சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Yesterday at 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Yesterday at 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

தனியார் பஸ் நடத்துநர், சாரதி மீது இராணுவத்தினர் தாக்குதல்! Khan11

தனியார் பஸ் நடத்துநர், சாரதி மீது இராணுவத்தினர் தாக்குதல்!

Go down

தனியார் பஸ் நடத்துநர், சாரதி மீது இராணுவத்தினர் தாக்குதல்! Empty தனியார் பஸ் நடத்துநர், சாரதி மீது இராணுவத்தினர் தாக்குதல்!

Post by mufees Mon 14 May 2012 - 13:21

May 14th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடியில் வைத்து தனியார் பஸ் நடத்துநர் ஒருவரும் சாரதி ஒருவரும் இராணுவத்தினரால் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டுள்ளனர்.

கண்மண் தெரியாமல் தாக்கப்பட்ட இருவரையும் ஓமந்தை பொலிஸார் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர். முதலில் தனியார் பஸ் நடத்துநரைத் தாக்கிய காலில்லாத இராணுவ சிப்பாய் ஒருவர் தன்னை இந்த இருவரும் தாக்கியதாக ஓமந்தை பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டையடுத்தே நடத்துநரும் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கவீனரான சிப்பாய் தனக்கு உள்காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, வவுனியா வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உண்மையாகவே காயமடைந்த தனியார் பஸ் நடத்துநரும், சாரதியும் ஓமந்தையில் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சனிக்கிழமை முன்னிரவில் நடைபெற்ற இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரிய வந்துள்ளதாவது,

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி வந்த தனியார் பஸ் ஒன்றில் பயணம் செய்த சிவிலுடையில் வந்த இராணுவச் சிப்பாய் ஒருவர் பின்னால் வந்த கொழும்பு செல்லும் பஸ் ஒன்றில் வழியில் மாறி ஏறியுள்ளார். அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த வவுனியா பஸ் ஒன்றில் மிதி பலகையில் பயணம் செய்த பயணி ஒருவர் பின்னால் வந்த பஸ் வண்டிக்கு கைகளினால் சைகை காட்டிய வண்ணம் வந்துள்ளார்.

இதனை அவதானித்த பயணியான அங்கவீனமான முன்னாள் இராணுவச் சிப்பாய் எழுந்து சென்று மிதி பலகையில் பயணம் செய்த பிரயாணியுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டாராம். இந்த வாய்த்தர்க்கத்தையடுத்து அங்கவீனராகிய சிப்பாய் அந்தப் பயணியைத் தாக்கியதாகவும், அதனை எதிர்த்து பயணியும் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் பஸ் வண்டி ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடியை வந்தடைந்தது.

சோதனைச் சாவடியின் நடைமுறைக்கமைய நடத்துநர் இறங்கிச் சென்று வாகன இலக்கத்தைப் பதிவு செய்துவிட்டு வந்தபோது பஸ் வண்டியின் பின்பக்கத்தில் வைத்து அவரை மறித்த அங்கவீனராகிய முன்னாள் சிப்பாய் அவரைக் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளார். ஆசனத்தில் இருந்தபடி, சைட் கண்ணாடி வழியாக இதனை அவதானித்த சாரதி இறங்கிச் சென்று நடத்துநரை ஏன் அடிக்கின்றீர்கள் எனக் கேட்டதற்கு அங்கிருந்த வேறு இராணுவத்தினரும் இணைந்து கூட்டமாகச் சேர்ந்து நடத்துநரையும் சாரதியையும் கண்மண் தெரியாமல் தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவ நேரத்தில் சோதனைச்சாவடியில் நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு நோக்கிச் சென்ற பஸ் வண்டி மற்றும் வவுனியா நோக்கி வந்த பஸ் வண்டி ஆகியவற்றில் வந்த பயணிகள் அனைவரும் நேரில் கண்டுள்ளனர்.

இவ்வாறு தாக்கியதன் பின்னர், பின்னால் வந்த கொழும்பு பஸ் வண்டியில், முன்னால் வந்த வவுனியா பஸ் வண்டியில் பயணம் செய்த பயணிகள் அனைவரையும் மாற்றி ஏற்றி அனுப்பி வைத்த ஓமந்தை சோதனைச் சாவடி இராணுவத்தினர் வவுனியா பஸ் வண்டியைத் தடுத்து வைத்துக்கொண்டு தாக்கப்பட்ட பஸ் நடத்துநர், சாரதி ஆகியோரை ஓமந்தை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பொலிஸார் இருவரையும் கைது செய்ததுடன், இவர்களால் தாக்கப்பட்டதாகப் பொய் முறைப்பாடு செய்த அங்கவீனரான முன்னாள் சிப்பாயை வழிப்பாதுகாப்புடன் வவுனியா வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறுவதற்காக அனுப்பி வைத்துள்ளனர்.

நீதி நியாயத்திற்கு மாறாக தான்தோன்றித்தனமாக ஓமந்தை சோதனைச் சாவடியில் இராணுவத்தினர் நடந்து கொண்ட விதத்தை நேரடியாகக் கண்ட பயணிகள் அனைவரும் அச்சத்திற்கு உள்ளாகினார்கள். பொதுமக்களுடன் சுமுகமாகப் பழக வேண்டிய இராணுவத்தினர் இவ்வாறு காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டார்களே என்று பயணிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்திருந்தனர்.
தனியார் பஸ் நடத்துநர், சாரதி மீது இராணுவத்தினர் தாக்குதல்! Army300_3-60x60
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum