சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

நித்தியின் சிறைவாசம்: காரணம் ஜெயேந்திரர்! Khan11

நித்தியின் சிறைவாசம்: காரணம் ஜெயேந்திரர்!

Go down

நித்தியின் சிறைவாசம்: காரணம் ஜெயேந்திரர்! Empty நித்தியின் சிறைவாசம்: காரணம் ஜெயேந்திரர்!

Post by mufees Tue 19 Jun 2012 - 19:51

June 19th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

ஜெயேந்திரருக்கும் நித்தியானந்தாவிற்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் காரணமாக, ஜெயேந்திரரின் ஏற்பாட்டால்தான் நித்தியைக் கைது செய்ததாகப் பரபரப்பாகப் பேசப்படுகிறது. இதனால் கொதித்துக்கொண்டிருக்கிறார்களாம் நித்தியின் ஆதரவாளர்கள். வெகு விரைவிலேயே இதற்கான பலனை ஜெயேந்திரர் அனுபவிப்பார் என்று அவர்கள் சாபம் விடுகின்றனராம்.

சில காலமாக எந்தத் தொந்தரவும் இல்லாமல் சுதந்திரமாக சுற்றித் திரிந்துகொண்டிருந்தார் நித்தியானந்தா. அதிலும், மதுரை ஆதீனத்தின் வாரிசாக அவரை மதுரை ஆதீனம் அறிவித்தற்குப் பிறகு அவருக்கு பல எதிர்ப்புகள் வந்தாலும் கூட அவர் தங்கு தடையின்றி சுதந்திரமாகவே நடமாடிக் கொண்டிருந்தார். படு துணிச்சலாகவும் பேட்டி கொடுத்து வந்தார். அவருக்கு எதிரான போராட்டங்களும் கூட அவரை எந்த வகையிலும் பாதிக்கவில்லை.

இன்னும் சொல்லப் போனால், மதுரை ஆதீன மடமே நித்தியானந்தாவின் ஆதரவாளர்கள் கையில்தான் முழுமையாக இருந்தது. அங்கு போராட்டத்துக்காகப் போனவர்களுக்குத்தான் அடி விழுந்ததே தவிர நித்தியானந்தா ஆதரவாளர்களை யாரும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

ஆனால் தற்போது நித்தியானந்தாவின் நிலைமை மிகவும் சிக்கலாகியுள்ளது. அவரால் முன்பு போல பிடதி ஆசிரமத்தில் இருந்து பணியாற்ற முடியுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இனிமேல் கர்நாடகத்திலிருந்து அவர் ‘இறைப் பணியாற்ற’ முடியுமா என்பதும் சந்தேகமாகியுள்ளது.

இப்படி நிலைமை மாறிப் போனதற்குக் காரணம் அவர் மீது கர்நாடக அரசு எடுத்துள்ள அதிரடி நடவடிக்கைகளே. ஒரே நாளில் நித்தியானந்தாவின் கர்நாடக செயல்பாடுகள் முடங்கிப் போய் விட்டன. பிடதி ஆசிரமம் மூடப்பட்டு விட்டது, சீல் வைத்து விட்டனர்.

இனிமேல் நம்மால் பிடதியிலிருந்தோ அல்லது கர்நாடகத்திலிருந்தோ செயல்பட முடியாது, மதுரையில்தான் இனிமேல் நமது செயல்பாட்டு மையம் இருக்கும் என்று நித்தியானந்தாவே தனது ஆதரவாளர்களிடம் கூறியதாக ஒரு தகவல் கூறுகிறது.

நித்தியானந்தாவுக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட ஜெயேந்திரர்தான் காரணம் என்று நித்தியானந்தா ஆதரவு வட்டாரம் கூறுகிறதாம். ஜெயேந்திரர் சொல்லித்தான் சதானந்த கெளடா நித்தியானந்தாவைக் கைது செய்ய உத்தரவிட்டார், ஆசிரமத்தை முடக்கினார்,அடாவடியாக நடந்து கொண்டார் என்று இவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

ஜெயேந்திரரின் தீவிர பக்தராம் கெளடா. எனவேதான் நித்தியானந்தா தரப்பு தன் மீது வழக்கு, குற்றச்சாட்டு என்று பாய்ந்ததால் கடுப்பில் இருந்து வந்த ஜெயேந்திரர் சொல்லி, கெளடா இப்படி ஒரு நடவடிக்கையை எடுத்து விட்டார் என்று அவர்கள் சொல்கிறார்கள்.

ஆனால் விரைவில் இதற்குரிய பலனை அவர்கள் அனுபவிப்பார்கள் என்றும் நித்தியானந்தா ஆதரவாளர்கள் கருவியபடி கூறுகிறார்கள்.

ஜெயேந்திரர் – நித்தியானந்தா மோதலுக்கு என்ன காரணம்?

மதுரை ஆதீன மடத்தின் வாரிசாக நித்தியானந்தாவை, மதுரை ஆதீனகர்த்தர் அருணகிரிநாதர் அறிவித்தார். இது பெருத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நித்தியானந்தா, தனக்கு ஜெயேந்திரர் உள்ளிட்டோரின் ஆதரவு உள்ளது என்று கூறியிருந்தார். ஆனால் இதை உடனடியாக காஞ்சி சங்கர மடம் மறுப்பு தெரிவித்து விட்டது.

சில நாட்கள் கழித்து நித்தியானந்தா கூறியது குறித்து ஜெயேந்திரரிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது, நான் அப்படியெல்லாம் ஆதரவு தருவதாக சொல்லவில்லை. அவருடன் எப்போது பார்த்தாலும் ஒரு பெண் இருக்கிறார். அவரைப் போய் எப்படி நான் ஆதரிப்பது. மதுரை ஆதீன மடத்திற்கென்று பாரம்பரியம் உள்ளது என்று கூறியிருந்தார்.

இதையடுத்து ஜெயேந்திரர் மீது நடிகை ரஞ்சிதாவின் சகோதரி கோர்ட்டில் அவதூறு வழக்கு போட்டு விட்டார். ஜெயேந்திரரின் பேச்சால் தனது சகோதரி பெரும் மன உளைச்சலில் இருப்பதாகவும், குடும்பமே பெரும் உளைச்சலுக்குள்ளாகியுள்ளதாகவும் அவர் அந்த வழக்கில் கூறியுள்ளார்.

இதுதான் ஜெயேந்திரர் தரப்புக்கும், நித்தியானந்தா தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டதன் பின்னணியாகும்.நித்தியின் சிறைவாசம்: காரணம் ஜெயேந்திரர்! Nithyanantha1-100x100
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum