Latest topics
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?by rammalar Today at 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Yesterday at 17:04
» கொக்கோ மரம்
by rammalar Yesterday at 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Yesterday at 13:05
» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Yesterday at 13:02
» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Yesterday at 9:04
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Yesterday at 8:57
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Yesterday at 4:28
» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Yesterday at 4:19
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 3:45
» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Yesterday at 3:39
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52
» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Wed 26 Jun 2024 - 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Wed 26 Jun 2024 - 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Tue 25 Jun 2024 - 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 25 Jun 2024 - 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Tue 25 Jun 2024 - 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Tue 25 Jun 2024 - 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Tue 25 Jun 2024 - 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Tue 25 Jun 2024 - 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Tue 25 Jun 2024 - 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
ஹெமீஜி கோட்டை
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
ஹெமீஜி கோட்டை
இயற்கையும், தொழில்நுட்ப அறிவும் சேர்ந்தால் ஒரு கோட்டையை எந்தளவுக்கு வலிமையுள்ளதாக ஆக்க முடியும் என்பதற்கு ஜப்பானின் ஹெமீஜி கோட்டை மிகச் சிறந்த உதாரணம். 14-ம் நூற்றாண்டில் அகாமாட்சு சடனோரி என்ற மன்னரால் கட்டப்பட்ட போது இது சாதாரண கட்டிடமாகத் தான் இருந்தது. இருநூறு ஆண்டுகளுக்கு பிறகு தான் இது பலம் வாய்ந்த கோட்டையாக உருமாறியது. மேல் இருந்து பார்த்தால் பறக்கத் தயார் நிலையில் இருக்கும் பறவையைப் போல காட்சியளிக்கும் இந்த மலைக் கோட்டை இரண்டு மலைகளின் மேல் கட்டப்பட்டுள்ளது.
கோட்டையின் மையப் பகுதியில் உள்ள பிரதான மாளிகையின் பாதுகாப்பைக் கருதி அதனைச் சுற்றி 3 அகழிகளை அமைத்துள்ளனர். முதல் மற்றும் இரண்டாவது அகழிகளுக்கு வெளிப்புறமாக கோட்டைக்குள் வசிக்கும் மற்றவர்களின் இருப்பிடங்கள் உள்ளன. எனவே எத்தகைய பலம் வாய்ந்த எதிரியும் மூன்று கட்டப் பாதுகாப்பிற்குள் இருக்கும் மைய மாளிகையை எளிதில் அணுகிவிட முடியாது. அதேபோல மூன்று அகழிகளை கடப்பதற்குள் எதிரிகளின் படை பலமும் கணிசமாக குறைந்துவிடும் என்பதால் இத்தகைய ஏற்பாட்டைச் செய்துள்ளனர்.
கோட்டையை நெருங்கும் எதிரிகள் உள்ளே இருப்பவற்றை எளிதாகப் பார்க்க முடியாதபடி, கோட்டையின் சுற்றுச் சுவர்களை சற்று சரிவாகக் கட்டியிருக்கின்றனர். கட்டுக்காவலையும் மீறி நுழையும் எதிரிகளைத் தடுக்க கோட்டைக்குள் மொத்தம் 84 கதவுகள் இருக்கின்றன. எதிரிகளின் பெரும்படை வேகமாக உள்ளே நுழைவதை தடுப்பதற்காக இந்த கதவுகளை மிகவும் சிறியதாக அமைத்திருக்கிறார்கள். அதேபோல எதிரிகளை குழப்புவதற்காக நாலாபுறமும் பல்வேறு பாதைகள் பிரிந்து செல்லும் படி வடிவமைத்துள்ளனர். எந்த பாதை எங்கு செல்கிறது என்பது அந்த கோட்டையில் வசிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.
