சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Today at 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Today at 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

மஞ்சள் மகிமை  Khan11

மஞ்சள் மகிமை

2 posters

Go down

மஞ்சள் மகிமை  Empty மஞ்சள் மகிமை

Post by ahmad78 Sun 11 Nov 2012 - 10:28

மஞ்சள் மகிமை






பண்டைய இந்தியர்கள் முற்கால அரேபியர்கள் முதலியோர் போற்றிப் புகழ்ந்த மசாலா - மஞ்சள். இதன் மேன்மை குணத்தை இன்று நவீன மருத்துவம் உறுதிபடுத்தியுள்ளது.மஞ்சள் முகமே வருக / மங்கள முகமே வருக - எனக் கவிஞர் கூறியது போலத் தமிழகப் பண்பாட்டில் மஞ்சள் செழுமை, வளமை, மங்கலத்தைக் குறிப்பாகக் கருதப்படுகிறது.
மஞ்சள் மகிமை  Turmeric



மஞ்சள் தடவிய புத்தாடை, மஞ்சள் பூசிய கயிறு, மஞ்சள் பூச்சுபெற்ற அரிசி, பிடித்து வைத்த மஞ்சள், சுவரில் திறுநீறு போல இடப்படும் மஞ்சள்கீற்று , மஞ்சள் கரைத்த கலசநீர் எனத் தமிழப் பண்பாட்டில் மஞ்சள் இரண்டறக் கலந்துள்ளது.



தெற்காசிய நாடுகளான ஜாவா, இந்தோனேசியா, பாலித்தீவுகள் முதலியவற்றில் தமிழகப் பண்பாட்டுத் தாக்கம் புலப்படுகிறது. சோழர்கள் - ராஜராஜ சோழன் முதலியோர் படையெடுத்துச் சென்றபோது ஏற்பட்ட தாக்கமே இது. இதன் விளைவாக இப்பகுதியிலும் மஞ்சள் மங்களக் குறியாக்க கருதப்படுகிறது என்பது சிறப்புச் செய்தி.



எடுத்துக்காட்டாக, இசுலாமியா தாக்கத்தின் பின்பும் இந்தோனேசியா, பாலித்தீவுகளில் மஞ்சள் கலந்த அரிசி புனிதமாகக் கருதப்படுகிறது. குறிப்பிட்ட சடங்குகளில் நாசி குளிர் என்னும் இந்தக் கலவை வழங்கப்படுகிறது என்பது சிறப்புச் செய்தி.



உணவிலும் இந்தியாவிலும் தெற்காசியாவில் மஞ்சளின் பயன்பாடு மிகுதி. இந்தியாவில் மஞ்சள் உலரவைத்து, இடித்து, பொடித்து மஞ்சள் பொடியாக பலரால் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தெற்காசியாவில் மஞ்சள் கிழங்கு அப்படியே கறி சமைக்கப்படுகிறது. சுமத்திரா இந்தோனேஷியாப் பகுதிகளில் மஞ்சளின் தழை நிறம்-மணம் சேர்க்க உணவில் பயன்படுத்தப் படுகிறது.



வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் வரும் வெகு பிரபலமான வசனம் எல்லோருக்கும் நினைவிலிருக்கும். வரிகேட்டு வரும் ஆங்கிலேய அதிகாரியிடம் ஆத்திரத்துடன் “நாற்று நாட்டாயா; களைபறித்தாயா” என்பதோடு “எம் பெண்டிருக்கு மஞ்சள் அதைத்துக் கொடுத்தாயா” எனக் கொதித்து முழங்கும் சிவாஜியின் வசனம் நம் காதுகளில் ரீங்காரமிடும். மஞ்சள் பூசுவது என்பது தமிழகம் மட்டுமல்ல உலகின் பல பண்பாடுகளில் உள்ள பழக்கம். மஞ்சள் உடலின் மீது சற்றே படிந்து பளபளப்புத் தரும்.



முகத்திற்குப் பொலிவூட்டமாய் மாறி ஆடைகளுக்கு நிறம் தரும் சாயம் தயாரிக்கவும் மஞ்சள் காலம் காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆரஞ்சு-சிவப்பு நிறம் தயாரிக்க; மஞ்சளுடன் தன்டிகோ சேர்த்து பொலிவான பச்சை நிறம் தயாரிக்க மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. பல சாயங்களை ஆடையில் படிந்து பிடித்துக் கொள்ள நிறமேற்றிகள் தேவை. ஆனால் மஞ்சள் நிறச் சாயம் சேர்க்க நிறமேற்றி தேவையில்ல. மஞ்சள் மூலம் ஏற்றப்படும் நிறம் பெருகாலம் தங்கி அமையாது. சூரிய ஒளியில் மஞ்சள் நிறம் தரும் வேதிப்பொருள்கள் சிதைத்து விடுவதால் மஞ்சள் மூலம் நிறமேற்றப்பட்ட ஆடைகள் வெகு விரைவில் அதன் ஆழமான நிறத்தை இழக்கும். ஆகவேதான் தினம் தினமும் மஞ்சள் பூசினாலும் முகம் மஞ்சள் கறை படிவதில்லை.



மஞ்சள் அறிவியல் பெயர் “குர்குமா லோங்கா” என்பதாகும். இதில் 100 இனம் மற்றும் 30 வகை உண்டு. விசிறி போன்ற தழை உடையது மஞ்சள். நீள்வட்ட வடிவில் ஒவ்வொரு தழையும் சுமார் 1-2 அடி நீறமாக சிறக்கும். செடி 3.5 அடி உயரம் வளரும். மண்ணிற்குள் அடித்தண்டாக - கிழங்காக மஞ்சள் இருக்கும்.



2-6 செ.மீ நீளமுடையது கிழங்கு. இச் செடியின் பூவும் மஞ்சள் நிறமுடையது. புனல் போன்ற தோற்றமுள்ளது இம்மலர்.



உலகின் மொத்த மஞ்சள் பயிரில் 80ரூ இந்தியாவில் உற்பத்தியாகிறது. சுமார் 1 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் மஞ்சள் பயிரிடப்படுகிறது. மஞ்சள் என்ற சொல்லே தமிழில் “மஞ்சள் நிறத்தை சுட்டுவதைப்போல “ஹல்கி” என்ற இந்திச்சொல், சில்வொர்டெர் என்ற டச்சுச்சொல் முதலியவும் மஞ்சள் செடி மற்றும் மஞ்சற் நிறம் இரண்டையும் குறிக்கிறது. அதுமட்டு மல்ல, டர்மரிச் என்ற ஆங்கில சொல் லத்தின் சொல்லான டொர்ரா மெனரட் அதாவது மஞ்சள் நிறம் தரும் மண் என்ற பொருள் நம் சொல்லிலிருந்து உருவானது ஆகும்.



மஞ்சளின் நிறத்தில் உள்ள குர்குமின்வகை வேதிப் பொருட்களின் விளைவே ஆகும். அது மட்டுமல்ல மஞ்சளின் காரச் சுவைக்கும் இந்த வேதிப்பொருளே காரணம். டரிமெரோன் வகை வேதிப்பொருட்கள் மற்றும் லிங்காபரின் வேதிப்பொருள் முதலியவை மஞ்சளின் மணத்திற்குக் காரணம்.



ஆர்த்தி கரைசல் மஞ்சளும் வெள்ளைச் சுண்ணாம்பும் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இரண்டும் கலந்ததும் கரைசல் இரத்தச் சிகப்பாக மாறுகிறது அல்லவா? சுண்ணாம்பு, காரப் பொருள் - ஆல்லி. அதுபோல அமிலம்- ஆசிடுனும் மஞ்சள் வினைவுரியும். ஆகவே மஞ்சள் வேதி சுட்டி – Chemical Indicater- ஆக பயன்படுத்தப்படுகிறது. PH 7.4-ல் மஞ்சளாக உள்ளது PH 8.6-க்கு மேல் சிவப்பாக மாறும்.



மேலும் குர்குமினாய்ட் வகை வேதிப்பொருட்கள் நுண்ணுயிர் கொல்லியாகவும் சீழ் எதிர்ப்பியாகவும் செயல் படுகிறது என நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பாரம்பரிய மருத்துவத்தில் வெட்டுப் புண்ணுக்கு மஞ்சள் பத்துபோடுவது. அம்மை தழும்பு ஏற்படாமல் தடுக்கப் பூசுவது போன்றவற்றில் மருத்துவ காரணி குர்குமினாய்டு வேதிப்பொருள்தான். மேலும் பாலுடன் மஞ்சள் சேர்த்து குடிப்பதன் வழி தொண்டைப் புண் ஆற்றுவது முதலிய பழக்கங்களையும் நவீன அறிவியல் உறுதிப்படுத்தியுள்ளது என்பது சிறப்பு.


Read more: http://www.manithil.in/2012/11/blog-post_10.html#ixzz2BtdyMScb


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மஞ்சள் மகிமை  Empty Re: மஞ்சள் மகிமை

Post by rammalar Sun 11 Nov 2012 - 11:26

இரண்டு முறை பதியப்பட்டுள்ளது..
ஒரு பதிவை அட்மின் நீக்கலாம்...
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25150
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum