறியுள்ளதால், காற்றில் அழுத்தம் கடலை நோக்கி அதிகமாக வருவதால் கடலில் ஆழம் குறைவான இடங்களில் அலைகள் ஏற்படும் போது சேற்றையும், மணலையும் எடுத்து வருகிறது.
பெயர் வந்தது எப்படி
பசிபிக் கடல் பிராந்தியத்தில் உருவாகும் புயல்களுக்கு சர்வதேச வானிலை ஆய்வு நிறுவனம் பெயர் சூட்டி வருகிறது. ஒவ்வொரு பிராந்தியத்திலும் உள்ள நாடுகள் ஒன்று சேர்ந்து புயலுக்கு பெயர் வைத்து அதை சர்வதேச வானிலை நிறுவனம் அங்கீகரித்து வெளியிடுகிறது. இதன்படி வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் உருவாகும் புயல்களுக்கும் பெயர்கள் சூட்டப்பட்டன.
இந்த பெயர் சூட்டும் பட்டியலில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஏமன், தாய்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன. 2004 முதல் நமது பிராந்தியத்தில் உருவாகும் புயல்களுக்கு இந்த நாடுகள் இட்ட பெயர்களை வைத்துள்ளனர். இப்போது வந்துள்ள ‘தானே’ புயலுக்கு மியான்மர் நாடு பெயர் சூட்டியுள்ளது. அந்த நாட்டின் ஜோதிட நிபுணர் மின்தானேகா பெயரைத்தான் சுருக்கி இப்படி வைத்துள்ளனர்.
Similar topics
» மரண தண்டனை விதிப்பு; 26 ஆண்டுக்கு பிறகு பெண் கைதி விடுதலை
» 2005 இற்கு பிறகு மாபெரும் சூரிய புயல் – வானில் தோன்றிய ஒளி வெள்ளம் புகைப்படங்கள்
» ஒளியின் வேகம் தெரியும். இருட்டின் வேகம் என்ன?
» ஆண்டுக்கு ஒரு தீபாவளி
» ஆண்டுக்கு 8 லட்சம் தற்கொலைகள்...
» 2005 இற்கு பிறகு மாபெரும் சூரிய புயல் – வானில் தோன்றிய ஒளி வெள்ளம் புகைப்படங்கள்
» ஒளியின் வேகம் தெரியும். இருட்டின் வேகம் என்ன?
» ஆண்டுக்கு ஒரு தீபாவளி
» ஆண்டுக்கு 8 லட்சம் தற்கொலைகள்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|