Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
இதுதாங்க அர்த்தம்! - பக்தி கதை
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
இதுதாங்க அர்த்தம்! - பக்தி கதை
–
எல்லாம் அறிந்த நாரதருக்கே ஒரு சந்தேகம்.
ஒரு முனிவரிடம் கேட்டார்.
நாராயணன் என்றால் என்ன அர்த்தம்?
முனிவர் சொன்னார்.ரொம்ப சுலபம்… நாரம் என்றால் தண்ணீர்.
அயனன் என்றால் சயனித்திருப்பவன். அவன் கடலிலே சயனம்
கொண்டவன் அல்லவா? அதனால் நாராயணன் என்றார்.
நாரதருக்கு இந்த பதிலில் அரைகுறை திருப்தி தான் ஏற்பட்டது.
நாராயணனிடமே ஓடினார். ஐயனே! உம்மை நான் நாராயணா…
நாராயணா என்று துதிக்கிறேன். ஆனால், அதற்கு சரியான
விளக்கம் தெரியவில்லை! அது உம் பெயர் தானே! நீரே விளக்கம்
சொல்லுமே!
குறும்புக்கார நாரதர் கேட்ட கேள்விக்கு, குறும்பு நாராயணனும்
குறும்பாகவே பதிலளித்தான். அடடா… எனக்கும் தெரியாதே!
எதற்கும் நீ நர்மதைக்கரையில் இருக்கும் வண்டிடம் போய் கேள்.
அதற்குத் தெரியும் என்று கேள்விப்பட்டேன். நாரதர் வண்டிடம்
ஓடினார். வண்டே! நாராயணன் என்ற பதத்திற்கு அர்த்தம்
தெரியுமா? கேள்வியைக் கேட்ட மாத்திரத்திலேயே வண்டு விழுந்து
இறந்து போனது.
நாரதர் நாராயணனிடம் திரும்பினார். நாராயணன் என்ற நாமம்
கேட்பவர்கள் இறந்து விடுவார்கள்.. அப்படியானால் அது தானே
அர்த்தம், என்றார். அப்படி நான் கேள்விப்பட்ட தில்லையே!
எதற்கும் அதோ! அந்தக் கிளியிடம் கேள், என்று ஒரு மரத்தை
நோக்கி கைநீட்டினார் பகவான். கிளியிடம் இதே கேள்வியை
நாரதர் கேட்க, கிளி சுருண்டு விழுந்து இறந்து போனது.
நாரதருக்கு திக்கித்து விட்டது. மூச்சுக்கு முன்னூறு தடவை
நாராயணா என்கிறோமே! நாமும் செத்து விடுவோமே! பயத்துடன்
நாராயணனிடம் வந்தார். பெருமாளே! அதற்கு அர்த்தம் அதுதான்…
உறுதியாகி விட்டது. நாரதா! அவை விதிமுடிந்து இறக்கின்றன.
எதற்கும் அந்த பசுவின் கன்றிடம் போய் கேள்.
நல்லாயிருக்கு நாராயணா! இதை நான் போய் கேட்க, அந்த
கன்று இறந்து போக, பசுக் கன்றை கொன்ற கொடியபாவம் என்னை
அணுக வேண்டுமென திட்டம் போடுகிறாயா! முடியாது என்றார்
நாரதர்.
அப்படி ஏதும் ஆகாதென்றே நினைக்கிறேன். நீ ஒரு தபஸ்வி!
தபஸ்விக்கு தைரியம் வேண்டாமோ! என்று உசுப்பிவிட்டார்
பெருமாள்.
நாரதரும் சற்று தைரியத்துடன் கன்றிடம் போய் கேட்க, கன்றின்
கதை முடிந்தது. நாராயணா! எல்லாம் போச்சு! இனிமேல்
உன்னிடமில்லை பேச்சு! பசுக் கன்றைக் கொன்ற கொடிய பாவத்துக்கு
என்னை ஆளாக்கிவிட்டாய்! வருகிறேன்! எனக்கிளம்பியவரை,
பெருமாள் தடுத்தார். நாரதா! கலங்காதே! இதுவரை நீ கேட்டது பூச்சி,
பறவை, விலங்குகளிடம்! இனி காசி இளவரசனிடம் போய் கேள்,
அவன் மனிதனாயிற்றே! அவனுக்கு ஏதும் ஆகாது! என்ற நாராயணனை,
அப்பா! என்னை அரச தண்டனைக்கு ஆளாக்க எத்தனை நாள் திட்டம்
போட்டு வைத்திருந்தாய்! முடியாதப்பா! முடியாது என்ற நாரதரை
சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.
நாரதர் பயந்த படியே இளவரசனிடம் கேட்டார். அவனுக்கு ஏதும்
ஆகல்லை. ஓம் நமோ நாராயணாய என்ற எட்டெழுத்து மந்திரத்தை
சொல்பவர்களுக்கு பிறவிப்பிணி தீரும். நாரதரே! வண்டாய், கிளியாய்,
கன்றாய் உம் முன் காட்சி தந்தது நானே! உம் வாயால் நாராயணா
என்ற நாமம் கேட்டு உயர்ந்த மனிதப்பிறவி… அதிலும்
செல்வங்களையெல்லாம் அனுபவிக்கத்தக்க இளவரசனாய் பிறந்தேன்.
இனி அருந்தவம் செய்து. நாராயண மந்திரத்தை பக்தியுடன் ஓதி
வைகுண்டம் செல்வேன். மீண்டும் பிறவாத முக்தி நிலையைப் பெறுவேன்,
என்றான்.
ஆகா! நாராயணன் என்றால் வாழும் காலத்தில் செல்வம் அருள்பவன்,
வாழ்வுக்குப் பிறகு பிறவிப்பணி தீர்ப்பவன் என்றல்லவா அர்த்தம் எனப்
புரிந்து கொண்டார் நாரதர்.
-
=============================================
நன்றி: தினமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|