Latest topics
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…by rammalar Yesterday at 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Yesterday at 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Yesterday at 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Yesterday at 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Yesterday at 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Yesterday at 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Yesterday at 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Yesterday at 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Yesterday at 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Yesterday at 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Yesterday at 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Yesterday at 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Yesterday at 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Yesterday at 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54
» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48
» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42
» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37
» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31
» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54
» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56
» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49
» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37
» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32
» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Thu 23 May 2024 - 11:25
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Thu 23 May 2024 - 9:24
வல்லரசுகளின் அதிகாரப் போட்டிக்கு களம் அமைக்கிறதா மாலைதீவு?
Page 1 of 1
வல்லரசுகளின் அதிகாரப் போட்டிக்கு களம் அமைக்கிறதா மாலைதீவு?
இந்து சமுத்திரத்தின் சொர்க்கமென வர்ணிக்கப்படும் தீவுக்கூட்டங்களடங்கிய சின்னஞ்சிறு நாடான மாலைதீவில் முதன்முறையாக ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியான முஹமட் நசீட் பதவிவிலகிய போதிலும் அந்நாட்டில் வன்முறைகள் தொடர்வது சர்வதேச சக்திகளின் அதிகாரப் போட்டிக்குள் அந்த நாடு பகடைக்காயாக பயன்படுத்தப்படுகின்றதோ என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியிருக்கிறது. சிறப்புக் கண்ணோட்டம்
ஸுன்னி இஸ்லாமிய நாடான மாலைதீவை நவீனமயப்படுத்தும் நோக்கத்துடன் இந்த வருட முற்பகுதியில் முகமட் நசீட் அறிமுகப்படுத்திய மறுசீரமைப்பு நிகழ்ச்சித் திட்டத்தை பழைமைவாத எதிரணிக் குழுக்கள் கடுமையாக எதிர்ப்பதனால் தோன்றியுள்ளதே தற்போதைய குழப்ப நிலைவரம் என்ற கருத்துகள் தெற்காசியப் பிராந்தியத்தின் பெரிய நாடான இந்தியாவின் ஊடகங்கள் வெளிப்படுத்தியிருப்பதை அவதானிக்க முடிகிறது.
மாலைதீவை 30 வருடகாலம் ஆட்சி செய்த முன்னாள் ஜனாதிபதி மைமூன் அப்துல் கையூமின் ஆதரவாளர்கள் தற்போதைய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நசீட்டின் ஆட்சிக்கு எதிரான பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிஸாரின் ஆதரவுடனான வன்முறைகளுக்கு ஊக்குவிப்பு அளிப்பதே நிர்வாக மாற்றம் ஏற்பட்ட போதும் அங்கு வன்முறைகள் தொடர்வதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
ஆனால் இந்து சமுத்திரத்தின் பிரதான கடல் வழிப்போக்குவரத்தின் கேந்திர ஸ்தானமாக இலங்கையைப் போன்று மாலை தீவும் விளங்குவதால் இந்தக் குழப்பத்தை அதிகாரம் மிக்க சக்திகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்த எத்தனிக்கின்றன என்ற சந்தேகமும் இராஜதந்திர வட்டாரங்களில் காணப்படுகிறது.
குற்றவியல் நீதிமன்ற தலைமை நீதிபதியை இராணுவம் கைது செய்தமையும் அதனால் ஏற்பட்ட பொலிஸார் ஆதரவுடனான கலகமுமே நசீட் பதவி விலகி தனது துணை ஜனாதிபதியான டாக்டர் வாகிட் பதவியேற்க வழிவகுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால்இ புதிய ஜனாதிபதி பதவியேற்ற மறுநாளே கைது செய்யப்பட்ட தலைமை நீதிபதி விடுவிக்கப்பட்டதுடன்இ வன்முறைகளும் தொடர்ந்த வண்ணமுள்ளன. இதன் உச்சக்கட்டமாக புதன்கிழமை இரவு இடம்பெற்ற பொலிஸார்ஆர்ப்பாட்டக்காரர்கள் மோதலில் பலர் காயமடைந்ததாகவும் அதில் பதவி விலகிய நசீட்டும் ஒருவரெனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
அத்துடன் நசீட்டின் மனைவியும் இரு மகள்மாரும் பாதுகாப்புத் தேடி நசீட் நெருங்கிய நட்புறவு கொண்டிருக்கும் இலங்கைக்கு வந்துள்ளதுடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடனும் தொடர்பை ஏற்படுத்தியுள்ளனர். ஜனாதிபதியும் நசீட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு மாலைதீவின் புதிய நிர்வாகத்திற்கு வலியுறுத்தியிருக்கிறார். அதேவேளை பதவி விலகிய நீசீட்டும் அவரின் எதிராளிகளும் அமைதி பேண வேண்டுமென சர்வதேச சமூகம் அழைப்பு விடுத்திருக்கிறது.
'மோதலில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரும் பின்வாங்கி அமைதி காக்க வேண்டும். இந்த மோதலினால் எவருக்கும் அனுகூலம் ஏற்படப்போவதில்லை' என்று அமெரிக்கா பிரிட்டன்இ ஐரோப்பிய ஒன்றியம் ஐ.நா. இந்தியா உட்பட சர்வதேச சமூகம் அழைப்பு விடுத்திருக்கிறது. மாலைதீவில் இடம்பெற்றுவரும் வன்முறைகள் வெறும் கலகமே தவிர அதனை அடக்குவதற்கு சர்வதேச தலையீடு குறிப்பாக தெற்காசியாவின் பெரிய நாடான இந்தியாவின் உதவி தேவைப்படுவதாகத் தென்படவில்லை என்று இந்திய ஊடகங்களின் ஒரு பகுதி அபிப்பிராயங்களை வெளியிட்டு வருகின்றது.
மாலைதீவில் இடம்பெற்றுவரும் வன்முறைகளின் பின்னணியில் இந்தியா சீனா கதையும் இருக்கின்றது என்ற சந்தேகங்கள் எழுப்பப்படாமலுமில்லை. ஆனால் இதில் பிரிட்டனின் 'கதை'யும் சம்பந்தப்பட்டிருக்கக் கூடும் என்ற ஊகங்களும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்த ஊகங்களுக்கு வலுச்சேர்க்கும் விதத்தில் பிராந்தியத்திலுள்ள பிரிட்டனின் உயர்மட்ட இராஜதந்திரியான இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கொழும்பைத் தளமாகக் கொண்ட இராஜதந்திரி ஒருவர் மாலைதீவின் தலைநகரான மாலேயில் மூன்று தினங்கள் முகாமிட்டிருந்தமை பற்றியும் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகமானது சிரேஷ்ட அதிகாரி ஒருவரை அங்கு அனுப்பி வைத்தமை குறித்தும் இந்தியாவின் பிரபல ஆங்கில நாளேடு ஒன்று பூடகமாக செய்தியொன்றை வெளியிட்டிருப்பதும் சந்தேகங்களுக்கு எண்ணெய் ஊற்றுகிறது.
நேற்று முன்தினம் புதன்கிழமை மாலேயில் பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் பதவி விலகிய ஜனாதிபதி நசீட்டையும் புதிய ஜனாதிபதி வாகிட்டையும் சந்தித்திருக்கிறார். நசீட்டிற்கு பிரிட்டன் ஆதரவளிப்பதாக தோன்றியுள்ள அபிப்பிராயத்தை பிரிட்டிஷ் இராஜதந்திரிகள் நிராகரித்துள்ளபோதும் 'மாலைதீவுடனும் ஜனாதிபதி நசீட்டுடனும் பிரிட்டன் நெருங்கிய நட்புறவை கொண்டிருப்பதாகவும் ஆனால் நசீட் இராஜிநாமா செய்தமை தொடர்பாக தெளிவுபடுத்த வேண்டிய தேவை தமக்கிருப்பதாகவும் அங்குள்ள பல்லாயிரக்கணக்கான பிரிட்டிஷ் உல்லாசப் பயணிகள் மற்றும் ஸ்திரமான அரசாங்கம் குறித்து தாங்கள் கடும் கரிசனை கொண்டிருப்பதாகவும் பிரிட்டிஷ் பிரதமர் கமரூன் பாராளுமன்றத்தில் கூறியுள்ளார்.
ஆனால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் சதி மூலம் பதவி கவிழ்க்கப்பட்டிருப்பதால் தற்போதைய அரசாங்கத்தில் பணிபுரிய முடியாது என்று தெரிவித்து பிரிட்டனுக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் பாரா பைசால் இராஜிநாமா செய்திருப்பது சந்தேகத்தை அதிகரிக்கச் செய்வதாக உள்ளது. பாரா பைசால் பிரிட்டனுக்கு மட்டுமன்றி பிரான்ஸ் ஸ்பெய்ன் நோர்வே சுவீடன் டென்மார்க் பின்லாந்து பாலஸ்தீனம் ஆகியவற்றுக்கும் தூதுவரென்பதும் அந்தப் பதவிகளையும் அவர் இராஜிநாமா செய்துவிட்டார் என்பதும் இங்கு முக்கியமான விடயமாக உள்ளது.
மாலைதீவில் ஏற்பட்டுள்ள ஸ்திரமின்மையை நீக்குவதற்கு இங்கு பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் வலுவான கரம் தேவைப்படுகிறது. மாலைதீவு அரசியல் அமைப்பின் பிரகாரம் சட்ட ஆட்சிக்கு மதிப்பளிக்குமாறு அந்நாட்டுக்கு இராஜதந்திர அழுத்தத்தை பிராந்திய நாடுகள் குறிப்பாக பெரிய நாடான இந்தியா கொடுப்பதற்கு தயங்குவதால் மேற்குலகினதும் ஆசியாவின் மற்றொரு வளர்ந்து வரும் பொருளாதார வல்லரசான சீனாவினதும் அதிகாரப் போட்டிக்களத்திற்குள் 3 இலட்சம் மக்களைக் கொண்ட அந்த சிறிய நாடு சிக்குண்டு நசுங்கிவிடும் ஆபத்தும் இல்லாமலில்லை.
ஸுன்னி இஸ்லாமிய நாடான மாலைதீவை நவீனமயப்படுத்தும் நோக்கத்துடன் இந்த வருட முற்பகுதியில் முகமட் நசீட் அறிமுகப்படுத்திய மறுசீரமைப்பு நிகழ்ச்சித் திட்டத்தை பழைமைவாத எதிரணிக் குழுக்கள் கடுமையாக எதிர்ப்பதனால் தோன்றியுள்ளதே தற்போதைய குழப்ப நிலைவரம் என்ற கருத்துகள் தெற்காசியப் பிராந்தியத்தின் பெரிய நாடான இந்தியாவின் ஊடகங்கள் வெளிப்படுத்தியிருப்பதை அவதானிக்க முடிகிறது.
மாலைதீவை 30 வருடகாலம் ஆட்சி செய்த முன்னாள் ஜனாதிபதி மைமூன் அப்துல் கையூமின் ஆதரவாளர்கள் தற்போதைய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நசீட்டின் ஆட்சிக்கு எதிரான பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிஸாரின் ஆதரவுடனான வன்முறைகளுக்கு ஊக்குவிப்பு அளிப்பதே நிர்வாக மாற்றம் ஏற்பட்ட போதும் அங்கு வன்முறைகள் தொடர்வதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
ஆனால் இந்து சமுத்திரத்தின் பிரதான கடல் வழிப்போக்குவரத்தின் கேந்திர ஸ்தானமாக இலங்கையைப் போன்று மாலை தீவும் விளங்குவதால் இந்தக் குழப்பத்தை அதிகாரம் மிக்க சக்திகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்த எத்தனிக்கின்றன என்ற சந்தேகமும் இராஜதந்திர வட்டாரங்களில் காணப்படுகிறது.
குற்றவியல் நீதிமன்ற தலைமை நீதிபதியை இராணுவம் கைது செய்தமையும் அதனால் ஏற்பட்ட பொலிஸார் ஆதரவுடனான கலகமுமே நசீட் பதவி விலகி தனது துணை ஜனாதிபதியான டாக்டர் வாகிட் பதவியேற்க வழிவகுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால்இ புதிய ஜனாதிபதி பதவியேற்ற மறுநாளே கைது செய்யப்பட்ட தலைமை நீதிபதி விடுவிக்கப்பட்டதுடன்இ வன்முறைகளும் தொடர்ந்த வண்ணமுள்ளன. இதன் உச்சக்கட்டமாக புதன்கிழமை இரவு இடம்பெற்ற பொலிஸார்ஆர்ப்பாட்டக்காரர்கள் மோதலில் பலர் காயமடைந்ததாகவும் அதில் பதவி விலகிய நசீட்டும் ஒருவரெனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
அத்துடன் நசீட்டின் மனைவியும் இரு மகள்மாரும் பாதுகாப்புத் தேடி நசீட் நெருங்கிய நட்புறவு கொண்டிருக்கும் இலங்கைக்கு வந்துள்ளதுடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடனும் தொடர்பை ஏற்படுத்தியுள்ளனர். ஜனாதிபதியும் நசீட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு மாலைதீவின் புதிய நிர்வாகத்திற்கு வலியுறுத்தியிருக்கிறார். அதேவேளை பதவி விலகிய நீசீட்டும் அவரின் எதிராளிகளும் அமைதி பேண வேண்டுமென சர்வதேச சமூகம் அழைப்பு விடுத்திருக்கிறது.
'மோதலில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரும் பின்வாங்கி அமைதி காக்க வேண்டும். இந்த மோதலினால் எவருக்கும் அனுகூலம் ஏற்படப்போவதில்லை' என்று அமெரிக்கா பிரிட்டன்இ ஐரோப்பிய ஒன்றியம் ஐ.நா. இந்தியா உட்பட சர்வதேச சமூகம் அழைப்பு விடுத்திருக்கிறது. மாலைதீவில் இடம்பெற்றுவரும் வன்முறைகள் வெறும் கலகமே தவிர அதனை அடக்குவதற்கு சர்வதேச தலையீடு குறிப்பாக தெற்காசியாவின் பெரிய நாடான இந்தியாவின் உதவி தேவைப்படுவதாகத் தென்படவில்லை என்று இந்திய ஊடகங்களின் ஒரு பகுதி அபிப்பிராயங்களை வெளியிட்டு வருகின்றது.
மாலைதீவில் இடம்பெற்றுவரும் வன்முறைகளின் பின்னணியில் இந்தியா சீனா கதையும் இருக்கின்றது என்ற சந்தேகங்கள் எழுப்பப்படாமலுமில்லை. ஆனால் இதில் பிரிட்டனின் 'கதை'யும் சம்பந்தப்பட்டிருக்கக் கூடும் என்ற ஊகங்களும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்த ஊகங்களுக்கு வலுச்சேர்க்கும் விதத்தில் பிராந்தியத்திலுள்ள பிரிட்டனின் உயர்மட்ட இராஜதந்திரியான இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கொழும்பைத் தளமாகக் கொண்ட இராஜதந்திரி ஒருவர் மாலைதீவின் தலைநகரான மாலேயில் மூன்று தினங்கள் முகாமிட்டிருந்தமை பற்றியும் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகமானது சிரேஷ்ட அதிகாரி ஒருவரை அங்கு அனுப்பி வைத்தமை குறித்தும் இந்தியாவின் பிரபல ஆங்கில நாளேடு ஒன்று பூடகமாக செய்தியொன்றை வெளியிட்டிருப்பதும் சந்தேகங்களுக்கு எண்ணெய் ஊற்றுகிறது.
நேற்று முன்தினம் புதன்கிழமை மாலேயில் பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் பதவி விலகிய ஜனாதிபதி நசீட்டையும் புதிய ஜனாதிபதி வாகிட்டையும் சந்தித்திருக்கிறார். நசீட்டிற்கு பிரிட்டன் ஆதரவளிப்பதாக தோன்றியுள்ள அபிப்பிராயத்தை பிரிட்டிஷ் இராஜதந்திரிகள் நிராகரித்துள்ளபோதும் 'மாலைதீவுடனும் ஜனாதிபதி நசீட்டுடனும் பிரிட்டன் நெருங்கிய நட்புறவை கொண்டிருப்பதாகவும் ஆனால் நசீட் இராஜிநாமா செய்தமை தொடர்பாக தெளிவுபடுத்த வேண்டிய தேவை தமக்கிருப்பதாகவும் அங்குள்ள பல்லாயிரக்கணக்கான பிரிட்டிஷ் உல்லாசப் பயணிகள் மற்றும் ஸ்திரமான அரசாங்கம் குறித்து தாங்கள் கடும் கரிசனை கொண்டிருப்பதாகவும் பிரிட்டிஷ் பிரதமர் கமரூன் பாராளுமன்றத்தில் கூறியுள்ளார்.
ஆனால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் சதி மூலம் பதவி கவிழ்க்கப்பட்டிருப்பதால் தற்போதைய அரசாங்கத்தில் பணிபுரிய முடியாது என்று தெரிவித்து பிரிட்டனுக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் பாரா பைசால் இராஜிநாமா செய்திருப்பது சந்தேகத்தை அதிகரிக்கச் செய்வதாக உள்ளது. பாரா பைசால் பிரிட்டனுக்கு மட்டுமன்றி பிரான்ஸ் ஸ்பெய்ன் நோர்வே சுவீடன் டென்மார்க் பின்லாந்து பாலஸ்தீனம் ஆகியவற்றுக்கும் தூதுவரென்பதும் அந்தப் பதவிகளையும் அவர் இராஜிநாமா செய்துவிட்டார் என்பதும் இங்கு முக்கியமான விடயமாக உள்ளது.
மாலைதீவில் ஏற்பட்டுள்ள ஸ்திரமின்மையை நீக்குவதற்கு இங்கு பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் வலுவான கரம் தேவைப்படுகிறது. மாலைதீவு அரசியல் அமைப்பின் பிரகாரம் சட்ட ஆட்சிக்கு மதிப்பளிக்குமாறு அந்நாட்டுக்கு இராஜதந்திர அழுத்தத்தை பிராந்திய நாடுகள் குறிப்பாக பெரிய நாடான இந்தியா கொடுப்பதற்கு தயங்குவதால் மேற்குலகினதும் ஆசியாவின் மற்றொரு வளர்ந்து வரும் பொருளாதார வல்லரசான சீனாவினதும் அதிகாரப் போட்டிக்களத்திற்குள் 3 இலட்சம் மக்களைக் கொண்ட அந்த சிறிய நாடு சிக்குண்டு நசுங்கிவிடும் ஆபத்தும் இல்லாமலில்லை.
Similar topics
» மாவட்ட மட்டத்திலான அதிகாரப் பகிர்வே காலத்திற்குப் பொருத்தமான தீர்வு
» போர் குற்றம் பற்றி ஜெ. பேசக்கூடாது; தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு எல்லாம் கிடையாது-கோத்தபய
» வாருங்கள் குதிரை போட்டிக்கு...
» மாலைதீவு உங்களை அழைக்கிறது
» மனதை மயக்கும் மாலைதீவு
» போர் குற்றம் பற்றி ஜெ. பேசக்கூடாது; தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு எல்லாம் கிடையாது-கோத்தபய
» வாருங்கள் குதிரை போட்டிக்கு...
» மாலைதீவு உங்களை அழைக்கிறது
» மனதை மயக்கும் மாலைதீவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|