Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதைby rammalar Yesterday at 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Yesterday at 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Yesterday at 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Yesterday at 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Yesterday at 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
80 வயது “கிளுகிளு" கிழவன் – நம்பமுடியாத உண்மைக்கதை!
Page 1 of 1
80 வயது “கிளுகிளு" கிழவன் – நம்பமுடியாத உண்மைக்கதை!
80 வயது “கிளுகிளு" கிழவன் – நம்பமுடியாத உண்மைக்கதை!
“”உருவத்தைப் பார்த்து எடை போடா தீங்கப்பா… என்னை மாதிரி வயதான ஆளுங்கள்லயும் டேஞ்சரஸ் ஆளுங்க இருப்பாங்க”’’-என வாக்குமூலம் கொடுத்து அதிரவைத் திருக்கிறார்… 80 வயது கில்லாடிக் கிரிமினல் கிழவரான கண்ணன். காவி உடையில் சாந்தமாகக் காட்சிதரும் இந்த கிழவரின் ஜாதகங் களைக் கிளறிய காக்கிகள்… கிறுகிறுத்துப்போய் நிற்கிறார்கள். 29.7.2009 பகல் நேரம்.”"சார் போலீஸ் ஸ்டேஷனா? எங்க லாட்ஜ் ரூம் ஒன்னில்… பிணவாடை வருது. மர்டர் நடந்திருக்கும் போலிருக்கு சார். அறைக்கதவு லாக் பண்ணியிருக்கு”’’-சிதம்பரம் பாரி லாட்ஜின் மேனேஜர் பதட்டத்தோடு தகவல் கொடுக்க…அடுத்த கொஞ்ச நேரத்தில் எஸ்.பி.செந்தில்வேலன் தலைமையிலான போலீஸ் டீம்… அந்த லாட்ஜை முற்றுகை இட்டது.
கதவு உடைக்கப்பட்டு காக்கிகள் உள்ளே போனபோது… 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர் ரத்தக் காயத்தோடு பிணமாய்க் கிடந்தார். தலையில் பலமாகத் தாக்கி மரணம் ஏற்படுத்தப் பட்டிருந்தது. கொல்லப்பட்டவரோடு 80 வயது பிராமணப் பெரியவர் ஒருவரும் தங்கி இருந்ததாக ரூம் பாய் சொல்ல… அவர்கள் கொடுத்திருந்த விலாசத்தை காக்கிகள் அலசினர்.
அது பொய் முகவரி என்பது தெரிந்தது. கொல்லப்பட்டவர் குறித்த தடயங்கள் கிடைக்காததால்… வழக்கு அப்படியே தேங்கி நின்றது.இந்த நிலையில் எஸ்.பி. செந்தில் வேலன் மாற்றலாகி ராமநாதபுரம் போய்… அங்கிருந்து தஞ்சைக்கு மாறுதலாகி வந்தார். இந்த நிலையில்… தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக காவல்நிலையத்தில் உமாமகேஸ்வரி என்ற பெண்மணி கொடுத்த புகார் ஒன்று தற்செயலாக எஸ்.பி.செந்தில்வேலன் கண்ணில் பட்டது. தனது மாமனார் ராமசாமி என்பவரைக் காணவில்லை என அவர் புகாரில் குறிப்பிட்டி ருந்தார். உடனே அவரை அழைத்த எஸ்.பி…. சிதம்பரம் பாரி லாட்ஜ் விவகாரத்தைச் சொல்லி…’’”"அவர் உங்கள் மாமனாரா என பார்த்துவிட்டு வாருங்கள்”’’ என்றதும்… ராமசாமியின் ஒட்டுமொத்த குடும்பமும் அலறியடித்துக்கொண்டு சிதம்பரத்துக்கு ஓடியது.
காவல்நிலையத்தில் எடுத்து வைக்கப்பட்டிருந்த புகைப்படத்தைப் பார்த்து… அவர்தான் ராமசாமி என்று அடை யாளம் காட்டி.. கதறி அழுதனர். தஞ்சை வந்து அவர்கள் எஸ்.பி. செந்தில்வேலனிடம் தகவல் சொல்ல… நிமிர்ந்து உட்கார்ந்த எஸ்.பி…. ராமசாமியுடன் லாட்ஜில் தங்கியிருந்த காவிவேட்டிப் பெரியவர் பற்றி ராமசாமி குடும்பத்தினரிடம் விசாரித்தார். “”"அவர் வைத்தியர் கண்ணன். அவர் கூடத்தான் எங்க அப்பா எப்பவும் இருப்பார். அவர் நல்ல மனுசனாச்சே…”’ என ராமசாமியின் பிள்ளைகள் சொல்ல… எஸ்.பி.யோ.. இன்ஸ்பெக்டர் முத்தரசு தலைமையிலான டீமை களமிறக்கினார்.
விசாரணையில் வைத்தியர் கண்ணன்… தஞ்சை நட்சத்திர நகர் முதல்தெருவில் 19-ஏ என்ற இலக்கத்தில் வசித்துவந்த தகவல் கிடைக்க… காக்கிகள் டீம் அந்த வீட்டில் இருந்த கண்ணனின் வைப்பான 60 வயது சந்திராவை ஸ்டேஷனுக்குத் தூக்கிவந்தது. சந்திராவோ “”புதுக்கோட்டையில் என் கணவரோடும் ரெண்டு மகள்களோடும் வசித்துவந்தேன்..85 ஆம் வருசம் எங்க குடும்பத்துக்கு பழக்கமான கண்ணன்,, சில உதவிகள் செய்து எங்க மனசில் இடம்பிடிச்சார். என் மகள்களுக்கு திருமணமான பின்… என்னை என் கணவரிடமிருந்து பிரித்து தஞ்சாவூருக்கு கொண்டுவந்துட்டார். திடீர் திடீர்னு எங்கயாவது போவார். அவ்வளவுதான் எனக்குத் தெரியும்”’என்று கண்ணைக் கசக்கினாள். இவளது போனுக்கு அடிக்கடி கண்ணன் வருவதை அறிந்த காக்கிகள் டீம்… செல்போன் டவர்களை கண் காணித்து கண்ணனின் நடமாட்டத்தை ட்ரேஸ் செய்தது. போலீஸ் எதிர்பார்த்தது போலவே சந்திராவை செல்போனில் தொடர்புகொண்டு தகவல் சொல்லிவிட்டு… கண்ணன் தஞ்சைக்கு சீக்ரெட்டாய் வர… கண்ணனை பேருந்து நிலையத்திலேயே மடக்கிப் பிடித்தது போலீஸ்.
பக்திப் பழமாக… காவியில்… முதுமைத் தோற்றத்தில் இருந்த கண்ணன்… அடித்து விசாரிப்பதற்கெல்லாம் வாய்ப்பு தராமல் தானாகவே தனது குற்றங்களைப் பட்டியலிட… ஒருகணம் காக்கிகளே ஆடிப்போனார்கள். மிகவும் ஜோவியலாய்ப் பேச ஆரம்பித்த கண்ணன்…’’”"புடவை வியாபாரம், நாய்க்குட்டி வியாபாரம்னு நிறைய தொழில் பார்த்துட்டு.. கடைசியா சித்த வைத்தியத்துக்கு தாவினேன். அதுலதான் அலுங்காம காசு பாக்கலாம். பொதுவா வயதானவங்க… தாம்பத்ய உறவில் சரியா ஈடுபடமுடியலையேன்னு ஏங்குவாங்க. இதை சாதக மாக்கி… அவங்களோட பழகி… உணர்ச்சியைத் தூண்டும் மாத்திரைகளைக் கொடுத்து அவங்களை வசப்படுத்துவேன். முடிஞ்சவரை கறந்துடுவேன். அதேபோல் குழந்தையில்லாத தம்பதிகள் வந்தா… கவுன்சிலிங் என்ற பெயரில் தனித்தனியா சந்திப்பேன். அப்ப பெண்களை சோத னைங்கிற பேர்ல கிளர்ச்சிக்கு ஆளாக்கி… மத்த ஆண் நண்பர்களை அவங்களோட இருக்க வைத்து ரசிப்பேன். சிலரை சூன்யம் வைச்சிருக் காங்கன்னு சொல்லி பயமுறுத்தி காசைப் பறிச்சிருக்கேன்.
ஒரு தரம் திண்டுக்கல் லாட்ஜில் தங்கியிருந்தப்ப.. பக்கத்து ரூமில் இருந்த ஒரு வியாபாரியை சிநேகம் பிடிச்சி… ஒன்னேகால் லட்ச ரூபாயைத் தூக்கிட்டுப் போய்ட் டேன். ஈரோட்டில் பக்கத்து ரூமில் இருந்த வியாபாரிக்கு ஒருத்தருக்குத் தூக்க மாத்திரை கொடுத்து 20 ஆயிரம் மதிப்புள்ள பட்டுப் புடவைகளைத் திருடினேன். ராஜபாளையத்தில் கடப்பாக்கல் வியாபாரி துளசியை பின்பக்கமாத் தாக்கி 75 ஆயிரம் ரூபாயைக் கொள்ளையடிச்சேன். இதேபோல… ராமசாமி.. தான் கட்டும் வீட்டுக்கு டைல்ஸ் வாங்க புதுவைக்குக் கூப்பிட்டார். வழியில் ஒருவேலையிருக்குன்னு சிதம்பரத்தில் அவரோட வந்து தங்கினேன். அவர்ட்ட 2 லட்சம் கடன் கேட்டேன். தரமாட்டேன்னு சொன் னார். அதனாலதான் அவருக்கு பிராந்தி வாங்கி கொடுத்து… மயக்கத்தில் இருந்த அவரை பின் தலையில் அடிச்சிட்டு முகத்தைத் தலையணையால் அழுத்தியும் கொன்னேன். அவர் பணம் கொடுத் திருந்தா ஏன் கொல்லப்போறேன். என் வயசையும் உருவத்தையும் பார்த்து யாரும் சந்தேகப்படமாட்டாங்க. அதனால் இஷ்டத்துக்கும் ஆட்டம் போட்டுட்டேன். போலீஸ் தம்பிகளா… உருவத்தைப் பார்த்து பெருசுகளையும் நம்பாதீங்க”’என அந்த கிரிமினல் கிழவன் பேசப் பேச விசாரித்த காக்கிகள்தான் திகிலடித்துப்போனார்கள். வியூகம் அமைத்து கண்ணனைப் பிடித்த எஸ்.பி.செந்தில்வேலனோ “”கூடவே இருந்து நல்லா பழகி… நம்பிக்கையை உண் டாக்கி.. அப்புறம் கொலை கொள்ளையில் ஈடுபடற… வித்தியாசமான கிரிமினல் கண்ணன். இன்னும் கொலை கள்ல இவருக்கு சம்பந்தம் இருக்கான்னு விசாரிச்சிக்கிட்டு இருக்கோம்” என்கிறார் வெற்றிப் புன்னகையோடு.
“”உருவத்தைப் பார்த்து எடை போடா தீங்கப்பா… என்னை மாதிரி வயதான ஆளுங்கள்லயும் டேஞ்சரஸ் ஆளுங்க இருப்பாங்க”’’-என வாக்குமூலம் கொடுத்து அதிரவைத் திருக்கிறார்… 80 வயது கில்லாடிக் கிரிமினல் கிழவரான கண்ணன். காவி உடையில் சாந்தமாகக் காட்சிதரும் இந்த கிழவரின் ஜாதகங் களைக் கிளறிய காக்கிகள்… கிறுகிறுத்துப்போய் நிற்கிறார்கள். 29.7.2009 பகல் நேரம்.”"சார் போலீஸ் ஸ்டேஷனா? எங்க லாட்ஜ் ரூம் ஒன்னில்… பிணவாடை வருது. மர்டர் நடந்திருக்கும் போலிருக்கு சார். அறைக்கதவு லாக் பண்ணியிருக்கு”’’-சிதம்பரம் பாரி லாட்ஜின் மேனேஜர் பதட்டத்தோடு தகவல் கொடுக்க…அடுத்த கொஞ்ச நேரத்தில் எஸ்.பி.செந்தில்வேலன் தலைமையிலான போலீஸ் டீம்… அந்த லாட்ஜை முற்றுகை இட்டது.
கதவு உடைக்கப்பட்டு காக்கிகள் உள்ளே போனபோது… 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர் ரத்தக் காயத்தோடு பிணமாய்க் கிடந்தார். தலையில் பலமாகத் தாக்கி மரணம் ஏற்படுத்தப் பட்டிருந்தது. கொல்லப்பட்டவரோடு 80 வயது பிராமணப் பெரியவர் ஒருவரும் தங்கி இருந்ததாக ரூம் பாய் சொல்ல… அவர்கள் கொடுத்திருந்த விலாசத்தை காக்கிகள் அலசினர்.
அது பொய் முகவரி என்பது தெரிந்தது. கொல்லப்பட்டவர் குறித்த தடயங்கள் கிடைக்காததால்… வழக்கு அப்படியே தேங்கி நின்றது.இந்த நிலையில் எஸ்.பி. செந்தில் வேலன் மாற்றலாகி ராமநாதபுரம் போய்… அங்கிருந்து தஞ்சைக்கு மாறுதலாகி வந்தார். இந்த நிலையில்… தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக காவல்நிலையத்தில் உமாமகேஸ்வரி என்ற பெண்மணி கொடுத்த புகார் ஒன்று தற்செயலாக எஸ்.பி.செந்தில்வேலன் கண்ணில் பட்டது. தனது மாமனார் ராமசாமி என்பவரைக் காணவில்லை என அவர் புகாரில் குறிப்பிட்டி ருந்தார். உடனே அவரை அழைத்த எஸ்.பி…. சிதம்பரம் பாரி லாட்ஜ் விவகாரத்தைச் சொல்லி…’’”"அவர் உங்கள் மாமனாரா என பார்த்துவிட்டு வாருங்கள்”’’ என்றதும்… ராமசாமியின் ஒட்டுமொத்த குடும்பமும் அலறியடித்துக்கொண்டு சிதம்பரத்துக்கு ஓடியது.
காவல்நிலையத்தில் எடுத்து வைக்கப்பட்டிருந்த புகைப்படத்தைப் பார்த்து… அவர்தான் ராமசாமி என்று அடை யாளம் காட்டி.. கதறி அழுதனர். தஞ்சை வந்து அவர்கள் எஸ்.பி. செந்தில்வேலனிடம் தகவல் சொல்ல… நிமிர்ந்து உட்கார்ந்த எஸ்.பி…. ராமசாமியுடன் லாட்ஜில் தங்கியிருந்த காவிவேட்டிப் பெரியவர் பற்றி ராமசாமி குடும்பத்தினரிடம் விசாரித்தார். “”"அவர் வைத்தியர் கண்ணன். அவர் கூடத்தான் எங்க அப்பா எப்பவும் இருப்பார். அவர் நல்ல மனுசனாச்சே…”’ என ராமசாமியின் பிள்ளைகள் சொல்ல… எஸ்.பி.யோ.. இன்ஸ்பெக்டர் முத்தரசு தலைமையிலான டீமை களமிறக்கினார்.
விசாரணையில் வைத்தியர் கண்ணன்… தஞ்சை நட்சத்திர நகர் முதல்தெருவில் 19-ஏ என்ற இலக்கத்தில் வசித்துவந்த தகவல் கிடைக்க… காக்கிகள் டீம் அந்த வீட்டில் இருந்த கண்ணனின் வைப்பான 60 வயது சந்திராவை ஸ்டேஷனுக்குத் தூக்கிவந்தது. சந்திராவோ “”புதுக்கோட்டையில் என் கணவரோடும் ரெண்டு மகள்களோடும் வசித்துவந்தேன்..85 ஆம் வருசம் எங்க குடும்பத்துக்கு பழக்கமான கண்ணன்,, சில உதவிகள் செய்து எங்க மனசில் இடம்பிடிச்சார். என் மகள்களுக்கு திருமணமான பின்… என்னை என் கணவரிடமிருந்து பிரித்து தஞ்சாவூருக்கு கொண்டுவந்துட்டார். திடீர் திடீர்னு எங்கயாவது போவார். அவ்வளவுதான் எனக்குத் தெரியும்”’என்று கண்ணைக் கசக்கினாள். இவளது போனுக்கு அடிக்கடி கண்ணன் வருவதை அறிந்த காக்கிகள் டீம்… செல்போன் டவர்களை கண் காணித்து கண்ணனின் நடமாட்டத்தை ட்ரேஸ் செய்தது. போலீஸ் எதிர்பார்த்தது போலவே சந்திராவை செல்போனில் தொடர்புகொண்டு தகவல் சொல்லிவிட்டு… கண்ணன் தஞ்சைக்கு சீக்ரெட்டாய் வர… கண்ணனை பேருந்து நிலையத்திலேயே மடக்கிப் பிடித்தது போலீஸ்.
பக்திப் பழமாக… காவியில்… முதுமைத் தோற்றத்தில் இருந்த கண்ணன்… அடித்து விசாரிப்பதற்கெல்லாம் வாய்ப்பு தராமல் தானாகவே தனது குற்றங்களைப் பட்டியலிட… ஒருகணம் காக்கிகளே ஆடிப்போனார்கள். மிகவும் ஜோவியலாய்ப் பேச ஆரம்பித்த கண்ணன்…’’”"புடவை வியாபாரம், நாய்க்குட்டி வியாபாரம்னு நிறைய தொழில் பார்த்துட்டு.. கடைசியா சித்த வைத்தியத்துக்கு தாவினேன். அதுலதான் அலுங்காம காசு பாக்கலாம். பொதுவா வயதானவங்க… தாம்பத்ய உறவில் சரியா ஈடுபடமுடியலையேன்னு ஏங்குவாங்க. இதை சாதக மாக்கி… அவங்களோட பழகி… உணர்ச்சியைத் தூண்டும் மாத்திரைகளைக் கொடுத்து அவங்களை வசப்படுத்துவேன். முடிஞ்சவரை கறந்துடுவேன். அதேபோல் குழந்தையில்லாத தம்பதிகள் வந்தா… கவுன்சிலிங் என்ற பெயரில் தனித்தனியா சந்திப்பேன். அப்ப பெண்களை சோத னைங்கிற பேர்ல கிளர்ச்சிக்கு ஆளாக்கி… மத்த ஆண் நண்பர்களை அவங்களோட இருக்க வைத்து ரசிப்பேன். சிலரை சூன்யம் வைச்சிருக் காங்கன்னு சொல்லி பயமுறுத்தி காசைப் பறிச்சிருக்கேன்.
ஒரு தரம் திண்டுக்கல் லாட்ஜில் தங்கியிருந்தப்ப.. பக்கத்து ரூமில் இருந்த ஒரு வியாபாரியை சிநேகம் பிடிச்சி… ஒன்னேகால் லட்ச ரூபாயைத் தூக்கிட்டுப் போய்ட் டேன். ஈரோட்டில் பக்கத்து ரூமில் இருந்த வியாபாரிக்கு ஒருத்தருக்குத் தூக்க மாத்திரை கொடுத்து 20 ஆயிரம் மதிப்புள்ள பட்டுப் புடவைகளைத் திருடினேன். ராஜபாளையத்தில் கடப்பாக்கல் வியாபாரி துளசியை பின்பக்கமாத் தாக்கி 75 ஆயிரம் ரூபாயைக் கொள்ளையடிச்சேன். இதேபோல… ராமசாமி.. தான் கட்டும் வீட்டுக்கு டைல்ஸ் வாங்க புதுவைக்குக் கூப்பிட்டார். வழியில் ஒருவேலையிருக்குன்னு சிதம்பரத்தில் அவரோட வந்து தங்கினேன். அவர்ட்ட 2 லட்சம் கடன் கேட்டேன். தரமாட்டேன்னு சொன் னார். அதனாலதான் அவருக்கு பிராந்தி வாங்கி கொடுத்து… மயக்கத்தில் இருந்த அவரை பின் தலையில் அடிச்சிட்டு முகத்தைத் தலையணையால் அழுத்தியும் கொன்னேன். அவர் பணம் கொடுத் திருந்தா ஏன் கொல்லப்போறேன். என் வயசையும் உருவத்தையும் பார்த்து யாரும் சந்தேகப்படமாட்டாங்க. அதனால் இஷ்டத்துக்கும் ஆட்டம் போட்டுட்டேன். போலீஸ் தம்பிகளா… உருவத்தைப் பார்த்து பெருசுகளையும் நம்பாதீங்க”’என அந்த கிரிமினல் கிழவன் பேசப் பேச விசாரித்த காக்கிகள்தான் திகிலடித்துப்போனார்கள். வியூகம் அமைத்து கண்ணனைப் பிடித்த எஸ்.பி.செந்தில்வேலனோ “”கூடவே இருந்து நல்லா பழகி… நம்பிக்கையை உண் டாக்கி.. அப்புறம் கொலை கொள்ளையில் ஈடுபடற… வித்தியாசமான கிரிமினல் கண்ணன். இன்னும் கொலை கள்ல இவருக்கு சம்பந்தம் இருக்கான்னு விசாரிச்சிக்கிட்டு இருக்கோம்” என்கிறார் வெற்றிப் புன்னகையோடு.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» பத்திரிகை அடித்து ஊரை கூட்டினார்: 71 வயது தாத்தாவுக்கு திருமணம்; 62 வயது பெண்ணை மணந்தார்
» குழந்தையை ஏறி மிதிக்கும் கிழவன்
» கானகத்தின் கிழவன்...! - (பொது அறிவு தகவல்)
» 26 வயது பெண்ணை திருமணம் முடிக்க துடிக்கும் 15 வயது சிறுவன்: அத்துருகிரியவில் நடந்த விபரீதம்
» 6 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்ட 4 வயது சிறுவன் - அமெரிக்க அதிர்ச்சி தகவல்
» குழந்தையை ஏறி மிதிக்கும் கிழவன்
» கானகத்தின் கிழவன்...! - (பொது அறிவு தகவல்)
» 26 வயது பெண்ணை திருமணம் முடிக்க துடிக்கும் 15 வயது சிறுவன்: அத்துருகிரியவில் நடந்த விபரீதம்
» 6 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்ட 4 வயது சிறுவன் - அமெரிக்க அதிர்ச்சி தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|