Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்ததுby rammalar Today at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
தினம் ஒரு ஹதீஸ்
+8
Muthumohamed
நண்பன்
ahmad78
முனாஸ் சுலைமான்
ராகவா
பானுஷபானா
ansar hayath
*சம்ஸ்
12 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 17 of 18
Page 17 of 18 • 1 ... 10 ... 16, 17, 18
தினம் ஒரு ஹதீஸ்
First topic message reminder :
தினம் ஒரு ஹதீஸ்
நபி (ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒரு போதும் குறை சொன்னதில்லை. பிடித்தால் அதை உண்பார்கள். பிடிக்காவிட்டால் அதை (உண்ணாமல்) விட்டுவிடுவார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 5409
நன்றி தினம் ஒரு ஹதீஸ்
தினம் ஒரு ஹதீஸ்
நபி (ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒரு போதும் குறை சொன்னதில்லை. பிடித்தால் அதை உண்பார்கள். பிடிக்காவிட்டால் அதை (உண்ணாமல்) விட்டுவிடுவார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 5409
நன்றி தினம் ஒரு ஹதீஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தினம் ஒரு ஹதீஸ்
தரையில் இழுப்படுமாறு அணிவதின் தண்டனை
நபி (ஸல்) அவர்கள் '' யார் தனது ஆடையைப் பெருமையுடன் (தரையில் படும்படி) இழுத்துக் கொண்டு செல்கின்றாரோ அவரை அல்லாஹ் மறுமையில் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்.'' என்று கூறினார்கள். அபூபக்ர் (ரலி) ''அல்லாஹ்வின் தூதரே! நான் கவனமாக இல்லாவிட்டால் எனது கீழங்கியின் இருபக்கங்களில் ஒன்று கீழே சரிந்து விடுகின்றது'' என்று சொன்னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள்'' நீங்கள் தற்பெருமையுடன் அப்படிச் செய்பவர் அல்லர்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல் : புகாரி (5784)
நபி (ஸல்) அவர்கள் '' யார் தனது ஆடையைப் பெருமையுடன் (தரையில் படும்படி) இழுத்துக் கொண்டு செல்கின்றாரோ அவரை அல்லாஹ் மறுமையில் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்.'' என்று கூறினார்கள். அபூபக்ர் (ரலி) ''அல்லாஹ்வின் தூதரே! நான் கவனமாக இல்லாவிட்டால் எனது கீழங்கியின் இருபக்கங்களில் ஒன்று கீழே சரிந்து விடுகின்றது'' என்று சொன்னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள்'' நீங்கள் தற்பெருமையுடன் அப்படிச் செய்பவர் அல்லர்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல் : புகாரி (5784)
Re: தினம் ஒரு ஹதீஸ்
நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்: -
“எவரின் நாவாலும், கைகளாலும் முஸ்லிம்கள் பாதுகாப்புடன் இருக்கின்றாரோ அவரே உண்மையான முஸ்லிம் ஆவார். அறிவிப்பவர்: அப்துல்லா பின் அம்ர் (ரழி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவுத்.
“எவர் தமது இரண்டு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும், இரண்டு தொடைகளுக்கு மத்தியிலுள்ளதையும் சரியாக பயன்படுத்த பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ அவருக்கு சொர்க்கத்திற்க்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(நூல்-புகாரி)
மேலும் நாம் அமர்திருக்கின்ற ஒரு சபையில் நம்முடைய சகோதர, சகோதரியைப் பற்றிப் புறம் பேசப்படுமானால், நாமும் அவர்களுடன் சேர்ந்து அந்தப் பாவத்தில் சிக்கி உழலாமல் எந்த சகோதர, சகோதரியைப் பற்றிப் பேசப்படுகிறதோ அவருடைய கண்ணியத்தைக் காப்பாற்ற முயற்சிக்க வேண்டும்! இதை நபி (ஸல்) அவர்களும் வரவேற்றுள்ளார்கள்.
“எவரின் நாவாலும், கைகளாலும் முஸ்லிம்கள் பாதுகாப்புடன் இருக்கின்றாரோ அவரே உண்மையான முஸ்லிம் ஆவார். அறிவிப்பவர்: அப்துல்லா பின் அம்ர் (ரழி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவுத்.
“எவர் தமது இரண்டு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும், இரண்டு தொடைகளுக்கு மத்தியிலுள்ளதையும் சரியாக பயன்படுத்த பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ அவருக்கு சொர்க்கத்திற்க்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(நூல்-புகாரி)
மேலும் நாம் அமர்திருக்கின்ற ஒரு சபையில் நம்முடைய சகோதர, சகோதரியைப் பற்றிப் புறம் பேசப்படுமானால், நாமும் அவர்களுடன் சேர்ந்து அந்தப் பாவத்தில் சிக்கி உழலாமல் எந்த சகோதர, சகோதரியைப் பற்றிப் பேசப்படுகிறதோ அவருடைய கண்ணியத்தைக் காப்பாற்ற முயற்சிக்க வேண்டும்! இதை நபி (ஸல்) அவர்களும் வரவேற்றுள்ளார்கள்.
Re: தினம் ஒரு ஹதீஸ்
நட்பு...
நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும். கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து உமக்கு ஏதும் கிடைக்காமல போகாது. நீர் அதை விலைக்கு வாங்கலாம். அல்லது அதன் நறுமணத்தையாவது பெற்றுக் கொள்ளலாம். கொல்லனின் உலை உமது வீட்டையோ அல்லது உனது ஆடையையோ எரித்துவிடும். அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக் கொள்வீர்.
அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி)
நூல் : புகாரி (2101)
நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும். கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து உமக்கு ஏதும் கிடைக்காமல போகாது. நீர் அதை விலைக்கு வாங்கலாம். அல்லது அதன் நறுமணத்தையாவது பெற்றுக் கொள்ளலாம். கொல்லனின் உலை உமது வீட்டையோ அல்லது உனது ஆடையையோ எரித்துவிடும். அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக் கொள்வீர்.
அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி)
நூல் : புகாரி (2101)
Re: தினம் ஒரு ஹதீஸ்
கஞ்சத்தனம் செய்பவர்களின் நிலை:
ஏக இறைவன் செல்வத்தின் மூலமும் நம்மைச் சோதிப்பான்.
எனவே செல்வந்தர்களாக இருப்பவர்கள் தங்களது
செல்வத்தில் இருந்து கொஞ்சமாவது ஏழை
எளியவர்களுக்குக் கொடுத்து உதவ வேண்டும். ஒருபோதும்
கஞ்சத்தனம் கொண்டவர்களாக இருக்கக் கூடாது.
இதற்கு நேர்மாற்றமாகவே பெரும்பாலான மக்கள்
இருக்கிறார்கள். தீமையான வீணான காரியங்களுக்கு
செலவு செய்யத் தயாராக இருப்பவர்கள் நல்ல
காரியங்களுக்குச் செலவு செய்ய கஞ்சத்தனம்
காட்டுகிறார்கள். இத்தகைய மக்கள் மறுமை நாளிலே
மற்றவர்கள் கண் முன்னால் தங்களது செல்வத்தின்
மூலம் கழுத்து நெறிக்கப்படுவார்கள். கருமியாக
இருந்தது எந்தளவிற்குக் குற்றம் என்று உணரும் விதத்தில்
நடத்தப்படுவார்கள்.
அல்லாஹ் தமக்கு வழங்கிய அருளில் கஞ்சத்தனம்
செய்வோர், "அது தங்களுக்குச் சிறந்தது' என்று எண்ண
வேண்டாம். மாறாக அது அவர்களுக்குத் தீயது. அவர்கள்
எதில் கஞ்சத்தனம் செய்தார்களோ அதன் மூலம்
கியாமத் நாளில் கழுத்து நெரிக்கப்படுவார்கள்.
வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்குரியது.
நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்.
(அல்குர்ஆன் 3:180)
ஏக இறைவன் செல்வத்தின் மூலமும் நம்மைச் சோதிப்பான்.
எனவே செல்வந்தர்களாக இருப்பவர்கள் தங்களது
செல்வத்தில் இருந்து கொஞ்சமாவது ஏழை
எளியவர்களுக்குக் கொடுத்து உதவ வேண்டும். ஒருபோதும்
கஞ்சத்தனம் கொண்டவர்களாக இருக்கக் கூடாது.
இதற்கு நேர்மாற்றமாகவே பெரும்பாலான மக்கள்
இருக்கிறார்கள். தீமையான வீணான காரியங்களுக்கு
செலவு செய்யத் தயாராக இருப்பவர்கள் நல்ல
காரியங்களுக்குச் செலவு செய்ய கஞ்சத்தனம்
காட்டுகிறார்கள். இத்தகைய மக்கள் மறுமை நாளிலே
மற்றவர்கள் கண் முன்னால் தங்களது செல்வத்தின்
மூலம் கழுத்து நெறிக்கப்படுவார்கள். கருமியாக
இருந்தது எந்தளவிற்குக் குற்றம் என்று உணரும் விதத்தில்
நடத்தப்படுவார்கள்.
அல்லாஹ் தமக்கு வழங்கிய அருளில் கஞ்சத்தனம்
செய்வோர், "அது தங்களுக்குச் சிறந்தது' என்று எண்ண
வேண்டாம். மாறாக அது அவர்களுக்குத் தீயது. அவர்கள்
எதில் கஞ்சத்தனம் செய்தார்களோ அதன் மூலம்
கியாமத் நாளில் கழுத்து நெரிக்கப்படுவார்கள்.
வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்குரியது.
நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்.
(அல்குர்ஆன் 3:180)
Re: தினம் ஒரு ஹதீஸ்
அந்த நாள்..
நிச்சயமாக, நெருங்கி வரும் வேதனையைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம் - மனிதன் தன் இருகைகளும் செய்து முற்படுத்தியவறற்றை - அமல்களை - அந்நாளில் கண்டு கொள்வான் - மேலும் காஃபிர் ''அந்தோ கைசேதமே! நான் மணண்ணாகிப் போயிருக்க வேண்டுமே!'' என்று (பிரலாபித்துக்) கூறுவான். (அல்குர்ஆன் - 78:40)
அந்நாள் சத்தியமானது. ஆகவே, எவர் விரும்புகிறாரோ, அவர் தம் இறைவனிடம் தங்குமிடத்தை ஏற்படுத்திக் கொள்வாராக. (அல்குர்ஆன் - 78:39)
நிச்சயமாக, நெருங்கி வரும் வேதனையைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம் - மனிதன் தன் இருகைகளும் செய்து முற்படுத்தியவறற்றை - அமல்களை - அந்நாளில் கண்டு கொள்வான் - மேலும் காஃபிர் ''அந்தோ கைசேதமே! நான் மணண்ணாகிப் போயிருக்க வேண்டுமே!'' என்று (பிரலாபித்துக்) கூறுவான். (அல்குர்ஆன் - 78:40)
அந்நாள் சத்தியமானது. ஆகவே, எவர் விரும்புகிறாரோ, அவர் தம் இறைவனிடம் தங்குமிடத்தை ஏற்படுத்திக் கொள்வாராக. (அல்குர்ஆன் - 78:39)
Re: தினம் ஒரு ஹதீஸ்
முகஸ்துதிக்காக அமல் செய்தவர்கள் நிலை:
நாம் எந்தவொரு நற்காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் அதை அல்லாஹ்
அங்கீகரித்து அழகிய கூலியைத் தரவேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்பட வேண்டும். அதை
விடுத்து, அடுத்தவர் மெய்சிலிர்க்க வேண்டும்; பாராட்டிப் புகழ வேண்டும் என்ற நோக்கத்தோடு
அமல் செய்பவர்களாக நாம் இருக்கக்கூடாது. இவ்வாறு மற்றவர்களின்
கைத்தட்டல்களுக்காக செயல்படுவர்களுக்கு அல்லாஹ் அதற்குரிய நற்கூலியைத்
தரமாட்டான். மேலும் இவர்களை மறுமை நாளில் மற்ற மக்களுக்கு மத்தியில் அல்லாஹ்
அடையாளப்படுத்துவான். மஹ்ஷரில் நம்பிக்கை கொண்ட மக்கள் படைத்தவனுக்கு
ஸஜ்தா செய்யும் போது இவர்களால் மட்டும் ஸஜ்தா செய்ய முடியாது.
இவர்களின் முதுகுகள் கட்டை போன்று மாற்றப்பட்டுவிடும். இதற்குரிய ஆதாரத்தைக் காண்போம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம் இறைவன் (காட்சியளிப்பதற்காகத்) திரையை அகற்றித் தன்
காலை வௌிப்படுத்தும் அந்த (மறுமை) நாளில், இறைநம்பிக்கையுள்ள ஒவ்வோர் ஆணும்,
இறைநம்பிக்கையுள்ள ஒவ்வொரு பெண்ணும் அவனுக்கு முன்னால் சிர வணக்கம்
(சஜ்தா) செய்வார்கள். முகஸ்துதிக்காகவும், மக்களின் பாராட்டைப்
பெறுவதற்காகவும் இவ்வுலகில் (தொழுது) சஜ்தா செய்து வந்தவர்கள்
மட்டுமே எஞ்சியிருப்பர். அப்போது அவர்கள் சஜ்தா செய்ய முற்படுவார்கள். (ஆனால்,)
அவர்களது முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே கட்டையைப் போல் மாறிவிடும்.
அறிவிப்பவர்: அபூசயீத் (ரலி),
நூல்: புகாரி 4919
நாம் எந்தவொரு நற்காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் அதை அல்லாஹ்
அங்கீகரித்து அழகிய கூலியைத் தரவேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்பட வேண்டும். அதை
விடுத்து, அடுத்தவர் மெய்சிலிர்க்க வேண்டும்; பாராட்டிப் புகழ வேண்டும் என்ற நோக்கத்தோடு
அமல் செய்பவர்களாக நாம் இருக்கக்கூடாது. இவ்வாறு மற்றவர்களின்
கைத்தட்டல்களுக்காக செயல்படுவர்களுக்கு அல்லாஹ் அதற்குரிய நற்கூலியைத்
தரமாட்டான். மேலும் இவர்களை மறுமை நாளில் மற்ற மக்களுக்கு மத்தியில் அல்லாஹ்
அடையாளப்படுத்துவான். மஹ்ஷரில் நம்பிக்கை கொண்ட மக்கள் படைத்தவனுக்கு
ஸஜ்தா செய்யும் போது இவர்களால் மட்டும் ஸஜ்தா செய்ய முடியாது.
இவர்களின் முதுகுகள் கட்டை போன்று மாற்றப்பட்டுவிடும். இதற்குரிய ஆதாரத்தைக் காண்போம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம் இறைவன் (காட்சியளிப்பதற்காகத்) திரையை அகற்றித் தன்
காலை வௌிப்படுத்தும் அந்த (மறுமை) நாளில், இறைநம்பிக்கையுள்ள ஒவ்வோர் ஆணும்,
இறைநம்பிக்கையுள்ள ஒவ்வொரு பெண்ணும் அவனுக்கு முன்னால் சிர வணக்கம்
(சஜ்தா) செய்வார்கள். முகஸ்துதிக்காகவும், மக்களின் பாராட்டைப்
பெறுவதற்காகவும் இவ்வுலகில் (தொழுது) சஜ்தா செய்து வந்தவர்கள்
மட்டுமே எஞ்சியிருப்பர். அப்போது அவர்கள் சஜ்தா செய்ய முற்படுவார்கள். (ஆனால்,)
அவர்களது முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே கட்டையைப் போல் மாறிவிடும்.
அறிவிப்பவர்: அபூசயீத் (ரலி),
நூல்: புகாரி 4919
Re: தினம் ஒரு ஹதீஸ்
ஒரு நாள் வரும்...
வானத்திலிருந்து பூமி வரையிலுமுள்ள காரியத்தை அவனே ஒழுங்குபடுத்துகிறான்; ஒரு நாள் (ஒவ்வொரு காரியமும்) அவனிடமே மேலேறிச் செல்லும், அந்த (நாளின்) அளவு நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும். (அல்குர்ஆன் - 32:5)
அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள். மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும். ( அல்குர்ஆன் - 101:4-5)
அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும். அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும். (அல்குர்ஆன் - 88:2-3)
வானத்திலிருந்து பூமி வரையிலுமுள்ள காரியத்தை அவனே ஒழுங்குபடுத்துகிறான்; ஒரு நாள் (ஒவ்வொரு காரியமும்) அவனிடமே மேலேறிச் செல்லும், அந்த (நாளின்) அளவு நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும். (அல்குர்ஆன் - 32:5)
அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள். மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும். ( அல்குர்ஆன் - 101:4-5)
அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும். அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும். (அல்குர்ஆன் - 88:2-3)
Re: தினம் ஒரு ஹதீஸ்
அதே நாளில்...
ஆனால் அந்நாளில் (அல்லாஹ் செய்யும்) வேதனையைப் போல், வேறு எவனும் வேதனை செய்யமாட்டான். ( அல்குர்ஆன் - 89:25)
இரகசியங்கள் யாவும் வெளிப்பட்டுவிடும் அந்நாளில். (அல்குர்ஆன் - 86:9)
அகிலத்தாரின் இறைவன் முன் மனிதர்கள் நிற்கும் நாள். ( அல்குர்ஆன் - 83:6)
அந்நாளில் ஓர் அத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு எதுவும் செய்ய சக்தி பெறாது, அதிகாரம் முழுவதும் அன்று அல்லாஹ்வுக்கே. (அல்குர்ஆன் - 82:19)
ஆனால் அந்நாளில் (அல்லாஹ் செய்யும்) வேதனையைப் போல், வேறு எவனும் வேதனை செய்யமாட்டான். ( அல்குர்ஆன் - 89:25)
இரகசியங்கள் யாவும் வெளிப்பட்டுவிடும் அந்நாளில். (அல்குர்ஆன் - 86:9)
அகிலத்தாரின் இறைவன் முன் மனிதர்கள் நிற்கும் நாள். ( அல்குர்ஆன் - 83:6)
அந்நாளில் ஓர் அத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு எதுவும் செய்ய சக்தி பெறாது, அதிகாரம் முழுவதும் அன்று அல்லாஹ்வுக்கே. (அல்குர்ஆன் - 82:19)
Re: தினம் ஒரு ஹதீஸ்
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ் மறுமை நாளில் எனக்காக நேசம் வைத்துக் கொண்டவர்கள் எங்கே? என்னுடைய நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத இந்நாளில் நான் அவர்களுக்கு எனது நிழலைத் தருகிறேன் என்று கூறுவான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் (4655)
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் (4655)
Re: தினம் ஒரு ஹதீஸ்
நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள் புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 9:71)
Re: தினம் ஒரு ஹதீஸ்
ஒருவர் பள்ளி வாசலில் தொழுவதற்காக போனதும் அமர்வதற்கு முன் காணிக்கை தொழுகையாக இரண்டு ரக்ஆத்துக்கள் தொழ வேண்டும் .
நபி(ஸல்) அவர்கள் அறிவிகிறார்கள் : உங்களில் ஒருவர் மஸ்ஜிதுக்குள் நுழைந்தால் உடன் இரண்டு ரக்ஆத்துக்கள் அமர்வதற்கு முன் தொழுது கொள்ளட்டும் (ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்) .
உங்கள் அனேவர் மீது இறைவனின் சாந்திவும் சமதானமும் என்றென்றும் உண்டாவதாக!!
நபி(ஸல்) அவர்கள் அறிவிகிறார்கள் : உங்களில் ஒருவர் மஸ்ஜிதுக்குள் நுழைந்தால் உடன் இரண்டு ரக்ஆத்துக்கள் அமர்வதற்கு முன் தொழுது கொள்ளட்டும் (ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்) .
உங்கள் அனேவர் மீது இறைவனின் சாந்திவும் சமதானமும் என்றென்றும் உண்டாவதாக!!
Re: தினம் ஒரு ஹதீஸ்
நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்: -
“எவரின் நாவாலும், கைகளாலும் முஸ்லிம்கள் பாதுகாப்புடன் இருக்கின்றாரோ அவரே உண்மையான முஸ்லிம் ஆவார். அறிவிப்பவர்: அப்துல்லா பின் அம்ர் (ரழி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவுத்.
“எவர் தமது இரண்டு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும், இரண்டு தொடைகளுக்கு மத்தியிலுள்ளதையும் சரியாக பயன்படுத்த பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ அவருக்கு சொர்க்கத்திற்க்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(நூல்-புகாரி)
மேலும் நாம் அமர்திருக்கின்ற ஒரு சபையில் நம்முடைய சகோதர, சகோதரியைப் பற்றிப் புறம் பேசப்படுமானால், நாமும் அவர்களுடன் சேர்ந்து அந்தப் பாவத்தில் சிக்கி உழலாமல் எந்த சகோதர, சகோதரியைப் பற்றிப் பேசப்படுகிறதோ அவருடைய கண்ணியத்தைக் காப்பாற்ற முயற்சிக்க வேண்டும்! இதை நபி (ஸல்) அவர்களும் வரவேற்றுள்ளார்கள்.
“எவரின் நாவாலும், கைகளாலும் முஸ்லிம்கள் பாதுகாப்புடன் இருக்கின்றாரோ அவரே உண்மையான முஸ்லிம் ஆவார். அறிவிப்பவர்: அப்துல்லா பின் அம்ர் (ரழி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவுத்.
“எவர் தமது இரண்டு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும், இரண்டு தொடைகளுக்கு மத்தியிலுள்ளதையும் சரியாக பயன்படுத்த பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ அவருக்கு சொர்க்கத்திற்க்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(நூல்-புகாரி)
மேலும் நாம் அமர்திருக்கின்ற ஒரு சபையில் நம்முடைய சகோதர, சகோதரியைப் பற்றிப் புறம் பேசப்படுமானால், நாமும் அவர்களுடன் சேர்ந்து அந்தப் பாவத்தில் சிக்கி உழலாமல் எந்த சகோதர, சகோதரியைப் பற்றிப் பேசப்படுகிறதோ அவருடைய கண்ணியத்தைக் காப்பாற்ற முயற்சிக்க வேண்டும்! இதை நபி (ஸல்) அவர்களும் வரவேற்றுள்ளார்கள்.
Re: தினம் ஒரு ஹதீஸ்
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
"திண்ணமாக... இரும்பில் தண்ணீர் பட்டால், அது துருபிடிப்பதை போன்று உள்ளங்கள் துருப்பிடிக்கின்றன.
அதற்கு தோழர்கள் கேட்டார்கள்:-
"இறைத் தூதரே..! அப்படியானால், பிறகு உள்ளங்களை சுத்தப்படுத்துவது எது..?
நபியவர்கள் விடையளித்தார்கள்:-
"மரணத்தை அதிகம் நினைப்பதும், திருக்குர்ஆனை ஓதுவதும் (படித்து விளங்குவது)."
அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரலி)
ஆதாரம்: பைஹகி, மிஷ்காத்.
"திண்ணமாக... இரும்பில் தண்ணீர் பட்டால், அது துருபிடிப்பதை போன்று உள்ளங்கள் துருப்பிடிக்கின்றன.
அதற்கு தோழர்கள் கேட்டார்கள்:-
"இறைத் தூதரே..! அப்படியானால், பிறகு உள்ளங்களை சுத்தப்படுத்துவது எது..?
நபியவர்கள் விடையளித்தார்கள்:-
"மரணத்தை அதிகம் நினைப்பதும், திருக்குர்ஆனை ஓதுவதும் (படித்து விளங்குவது)."
அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரலி)
ஆதாரம்: பைஹகி, மிஷ்காத்.
Re: தினம் ஒரு ஹதீஸ்
பெரும்பாலானோர் உணவு முறையில் மட்டும்
ஹலால், ஹராம் பார்ப்பதுண்டு.....
உணவு முறையில் மட்டுமின்றி,
வியாபாரத்தில், தொழிலில், வாழ்க்கை முறையில்
மற்றும் தினம் ஏற்படும் ஒவ்வொரு நிகழ்வுகளிலும்
"ஹலால்", "ஹராம்" இரண்டையும் பார்த்து,
ஏற்றுக்கொள்ள கூடியதை ஏற்றுக்கொண்டு.....
தடை செய்யப்பட்டதை விட்டு விலகி,
தவிர்க்க வேண்டியவற்றை தவிர்த்து
வாழ்க்கையை சிறப்பாக்கி கொள்ளுங்கள்...
ஹலால் = ஏற்றுக்கொள்ளக்கூடியது.
ஹராம் = தடை செய்யப்பட்டது, தவிர்க்க வேண்டியது.
ஹலால், ஹராம் பார்ப்பதுண்டு.....
உணவு முறையில் மட்டுமின்றி,
வியாபாரத்தில், தொழிலில், வாழ்க்கை முறையில்
மற்றும் தினம் ஏற்படும் ஒவ்வொரு நிகழ்வுகளிலும்
"ஹலால்", "ஹராம்" இரண்டையும் பார்த்து,
ஏற்றுக்கொள்ள கூடியதை ஏற்றுக்கொண்டு.....
தடை செய்யப்பட்டதை விட்டு விலகி,
தவிர்க்க வேண்டியவற்றை தவிர்த்து
வாழ்க்கையை சிறப்பாக்கி கொள்ளுங்கள்...
ஹலால் = ஏற்றுக்கொள்ளக்கூடியது.
ஹராம் = தடை செய்யப்பட்டது, தவிர்க்க வேண்டியது.
Re: தினம் ஒரு ஹதீஸ்
"என் சமுதாயத்திற்கு
சிரமமாகிவிடும் என்று இல்லாவிட்டால்
ஒவ்வொரு தொழுகைக்கும் பல் துலக்குமாறு
நான் கட்டளையிட்டிருப்பேன்."
என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்:-புஹாரி, Volume :1 Book :11.887.
சிரமமாகிவிடும் என்று இல்லாவிட்டால்
ஒவ்வொரு தொழுகைக்கும் பல் துலக்குமாறு
நான் கட்டளையிட்டிருப்பேன்."
என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்:-புஹாரி, Volume :1 Book :11.887.
Re: தினம் ஒரு ஹதீஸ்
:”@: :”@:Muthumohamed wrote:"என் சமுதாயத்திற்கு
சிரமமாகிவிடும் என்று இல்லாவிட்டால்
ஒவ்வொரு தொழுகைக்கும் பல் துலக்குமாறு
நான் கட்டளையிட்டிருப்பேன்."
என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்:-புஹாரி, Volume :1 Book :11.887.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தினம் ஒரு ஹதீஸ்
பணிவுக்கு 3 அல்குர்ஆன் வசனங்கள்
25:63. இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்; மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால் “ஸலாம்” (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள்.
25:72. அன்றியும், அவர்கள் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள்; மேலும், அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்றுவிடுவார்கள்.
31:19. “உன் நடையில் (மிக வேகமோ, அதிக சாவதானமோ இல்லாமல்) நடுத்தரத்தை மேற்கொள்; உன் குரலையும் தாழ்த்திக் கொள்; குரல்களிலெல்லாம் வெறுக்கத்தக்கது நிச்சயமாக கழுதையின் குரலேயாகும்.
25:63. இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்; மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால் “ஸலாம்” (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள்.
25:72. அன்றியும், அவர்கள் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள்; மேலும், அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்றுவிடுவார்கள்.
31:19. “உன் நடையில் (மிக வேகமோ, அதிக சாவதானமோ இல்லாமல்) நடுத்தரத்தை மேற்கொள்; உன் குரலையும் தாழ்த்திக் கொள்; குரல்களிலெல்லாம் வெறுக்கத்தக்கது நிச்சயமாக கழுதையின் குரலேயாகும்.
Re: தினம் ஒரு ஹதீஸ்
உள்ளத்துக்கு ஒளியூட்டி ஊக்குவிக்கும் குர்ஆன் வசனங்கள்
“என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் – நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் – நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்” (39:53)
“என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் – நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் – நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்” (39:53)
Re: தினம் ஒரு ஹதீஸ்
அல்லாஹ்வின் அருளைப் பற்றி நம்பிக்கை இழக்காதீர்கள். ஏனென்றால் நிச்சயமாக காஃபிர்களின் கூட்டத்தைத் தவிர (வேறுயாரும்) அல்லாஹ்வின் அருளைப்பற்றி நம்பிக்கை இழக்கமாட்டார்கள் (12:87)
நீங்கள் என்னை நினைவு கூறுங்கள்; நானும் உங்களை நினைவு கூறுவேன். இன்னும், நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள்; எனக்கு மாறு செய்யாதீர்கள். (2:152)
அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் கணிப்பீர்களாயின் அவற்றை நீங்கள் எண்ணி முடியாது! (14:34)
நீங்கள் என்னை நினைவு கூறுங்கள்; நானும் உங்களை நினைவு கூறுவேன். இன்னும், நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள்; எனக்கு மாறு செய்யாதீர்கள். (2:152)
அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் கணிப்பீர்களாயின் அவற்றை நீங்கள் எண்ணி முடியாது! (14:34)
Re: தினம் ஒரு ஹதீஸ்
முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள்; (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்! (3:200)
Re: தினம் ஒரு ஹதீஸ்
அவர்கள் (உங்களை விட்டு) விலகி விட்டால் (அவர்களை நோக்கி,) “எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை; அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் – அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி. (9:129)
Page 17 of 18 • 1 ... 10 ... 16, 17, 18
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 17 of 18
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|