எதிரிகளை திணறடிப்பதற்காக இந்த கோட்டையின் வடிவமைப்பில் சில பிரத்யேக முறைகளையும் கையாண்டுள்ளனர். உதாரணத்திற்கு மேல்தளத்திற்கு செல்ல படிக்கட்டுகளில் ஏறினால், சிறிது தூரம் சென்றதும் அது நம்மை கீழ்தளத்தில் கொண்டு விடும்படி அமைத்துள்ளனர். படிக்கட்டுகளுக்கு இடையிலும் அதிக இடைவெளி இருப்பதால் யாரும் விரைவாக அவற்றில் ஏறிவிட முடியாது. ஆனால் இவ்வளவு பாதுகாப்பாக கட்டப்பட்டுள்ள இந்த கோட்டை இதுவரை எந்த போரையும் சந்தித்ததில்லை. அதனால் தானோ என்னவோ இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பிறகும் ஹெமீஜி கோட்டை அதே கம்பீரத்துடன் காட்சியளிக்கிறது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஹெமீஜி கோட்டை
சிசென் இட்ஸா
பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 7-ம் நூற்றாண்டில் இட்ஸா என்று அழைக்கப்பட்ட வீரர் கூட்டம், வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் நகரம் ஒன்றைக் கைப்பற்றியது. அன்று முதல் அந்த நகரம் சிசென் இட்ஸா என்று வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் அந்த நகரில் ஏராளமான மாளிகைகளையும், கோவில்களையும், நினைவுச் சின்னங்களையும் கட்டினார்கள். மாயர்கள் என வரலாற்றில் குறிக்கப்படும் அந்நகர மக்கள் சிறந்த போர் வீரர்கள் மட்டுமின்றி அறிவில் சிறந்தவர்களாகவும் இருந்தனர். வானில் உள்ள நட்சத்திரங்களை ஆராய்வதற்காக அவர்கள் கட்டியுள்ள ஆய்வகமே இதற்கு சாட்சி. நத்தை வடிவில் உருவாக்கப்பட்ட இந்த ஆய்வகத்தின் அறைகளில் விழும் நிழலை வைத்தே அவர்கள் பல்வேறு வானிலைகளை கணித்தனர்.
வரலாற்றை எழுதி வைக்கும் அரிய பழக்கமும் மாயர்களிடம் இருந்திருக்கிறது. பந்து விளையாட்டுகளிலும் இவர்கள் அதிக ஈடுபாடு காட்டினர். எனவே இதற்கென நீண்ட விசாலமான பல மைதானங்களையும் உருவாக்கியுள்ளனர். அதில் ஒன்றின் நீளம் 545 அடி, அகலம் 232 அடி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த மைதானத்தின் உட்புற சுவர்களில் வீரர்கள் பந்து விளையாடுவது போலவும், தோற்ற அணித் தலைவரின் தலை வெட்டப்படுவது போலவும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
இந்த நகரின் மையப்பகுதியில் பிரமிட் வடிவில் அமைந்துள்ள குகுல்கன் (ரிuளீuறீநீணீஸீ) கோவில் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்கிறது. குகுல்கன் எனப்படும் இறக்கை முளைத்த பாம்புதான் மாயர்களின் முக்கிய கடவுள். எனவே அதற்காக இந்த பிரம்மாண்ட கோவிலை உருவாக்கியுள்ளனர். கோட்டை என்றும் அழைக்கப்படும் இந்த கோவிலின் நான்கு புறங்களிலும் உச்சியை நோக்கி படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த படிக்கட்டுகளின் கைப்பிடி சுவரின் அடிப்பாகம் ராட்ச பாம்பைப் போல உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்டின் குறிப்பிட்ட காலத்தில் மட்டும் இதன் நிழல் அருகில் உள்ள சுவரில் விழும் விதத்தில் மிக நேர்த்தியாக, ஆச்சரியப்படும் படி, இந்த கோவிலை வடிவமைத்துள்ளனர்.
சிசென் இட்ஸாவைச் சுற்றி இரண்டு ராட்சத கிணறுகள் உள்ளன. அவற்றில் மிக முக்கியமானது பலி கிணறு. இது மாயர்களின் மழைக் கடவுளான சாக்கை (சிலீணீணீநீ) வழிபட்டவர்களின் புனிதக் கிணறு. இந்த கிணற்றில் பானை முதல் விலை உயர்ந்த நவரத்தினங்கள் வரை பல பொருட்களை மக்கள், சாக் தெய்வத்திற்கு படையலாக போட்டு உள்ளனர். பஞ்ச காலங்களில் நரபலியும் கொடுக்கப் பட்டதாக கூறப்படுகிறது. இவை தவிர போர் வீரர்களை நினைவு கூறும் வகையில் ஆயிரம் தூண்களுடன் கோவில், தாடி மனிதன் கோவில், மான் கோவில் என பல கோவில்கள் இங்கு காணப்படுகின்றன.
இவ்வளவு சிறப்பான கட்டிடங்களை உருவாக்கிய மாயர்கள் திடீரென ஒருநாள் இந்த நகரைவிட்டுச் செல்ல முடிவெடுத்தனர். இதற்கான காரணம் என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. ஆனால் சிசென் இட்ஸாவை சுற்றியுள்ள குகைகளில் அவர்கள் பயன்படுத்திய பானை உள்பட பல்வேறு அபூர்வ பொருட்கள் இன்னும் அப்படியே உள்ளன. இவை காண்போரை வியப்பில் ஆழ்த்துகின்றன.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 7-ம் நூற்றாண்டில் இட்ஸா என்று அழைக்கப்பட்ட வீரர் கூட்டம், வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் நகரம் ஒன்றைக் கைப்பற்றியது. அன்று முதல் அந்த நகரம் சிசென் இட்ஸா என்று வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் அந்த நகரில் ஏராளமான மாளிகைகளையும், கோவில்களையும், நினைவுச் சின்னங்களையும் கட்டினார்கள். மாயர்கள் என வரலாற்றில் குறிக்கப்படும் அந்நகர மக்கள் சிறந்த போர் வீரர்கள் மட்டுமின்றி அறிவில் சிறந்தவர்களாகவும் இருந்தனர். வானில் உள்ள நட்சத்திரங்களை ஆராய்வதற்காக அவர்கள் கட்டியுள்ள ஆய்வகமே இதற்கு சாட்சி. நத்தை வடிவில் உருவாக்கப்பட்ட இந்த ஆய்வகத்தின் அறைகளில் விழும் நிழலை வைத்தே அவர்கள் பல்வேறு வானிலைகளை கணித்தனர்.
வரலாற்றை எழுதி வைக்கும் அரிய பழக்கமும் மாயர்களிடம் இருந்திருக்கிறது. பந்து விளையாட்டுகளிலும் இவர்கள் அதிக ஈடுபாடு காட்டினர். எனவே இதற்கென நீண்ட விசாலமான பல மைதானங்களையும் உருவாக்கியுள்ளனர். அதில் ஒன்றின் நீளம் 545 அடி, அகலம் 232 அடி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த மைதானத்தின் உட்புற சுவர்களில் வீரர்கள் பந்து விளையாடுவது போலவும், தோற்ற அணித் தலைவரின் தலை வெட்டப்படுவது போலவும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
இந்த நகரின் மையப்பகுதியில் பிரமிட் வடிவில் அமைந்துள்ள குகுல்கன் (ரிuளீuறீநீணீஸீ) கோவில் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்கிறது. குகுல்கன் எனப்படும் இறக்கை முளைத்த பாம்புதான் மாயர்களின் முக்கிய கடவுள். எனவே அதற்காக இந்த பிரம்மாண்ட கோவிலை உருவாக்கியுள்ளனர். கோட்டை என்றும் அழைக்கப்படும் இந்த கோவிலின் நான்கு புறங்களிலும் உச்சியை நோக்கி படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த படிக்கட்டுகளின் கைப்பிடி சுவரின் அடிப்பாகம் ராட்ச பாம்பைப் போல உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்டின் குறிப்பிட்ட காலத்தில் மட்டும் இதன் நிழல் அருகில் உள்ள சுவரில் விழும் விதத்தில் மிக நேர்த்தியாக, ஆச்சரியப்படும் படி, இந்த கோவிலை வடிவமைத்துள்ளனர்.
சிசென் இட்ஸாவைச் சுற்றி இரண்டு ராட்சத கிணறுகள் உள்ளன. அவற்றில் மிக முக்கியமானது பலி கிணறு. இது மாயர்களின் மழைக் கடவுளான சாக்கை (சிலீணீணீநீ) வழிபட்டவர்களின் புனிதக் கிணறு. இந்த கிணற்றில் பானை முதல் விலை உயர்ந்த நவரத்தினங்கள் வரை பல பொருட்களை மக்கள், சாக் தெய்வத்திற்கு படையலாக போட்டு உள்ளனர். பஞ்ச காலங்களில் நரபலியும் கொடுக்கப் பட்டதாக கூறப்படுகிறது. இவை தவிர போர் வீரர்களை நினைவு கூறும் வகையில் ஆயிரம் தூண்களுடன் கோவில், தாடி மனிதன் கோவில், மான் கோவில் என பல கோவில்கள் இங்கு காணப்படுகின்றன.
இவ்வளவு சிறப்பான கட்டிடங்களை உருவாக்கிய மாயர்கள் திடீரென ஒருநாள் இந்த நகரைவிட்டுச் செல்ல முடிவெடுத்தனர். இதற்கான காரணம் என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. ஆனால் சிசென் இட்ஸாவை சுற்றியுள்ள குகைகளில் அவர்கள் பயன்படுத்திய பானை உள்பட பல்வேறு அபூர்வ பொருட்கள் இன்னும் அப்படியே உள்ளன. இவை காண்போரை வியப்பில் ஆழ்த்துகின்றன.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஹெமீஜி கோட்டை
பெட்ரா
மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட பிரம்மாண்டம் தான் ஜோர்டான் நாட்டில் அமைந்துள்ள பெட்ரா குகைக் கோவில்கள். இது சாக்கடலுக்கும், அகாபா வளைகுடாவுக்கும் இடையில் அமைந்துள்ளது. 18-ம் நூற்றாண்டு வரை பலராலும் அறியப்படாமல் இருந்த இந்த மலை நகரத்தை, 1812-ம் ஆண்டு லுட்விக் பர்க்ஹார்ட் (லிuபீஷ்வீரீ ஙிuக்ஷீநீளீலீணீக்ஷீபீt) என்ற சுவிட்சர்லாந்து நாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்தான் வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டினார். பின்னர் 1985-ம் ஆண்டு இது யுனெஸ்கோ அமைப்பால் உலக கலாச்சாரச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. 2007-ல் சுவிட்சர்லாந்து நாட்டின் தனியார் அமைப்பு வெளியிட்ட புதிய 7 உலக அதிசயங்கள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது.
உலக அதிசயமாக கருதப்படும் அளவுக்கு அங்கு என்ன இருக்கிறது? கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே கட்டப்பட்ட இந்த மலைக் கோவில்கள் இன்னும் காலத்தை வென்று நிற்கின்றன என்ற ஒரு காரணமே போதும். ஆனால் அதையும் தாண்டி பல அதிசயங்கள் அங்கே விரிந்து கிடக்கின்றன. பண்டைய காலத்தில் நெபாடியர்களின் தலைநகரமாக செல்வ வளம் கொழித்த நகரம் தான் பெட்ரா. பெட்ரா என்றால் கிரேக்க மொழியில் பாறை என்று அர்த்தம். நாலாபுறமும் மலைகள் சூழ நடுவில் இருக்கும் பள்ளத்தாக்கில் அமைந்திருந்ததால் இந்த நகரம் மிகவும் பாதுகாப்பானதாகவும் கருதப்பட்டது.
நெபாடியர்கள் தண்ணீர் மேலாண்மையில் கைதேர்ந்தவர்கள். அந்த வறண்ட மலைப் பிரதேசத்தில் பெய்யும் மழை வீணாகி விடாத வகையில் நகருக்குள் நேர்த்தியான கால்வாய்கள், அணைகள் போன்றவற்றை அமைத்து தண்ணீரை பல இடங்களில் தேக்கியுள்ளனர். காலத்தை வென்று வானைத் தொடும் வகையில் உயர்ந்து நிற்கும் குகைக் கோவில்கள் தான் இந்த நகரின் சிறப்பம்சம். இவற்றில் பல காலவெள்ளத்தில் சிதைந்து விட்டாலும், பானை சோற்றுக்கு பதம் சொல்வது போல இன்னும் சில பிரம்மாண்டங்கள் அங்கே நிலைத்து நிற்கின்றன. அவற்றில் மிக முக்கியமானது, கருவூலம் என அழைக்கப்படும் அல்-கஸ்னே. பண்டைய மன்னர் ஒருவர் தனது பொக்கிஷங்களை போருக்கு செல்லும் வழியில் இந்த மலைக் குகையின் கூரைகளில் ஒளித்து வைத்தார் என்று ஒரு செவி வழிக் கதையும் உள்ளது. ஆனால் இந்த கல் கட்டிடத்தின் சிற்ப வேலைப்பாடுகளையும், கைவினை நுணுக்கங்களையும் பார்க்கும் போது இது உண்மையிலேயே கலைகளின் கஜானா என்றுதான் சொல்ல வேண்டும். குறுகிய மலைப் பாதை வழியாக இந்த இடத்தை அடைவதே மிகவும் சவால் மிக்க பயணமாக இருப்பதால் இதைக் காண உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
பெட்ராவில் உள்ள ஒவ்வொரு கல் மாளிகையும் கட்டிடக் கலைக்கு பெருமை சேர்ப்பவை. பல்வேறு கலாசாரங்களின் கலவையாக இந்த கல் மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. நகரின் மையத்தில் அமைந்துள்ள பெரிய கோவிலின் முகப்பு பகுதி மலைக்க வைக்கும் நான்கு தூண்களுடன் பிரம்மாண்டமாக நம்மை வரவேற்கிறது. உள்ளே சென்று பார்த்தால் விழிகள் வியப்பால் விரிந்து விடுகின்றன. இந்த கோவிலைச் சுற்றி நடைபெறும் தொல்பொருள் ஆய்வுகளில் கண்டெடுக்கப்படும் பொக்கிஷங்கள் நாம் இன்னும் பல அதிசயங்களுக்கு தயாராக வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்கின்றன.
மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட பிரம்மாண்டம் தான் ஜோர்டான் நாட்டில் அமைந்துள்ள பெட்ரா குகைக் கோவில்கள். இது சாக்கடலுக்கும், அகாபா வளைகுடாவுக்கும் இடையில் அமைந்துள்ளது. 18-ம் நூற்றாண்டு வரை பலராலும் அறியப்படாமல் இருந்த இந்த மலை நகரத்தை, 1812-ம் ஆண்டு லுட்விக் பர்க்ஹார்ட் (லிuபீஷ்வீரீ ஙிuக்ஷீநீளீலீணீக்ஷீபீt) என்ற சுவிட்சர்லாந்து நாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்தான் வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டினார். பின்னர் 1985-ம் ஆண்டு இது யுனெஸ்கோ அமைப்பால் உலக கலாச்சாரச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. 2007-ல் சுவிட்சர்லாந்து நாட்டின் தனியார் அமைப்பு வெளியிட்ட புதிய 7 உலக அதிசயங்கள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது.
உலக அதிசயமாக கருதப்படும் அளவுக்கு அங்கு என்ன இருக்கிறது? கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே கட்டப்பட்ட இந்த மலைக் கோவில்கள் இன்னும் காலத்தை வென்று நிற்கின்றன என்ற ஒரு காரணமே போதும். ஆனால் அதையும் தாண்டி பல அதிசயங்கள் அங்கே விரிந்து கிடக்கின்றன. பண்டைய காலத்தில் நெபாடியர்களின் தலைநகரமாக செல்வ வளம் கொழித்த நகரம் தான் பெட்ரா. பெட்ரா என்றால் கிரேக்க மொழியில் பாறை என்று அர்த்தம். நாலாபுறமும் மலைகள் சூழ நடுவில் இருக்கும் பள்ளத்தாக்கில் அமைந்திருந்ததால் இந்த நகரம் மிகவும் பாதுகாப்பானதாகவும் கருதப்பட்டது.
நெபாடியர்கள் தண்ணீர் மேலாண்மையில் கைதேர்ந்தவர்கள். அந்த வறண்ட மலைப் பிரதேசத்தில் பெய்யும் மழை வீணாகி விடாத வகையில் நகருக்குள் நேர்த்தியான கால்வாய்கள், அணைகள் போன்றவற்றை அமைத்து தண்ணீரை பல இடங்களில் தேக்கியுள்ளனர். காலத்தை வென்று வானைத் தொடும் வகையில் உயர்ந்து நிற்கும் குகைக் கோவில்கள் தான் இந்த நகரின் சிறப்பம்சம். இவற்றில் பல காலவெள்ளத்தில் சிதைந்து விட்டாலும், பானை சோற்றுக்கு பதம் சொல்வது போல இன்னும் சில பிரம்மாண்டங்கள் அங்கே நிலைத்து நிற்கின்றன. அவற்றில் மிக முக்கியமானது, கருவூலம் என அழைக்கப்படும் அல்-கஸ்னே. பண்டைய மன்னர் ஒருவர் தனது பொக்கிஷங்களை போருக்கு செல்லும் வழியில் இந்த மலைக் குகையின் கூரைகளில் ஒளித்து வைத்தார் என்று ஒரு செவி வழிக் கதையும் உள்ளது. ஆனால் இந்த கல் கட்டிடத்தின் சிற்ப வேலைப்பாடுகளையும், கைவினை நுணுக்கங்களையும் பார்க்கும் போது இது உண்மையிலேயே கலைகளின் கஜானா என்றுதான் சொல்ல வேண்டும். குறுகிய மலைப் பாதை வழியாக இந்த இடத்தை அடைவதே மிகவும் சவால் மிக்க பயணமாக இருப்பதால் இதைக் காண உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
பெட்ராவில் உள்ள ஒவ்வொரு கல் மாளிகையும் கட்டிடக் கலைக்கு பெருமை சேர்ப்பவை. பல்வேறு கலாசாரங்களின் கலவையாக இந்த கல் மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. நகரின் மையத்தில் அமைந்துள்ள பெரிய கோவிலின் முகப்பு பகுதி மலைக்க வைக்கும் நான்கு தூண்களுடன் பிரம்மாண்டமாக நம்மை வரவேற்கிறது. உள்ளே சென்று பார்த்தால் விழிகள் வியப்பால் விரிந்து விடுகின்றன. இந்த கோவிலைச் சுற்றி நடைபெறும் தொல்பொருள் ஆய்வுகளில் கண்டெடுக்கப்படும் பொக்கிஷங்கள் நாம் இன்னும் பல அதிசயங்களுக்கு தயாராக வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்கின்றன.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஹெமீஜி கோட்டை
மலை உச்சி மடாலயம்
எத்தியோப்பியாவின் பழமையான மடாலயங்களில் ஒன்றான டெப்ரா டெமோ (ஞிமீதீக்ஷீணீ ஞிணீனீஷீ) மடாலயம் டிக்ரே நகரில் உள்ள மலை உச்சியில் அமைந்துள்ளது. சுமார் 1400 ஆண்டுகள் பழமையான இந்த மடாலயத்தைக் காண உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். மற்ற சுற்றுலாத் தலங்களைப் போல அவ்வளவு சுலபத்தில் இங்கு சென்றுவிட முடியாது. காரணம் இந்த மடாலயம் 75 அடி உயரமுள்ள செங்குத்தான மலையில் அமைந்துள்ளது. மலை உச்சியில் இருந்து தொங்கவிடப்படும் ஒரு கயிற்றை இடுப்பில் கட்டிக் கொண்டு, மற்றொரு கயிற்றைப் பிடித்து ஏறித்தான் உச்சிக்கு செல்ல வேண்டும்.
டெப்ரா டெமோ மடாலயம் அபுனா அராகவி (கிதீuஸீணீ கிக்ஷீணீரீணீஷ்வீ) என்ற துறவியால் நிர்மாணிக்கப்பட்டது. ஒரு ராட்சத பாம்பு அவரை இந்த மலை உச்சிக்கு கொண்டு வந்ததாகவும், பிறகு அவர் இந்த மடாலயத்தை உருவாக்கியதாகவும் ஒரு நாட்டுப்புறக் கதை உள்ளது. இதன் அருகிலேயே ஒரு கிறிஸ்துவ தேவாலயமும் உள்ளது. எளிதில் அணுக முடியாத உயரத்தில் தனித்திருந்ததால் எத்தியோப்பியாவின் பல அரிய கையெழுத்துப் பிரதிகளை அக்காலத்தில் இந்த மடாலயத்தில் பாதுகாத்து வந்தனர். அவை இன்னும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த பழங்கால தேவாலயத்தின் தூண்களிலும், உட்புற கூரையிலும் வரையப்பட்டுள்ள அற்புத ஓவியங்களும் எத்தியோப்பியாவின் கலைப் பொக்கிஷங்களாக கருதப்படுகின்றன.
அக்காலத்தில் நூற்றுக்கணக்கான துறவிகள் இந்த மடாலயத்தில் தங்கி தியானத்தில் ஈடுபட்டுள்ளனர். உள்ளூர் மக்கள் இவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வழங்கி வந்தாலும், இந்தத் துறவிகளும் மலையடிவாரத்தில் ஆடு, மாடுகளை மேய்த்தும், தானியங்களை பயிரிட்டும் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டுள்ளனர். தண்ணீர் தேவைக்காக மலை உச்சியிலேயே ஒரு பெரிய நீர்த்தேக்கம் ஒன்றையும் உருவாக்கியுள்ளனர். மற்ற எத்தியோப்பிய மடாலயங்களைப் போல இங்கும் பெண்களுக்கு அனுமதி இல்லை.
எத்தியோப்பியாவின் பழமையான மடாலயங்களில் ஒன்றான டெப்ரா டெமோ (ஞிமீதீக்ஷீணீ ஞிணீனீஷீ) மடாலயம் டிக்ரே நகரில் உள்ள மலை உச்சியில் அமைந்துள்ளது. சுமார் 1400 ஆண்டுகள் பழமையான இந்த மடாலயத்தைக் காண உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். மற்ற சுற்றுலாத் தலங்களைப் போல அவ்வளவு சுலபத்தில் இங்கு சென்றுவிட முடியாது. காரணம் இந்த மடாலயம் 75 அடி உயரமுள்ள செங்குத்தான மலையில் அமைந்துள்ளது. மலை உச்சியில் இருந்து தொங்கவிடப்படும் ஒரு கயிற்றை இடுப்பில் கட்டிக் கொண்டு, மற்றொரு கயிற்றைப் பிடித்து ஏறித்தான் உச்சிக்கு செல்ல வேண்டும்.
டெப்ரா டெமோ மடாலயம் அபுனா அராகவி (கிதீuஸீணீ கிக்ஷீணீரீணீஷ்வீ) என்ற துறவியால் நிர்மாணிக்கப்பட்டது. ஒரு ராட்சத பாம்பு அவரை இந்த மலை உச்சிக்கு கொண்டு வந்ததாகவும், பிறகு அவர் இந்த மடாலயத்தை உருவாக்கியதாகவும் ஒரு நாட்டுப்புறக் கதை உள்ளது. இதன் அருகிலேயே ஒரு கிறிஸ்துவ தேவாலயமும் உள்ளது. எளிதில் அணுக முடியாத உயரத்தில் தனித்திருந்ததால் எத்தியோப்பியாவின் பல அரிய கையெழுத்துப் பிரதிகளை அக்காலத்தில் இந்த மடாலயத்தில் பாதுகாத்து வந்தனர். அவை இன்னும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த பழங்கால தேவாலயத்தின் தூண்களிலும், உட்புற கூரையிலும் வரையப்பட்டுள்ள அற்புத ஓவியங்களும் எத்தியோப்பியாவின் கலைப் பொக்கிஷங்களாக கருதப்படுகின்றன.
அக்காலத்தில் நூற்றுக்கணக்கான துறவிகள் இந்த மடாலயத்தில் தங்கி தியானத்தில் ஈடுபட்டுள்ளனர். உள்ளூர் மக்கள் இவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வழங்கி வந்தாலும், இந்தத் துறவிகளும் மலையடிவாரத்தில் ஆடு, மாடுகளை மேய்த்தும், தானியங்களை பயிரிட்டும் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டுள்ளனர். தண்ணீர் தேவைக்காக மலை உச்சியிலேயே ஒரு பெரிய நீர்த்தேக்கம் ஒன்றையும் உருவாக்கியுள்ளனர். மற்ற எத்தியோப்பிய மடாலயங்களைப் போல இங்கும் பெண்களுக்கு அனுமதி இல்லை.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» கோட்டை
» சூரியக் கோட்டை
» பறக்கும் கோட்டை
» திருமயம் கோட்டை மற்றும் குடைவரை கோயில்கள்
» கோட்டை சுவர் முழுதும் ஆபாச படங்களாக இருக்கே..?!
» சூரியக் கோட்டை
» பறக்கும் கோட்டை
» திருமயம் கோட்டை மற்றும் குடைவரை கோயில்கள்
» கோட்டை சுவர் முழுதும் ஆபாச படங்களாக இருக்கே..?!
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|