Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதைby rammalar Today at 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Today at 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Today at 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Today at 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Today at 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Today at 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Today at 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
அப்துல் கலாமுக்கு யாழ்ப்பாணத்தில் அமோக வரவேற்பு
Page 1 of 1
அப்துல் கலாமுக்கு யாழ்ப்பாணத்தில் அமோக வரவேற்பு
அப்துல் கலாமுக்கு யாழ்ப்பாணத்தில் அமோக வரவேற்பு
அலைகடலென பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு மகிழ்ச்சி ஆரவாரம்; யாழ்.இந்துவிலும் வைபவம்
எம். எஸ். பாஹிம்
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமிற்கு யாழ்ப்பாணத்தில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரது வருகையையொட்டி யாழ்ப்பாணத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பலாலி விமான நிலையத்தை வந்தடைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் முதலில் வட மாகாண ஆளுநர் மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி, யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார், யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராசா, வட மாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலக்ஷ்மி ஆகியோர் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து அப்துல் கலாம் கேட்டறிந்து கொண்டார். யுத்தத்திற்குப் பின்னதான மீள்குடியேற்ற நடவடிக்கை, மக்களின் நலன்கள், வடக்கு அபிவிருத்தியில் இந்திய அரசாங்கத்தின் பங்களிப்பு, பாடசாலை செயற்பாடுகள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இங்கு ஆராயப்பட்டது. வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற் பாடுகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விளக்கியுள்ளார்.
இதன் போது இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பில் வட மாகாண மீனவர்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகள் உள்ளடக்கிய யாழ். மாவட்ட மீனவர் சங்கங்களின் மகஜர் ஒன்றும் அபுல் கலாமிடம் கையளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் மேற் கொண்டார். பல்கலைக்கழக உபவேந்தர் வசந்தி அரசரட்ணம் விரிவுரையாளர்கள் மற்றும் பெருந்திரளான மாணவர்கள் அவருக்கு அமோக வரவேற்பு அளித்தனர். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அவர் கைலாசபதி கலையரங்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். கலையரங்கு நிரம்பி வழிந்ததோடு பலருக்கு உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை.
பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்து பேசிய அவர், இங்கு மனங்களின் ஒற் றுமை என்ற தலைப்பில் விசேட உரை நிகழ்த்தினார். இதன் போது புகழ்பெற்ற விஞ்ஞானியான அப்துல் கலாம் பொன் னாடை அணிவித்து கெளரவிக்கப்பட்டதோடு அவருக்கு நினைவுச் சின்னமும் வழங் கப்பட்டது.
இந்த வைபவத்தில் வட மாகாண ஆளுநர், இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்தா, அமைச்சர் திஸ்ஸ விதாரண, ஏ. எச். எம். அஸ்வர் எம்.பி, பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் யாழ். டில்கோ ஹோட் டலில் நடைபெற்ற மதிய போசன விருந்து பசாரத்தில் அப்துல் கலாம் கலந்து சிறப் பித்தார். வட பகுதி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர். யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலவரம் தொடர்பில் இங்கு கலந்துரை யாடப்பட்டது. இந்திய உதவியுடன் முன்னெடுக்கப்படும் வீட்டுத் திட்டம், ரயில் பாதை நிர்மாணம், மீள்குடியேற்றம் உட்பட பல விடயங்கள் குறித்து பேசப் பட்டதாக அறிவிக்கப்படுகிறது. குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் மற்றும் தமிழரசுக் கட்சி எம்.பிக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்.
கலுணவு விருந்துபசாரத்தின் பின்னர் அப்துல் கலாம் அடங்கலான குழு யாழ். இந்துக் கல்லூரிக்கு விஜயம் செய்தது. பாடசாலை ஆசிரியர்கள் மாண வர்கள் போன்றோரை அவர் சந்தித்தார்.
தனது யாழ்ப்பாண விஜயத்தை நிறைவு செய்த அவர் மாலை கொழும்பு திரும்பினார். தனது இலங்கை விஜயத்தை முடித்துக் கொண்டு அப்துல் கலாம் இன்று இந்தியா திரும்புகிறார்.
அலைகடலென பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு மகிழ்ச்சி ஆரவாரம்; யாழ்.இந்துவிலும் வைபவம்
எம். எஸ். பாஹிம்
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமிற்கு யாழ்ப்பாணத்தில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரது வருகையையொட்டி யாழ்ப்பாணத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பலாலி விமான நிலையத்தை வந்தடைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் முதலில் வட மாகாண ஆளுநர் மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி, யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார், யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராசா, வட மாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலக்ஷ்மி ஆகியோர் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து அப்துல் கலாம் கேட்டறிந்து கொண்டார். யுத்தத்திற்குப் பின்னதான மீள்குடியேற்ற நடவடிக்கை, மக்களின் நலன்கள், வடக்கு அபிவிருத்தியில் இந்திய அரசாங்கத்தின் பங்களிப்பு, பாடசாலை செயற்பாடுகள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இங்கு ஆராயப்பட்டது. வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற் பாடுகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விளக்கியுள்ளார்.
இதன் போது இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பில் வட மாகாண மீனவர்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகள் உள்ளடக்கிய யாழ். மாவட்ட மீனவர் சங்கங்களின் மகஜர் ஒன்றும் அபுல் கலாமிடம் கையளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் மேற் கொண்டார். பல்கலைக்கழக உபவேந்தர் வசந்தி அரசரட்ணம் விரிவுரையாளர்கள் மற்றும் பெருந்திரளான மாணவர்கள் அவருக்கு அமோக வரவேற்பு அளித்தனர். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அவர் கைலாசபதி கலையரங்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். கலையரங்கு நிரம்பி வழிந்ததோடு பலருக்கு உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை.
பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்து பேசிய அவர், இங்கு மனங்களின் ஒற் றுமை என்ற தலைப்பில் விசேட உரை நிகழ்த்தினார். இதன் போது புகழ்பெற்ற விஞ்ஞானியான அப்துல் கலாம் பொன் னாடை அணிவித்து கெளரவிக்கப்பட்டதோடு அவருக்கு நினைவுச் சின்னமும் வழங் கப்பட்டது.
இந்த வைபவத்தில் வட மாகாண ஆளுநர், இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்தா, அமைச்சர் திஸ்ஸ விதாரண, ஏ. எச். எம். அஸ்வர் எம்.பி, பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் யாழ். டில்கோ ஹோட் டலில் நடைபெற்ற மதிய போசன விருந்து பசாரத்தில் அப்துல் கலாம் கலந்து சிறப் பித்தார். வட பகுதி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர். யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலவரம் தொடர்பில் இங்கு கலந்துரை யாடப்பட்டது. இந்திய உதவியுடன் முன்னெடுக்கப்படும் வீட்டுத் திட்டம், ரயில் பாதை நிர்மாணம், மீள்குடியேற்றம் உட்பட பல விடயங்கள் குறித்து பேசப் பட்டதாக அறிவிக்கப்படுகிறது. குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் மற்றும் தமிழரசுக் கட்சி எம்.பிக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்.
கலுணவு விருந்துபசாரத்தின் பின்னர் அப்துல் கலாம் அடங்கலான குழு யாழ். இந்துக் கல்லூரிக்கு விஜயம் செய்தது. பாடசாலை ஆசிரியர்கள் மாண வர்கள் போன்றோரை அவர் சந்தித்தார்.
தனது யாழ்ப்பாண விஜயத்தை நிறைவு செய்த அவர் மாலை கொழும்பு திரும்பினார். தனது இலங்கை விஜயத்தை முடித்துக் கொண்டு அப்துல் கலாம் இன்று இந்தியா திரும்புகிறார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» தெய்வத்திருமகளுக்கு அமோக வரவேற்பு
» இந்தோனேசியாவில் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு
» கடற்றொழிலாளர் பிரச்சினை: வடக்கு மீனவர் பிரதிநிதிகள் அப்துல் கலாமுக்கு மகஜர்
» யாழ்ப்பாணத்தில் மக்கள் ஆர்ப்பாட்டம்
» யாழ்ப்பாணத்தில் புதிய சிறைச்சாலை
» இந்தோனேசியாவில் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு
» கடற்றொழிலாளர் பிரச்சினை: வடக்கு மீனவர் பிரதிநிதிகள் அப்துல் கலாமுக்கு மகஜர்
» யாழ்ப்பாணத்தில் மக்கள் ஆர்ப்பாட்டம்
» யாழ்ப்பாணத்தில் புதிய சிறைச்சாலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|