சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46

» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

அறிவியல் உண்மைகள்... Khan11

அறிவியல் உண்மைகள்...

Go down

அறிவியல் உண்மைகள்... Empty அறிவியல் உண்மைகள்...

Post by நண்பன் Mon 31 Jan 2011 - 18:14

வீட்டோடு முழுநேரமாகத் தங்கிக்குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் தாதிகளைவிடப் பகுதி நேரமாக வந்து போகிற தாதிகளிடம் குழந்தைகள் அதிக ஆரோக்கியமாக வளர்வதாக கண்டறிந்துள்ளனர் ஆhஸ்திரேலியா ஆய்வாளர்கள். காரணம், பகுதிநேர தாதியர் முழு நேரத்தினரை விடக்குறைவான நேரமே குழந்தைகளைத் தொலைக்காட்சி பார்க்கவும், கண்ட கண்ட நொறுக்குத் தீனிகளைத் தின்னவும் அனுமதிப்பதுதானாம். பள்ளிப் பருவத்துக்கு முந்தைய 4500 குழந்தைகளைப் பலநாள் கண்காணித்து ஆய்வு செய்து அவர்கள் இதனை அறிந்து கூறியுள்ளனர்.

* வயாகரா என்றதும் முகம் சுளிக்காதீர்கள். அதுவொரு ஆண் தன்மையைக் கூட்டவல்ல பாலியல் ஊக்க மருந்துதான். என்றாலும், பல்வேறு உடல்குறைகளோடு பிறந்த ஒரு குழந்தையை அதுதான் இன்னும் வாழவைத்துக்கொண்டிருக்கிறது. அச்சிறுவன் பெயர் ஓவென் ப்ளூம்ஃபீல்டு. வயது மூன்றரை வாரம். அவன் பிறக்கும்போது வயிறு மார்பில் இருந்தது. இதயத்தில் ஓட்டை, நுரையீரலிலும் அரிதான ஒழுங்கற்ற குறைபாடு. அறுவை சிகிச்சை மூலம் அவற்றைச் சரி செய்தனர். இருப்பினும் நுரையீரல் கோளாறு நாளடைவில்தான் சரியாகுமாம். அதுவரையில் வயாகராவே துணை. அப்படிச் சரியாகாவிட்டால் ஆயுள் முழுவதும் வயாகராவேதான் கதி என்கின்றனர் மருத்துவ விஞ்ஞானிகள்.

* கடவுளிடமான நமது முறையீடுகளை ஒரு தாளில் எழுதி "வெஸ்டர்ஸ் வான்' மேற்குச் சுவரில் வைப்பது ஜெருசலேம் மக்களின் வழக்கம். அதிலும் இப்போது நவீன நெட்வொர்க் சேவை புகுந்துவிட்டது. இஸ்ரேல் பல்கலைக்கழக டெல்அவிவ் மாணவர் அஸோன்நிர் என்பவர் தனது கணினியில் www.twitter.com/thekotel என்ற பெயரிலான வலைத்தளம் ஒன்றைத் திறந்துள்ளார். அதற்கு வரும் கடவுளுக்கான கிறீச்சீடு அதாவது, டுவிட்டர் செய்திகளை அச்சிட்டு எடுத்துச் சென்று அனுப்புவோர் சார்பில் அவர் மேற்குச் சுவரில் வைக்கிறார். இதுவரையில் ஆயிரத்துக்கும் மேலான கிறீச்சீட்டு செய்திச் சுருள்களை அங்கு வைத்துவிட்டார். ஒரு கிறீச்சீடு 140 எழுத்துக்கள் வரையில்தான் இருக்கவேண்டுமாம்.

