Latest topics
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…by rammalar Yesterday at 19:28
» திணிப்பு
by rammalar Yesterday at 19:26
» பின்னிருக்கை!
by rammalar Yesterday at 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Yesterday at 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Yesterday at 19:24
» செம்மொழி
by rammalar Yesterday at 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Yesterday at 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Yesterday at 19:16
» புன்னகை!
by rammalar Yesterday at 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Yesterday at 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Yesterday at 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Yesterday at 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Yesterday at 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Yesterday at 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Yesterday at 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Yesterday at 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Yesterday at 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Yesterday at 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Yesterday at 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
அழகு சிகிச்சை நிலையங்களால் வரக்கூடிய ஆபத்துக்கள்
Page 1 of 1
அழகு சிகிச்சை நிலையங்களால் வரக்கூடிய ஆபத்துக்கள்
தமது உடலை அழகாக்கிக் கொள்வதற்காக அழகு சிகிச்சை நிலையங்களை நாடுபவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. ஆனால் அழகு சிகிச்சை நிலையங்களை நாடும் போது மிகவும் அவதானத்துடன் இருப்பது அவசியமானது என நிபுணர்கள் கூறுகின்றனர். பல்வேறு நோய்த் தொற்றுதல்களை நாம் பெற்றுக்கொள்ளும் இடங்களில் அழகு சிகிச்சை நிலையங்களும் ஒன்று என அவர்கள் கூறுகின்றனர்.
அழகு சிகிச்சை நிலையங்களில் சிகிச்சைக்கு செல்லும்போது கவனத்திற் கொள்ள வேண்டிய சில விடயங்கள் பின்வருமாறு:
மீன்தொட்டி குளியல்
அண்மையில் பிரித்தானிய அரசாங்கம் அழகு சிகிச்சை நிலையங்களில் மீன்கடி சிகிச்சையை தடை செய்தது. மனிதர்களின் தோலின் கடினமான பகுதிகளை சிறிய மீன்கள் கடித்து அகற்றும் சிகிச்சை இது.
ஆனால் இவ்வாறான சிகிச்சைக்குள்ளாகும் வாடிக்கையாளர் ஒருவர் எச்.ஐ.வி தொற்றுதலுக்கு உள்ளாகியவராக இருந்தால் அதே தொட்டியில் இச்சிகிச்சையைப் பெறும் மற்றொரு வாடிக்கையாளருக்கு மீன் மூலம் அல்லது தொட்டியிலுள்ள மாசடைந்த நீர் மூலம் வைரஸ் கிருமிகள் உடலுக்குள் புகுந்துகொள்ள சிறிதளவு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதனால், வெட்டுக் காயங்கள் உள்ளவர்கள் இச்சிகிச்சைகளை செய்துகொள்ளக்கூடாது. நீரிழிவு போன்ற நோய் உடையவர்கள் இவ்வாறான குளியலை மேற்கொள்வதை தவிர்த்துக்கொள்வது சிறந்தது.
சீப்புகள் மூலம் பேண்கள் பரவுதல்
சில ஆடம்பர சிகை அலங்கார நிலையங்களில்கூட நாள் முழுவதும் ஒரே சீப்பையே வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் பயன்படுத்துவது சாதாரணமாகவுள்ளது. ஒவ்வொரு தடவையும் அச்சீப்புகளை பயன்படுத்தியபின் மீண்டும் மற்றொரு வாடிக்கையாளருக்கு பயன்படுத்துவதற்குமுன் சுத்திகரிப்பது அரிது.
ஒரு தடவை தலைமயிரை கழுவிவிட்டால் பிரச்சினையில்லை என பலர் நினைக்கக்கூடும். ஆனால் இதனூடாக ஒருவரின் தலையிலிருந்து மற்றொருவரின் தலைக்கு ஈறுகள், பொடுகுகள் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
ஒரு சிறந்த சிகையலங்கார கலைஞர் வாடிக்கையாளர்களுக்கும் புதிய சீப்பை அல்லது கிருமிநீக்கம் உரியமுறையில் சுத்திகரிக்கப்பட்ட சீப்பை பயன்படுத்துவதில் மகிழ்ச்சியடைக்கூடும்.
வோஷ்பேசின் மூலமான தலைவலி
தலைக்கு ஷம்போ பயன்படுத்த தலைமயிரை கழுவும்போது பொருத்தமற்ற முறையில் கழுத்தை வோஷ்பேசின்களில் பிடித்துக்கொண்டிருந்தால் உபாதைகளை ஏற்படுத்தி விடுமென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கழுத்துப் பகுதியை முறையற்ற விதமாக சரித்து வைத்திருந்தால் மூளைக்கு குருதி செல்வது தடைப்பட்டு தலைச்சுற்று, கழுத்துவலி முதலான உபதைகள் ஏற்படலாம்.
பாதங்களை கழுவ பயன்படுத்தும் உபகரணங்களால் ஏற்படும் தொற்றுகள்
அழகு எனும்போது பலர் பாதங்களைக் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். பாதங்களின் அழகு, ஆரோக்கியமும் மிக முக்கியமானவை. எனினும் பாத அழகு சிகிச்சை நிலையங்களில் பாதங்களைக் கழுவப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் சுத்தமாக பேணப்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டும்.
2000 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள பாத அலங்கார சிகிச்சை நிலையமொன்றின் வாடிக்கையாளர்களில் குறைந்தபட்சம் 110 பேருக்கு கொப்புளங்கள் ஏற்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டது.
காயங்கள் ஏற்பட்ட நிலையில் இத்தகைய சிகிச்சையை செய்துகொள்வது அதிக ரிஸ்கை ஏற்படுத்தும் எனவே. இத்தகைய சிகிச்சைகளுக்கு 24 மணித்தியாலங்களுக்கு முன்னர் கால்களை ஷேவிங், வக்ஸிங் செய்துகொள்வதை தவிர்ப்பதன் மூலம் வெட்டுக் காயங்கள் ஏற்படுவதைத் தவிர்த்து அதன் மூலம் தொற்றுகள் ஏற்படும் ஆபத்தையும் குறைக்கமுடியும் என டாக்டர் சாம் பன்டிங் என்பவர் சிபாரிசு செய்துள்ளார்.
சுத்திகரிக்கப்படாத கத்தரிகளால் ஏற்படும் தொற்றுகள்
அழகு சிகிச்சை நிலையங்களில் தலைமயிர் கத்தரிக்கப்படும்போது தற்செயலாக காதோரத்தை வெட்டிவிடலாம் அல்லது நகம் சுத்தம் செய்யப்பயன்படுத்தப்படும் ஊசிகளால் குத்தப்பட்டு காயம் ஏற்படலாம். இவை எதிர்பார்க்கப்படாத அபூர்வமான விபத்துகள்தான்.
ஆனால் இவற்றின்போது இரத்தம் வெளியாகி அது கத்தரிகள், ஊசிகளில் ஒட்டிக்கொண்டிருக்கும் நிலையில் அவ்வுபகரணங்களை முறையாக சுத்திகரிக்காமல் பிறருக்கு பயன்படுத்தும்போது குருதிமூலம் பரவும் நோய்களின் தொற்றுக்கு உள்ளாகலாம்.
சவரம் செய்யும்போது ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தனித்தனி சவர அலகை பயன்படுத்தவேண்டுமென்ற விதி இப்போது கண்டிப்பாக அமுல்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
வக்ஸிங் மூலமான எரிகாயங்கள்
கை மற்றும் கால்களில் காணப்படும் வேண்டாத உரோமங்களை அகற்றுவதற்கு பயன்படும் ஹெட் வக்ஸிங் சிகிச்சை முறையாக கையாளப்படாவிட்டால் அது மிகவும் ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
இச்சிகிச்சை முறையாக கையாளப்படாவிட்டால் தோலில் எரிவு முதலானவை ஏற்படலாம. பிரிட்டனில் லிவர்பூல் நகரத்தைச் சேர்ந்த சட்டத்தரணிகள் குழுவொன்று, இவ்வாறான அழகுசிகிச்சை நிலையங்களுக்கு எதிராக வழக்கு தொடுப்பதில் பெயர் பெற்று விளங்குகிறது.
ஹொட் வக்ஸிங் சிகிச்சை மூலம் எரிகாயத்திற்கு உள்ளான பெண்ணொருவருக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பின்னர்கூட தோலில் நிறமாற்றம் ஏற்பட்டதாக அச்சட்டத்தரணிகளின் இணையத்தளம் தெரிவிக்கிறது.
அதையடுத்து குறித்த அழகுசிகிச்சை நிலையத்திற்கு எதிராக வழக்குத் தொடுத்து 4500 ஸ்ரேலிங் பவுண்களை நஷ்ட ஈடாக பெற்றுக்கொடுத்ததாகவும் அந்த இணையத்தளம் தெரிவிக்கிறது.
அழகு சிகிச்சை நிலையங்களில் சிகிச்சைக்கு செல்லும்போது கவனத்திற் கொள்ள வேண்டிய சில விடயங்கள் பின்வருமாறு:
மீன்தொட்டி குளியல்
அண்மையில் பிரித்தானிய அரசாங்கம் அழகு சிகிச்சை நிலையங்களில் மீன்கடி சிகிச்சையை தடை செய்தது. மனிதர்களின் தோலின் கடினமான பகுதிகளை சிறிய மீன்கள் கடித்து அகற்றும் சிகிச்சை இது.
ஆனால் இவ்வாறான சிகிச்சைக்குள்ளாகும் வாடிக்கையாளர் ஒருவர் எச்.ஐ.வி தொற்றுதலுக்கு உள்ளாகியவராக இருந்தால் அதே தொட்டியில் இச்சிகிச்சையைப் பெறும் மற்றொரு வாடிக்கையாளருக்கு மீன் மூலம் அல்லது தொட்டியிலுள்ள மாசடைந்த நீர் மூலம் வைரஸ் கிருமிகள் உடலுக்குள் புகுந்துகொள்ள சிறிதளவு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதனால், வெட்டுக் காயங்கள் உள்ளவர்கள் இச்சிகிச்சைகளை செய்துகொள்ளக்கூடாது. நீரிழிவு போன்ற நோய் உடையவர்கள் இவ்வாறான குளியலை மேற்கொள்வதை தவிர்த்துக்கொள்வது சிறந்தது.
சீப்புகள் மூலம் பேண்கள் பரவுதல்
சில ஆடம்பர சிகை அலங்கார நிலையங்களில்கூட நாள் முழுவதும் ஒரே சீப்பையே வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் பயன்படுத்துவது சாதாரணமாகவுள்ளது. ஒவ்வொரு தடவையும் அச்சீப்புகளை பயன்படுத்தியபின் மீண்டும் மற்றொரு வாடிக்கையாளருக்கு பயன்படுத்துவதற்குமுன் சுத்திகரிப்பது அரிது.
ஒரு தடவை தலைமயிரை கழுவிவிட்டால் பிரச்சினையில்லை என பலர் நினைக்கக்கூடும். ஆனால் இதனூடாக ஒருவரின் தலையிலிருந்து மற்றொருவரின் தலைக்கு ஈறுகள், பொடுகுகள் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
ஒரு சிறந்த சிகையலங்கார கலைஞர் வாடிக்கையாளர்களுக்கும் புதிய சீப்பை அல்லது கிருமிநீக்கம் உரியமுறையில் சுத்திகரிக்கப்பட்ட சீப்பை பயன்படுத்துவதில் மகிழ்ச்சியடைக்கூடும்.
வோஷ்பேசின் மூலமான தலைவலி
தலைக்கு ஷம்போ பயன்படுத்த தலைமயிரை கழுவும்போது பொருத்தமற்ற முறையில் கழுத்தை வோஷ்பேசின்களில் பிடித்துக்கொண்டிருந்தால் உபாதைகளை ஏற்படுத்தி விடுமென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கழுத்துப் பகுதியை முறையற்ற விதமாக சரித்து வைத்திருந்தால் மூளைக்கு குருதி செல்வது தடைப்பட்டு தலைச்சுற்று, கழுத்துவலி முதலான உபதைகள் ஏற்படலாம்.
பாதங்களை கழுவ பயன்படுத்தும் உபகரணங்களால் ஏற்படும் தொற்றுகள்
அழகு எனும்போது பலர் பாதங்களைக் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். பாதங்களின் அழகு, ஆரோக்கியமும் மிக முக்கியமானவை. எனினும் பாத அழகு சிகிச்சை நிலையங்களில் பாதங்களைக் கழுவப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் சுத்தமாக பேணப்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டும்.
2000 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள பாத அலங்கார சிகிச்சை நிலையமொன்றின் வாடிக்கையாளர்களில் குறைந்தபட்சம் 110 பேருக்கு கொப்புளங்கள் ஏற்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டது.
காயங்கள் ஏற்பட்ட நிலையில் இத்தகைய சிகிச்சையை செய்துகொள்வது அதிக ரிஸ்கை ஏற்படுத்தும் எனவே. இத்தகைய சிகிச்சைகளுக்கு 24 மணித்தியாலங்களுக்கு முன்னர் கால்களை ஷேவிங், வக்ஸிங் செய்துகொள்வதை தவிர்ப்பதன் மூலம் வெட்டுக் காயங்கள் ஏற்படுவதைத் தவிர்த்து அதன் மூலம் தொற்றுகள் ஏற்படும் ஆபத்தையும் குறைக்கமுடியும் என டாக்டர் சாம் பன்டிங் என்பவர் சிபாரிசு செய்துள்ளார்.
சுத்திகரிக்கப்படாத கத்தரிகளால் ஏற்படும் தொற்றுகள்
அழகு சிகிச்சை நிலையங்களில் தலைமயிர் கத்தரிக்கப்படும்போது தற்செயலாக காதோரத்தை வெட்டிவிடலாம் அல்லது நகம் சுத்தம் செய்யப்பயன்படுத்தப்படும் ஊசிகளால் குத்தப்பட்டு காயம் ஏற்படலாம். இவை எதிர்பார்க்கப்படாத அபூர்வமான விபத்துகள்தான்.
ஆனால் இவற்றின்போது இரத்தம் வெளியாகி அது கத்தரிகள், ஊசிகளில் ஒட்டிக்கொண்டிருக்கும் நிலையில் அவ்வுபகரணங்களை முறையாக சுத்திகரிக்காமல் பிறருக்கு பயன்படுத்தும்போது குருதிமூலம் பரவும் நோய்களின் தொற்றுக்கு உள்ளாகலாம்.
சவரம் செய்யும்போது ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தனித்தனி சவர அலகை பயன்படுத்தவேண்டுமென்ற விதி இப்போது கண்டிப்பாக அமுல்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
வக்ஸிங் மூலமான எரிகாயங்கள்
கை மற்றும் கால்களில் காணப்படும் வேண்டாத உரோமங்களை அகற்றுவதற்கு பயன்படும் ஹெட் வக்ஸிங் சிகிச்சை முறையாக கையாளப்படாவிட்டால் அது மிகவும் ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
இச்சிகிச்சை முறையாக கையாளப்படாவிட்டால் தோலில் எரிவு முதலானவை ஏற்படலாம. பிரிட்டனில் லிவர்பூல் நகரத்தைச் சேர்ந்த சட்டத்தரணிகள் குழுவொன்று, இவ்வாறான அழகுசிகிச்சை நிலையங்களுக்கு எதிராக வழக்கு தொடுப்பதில் பெயர் பெற்று விளங்குகிறது.
ஹொட் வக்ஸிங் சிகிச்சை மூலம் எரிகாயத்திற்கு உள்ளான பெண்ணொருவருக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பின்னர்கூட தோலில் நிறமாற்றம் ஏற்பட்டதாக அச்சட்டத்தரணிகளின் இணையத்தளம் தெரிவிக்கிறது.
அதையடுத்து குறித்த அழகுசிகிச்சை நிலையத்திற்கு எதிராக வழக்குத் தொடுத்து 4500 ஸ்ரேலிங் பவுண்களை நஷ்ட ஈடாக பெற்றுக்கொடுத்ததாகவும் அந்த இணையத்தளம் தெரிவிக்கிறது.
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» சிங்கத்துக்கே அழகு சிகிச்சை செய்யும் பயிற்சியாளர்!
» செல்போன் யூஸ் பண்ணுவதால், உடலுக்கு ஏற்படும் ஆபத்துக்கள்!!!
» ஆயுர்வேத சிகிச்சை முறை ஒரு பழமையான அறிவியல் சிகிச்சை
» இனி வரக்கூடிய சினிமா ஆரோக்கியமானதாக இருக்கும்...!
» அழகு குறிப்புகள்:அழகு தரும் ஆப்பிள்!
» செல்போன் யூஸ் பண்ணுவதால், உடலுக்கு ஏற்படும் ஆபத்துக்கள்!!!
» ஆயுர்வேத சிகிச்சை முறை ஒரு பழமையான அறிவியல் சிகிச்சை
» இனி வரக்கூடிய சினிமா ஆரோக்கியமானதாக இருக்கும்...!
» அழகு குறிப்புகள்:அழகு தரும் ஆப்பிள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|