Latest topics
» பல்சுவைby rammalar Today at 19:42
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Today at 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Today at 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Today at 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Today at 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Today at 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Today at 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Today at 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Today at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Today at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
செலவுகளை அதிகரிக்கச் செய்யும் மருத்துவர்கள்!
Page 1 of 1
செலவுகளை அதிகரிக்கச் செய்யும் மருத்துவர்கள்!
தேவையா இந்த மாத்திரைகள்? செலவுகளை அதிகரிக்கச் செய்யும் மருத்துவர்கள்!
சாதாரண காய்ச்சல், தலைவலி என்று சின்ன கிளினிக்கிற்கு போனால் கூட ஐநூறு ரூபாய் வரை மருத்துவர்கள் செலவு வைத்து விடுகின்றனர் என்ற புகார் எழுந்துள்ளது. பன்னாட்டு, உள்நாடு மருந்து உற்பத்தி நிறுவனங்களின் ஆசை வார்த்தைகளுக்கும், பரிசுப் பொருட்களுக்கும் இணங்கி மருத்துவர்களில் பலர் நோயாளிகளுக்கு தேவையில்லாத மருந்துகளை பரிந்துரை செய்கின்றனர் என்ற குற்றசாட்டு சமீபகாலமாக உருவாகியுள்ளது. .
கையில் காசே இல்லாத ஏழைகள் என்றால் அரசு மருத்துவமனைக்கு செல்வார்கள். அதிக அளவில் பணம் வைத்திருக்கு வசதி படைத்தவர்கள் கார்ப்பரேட் மருத்துவமனைகளை நாடுவார்கள். ஆனால் நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமே சின்ன மருத்துவமனைகளையும், கிளினிக் வைத்திருக்கும் டாக்டர்களிடமும் செல்கின்றனர்.
கார்ப்பரேட் மருத்துவர்களைப் போல இந்த மருத்துவர்களும் தற்போது பொது மக்களை ஏமாற்றத்தொடங்கிவிட்டனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. 50 ரூபாய் கன்சல்ட்டிங் பீஸ் டோக்கனுக்கு வாங்கும் மருத்துவர்கள் சின்னதாய் ஒரு சோதனை செய்துவிட்டு 200 ரூபாய்க்கு மாத்திரை எழுதிக்கொடுக்கின்றனர். இதனால் சாதாரண காய்ச்சல் முதல் உக்கிரமான நோய்கள் வரை நோயாளிக்கு ஆகும் செலவு பன்மடங்கு அதிகரிக்கிறது. அதுவும் நிலையாக சில மாத்திரைகளையும் மருந்துகளையும் வாழ்நாள் முழுதும் எடுத்துக் கொள்ளுமாறு மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படுகிறது.
தேவையில்லாத முக்கியமற்ற வைட்டமின்கள், டானிக்குகள், இருமல் மருந்துகள் ஆகியவையே இந்தியச் சந்தைகளில் அதிகம் விற்கும் மருந்து மாத்திரைகளாக உள்ளன. பெரிய நிறுவனங்களின் லாபத்தை இவையே தீர்மானிக்கின்றன.
இந்தியச் சந்தையில் அதிகமாக விற்பனையாகும் ஒரு மருந்து எது தெரியுமா? பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் இருமல் மருந்துதான் அது! சுமார் ரூ.200 கோடிக்கு ஆண்டொன்றுக்கு இந்த இருமல் மருந்து விற்றுத் தீர்க்கப்படுகிறது. மருத்துவர்கள் இதுபோன்ற தேவையற்ற மருந்துகளை மேலதிகமாக பரிந்துரை செய்வதால் எந்த வித சிகிச்சை மதிப்பும் இல்லாத சொத்தை மருந்துகள் கூட இந்தியாவில் அதிகம் விற்று கொழுக்கின்றன!
அதேபோல் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மருந்துகளின் கலவை அடங்கிய மருந்துகளை பரிந்துரை செய்வது அதிகமாகியுள்ளது. பொறுப்பற்ற முறையில் கூட இந்த மருந்துப் பரிந்துரைகள் செய்யப்படுகின்றன என்பது 2010ஆம் ஆண்டே டெல்லியில் ஒரு பிரச்சனையாக உருவெடுத்தது.
மருத்துவர்களின் இத்தகைய பொறுப்பற்ற மருந்துப் பரிந்துரைச் சீட்டுகளை தணிக்கை செய்ய தற்போது மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. மூன்று நபர்கள் கொண்ட ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்குள் விற்பனைக்கு கொண்டு வரும் மருந்துகள் தேவையானதா? எந்த அளவிற்கு இவை மக்களின் நோய்களை தீர்க்கும் என்று ஆய்வு செய்து இரண்டு மாதங்களுக்குள் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன்பின்னர் அரசின் அனுமதிக்குப் பின்பே இது சந்தையில் விற்பனைக்கு வரும். காலங்கடந்த முடிவுதான் எனினும் மிகவிரைவில் நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
அதேபோல் 5 ரூபாய் மதிப்புள்ள மாத்திரைகள் கூட தனியார் மருந்துக் கடைகளில் 50 ரூபாய் அளவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. நடுத்தர மக்களின் நிலையை கருத்தில் கொண்டு வடமாநிலங்களில் உள்ளதுபோல கிராமங்களிலும், நகரங்களிலும் அரசு மருத்துவமனைகளை நிறுவ நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.
http://tamil.boldsky.com/health/diet-fitness/2012/health-ministry-sets-up-committee-examine-report-001351.html
சாதாரண காய்ச்சல், தலைவலி என்று சின்ன கிளினிக்கிற்கு போனால் கூட ஐநூறு ரூபாய் வரை மருத்துவர்கள் செலவு வைத்து விடுகின்றனர் என்ற புகார் எழுந்துள்ளது. பன்னாட்டு, உள்நாடு மருந்து உற்பத்தி நிறுவனங்களின் ஆசை வார்த்தைகளுக்கும், பரிசுப் பொருட்களுக்கும் இணங்கி மருத்துவர்களில் பலர் நோயாளிகளுக்கு தேவையில்லாத மருந்துகளை பரிந்துரை செய்கின்றனர் என்ற குற்றசாட்டு சமீபகாலமாக உருவாகியுள்ளது. .
கையில் காசே இல்லாத ஏழைகள் என்றால் அரசு மருத்துவமனைக்கு செல்வார்கள். அதிக அளவில் பணம் வைத்திருக்கு வசதி படைத்தவர்கள் கார்ப்பரேட் மருத்துவமனைகளை நாடுவார்கள். ஆனால் நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமே சின்ன மருத்துவமனைகளையும், கிளினிக் வைத்திருக்கும் டாக்டர்களிடமும் செல்கின்றனர்.
கார்ப்பரேட் மருத்துவர்களைப் போல இந்த மருத்துவர்களும் தற்போது பொது மக்களை ஏமாற்றத்தொடங்கிவிட்டனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. 50 ரூபாய் கன்சல்ட்டிங் பீஸ் டோக்கனுக்கு வாங்கும் மருத்துவர்கள் சின்னதாய் ஒரு சோதனை செய்துவிட்டு 200 ரூபாய்க்கு மாத்திரை எழுதிக்கொடுக்கின்றனர். இதனால் சாதாரண காய்ச்சல் முதல் உக்கிரமான நோய்கள் வரை நோயாளிக்கு ஆகும் செலவு பன்மடங்கு அதிகரிக்கிறது. அதுவும் நிலையாக சில மாத்திரைகளையும் மருந்துகளையும் வாழ்நாள் முழுதும் எடுத்துக் கொள்ளுமாறு மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படுகிறது.
தேவையில்லாத முக்கியமற்ற வைட்டமின்கள், டானிக்குகள், இருமல் மருந்துகள் ஆகியவையே இந்தியச் சந்தைகளில் அதிகம் விற்கும் மருந்து மாத்திரைகளாக உள்ளன. பெரிய நிறுவனங்களின் லாபத்தை இவையே தீர்மானிக்கின்றன.
இந்தியச் சந்தையில் அதிகமாக விற்பனையாகும் ஒரு மருந்து எது தெரியுமா? பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் இருமல் மருந்துதான் அது! சுமார் ரூ.200 கோடிக்கு ஆண்டொன்றுக்கு இந்த இருமல் மருந்து விற்றுத் தீர்க்கப்படுகிறது. மருத்துவர்கள் இதுபோன்ற தேவையற்ற மருந்துகளை மேலதிகமாக பரிந்துரை செய்வதால் எந்த வித சிகிச்சை மதிப்பும் இல்லாத சொத்தை மருந்துகள் கூட இந்தியாவில் அதிகம் விற்று கொழுக்கின்றன!
அதேபோல் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மருந்துகளின் கலவை அடங்கிய மருந்துகளை பரிந்துரை செய்வது அதிகமாகியுள்ளது. பொறுப்பற்ற முறையில் கூட இந்த மருந்துப் பரிந்துரைகள் செய்யப்படுகின்றன என்பது 2010ஆம் ஆண்டே டெல்லியில் ஒரு பிரச்சனையாக உருவெடுத்தது.
மருத்துவர்களின் இத்தகைய பொறுப்பற்ற மருந்துப் பரிந்துரைச் சீட்டுகளை தணிக்கை செய்ய தற்போது மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. மூன்று நபர்கள் கொண்ட ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்குள் விற்பனைக்கு கொண்டு வரும் மருந்துகள் தேவையானதா? எந்த அளவிற்கு இவை மக்களின் நோய்களை தீர்க்கும் என்று ஆய்வு செய்து இரண்டு மாதங்களுக்குள் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன்பின்னர் அரசின் அனுமதிக்குப் பின்பே இது சந்தையில் விற்பனைக்கு வரும். காலங்கடந்த முடிவுதான் எனினும் மிகவிரைவில் நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
அதேபோல் 5 ரூபாய் மதிப்புள்ள மாத்திரைகள் கூட தனியார் மருந்துக் கடைகளில் 50 ரூபாய் அளவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. நடுத்தர மக்களின் நிலையை கருத்தில் கொண்டு வடமாநிலங்களில் உள்ளதுபோல கிராமங்களிலும், நகரங்களிலும் அரசு மருத்துவமனைகளை நிறுவ நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.
http://tamil.boldsky.com/health/diet-fitness/2012/health-ministry-sets-up-committee-examine-report-001351.html
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» செக்ஸ் உணர்வை அதிகரிக்கச் செய்யும் உணவு வகைகள்
» கெட்ட கொலஸ்ட்ராலைப் போக்கி நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்யும் பார்லி
» மருந்து இல்லாமல் சிகிச்சை செய்யும் 5 `மருத்துவர்கள்’
» அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் தனியாக கிளீனிக் நடத்த தடை
» மருந்தில்லா மருத்துவர்கள் `ஐவர்’
» கெட்ட கொலஸ்ட்ராலைப் போக்கி நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்யும் பார்லி
» மருந்து இல்லாமல் சிகிச்சை செய்யும் 5 `மருத்துவர்கள்’
» அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் தனியாக கிளீனிக் நடத்த தடை
» மருந்தில்லா மருத்துவர்கள் `ஐவர்’
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|