Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
குழந்தை பெற்ற 13 வயது மாணவியின் தொப்புள் கொடியை பிளேடால் அறுத்த சக மாணவி.
4 posters
Page 1 of 1
குழந்தை பெற்ற 13 வயது மாணவியின் தொப்புள் கொடியை பிளேடால் அறுத்த சக மாணவி.
குழந்தை பெற்ற 13 வயது மாணவியின் தொப்புள் கொடியை பிளேடால் அறுத்த சக மாணவி.
கடலூர்
மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள அரசு மாணவியர் விடுதி ஒன்றில் ஒன்பதாம்
வகுப்பு படிக்கும் மாணவிக்கு குழந்தை பிறந்தது. தங்கள் கண்முன்னே
தோழிக்கு குழந்தை பிறந்ததைப் பார்த்த விடுதி மாணவிகள் சிலர் மனநிலை
பாதிக்கப்பட்டுள்ளனர்...’
இந்தச் செய்தியை கேள்விப்பட்டதும்
‘சுளீர்’ என்று இதயத்தைத் தைத்தது போன்ற உணர்வு. என்ன கொடுமை இது...? இதனை
விசாரிக்க களத்தில் இறங்கியபோது அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி...
தலித்
மாணவிகளின் கல்வி வளர்ச்சிக்காக தொடங்கப்பட்ட மேல்நிலைப்பள்ளி ஒன்றின்
வளாகத்திற்குள்தான் இந்த அரசு மாணவியர் விடுதி இருக்கிறது. ஆறாம்
வகுப்பிலிருந்து பிளஸ் டூ வரை படிக்கும் மாணவிகள் சுமார் 740 பேர் இந்த
விடுதியில் தங்கிப் படிக்கின்றனர்.
விடுதியில் மாணவிகளுக்கான
பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்ற குற்றச்சாட்டுகள்
தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்த சூழலில்தான், இப்படியொரு ‘கொடுமை’
அரங்கேறியிருக்கிறது.
“மயிலாடுதுறை
அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த மகேஸ்வரியும், ராதிகாவும் (பெயர்
மாற்றப்பட்டுள்ளது) விடுதியில் தங்கி இதே பள்ளியில் படித்து வந்தி
ருக்கின்றனர். அக்காள், தங்கையான இந்த இருவரில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்
தங்கை மகேஸ்வரிக்குத்தான் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. 13
வயதுகூட நிரம்பாத அந்தக் குழந்தைக்கு ஓர் ஆண்குழந்தை பிறந்திருக்கிறது.
கடந்த
24-ம் தேதி விடுதியில் உள்ள ஒரு அறையிலிருந்து அதிகாலை 3 மணியளவில் பயங்கர
அலறல் சத்தம் கேட்டபோது, ஒட்டுமொத்த விடுதி மாணவிகளும் என்னவோ, ஏதோ என்று
பதறியபடி விழித்துக்கொண்டனர். அத்துடன் அலறல் சத்தம் வந்த அறையை நோக்கி
அனைவரும் சென்றிருக்கின்றனர்.
அங்கே அந்த அறை மாணவிகளும்
கூடியிருக்க, மகேஸ்வரி மட்டும் வயிற்றைப் பிடித்துக்கொண்டு வலியால்
கதறியிருக்கிறாள். விவரம் புரியாத சக மாணவிகள் சாதாரண வயிற்றுவலியால்தான்
துடிக்கிறாள் என்று நினைத்தனர். விடுதியில் இருந்த பெண் காவலாளியும்,
‘வயித்துவலிக்குப்போயி இந்த நேரத்துல ஏன் ஊரைக் கூட்டுற’ என்று சத்தம்
போட்டிருக்கிறார்.
யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மகேஸ்வரிக்கு
ஏகப்பட்ட ரத்தப்போக்கு ஏற்பட, குழந்தை ஒன்று பிறந்திருக்கிறது.
மகேஸ்வரியின் அலறல் சத்தத்தோடு புதிதாய்ப் பிறந்த சிசுவின் அழுகை சத்தமும்
சேர்ந்துகொள்ள, இந்தக் காட்சியைக் கண்ட ஒட்டுமொத்த மாணவிகளும்
அதிர்ச்சியின் உச்சத்திற்குச் சென்றிருக்கின்றனர்.
தொப்புள்கொடி
அறுபடாத நிலையில் மகேஸ்வரி துடிக்க... ஒரு ப்ளஸ் டூ மாணவி இந்தக்
காட்சியைக் காண சகிக்காமல் ஓடிப்போய் ஒரு ‘பிளேடை’ எடுத் துவந்து
தொப்புள்கொடியை அறுத்துவிட்டதுதான் உச்சகட்ட கொடூரம்.
இதனால்
ரத்தப்போக்கு இன்னும் அதிகமாகி, மகேஸ்வரியின் உயிருக்கே ஆபத்து என்ற சூழல்
ஏற்பட்டபோதுதான் பெண் விடுதிக்காப்பாளர் வீட்டிற்குத் தகவல்
போயிருக்கிறது. அவரும் ஓடிவந்து ஆட்டோ ஒன்றில் தாயையும், சேயையும்
தூக்கிச்சென்று தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்திருக்கிறார்.
இந்தத்
தகவல் கேட்டு மகேஸ்வரியின் தாயும், அவரது உறவினர்களும், வாயிலும்,
வயிற்றிலும் அடித்துக்கொண்டு கதறியபடி மருத்துவமனைக்கு ஓடிவந்தனர்.
அவர்களிடம் மகேஸ்வரியையும், குழந்தையையும் ஒப்படைத்தார் விடுதிக்
காப்பாளர். ‘இது பற்றி யாரிடமாவது சொன்னால்... விடுதியைவிட்டு
வெளியேற்றிவி டுவோம்’ என மற்ற மாணவிகளுக்கும் எச்சரிக்கை செய்திருக்கிறார்.
ஏதும்
அறியாத வயதில்... அந்த பயங்கரக் காட்சியை கண்முன்னே பார்த்த மாணவிகள்
இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. பலருக்கு காய்ச்சல் வந்து
வீடுகளுக்குச் சென்றுவிட்டனர். சில மாணவிகள் நடுங்கிக்கொண்டே
இருக்கிறார்கள்.
இந்தச் சம்பவம் குறித்து விடுதி மற்றும் பள்ளி வட்டாரத்தில் விசாரித்தபோது அதிர வைக்கும் பல்வேறு தகவல்களும் கிடைத்தன.
விடுதியில்
மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் இருந்துவருகிறது. விடுதியைவிட்டு வெளியே
சென்று திரும்பும் மாணவிகள் குறித்து தீவிர கண் காணிப்புகளும் இல்லை. 13
வயதுச் சிறுமி கர்ப்பிணியாக விடுதியில் வலம் வந்து குழந்தைப்பேறு நிகழும்
வரை எப்படி யாருக்கும் தெரியாமல் போனது? வயிறுகூட
காட்டிக்கொடுக்கவில்லையா? என்ற கேள்விகளுக்கும் பதில் இல்லை.
மகேஸ்வரியின்
அறையில் தங்கியிருக்கும் மாணவிகள் அவளது வயிறு பெரிதாக இருக்கிறது என்று
விடுதிக்காப்பாளரிடம் சொல்ல, ‘அடச்சீ போங்கடி... அது தொப்பையாக இருக்கும்’
என்று அவர் அலட்சியப்படுத்தியிருக்கிறார்.
அந்தப் பெண் ஐந்து
மாதத்திற்கு முன்புதான் விடுதியில் சேர்ந்ததாகவும், விடுதியில் சேர்ந்த
பிறகு கர்ப்பமாகவில்லை என்று போலியாக ‘ரெக்கார்டுகள்’ தயாரி
த்துவிட்டார்களாம்.
கடைசியில், பள்ளி மற்றும் விடுதி தரப்பின் விளக்கம் அறிய நேரில் சென்றோம்.
பள்ளித்
தலைமையாசிரியரோ, “நீங்க சொல்ற மாதிரி எந்தச் சம்பவமும் இங்கே நடக்கலை.
சாயந்திரம் ஆறுமணிக்குமேல நானே ஹாஸ்டல் பக்கம் போகமாட்டேன். நீங்க இது
சம்பந்தமாக விடுதிக் காப்பாளர்கிட்ட கேட்டுக்கங்க.’’ என்றார்.
பெண் விடுதிக்காப்பாளரைச் சந்தித்தோம்.
“இங்கே
ஹாஸ்டலில் ‘டெலிவரி’ நடந்ததுன்னு சொல்றது பொய். ஆண் குழந்தைன்னுகூட
கேள்விப்பட்டேன். இங்கே 740 மாணவிகள் தங்கியிருக்காங்க. இவங்க
ஒவ்வொருத்தரின் வயித்தைப் பார்த்துக்கிட்டு இருப்பதுதான் என் வேலையா?’’
என்றார் சாதாரணமாக.
விடுதியின் துறையைச் சார்ந்த மாவட்ட
உயரதிகாரியிடம் இந்தச் சம்பவம் குறித்து கேட்டபோது, “கடந்த ஆகஸ்ட்
மாதம்தான் அந்தப் பொண்ணு அட்மிஷனே ஆகியிருக்கு. ரொம்ப சின்ன பொண்ணு.
அதிகாலை ஹாஸ்டலிலேயே அந்தப் பெண்ணுக்கு குழந்தை பிறந்ததாகச் சொன்னாங்க. இனி
இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் ஜாக்கிரதையாக இருங்கன்னு அனைவரையும்
எச்சரித்திருக்கிறேன்’’ என்றார்
http://thedipaar.com/news/news.php?id=22784
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: குழந்தை பெற்ற 13 வயது மாணவியின் தொப்புள் கொடியை பிளேடால் அறுத்த சக மாணவி.
பயங்கரமான சம்பவங்கள் நடக்கிறது எப்பா :+:-:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தை பெற்ற 13 வயது மாணவியின் தொப்புள் கொடியை பிளேடால் அறுத்த சக மாணவி.
:!.: :!.: :!.: :!.: :!.:
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: குழந்தை பெற்ற 13 வயது மாணவியின் தொப்புள் கொடியை பிளேடால் அறுத்த சக மாணவி.
அய்யோ ,,,,
இறைவா ஏன் இந்தக் கொடுமைகள்,,,,
உன் தண்டனையின் உக்கிரம்
இந்த உலகு தாங்குமா...???
இறைவா ஏன் இந்தக் கொடுமைகள்,,,,
உன் தண்டனையின் உக்கிரம்
இந்த உலகு தாங்குமா...???
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: குழந்தை பெற்ற 13 வயது மாணவியின் தொப்புள் கொடியை பிளேடால் அறுத்த சக மாணவி.
முfதாக் wrote:அய்யோ ,,,,
இறைவா ஏன் இந்தக் கொடுமைகள்,,,,
உன் தண்டனையின் உக்கிரம்
இந்த உலகு தாங்குமா...???
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Similar topics
» ஒருதலை காதலால் விபரீதம் - கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்த வாலிபர்
» இறந்த மாணவி உடலில் மார்பகங்களை அறுத்த கொடூரம்: உறவினர்கள் ஆவேச மறியல்
» 72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி
» பட்டப்படிப்பு படிக்கும் பத்து வயது மாணவி
» பள்ளியின் ஒரு நாள் முதல்வரான 14 வயது பழங்குடி மாணவி!
» இறந்த மாணவி உடலில் மார்பகங்களை அறுத்த கொடூரம்: உறவினர்கள் ஆவேச மறியல்
» 72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி
» பட்டப்படிப்பு படிக்கும் பத்து வயது மாணவி
» பள்ளியின் ஒரு நாள் முதல்வரான 14 வயது பழங்குடி மாணவி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|