* தங்கமுலாம் பூசப்பட்ட நுண்ணிய சென்சார் ஒன்றை ஒருமுறை மனிதனின் செல்லுக்குள் பொருத்திவிட்டால் போதும் அது வெளிப்படுத்தும் லேசர் ஒளி செல்லின் நுண்ணறிவில் பாய்ந்து மீண்டும் வெளிப்படும். இந்த உள் வெளி அசைவு செல் புரோட்டீனில் ஏற்படுத்தும் அதிர்வைக் கொண்டு ஒருவருக்கு உள்ள நோயைக் கண்டறிவதோடு, அந்நோயின் வளர்ச்சி பற்றியும் கணிக்க முடியும் என்கிறார் அந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள கோலின் கேம்ப்பெல் என்ற பிரிட்டன் நாட்டு ஆராய்ச்சியாளர்.

அணுசக்தி ரியாக்டரிலிருந்து வெளிப்பட்டு ஆபத்தை ஏற்படுத்தும் கதிர்வீச்சை உள்ளுக்குள்ளேயே கட்டுப்படுத்தி, ஏதேனும் பழுதிருந்தால் தானாகவே சரி செய்து கொண்டு, பிற்பாடு வெளிப்பரவலை ஏற்படுத்தும் பொருள் ஒன்றைக் கண்டறிந்துள்ளனர். (இது பற்றி இதற்கு முன்பு அறிந்திராத) அமெரிக்க அணு விஞ்ஞானிகள். இனி புதிதாக அமைக்கப்படும் அணுமின் நிலைங்கள் அமைக்க இந்தப் பாதுகாப்பான புதிய தலைமுறைக் கதிர்வீச்சுக் கட்டுப்பாட்டுப் பொருள் உதவும் என்கின்றனர் அவர்கள்.

* பிராணிகள் தாவரத்தை உண்ணும். ஆனால் பிராணியை உண்ணும் தாவரம் ஒன்றைக் கண்டறிந்துள்ளனர். பிரிட்டன் விஞ்ஞானிகள். பெரிய கூஜா வடிவப் புதர்ச்செடியின் அகலமான, உள்ளிறங்கும் வாய்போன்ற உறுப்பு உட்புறம் வழுவழுப்பாக இருப்பதால் அங்கு வந்து அமரம் எலி போன்ற சிறு பிராணிகள் வழுக்கிக்கொண்டு தாவரத்தினுள் சென்று விடுகின்றன. உடனே, அங்கு சுரக்கும் திரவ என்சைம் எலியை ஜீரணித்து விடும். இவ்வகைச் செடியை பிலிப்பைன்ஸ் நாட்டில் விக்டோரியா மலைப் பிரதேசத்தில் கண்டுபிடித்துள்ளனர். அத்தாவரத்துக்கு வனஉயிர் இனங்கள் பற்றிய ஒலிபரப்பில் ஈடுபட்டுப் புகழ் பெற்றவரான டேவிட் ஆட்டன் பர்ரோக் என்பவரின் இந்தப் பெயரைச் சூட்டியுள்ளனர்.

* தினமும் ஒரு ஆப்பிள் தின்றால் டாக்டருக்கு வேலையில்லை என்பார்கள். இப்போது அப்பழக்கம் இருந்தால் பெருங்குடல் புற்றுநோய் வரும் வாய்ப்பு மிகமிகக்குறைவு என்கின்றனர் பிரிட்டன் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். மற்ற பழங்கள் உண்பவர்களுக்கு இத்தகைய பலன் இருப்பதில்லையாம். அதற்குக் காரணம் ஆப்பிள் பழத்தோலில் அதிகமாக காணப்படும் ஆண்டி ஆக்ஸிடெண்ட் என்கிறார்கள். ஆப்பிள் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. அதைவிட நல்லது தோலைச்சீவி எறியாமல் தொடர்ந்து தினசரி தோலோடு சாப்பிடுவது. அது பெருங்குடல் புற்றுநோய் அபாயத்திலிருந்து நம்மைக் காப்பாற்றும்.

ஜய்ராம்ஜி
மஞ்சரி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum