Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா? by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
சிரியாவில் அரபு லீக் கண்காணிப்பு பணிகளைத் தொடர தீர்மானம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
சிரியாவில் அரபு லீக் கண்காணிப்பு பணிகளைத் தொடர தீர்மானம்
கண்காணிப்பு பணிகளுக்கு சிரிய அரசு, எதிர்ப்பாளர்கள் இடையூறு
அரபு லீக் கண்காணிப்புப் பணிகளை சிரியாவில் தொடர்வதற்கு அந்த அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. சிரிய வன்முறைகள் தொடர்பான அரபு லிக் கண்காணிப்புப் பணிகள் குறித்து விமர்சனங்களும், அழுத்தங்களும் வெளியாகியுள்ள நிலையிலேயே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்படி சிரியாவில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுவதற்கு அரபு லீக் கண்காணிப்பாளர்களுக்குப் போதுமான கால அவகாசம் வழங்கப்படுவதோடு, ஒழுங்குகளுக்கு அமைய தமது கண்காணிப்புப் பணிகளைத் தொடர்வதற்குக் கோரப்பட்டுள்ளது.
அதேபோன்று சிரிய அரசும், ஆயுதக் குழுக்களும் உடனடியாக வன்முறைகளை நிறுத்த வேண்டும் எனவும் அரபு லீக் வலியுறுத்தியுள்ளது.
சிறிய விவகாரம் குறித்து அரபு லீக் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் எகிப்து தலைநகர் கெய்ரோவில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதில் சிரியாவில் செயற்பட்டுவரும் அரபு லீக் கண்காணிப்பாளர்களின் ஆரம்பக்கட்ட அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஜெனரல் மொஹம்மட் அஹமதி முஸ்தபாவும் பங்கேற்று சிரிய நிலவரம் குறித்து விளக்கினார்.
இதன்போது சிரியாவில் பெறப்பட்ட புகைப்பட, வீடியோ ஆதாரங்கள் மற்றும் வரைபடங்கள் கொண்டு அவர் சிரியாவின் தற்போதைய நிலவரம் குறித்து அரபு லீக் வெளியுறவு அமைச்சர்களுக்கு விளங்கினார்.
இதில் கண்காணிப்பாளர்களின் பணிக்கு சிரிய அரசும், எதிர்தரப்புகளும் இடையூறாக செயற்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. அத்துடன் கண்காணிப்புப் பணிகளைத் தொடர்வதற்கு மேலும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குமாறும். சிரிய அரசு மற்றும் எதிர்த்தரப்பினர் கண்காணிப்பாளர்களை சுதந்திரமாக செயற்பட உதவுமாறு அரபு லீக்கிற்கு கண்காணிப்புக் குழு சமர்ப்பித்துள்ளது ஆரம்பக் கட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எனினும் அரபு லீக் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் முரண்பாடான கருத்துகளும் வெளியாகி யுள்ளன. அதில் சிரியா மீதான அரபு லீக்கின் செயற்பாடுகளை விரிவுபடுத்த வேண்டும் எனவும், ஐக்கிய நாடுகள் மற்றும் ஓரளவாக சர்வதேச தலையீடுகளும் சிரியாவில் செயற்படுத்தப்பட வேண்டும் எனவும் இந்தக் கூட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
கட்டார் போன்ற நாடுகள் இந்தத் திட்டத்தை ஆதரித்துள்ளதோடு, அரபு லீக் செயலாளர் நாயகம் உட்பட பெரும்பாலான நாடுகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகத் தெரியவருகிறது என அல் ஜkரா செய்தி வெளியிட்டது.
இந்நிலையில் சிரியாவில் அரபு லீக் கண்காணிப்பாளர்களை அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த சனிக்கிழமை மேலும் 10 ஜோர்தான் நாட்டு கண்காணிப்பாளர்கள் டமஸ்கஸ் சென்றடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தற்போது சிரியாவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளோரின் எண்ணிக்கை 153 ஆக அதிகரித்துள்ளது.
இறுதியில் அரபு லீக் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் ஆறு முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன. எவ்வாறாயினும் சிரியாவில் தொடர்ந்தும் மோதல் இடம் பெற்று வருவதாக எதிர்த்தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர். பிரிட்டனில் இருந்து இயங்கும் சிரிய மனித உரிமை தொடர்பில் கண்காணிக்கும் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கிளர்ச்சியா ளர்களுக்கும், சிரிய இராணுத்தினருக்கும் டெராவில் இடம்பெற்ற கடும் மோதலில் 11 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், டைர் எஸ்சோர் நகரில் நேற்று முன்தினம் பாதுகாப்பு படையினர், துப்பாக்கிச்சூடு மற்றும் கடுமையான ஷெல் தாக்குதல்களை நடத்தியதாக அரச எதிர்ப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சிரியாவில் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில் இந்த தகவல்களை சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை என சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
அரபு லீக் கண்காணிப்புப் பணிகளை சிரியாவில் தொடர்வதற்கு அந்த அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. சிரிய வன்முறைகள் தொடர்பான அரபு லிக் கண்காணிப்புப் பணிகள் குறித்து விமர்சனங்களும், அழுத்தங்களும் வெளியாகியுள்ள நிலையிலேயே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்படி சிரியாவில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுவதற்கு அரபு லீக் கண்காணிப்பாளர்களுக்குப் போதுமான கால அவகாசம் வழங்கப்படுவதோடு, ஒழுங்குகளுக்கு அமைய தமது கண்காணிப்புப் பணிகளைத் தொடர்வதற்குக் கோரப்பட்டுள்ளது.
அதேபோன்று சிரிய அரசும், ஆயுதக் குழுக்களும் உடனடியாக வன்முறைகளை நிறுத்த வேண்டும் எனவும் அரபு லீக் வலியுறுத்தியுள்ளது.
சிறிய விவகாரம் குறித்து அரபு லீக் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் எகிப்து தலைநகர் கெய்ரோவில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதில் சிரியாவில் செயற்பட்டுவரும் அரபு லீக் கண்காணிப்பாளர்களின் ஆரம்பக்கட்ட அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஜெனரல் மொஹம்மட் அஹமதி முஸ்தபாவும் பங்கேற்று சிரிய நிலவரம் குறித்து விளக்கினார்.
இதன்போது சிரியாவில் பெறப்பட்ட புகைப்பட, வீடியோ ஆதாரங்கள் மற்றும் வரைபடங்கள் கொண்டு அவர் சிரியாவின் தற்போதைய நிலவரம் குறித்து அரபு லீக் வெளியுறவு அமைச்சர்களுக்கு விளங்கினார்.
இதில் கண்காணிப்பாளர்களின் பணிக்கு சிரிய அரசும், எதிர்தரப்புகளும் இடையூறாக செயற்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. அத்துடன் கண்காணிப்புப் பணிகளைத் தொடர்வதற்கு மேலும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குமாறும். சிரிய அரசு மற்றும் எதிர்த்தரப்பினர் கண்காணிப்பாளர்களை சுதந்திரமாக செயற்பட உதவுமாறு அரபு லீக்கிற்கு கண்காணிப்புக் குழு சமர்ப்பித்துள்ளது ஆரம்பக் கட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எனினும் அரபு லீக் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் முரண்பாடான கருத்துகளும் வெளியாகி யுள்ளன. அதில் சிரியா மீதான அரபு லீக்கின் செயற்பாடுகளை விரிவுபடுத்த வேண்டும் எனவும், ஐக்கிய நாடுகள் மற்றும் ஓரளவாக சர்வதேச தலையீடுகளும் சிரியாவில் செயற்படுத்தப்பட வேண்டும் எனவும் இந்தக் கூட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
கட்டார் போன்ற நாடுகள் இந்தத் திட்டத்தை ஆதரித்துள்ளதோடு, அரபு லீக் செயலாளர் நாயகம் உட்பட பெரும்பாலான நாடுகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகத் தெரியவருகிறது என அல் ஜkரா செய்தி வெளியிட்டது.
இந்நிலையில் சிரியாவில் அரபு லீக் கண்காணிப்பாளர்களை அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த சனிக்கிழமை மேலும் 10 ஜோர்தான் நாட்டு கண்காணிப்பாளர்கள் டமஸ்கஸ் சென்றடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தற்போது சிரியாவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளோரின் எண்ணிக்கை 153 ஆக அதிகரித்துள்ளது.
இறுதியில் அரபு லீக் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் ஆறு முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன. எவ்வாறாயினும் சிரியாவில் தொடர்ந்தும் மோதல் இடம் பெற்று வருவதாக எதிர்த்தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர். பிரிட்டனில் இருந்து இயங்கும் சிரிய மனித உரிமை தொடர்பில் கண்காணிக்கும் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கிளர்ச்சியா ளர்களுக்கும், சிரிய இராணுத்தினருக்கும் டெராவில் இடம்பெற்ற கடும் மோதலில் 11 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், டைர் எஸ்சோர் நகரில் நேற்று முன்தினம் பாதுகாப்பு படையினர், துப்பாக்கிச்சூடு மற்றும் கடுமையான ஷெல் தாக்குதல்களை நடத்தியதாக அரச எதிர்ப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சிரியாவில் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில் இந்த தகவல்களை சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை என சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» சிரியாவில் ஐ.நா - அரபு லீக் இணைந்து கண்காணிப்பு பணியை தொடர திட்டம்
» அரபு லீக் கண்காணிப்பு பணியை நீடிக்க சிரிய அரசு இணக்கம்
» அரபு லீக் கண்காணிப்பாளர்களை சிரியாவில் இருந்து வெளியேறுமாறு கோரிக்கை
» சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கு அரபு லீக் புதிய தீர்வுத்திட்டம்
» சிரியாவில் தொடர்ந்து மோதல்: அரபு லீக் அவசர கூட்டத்துக்கு அழைப்பு
» அரபு லீக் கண்காணிப்பு பணியை நீடிக்க சிரிய அரசு இணக்கம்
» அரபு லீக் கண்காணிப்பாளர்களை சிரியாவில் இருந்து வெளியேறுமாறு கோரிக்கை
» சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கு அரபு லீக் புதிய தீர்வுத்திட்டம்
» சிரியாவில் தொடர்ந்து மோதல்: அரபு லீக் அவசர கூட்டத்துக்கு அழைப்பு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|