Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!by rammalar Today at 5:40
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
தூரத்தில் ... பாட்டி வருகிறாள்!
5 posters
Page 1 of 1
தூரத்தில் ... பாட்டி வருகிறாள்!
தாத்தாவின் மறைவுக்குப் பின்
பாட்டிமட்டுமே வருவாள் எங்கள் வீட்டிற்கு....
பென்ஷன் பணம் வாங்கியவுடனே
மஞ்சள் பைநிறைய ..
முறுக்கு அதிரசம் கடலை உருண்டைகளும்
மாம்பழம் பலாப்பழம் பேரிக்காய் என
அந்தந்த சீசனுக்குத் தகுந்தாற்போல் பழங்களும்
பையில் திணித்துக்கொண்டு வருவாள்....
வேலூரிலிருந்து பஸ்பிடித்து
வெய்யில்லில் நடந்து வருவாள்....
அவள் வெய்யிலில் நடந்து வருவதையோ
கனமான பையைச் சுமந்து வருவதையோ
வயதான அவளுக்குக் கால் வலிக்குமே என்பதையோ
புரிந்து கொள்ளாத பருவமது....
தூரத்தில் அவளைப் பார்த்தவுடன்...
ஐ.. ஆயா வர்றாங்க... என்ற சத்தத்தோடு
விளையாட்டை நிறுத்திவிட்டு ஓடுவோம்
பையிலிருந்து தின்பண்டங்களைஎல்லாம்
ஒவ்வொன்றாய் வெளியில் எடுத்து வைக்கும்போது
மாம்பழத்தின் சுவையை மீறி
பலாப்பழத்தின் வாசனை மீறி...
எங்கள் மூக்கைத் துளைப்பது...
விபூதி வாசனைதான்
ஆமாம்...
அத்தனை பக்தியானவள்; முருகக்கடவுள் மீது
பேரக்குழந்தைகளைப் பார்க்க வருவதற்கு முன்
முருகனைப் பார்த்துவிட்டுத்தான் வருவாள்
கோவிலில் கிடைக்கும் விபூதியைக் கூட
அதே பையில் தான் போடுவாள்
பக்கத்தில் எதாவது அம்மன் கோவிலிருந்தால்
அங்கும் நுழைந்து குங்குமமும் வாங்கி
பையில் போட்டுக்கொண்டு வந்துவிடுவாள்
அவள் எங்களுக்காகத்தான் வேண்டியிருக்கிறாள்
என்பதைக்கூட நாங்கள் அறிந்திடாமல்
முகம் சுளித்திருக்கிறோம்...
ஆனாலும் விபூதி வாசனையுள்ள முறுக்கைக்கூட
ஆசையாகத் திண்போம்.
சில நேரம்... மாம்பழத்தின் சாறுகூட
முறுக்கில் ஊறி இருக்கும்
அப்படி திணித்துக்கொண்டு
பேருந்து நெரிசலில் வந்து சேர்ந்திருப்பாள்
அம்மாதான் ஆயாவைத் திட்டுவாள்....
"ஒழுங்கா ஒரு பொருளை வச்சுக்க தெரியுதா பார்
சுத்த விவரம் கெட்டவளா இருக்கீயே" என்று
உடனே கோபித்துக்கொண்டு
கந்தசஷ்டிக் கவசத்தை சொல்ல ஆரம்பித்துவிடுவாள்.
எங்கள் நெற்றியில்
விபூதியையும் குங்குமத்தையும் வைத்துவிட்டு
நாங்கள் திண்பண்டங்களைஎல்லாம் தின்பதை
ஆசையாகப் பார்த்துவிட்டு....
உடனே கிளம்பிவிடுவாள்...
"நாளைக்குப் போம்மா... "என்று
அம்மா சொன்னாலும் கேட்கமாட்டாள்...
திரும்பச் செல்லும்போது
சேலையில் எங்களுக்குக் கொடுப்பதற்காகவே
முடிந்துவைத்திருக்கும் சில்லறைகளையும்
மறக்காமல் கொடுத்துவிட்டுக் கிளம்பிவிடுவாள்
புடைத்துக்கொண்டிருக்கும்
இன்னொரு பையை எடுத்துக்கொண்டு
அதே ஊரிலிருக்கும்
என் தொத்தா வீட்டுக்கும் சென்று
அந்த பேரப்பிள்ளைகளையும் பார்க்க!
அப்போதெல்லாம் தெரிய வில்லை
மஞ்சள் பை முழுக்க -
அவள் திணித்துக்கொண்டு சுமந்து வந்தது
தின்பண்டங்களையல்ல ... பாசத்தை என்பது !
அப்போதெல்லாம் தெரியவே இல்லை...
அந்த விபூதி வாசனைக்குள் பொதிந்திருந்தது
எங்களுக்கான வேண்டுதல் என்று!
வாழ்க்கை உருண்டோட....
அரபு நாட்டில் இருந்துகொண்டு ..
அவ்வப்போது தொலைபேசியில்
ஆயா வந்தாங்களாம்மா? நல்லா இருக்காங்களா ?
என்று அம்மாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்வேன்...
அந்த என் ஆயா இப்போது உயிரோடு இல்லை....
ஆனால் அவ்வப்போது
அவளை நினைத்துக் கொள்வேன்
அந்த மஞ்சள் பையும்.... விபூதி வாசனையும்...
பழச்சாற்றில் நனைந்த முறுக்கும்..
தவறாமல் அவளை நினைக்கும்போது
என் நினைவை அழுத்தும்...!
இப்போதும் ஆயா...
விபூதி வாடை வீசும் அந்த மஞ்சள் பையோடு
வருவது போலவே..... எங்கோ ... தூரத்தில் !
பாட்டிமட்டுமே வருவாள் எங்கள் வீட்டிற்கு....
பென்ஷன் பணம் வாங்கியவுடனே
மஞ்சள் பைநிறைய ..
முறுக்கு அதிரசம் கடலை உருண்டைகளும்
மாம்பழம் பலாப்பழம் பேரிக்காய் என
அந்தந்த சீசனுக்குத் தகுந்தாற்போல் பழங்களும்
பையில் திணித்துக்கொண்டு வருவாள்....
வேலூரிலிருந்து பஸ்பிடித்து
வெய்யில்லில் நடந்து வருவாள்....
அவள் வெய்யிலில் நடந்து வருவதையோ
கனமான பையைச் சுமந்து வருவதையோ
வயதான அவளுக்குக் கால் வலிக்குமே என்பதையோ
புரிந்து கொள்ளாத பருவமது....
தூரத்தில் அவளைப் பார்த்தவுடன்...
ஐ.. ஆயா வர்றாங்க... என்ற சத்தத்தோடு
விளையாட்டை நிறுத்திவிட்டு ஓடுவோம்
பையிலிருந்து தின்பண்டங்களைஎல்லாம்
ஒவ்வொன்றாய் வெளியில் எடுத்து வைக்கும்போது
மாம்பழத்தின் சுவையை மீறி
பலாப்பழத்தின் வாசனை மீறி...
எங்கள் மூக்கைத் துளைப்பது...
விபூதி வாசனைதான்
ஆமாம்...
அத்தனை பக்தியானவள்; முருகக்கடவுள் மீது
பேரக்குழந்தைகளைப் பார்க்க வருவதற்கு முன்
முருகனைப் பார்த்துவிட்டுத்தான் வருவாள்
கோவிலில் கிடைக்கும் விபூதியைக் கூட
அதே பையில் தான் போடுவாள்
பக்கத்தில் எதாவது அம்மன் கோவிலிருந்தால்
அங்கும் நுழைந்து குங்குமமும் வாங்கி
பையில் போட்டுக்கொண்டு வந்துவிடுவாள்
அவள் எங்களுக்காகத்தான் வேண்டியிருக்கிறாள்
என்பதைக்கூட நாங்கள் அறிந்திடாமல்
முகம் சுளித்திருக்கிறோம்...
ஆனாலும் விபூதி வாசனையுள்ள முறுக்கைக்கூட
ஆசையாகத் திண்போம்.
சில நேரம்... மாம்பழத்தின் சாறுகூட
முறுக்கில் ஊறி இருக்கும்
அப்படி திணித்துக்கொண்டு
பேருந்து நெரிசலில் வந்து சேர்ந்திருப்பாள்
அம்மாதான் ஆயாவைத் திட்டுவாள்....
"ஒழுங்கா ஒரு பொருளை வச்சுக்க தெரியுதா பார்
சுத்த விவரம் கெட்டவளா இருக்கீயே" என்று
உடனே கோபித்துக்கொண்டு
கந்தசஷ்டிக் கவசத்தை சொல்ல ஆரம்பித்துவிடுவாள்.
எங்கள் நெற்றியில்
விபூதியையும் குங்குமத்தையும் வைத்துவிட்டு
நாங்கள் திண்பண்டங்களைஎல்லாம் தின்பதை
ஆசையாகப் பார்த்துவிட்டு....
உடனே கிளம்பிவிடுவாள்...
"நாளைக்குப் போம்மா... "என்று
அம்மா சொன்னாலும் கேட்கமாட்டாள்...
திரும்பச் செல்லும்போது
சேலையில் எங்களுக்குக் கொடுப்பதற்காகவே
முடிந்துவைத்திருக்கும் சில்லறைகளையும்
மறக்காமல் கொடுத்துவிட்டுக் கிளம்பிவிடுவாள்
புடைத்துக்கொண்டிருக்கும்
இன்னொரு பையை எடுத்துக்கொண்டு
அதே ஊரிலிருக்கும்
என் தொத்தா வீட்டுக்கும் சென்று
அந்த பேரப்பிள்ளைகளையும் பார்க்க!
அப்போதெல்லாம் தெரிய வில்லை
மஞ்சள் பை முழுக்க -
அவள் திணித்துக்கொண்டு சுமந்து வந்தது
தின்பண்டங்களையல்ல ... பாசத்தை என்பது !
அப்போதெல்லாம் தெரியவே இல்லை...
அந்த விபூதி வாசனைக்குள் பொதிந்திருந்தது
எங்களுக்கான வேண்டுதல் என்று!
வாழ்க்கை உருண்டோட....
அரபு நாட்டில் இருந்துகொண்டு ..
அவ்வப்போது தொலைபேசியில்
ஆயா வந்தாங்களாம்மா? நல்லா இருக்காங்களா ?
என்று அம்மாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்வேன்...
அந்த என் ஆயா இப்போது உயிரோடு இல்லை....
ஆனால் அவ்வப்போது
அவளை நினைத்துக் கொள்வேன்
அந்த மஞ்சள் பையும்.... விபூதி வாசனையும்...
பழச்சாற்றில் நனைந்த முறுக்கும்..
தவறாமல் அவளை நினைக்கும்போது
என் நினைவை அழுத்தும்...!
இப்போதும் ஆயா...
விபூதி வாடை வீசும் அந்த மஞ்சள் பையோடு
வருவது போலவே..... எங்கோ ... தூரத்தில் !
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தூரத்தில் ... பாட்டி வருகிறாள்!
இயற்கை நிறைந்த கிராமிய வாசனை வீசும் கவிதை சம்பவங்கள் கண்முன்னே நிழலாடியது வாழ்த்துகள் அக்கா அருமையிலும் அருமை
Re: தூரத்தில் ... பாட்டி வருகிறாள்!
என் கண்கள் குளமாகிய கவிதை அக்கா எனக்கும் எனது பாட்டியின் நினைவு :!#: :!#:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: தூரத்தில் ... பாட்டி வருகிறாள்!
பசுமையான நினைவுகளை கவிதையாக்கி வடித்த புரட்சிக்கவிக்கு வாழ்த்துக்கள் அருமையாக உள்ளது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தூரத்தில் ... பாட்டி வருகிறாள்!
நேசமுடன் ஹாசிம் wrote:இயற்கை நிறைந்த கிராமிய வாசனை வீசும் கவிதை சம்பவங்கள் கண்முன்னே நிழலாடியது வாழ்த்துகள் அக்கா அருமையிலும் அருமை
நன்றி ஹாசிம்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தூரத்தில் ... பாட்டி வருகிறாள்!
...)மீனு wrote:என் கண்கள் குளமாகிய கவிதை அக்கா எனக்கும் எனது பாட்டியின் நினைவு :!#: :!#:
நன்றி மீனுக்குட்டி....(அழக்கூடாது ..._) ஆமா எங்க இருந்தே இவ்வளவு நாள்... ஆளை காணலியே... சுகமா?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தூரத்தில் ... பாட்டி வருகிறாள்!
ahmad78 wrote:கவிதை அருமை
நன்றி அஹ்மத்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தூரத்தில் ... பாட்டி வருகிறாள்!
நண்பன் wrote:பசுமையான நினைவுகளை கவிதையாக்கி வடித்த புரட்சிக்கவிக்கு வாழ்த்துக்கள் அருமையாக உள்ளது.
நன்றி நண்பன்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தூரத்தில் ... பாட்டி வருகிறாள்!
சுகம் அக்கா நீங்கள் சுகமா?யாதுமானவள் wrote:...)மீனு wrote:என் கண்கள் குளமாகிய கவிதை அக்கா எனக்கும் எனது பாட்டியின் நினைவு :!#: :!#:
நன்றி மீனுக்குட்டி....(அழக்கூடாது ..._) ஆமா எங்க இருந்தே இவ்வளவு நாள்... ஆளை காணலியே... சுகமா?
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: தூரத்தில் ... பாட்டி வருகிறாள்!
மீனு wrote:சுகம் அக்கா நீங்கள் சுகமா?யாதுமானவள் wrote:...)மீனு wrote:என் கண்கள் குளமாகிய கவிதை அக்கா எனக்கும் எனது பாட்டியின் நினைவு :!#: :!#:
நன்றி மீனுக்குட்டி....(அழக்கூடாது ..._) ஆமா எங்க இருந்தே இவ்வளவு நாள்... ஆளை காணலியே... சுகமா?
சுகம் சுகமே. உன்னைப் பார்க்கவில்லையே என்ற கவலைதான் மற்றபடி சுகமே
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தூரத்தில் ... பாட்டி வருகிறாள்!
இப்போது தொடர்ந்து வருகிறேன் அக்கா :.”:யாதுமானவள் wrote:மீனு wrote:சுகம் அக்கா நீங்கள் சுகமா?யாதுமானவள் wrote:...)மீனு wrote:என் கண்கள் குளமாகிய கவிதை அக்கா எனக்கும் எனது பாட்டியின் நினைவு :!#: :!#:
நன்றி மீனுக்குட்டி....(அழக்கூடாது ..._) ஆமா எங்க இருந்தே இவ்வளவு நாள்... ஆளை காணலியே... சுகமா?
சுகம் சுகமே. உன்னைப் பார்க்கவில்லையே என்ற கவலைதான் மற்றபடி சுகமே
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» 15ந் தேதி வருகிறாள் 'தெய்வத்திருமகள்'
» மனைவி கைநீட்டுற தூரத்தில் உட்காராதீங்க…!
» தை மகள் வருகிறாள் தரணி மணக்க!
» பாத்திரங்களை மனைவி கைக்கு ஏட்டாத தூரத்தில் வைக்கணும்..
» பாட்டி
» மனைவி கைநீட்டுற தூரத்தில் உட்காராதீங்க…!
» தை மகள் வருகிறாள் தரணி மணக்க!
» பாத்திரங்களை மனைவி கைக்கு ஏட்டாத தூரத்தில் வைக்கணும்..
» பாட்டி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|