Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Yesterday at 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
கருத்தரிப்பு...
Page 1 of 1
கருத்தரிப்பு...
கருத்தரிப்பு
என்பது, பாலூட்டிகளில் , கருக்கட்டல் நிகழ்வின்போது உருவாகும் ஒன்று
அல்லது அதற்கு மேற்பட்ட அடுத்த சந்ததிக்கான உயிரி, முளைய விருத்தி மூலம்
முளையமாக விருத்தியடைந்து, பின்னர் முதிர்கரு நிலையில் குழந்தைபிறப்புவரை ,
பெண்களின் இனப்பெருக்க உறுப்பான கருப்பையில் பதிந்து, தாங்கிக்
கொள்ளப்படும் நிலையாகும். இந்தக் கட்டுரையில் மனிதரில் நிகழும்
கருத்தரிப்பே விரிவாக ஆராயப்படுகின்றது.
மனிதரில் , பருவமடைந்த
ஆரோக்கியமான பெண்களுக்கு தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் சினை முட்டைகள்
உற்பத்தியாகும். அந்த கருமுட்டைகள் கருக்கட்டத் தேவையான ஆணினது விந்து
கிடைக்கப்பெறாத சந்தர்ப்பத்தில் அம்முட்டைகளுடன் கருவறை சுவர்களும்
சுத்திகரிக்கப்பட்டு கழிவுகளாக வெளியேற்றப்படும். இச்செயற்பாடே மாதவிடாய்
எனப்படுகிறது. மாறாக ஆண் பெண் கலவியினால் சினை முட்டையுடன் ஆணின் விந்து
இணையுமாயின் அங்கு கருத்தரிப்பு இடம்பெறுகிறது. ஆண் பெண் கலவியற்ற செயற்கை
முறையாலும், அதாவது வெளிச் சோதனை முறை கருக்கட்டல் அல்லது செயற்கை
விந்தூட்டல் மூலமும் பெண் கருத்தரிக்க முடியும்.
கருக்கட்டல்
நிகழுமாயின் கருப்பையில் புதிய கருவணு தங்கியதும், வளரூக்கி செயற்பாடுகளில்
ஏற்படும் மாற்றங்கள் காரணமாக மாதவிடாய் ஏற்படல் தற்காலிகமாகத் தடைப்படும்.
பெண்களில் கருக்கட்டல் நிகழ்ந்து 38 கிழமைகளில் பொதுவாக குழந்தை பிறப்பு
நிகழும். மாதவிடாயானது 28 நாட்களுக்கு ஒருமுறை நிகழும். இறுதி மாதவிடாய்
ஏற்பட்டு 14 நாட்களில் புதிய கருமுட்டை சூலகத்தில் இருந்து வெளிவரும். இது
ஒழுங்காக நிகழும் பெண்களில், இறுதி மாதவிடாய்ஆரம்பித்த நாளில் இருந்து 40
கிழமைகளில் குழந்தை பிறப்பு நிகழும். இந்தக் காலமே கருக்காலம் அல்லது
கருத்தரிப்புக் காலம் எனக் கணக்கிடப்படுகின்றது.
கருத்தரிப்பு நிகழ்வின் ஆரம்பம்:
மனிதரில் கருக்கட்டலும் , அதன் பின்னர் கருப்பையில் கரு பதிதலும்.
ஒவ்வொரு
மாதமும் ஒரு பெண்ணின் சூல்முட்டை வெடித்து வெளிவருகிறது. வெளி வந்து ஒரு
நாள் அது உயிரோடு இருக்கும். அக்காலத்தில் ஆணும் பெண்ணும் கலவியில்
ஈடுபட்டால், ஆணின் விந்துக்கள் பெண்ணின் இனப்பெருக்க உறுப்பினூடாக நீந்தி
கருமுட்டையைச் சென்றடைகின்றன. கலவியின்போது பெண்ணின் இனப்பெருக்க
உறுப்பினுள் உட்புகும் விந்தானது, யோனி , அதைத் தொடர்ந்து கருப்பை வாய் ,
கருப்பை வழியாக நீந்திச் சென்று பாலோப்பியன் குழாயை அடையும். அதேவேளை
சூலகத்தில் இருந்து வெளியேறும் முட்டையும் பாலோப்பியன் குழாயை அடையுமாயின்,
விந்தானது அங்கே கருமுட்டையுடன் இணையும். அந்த விந்துக்களில் ஏதாவது ஒன்று
சூல்முட்டைக்குள் உள்புகுந்தால் கருக்கட்டல் நிகழ்ந்து கருத்தரிக்கும்.
ஒரு விந்து சூல்முட்டைக்குள் போன பின்னர், வேறு விந்துக்கள் அந்த
முட்டைக்குள் உள்ளே போக முடியாது.
வெளியேறும் விந்தானது உடனேயே
கருக்கட்டக் கூடிய இயல்பை முழுமையாகக் கொண்டிருப்பதில்லை . அவை நீந்திச்
செல்லும்போது, பல மணித்தியாலங்களுக்கு அவற்றில் நிகழும் சில மாற்றங்களே,
அவற்றைக் கருக்கட்டலுக்குத் தயார்ப்படுத்துகின்றன.
கருக்கட்டலின்போது
ஒருமடிய விந்தும், ஒருமடிய கருமுட்டையும் இணைந்து இருமடிய நிலையிலுள்ள
கருவணுவை உருவாக்குகின்றது.கருவணுவானது பின்னர் கருப்பை நோக்கி நகர
ஆரம்பிக்கும். அது கருப்பையை வந்தடைய 4-7 நாட்கள் எடுக்கும். அதேவேளை
கருவணு தொடர்ந்து பல மாற்றங்களுக்கு உட்படும்.
ஆனாலும் கலவி
நிகழாமலேயே செயற்கை விந்தூட்டல், வெளிச் சோதனை முறை கருக்கட்டல் போன்ற
முறைகள் மூலம் கருத்தரிப்பு நிகழும் வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பொதுவாக இம்முறைகள் ஏதாவது காரணங்களால் மலட்டுத்தன்மை இருக்கும் நிலையில்
மேற்கொள்ளப்படும்.
செயற்கை விந்தூட்டல் மூலம் சூல்முட்டை வெளிவரும்
காலத்தில் விந்து பெண்ணின் இனப்பெருக்க உறுப்பினுள் உட்செலுத்தப்படுவதன்
மூலம், கருக்கட்டல் நிகழ்வதற்கான சந்தர்ப்பம் அளிக்கப்படும். அங்கே
கருக்கட்டல் வெற்றிகரமாக நிகழுமாயின் கருத்தரிப்பு நிகழும்.
வெளிச்
சோதனை முறை கருக்கட்டல் ஆயின், வெளிவரும் முட்டைகள் பெண்ணின் உடலில்
இருந்து வெளியே எடுக்கப்பட்டு, வெளிச் சூழலில், அதாவது பரிசோதனைக்
கூடத்தில், விந்துடன் கலக்கப்படும்போது, கருக்கட்டல் வெற்றிகரமாக
நிகழுமாயின், கருக்கட்டப்பட்ட கருவணு அல்லது, முளைய விருத்திக்கு உட்படும்
முளையம் மீண்டும்பெண்ணின் இனப்பெருக்க உறுப்பினுள் வைக்கப்பட்டு,
கருத்தரிப்பு நிகழும்.
என்பது, பாலூட்டிகளில் , கருக்கட்டல் நிகழ்வின்போது உருவாகும் ஒன்று
அல்லது அதற்கு மேற்பட்ட அடுத்த சந்ததிக்கான உயிரி, முளைய விருத்தி மூலம்
முளையமாக விருத்தியடைந்து, பின்னர் முதிர்கரு நிலையில் குழந்தைபிறப்புவரை ,
பெண்களின் இனப்பெருக்க உறுப்பான கருப்பையில் பதிந்து, தாங்கிக்
கொள்ளப்படும் நிலையாகும். இந்தக் கட்டுரையில் மனிதரில் நிகழும்
கருத்தரிப்பே விரிவாக ஆராயப்படுகின்றது.
மனிதரில் , பருவமடைந்த
ஆரோக்கியமான பெண்களுக்கு தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் சினை முட்டைகள்
உற்பத்தியாகும். அந்த கருமுட்டைகள் கருக்கட்டத் தேவையான ஆணினது விந்து
கிடைக்கப்பெறாத சந்தர்ப்பத்தில் அம்முட்டைகளுடன் கருவறை சுவர்களும்
சுத்திகரிக்கப்பட்டு கழிவுகளாக வெளியேற்றப்படும். இச்செயற்பாடே மாதவிடாய்
எனப்படுகிறது. மாறாக ஆண் பெண் கலவியினால் சினை முட்டையுடன் ஆணின் விந்து
இணையுமாயின் அங்கு கருத்தரிப்பு இடம்பெறுகிறது. ஆண் பெண் கலவியற்ற செயற்கை
முறையாலும், அதாவது வெளிச் சோதனை முறை கருக்கட்டல் அல்லது செயற்கை
விந்தூட்டல் மூலமும் பெண் கருத்தரிக்க முடியும்.
கருக்கட்டல்
நிகழுமாயின் கருப்பையில் புதிய கருவணு தங்கியதும், வளரூக்கி செயற்பாடுகளில்
ஏற்படும் மாற்றங்கள் காரணமாக மாதவிடாய் ஏற்படல் தற்காலிகமாகத் தடைப்படும்.
பெண்களில் கருக்கட்டல் நிகழ்ந்து 38 கிழமைகளில் பொதுவாக குழந்தை பிறப்பு
நிகழும். மாதவிடாயானது 28 நாட்களுக்கு ஒருமுறை நிகழும். இறுதி மாதவிடாய்
ஏற்பட்டு 14 நாட்களில் புதிய கருமுட்டை சூலகத்தில் இருந்து வெளிவரும். இது
ஒழுங்காக நிகழும் பெண்களில், இறுதி மாதவிடாய்ஆரம்பித்த நாளில் இருந்து 40
கிழமைகளில் குழந்தை பிறப்பு நிகழும். இந்தக் காலமே கருக்காலம் அல்லது
கருத்தரிப்புக் காலம் எனக் கணக்கிடப்படுகின்றது.
கருத்தரிப்பு நிகழ்வின் ஆரம்பம்:
மனிதரில் கருக்கட்டலும் , அதன் பின்னர் கருப்பையில் கரு பதிதலும்.
ஒவ்வொரு
மாதமும் ஒரு பெண்ணின் சூல்முட்டை வெடித்து வெளிவருகிறது. வெளி வந்து ஒரு
நாள் அது உயிரோடு இருக்கும். அக்காலத்தில் ஆணும் பெண்ணும் கலவியில்
ஈடுபட்டால், ஆணின் விந்துக்கள் பெண்ணின் இனப்பெருக்க உறுப்பினூடாக நீந்தி
கருமுட்டையைச் சென்றடைகின்றன. கலவியின்போது பெண்ணின் இனப்பெருக்க
உறுப்பினுள் உட்புகும் விந்தானது, யோனி , அதைத் தொடர்ந்து கருப்பை வாய் ,
கருப்பை வழியாக நீந்திச் சென்று பாலோப்பியன் குழாயை அடையும். அதேவேளை
சூலகத்தில் இருந்து வெளியேறும் முட்டையும் பாலோப்பியன் குழாயை அடையுமாயின்,
விந்தானது அங்கே கருமுட்டையுடன் இணையும். அந்த விந்துக்களில் ஏதாவது ஒன்று
சூல்முட்டைக்குள் உள்புகுந்தால் கருக்கட்டல் நிகழ்ந்து கருத்தரிக்கும்.
ஒரு விந்து சூல்முட்டைக்குள் போன பின்னர், வேறு விந்துக்கள் அந்த
முட்டைக்குள் உள்ளே போக முடியாது.
வெளியேறும் விந்தானது உடனேயே
கருக்கட்டக் கூடிய இயல்பை முழுமையாகக் கொண்டிருப்பதில்லை . அவை நீந்திச்
செல்லும்போது, பல மணித்தியாலங்களுக்கு அவற்றில் நிகழும் சில மாற்றங்களே,
அவற்றைக் கருக்கட்டலுக்குத் தயார்ப்படுத்துகின்றன.
கருக்கட்டலின்போது
ஒருமடிய விந்தும், ஒருமடிய கருமுட்டையும் இணைந்து இருமடிய நிலையிலுள்ள
கருவணுவை உருவாக்குகின்றது.கருவணுவானது பின்னர் கருப்பை நோக்கி நகர
ஆரம்பிக்கும். அது கருப்பையை வந்தடைய 4-7 நாட்கள் எடுக்கும். அதேவேளை
கருவணு தொடர்ந்து பல மாற்றங்களுக்கு உட்படும்.
ஆனாலும் கலவி
நிகழாமலேயே செயற்கை விந்தூட்டல், வெளிச் சோதனை முறை கருக்கட்டல் போன்ற
முறைகள் மூலம் கருத்தரிப்பு நிகழும் வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பொதுவாக இம்முறைகள் ஏதாவது காரணங்களால் மலட்டுத்தன்மை இருக்கும் நிலையில்
மேற்கொள்ளப்படும்.
செயற்கை விந்தூட்டல் மூலம் சூல்முட்டை வெளிவரும்
காலத்தில் விந்து பெண்ணின் இனப்பெருக்க உறுப்பினுள் உட்செலுத்தப்படுவதன்
மூலம், கருக்கட்டல் நிகழ்வதற்கான சந்தர்ப்பம் அளிக்கப்படும். அங்கே
கருக்கட்டல் வெற்றிகரமாக நிகழுமாயின் கருத்தரிப்பு நிகழும்.
வெளிச்
சோதனை முறை கருக்கட்டல் ஆயின், வெளிவரும் முட்டைகள் பெண்ணின் உடலில்
இருந்து வெளியே எடுக்கப்பட்டு, வெளிச் சூழலில், அதாவது பரிசோதனைக்
கூடத்தில், விந்துடன் கலக்கப்படும்போது, கருக்கட்டல் வெற்றிகரமாக
நிகழுமாயின், கருக்கட்டப்பட்ட கருவணு அல்லது, முளைய விருத்திக்கு உட்படும்
முளையம் மீண்டும்பெண்ணின் இனப்பெருக்க உறுப்பினுள் வைக்கப்பட்டு,
கருத்தரிப்பு நிகழும்.
Re: கருத்தரிப்பு...
கரு வளர்ச்சி நிலைகள்
கருவளர் நிலைகள்..
மனித முளைய விருத்தியின் ஆரம்ப நிலைகள்
கருக்கட்டல்
நிகழ்ந்த பின்னர், தோன்றும் கருவணுவானது கிட்டத்தட்ட 24-36
மணித்தியாலங்களில் இழையுருப்பிரிவு என்னும் கலப்பிரிவுக்குள்ளாகும் .
கலப்பிரிவின்போது, உயிரணுக்களின் எண்ணிக்கை விரைவாகவும், இரட்டிப்படைந்து
கொண்டும் அதிகரித்துச் செல்லும். கிட்டத்தட்ட 70-100 உயிரணுக்களைக் கொண்ட
நிலையில், இளம்கருவளர் பருவம் (Blastocyst) என அழைக்கப்படும். பொதுவாக
கருக்கட்டல் நிகழ்ந்து 5 நாட்களில் இவ்வாறு அழைக்கப்படும். இந்நிலையில்இது
மூன்று படலங்களைக் கொண்டிருக்கும். இவை புறப்படலம் (ectoderm), இடைப்படலம்
(mesoderm), அகப்படலம் (endoderm) எனப்படும். வளர்ச்சியுற்ற நிலையில்
புறப்படலம் தோல் , நரம்புத் தொகுதியையும் , இடைப்படலம் தசை , எலும்புத்
தொகுதியையும், அகப்படலம் சமிபாடு , சுவாசத் தொகுதி போன்றவற்றையும் உருவாக்க
வல்லன.
கருப்பையை வந்தடையும் இளம் கருவளர் பருவமானது கருப்பைச் சுவரில் பதிந்து உறுதியாக இருக்கும்.
இது
மேலும் விருத்தியடைந்து செல்லும் நிலையில், அது முளையம் எனப்படும். அப்படி
உயிரணுகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும்போதுஉயிரணுக்களில் மாற்றங்கள்
ஏற்பட்டு, உயிரணு வேற்றுமைப்பாடு மூலம், வெவ்வேறு இழையங்கள் உருவாகும்.
இது முளைய விருத்தி எனப்படும். கருவின் வளர்ச்சிக்கு ஆதாரத்தைக் கொடுக்கும்
சூல்வித்தகம் , தொப்புள்கொடி போன்றனவும் விருத்தியடையும். இந்த விருத்தி
நிலைகளின்போது உருவாகும் குழந்தைக்கு தகுந்த பாதுகாப்பை வழங்குவதற்காக,
கருவை அல்லது முதிர்கருவைச் சுற்றி பனிக்குட நீர் அல்லது பனிக்குடப்பாய்மம்
என்னும் திரவத்தைக் கொண்ட, பனிக்குடப்பை எனப்படும் ஒரு பையும்
உருவாகியிருக்கும். தொடரும்விருத்தியின்போது கண், விரல்கள், வாய், காது
போன்ற உடல் உறுப்புக்கள் தெரிய ஆரம்பிக்கும். உயிரணு வேற்றுமைப்பாடு
கிட்டத்தட்ட 8 கிழமைகளில் நிறைவடைந்துவிடும். அந்நிலையில் முதிர்கரு என
அழைக்கப்படும்.
முளைய விருத்தியில் விருத்தியடையத் தொடங்கிய உடல்
உறுப்புக்கள், மற்றும்உடலியக்கத் தொகுதிகள் முதிர்கருவில்
தொடர்ந்தும்விருத்தியடையும். கருத்திரிப்பின் மூன்றாவதுமாதத்தில் பால்
உறுப்புக்கள் வெளித்தெரிய ஆரம்பிக்கும். தொடர்ந்தும் முதிர்கருவானது நீளம்,
நிறைஅதிகரித்துச் செல்லும். அதிகளவு நிறை அதிகரிப்பு கருத்தரிப்பின் இறுதி
நிலைகளிலேயே ஏற்படும்.
கருவளர் நிலைகள்..
மனித முளைய விருத்தியின் ஆரம்ப நிலைகள்
கருக்கட்டல்
நிகழ்ந்த பின்னர், தோன்றும் கருவணுவானது கிட்டத்தட்ட 24-36
மணித்தியாலங்களில் இழையுருப்பிரிவு என்னும் கலப்பிரிவுக்குள்ளாகும் .
கலப்பிரிவின்போது, உயிரணுக்களின் எண்ணிக்கை விரைவாகவும், இரட்டிப்படைந்து
கொண்டும் அதிகரித்துச் செல்லும். கிட்டத்தட்ட 70-100 உயிரணுக்களைக் கொண்ட
நிலையில், இளம்கருவளர் பருவம் (Blastocyst) என அழைக்கப்படும். பொதுவாக
கருக்கட்டல் நிகழ்ந்து 5 நாட்களில் இவ்வாறு அழைக்கப்படும். இந்நிலையில்இது
மூன்று படலங்களைக் கொண்டிருக்கும். இவை புறப்படலம் (ectoderm), இடைப்படலம்
(mesoderm), அகப்படலம் (endoderm) எனப்படும். வளர்ச்சியுற்ற நிலையில்
புறப்படலம் தோல் , நரம்புத் தொகுதியையும் , இடைப்படலம் தசை , எலும்புத்
தொகுதியையும், அகப்படலம் சமிபாடு , சுவாசத் தொகுதி போன்றவற்றையும் உருவாக்க
வல்லன.
கருப்பையை வந்தடையும் இளம் கருவளர் பருவமானது கருப்பைச் சுவரில் பதிந்து உறுதியாக இருக்கும்.
இது
மேலும் விருத்தியடைந்து செல்லும் நிலையில், அது முளையம் எனப்படும். அப்படி
உயிரணுகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும்போதுஉயிரணுக்களில் மாற்றங்கள்
ஏற்பட்டு, உயிரணு வேற்றுமைப்பாடு மூலம், வெவ்வேறு இழையங்கள் உருவாகும்.
இது முளைய விருத்தி எனப்படும். கருவின் வளர்ச்சிக்கு ஆதாரத்தைக் கொடுக்கும்
சூல்வித்தகம் , தொப்புள்கொடி போன்றனவும் விருத்தியடையும். இந்த விருத்தி
நிலைகளின்போது உருவாகும் குழந்தைக்கு தகுந்த பாதுகாப்பை வழங்குவதற்காக,
கருவை அல்லது முதிர்கருவைச் சுற்றி பனிக்குட நீர் அல்லது பனிக்குடப்பாய்மம்
என்னும் திரவத்தைக் கொண்ட, பனிக்குடப்பை எனப்படும் ஒரு பையும்
உருவாகியிருக்கும். தொடரும்விருத்தியின்போது கண், விரல்கள், வாய், காது
போன்ற உடல் உறுப்புக்கள் தெரிய ஆரம்பிக்கும். உயிரணு வேற்றுமைப்பாடு
கிட்டத்தட்ட 8 கிழமைகளில் நிறைவடைந்துவிடும். அந்நிலையில் முதிர்கரு என
அழைக்கப்படும்.
முளைய விருத்தியில் விருத்தியடையத் தொடங்கிய உடல்
உறுப்புக்கள், மற்றும்உடலியக்கத் தொகுதிகள் முதிர்கருவில்
தொடர்ந்தும்விருத்தியடையும். கருத்திரிப்பின் மூன்றாவதுமாதத்தில் பால்
உறுப்புக்கள் வெளித்தெரிய ஆரம்பிக்கும். தொடர்ந்தும் முதிர்கருவானது நீளம்,
நிறைஅதிகரித்துச் செல்லும். அதிகளவு நிறை அதிகரிப்பு கருத்தரிப்பின் இறுதி
நிலைகளிலேயே ஏற்படும்.
Re: கருத்தரிப்பு...
கருக்கட்டலுக்குப் பின்னர் 6 கிழமைகளில் முளையத்தின் தோற்றம் [3]
-
கருக்கட்டலுக்குப் பின்னர் 8 கிழமைகளில் முதிர்கருவின் தோற்றம் [4]
-
கருக்கட்டலுக்குப் பின்னர் 18 கிழமைகளில் முதிர்கருவின் தோற்றம் [5]
-
கருக்கட்டலுக்குப் பின்னர் 38 கிழமைகளில் முதிர்கருவின் தோற்றம் [6]
-
ஒப்பீட்டளவில் முதலாம் மாத முதிர்கருவின் அளவு (எளிமையாக்கப்பட்ட விளக்கப்படம்)
-
ஒப்பீட்டளவில் மூன்றாம் மாதமுதிர்கருவின் அளவு (எளிமையாக்கப்பட்ட விளக்கப்படம்)
-
ஒப்பீட்டளவில் ஐந்தாம் மாத முதிர்கருவின் அளவு (எளிமையாக்கப்பட்ட விளக்கப்படம்)
-
ஒப்பீட்டளவில் ஒன்பதாம் மாதமுதிர்கருவின் அளவு (எளிமையாக்கப்பட்ட விளக்கப்படம்)
இயற்கை கருத்தரிப்பு முறை:
இயற்கையில்
பெண்ணினது சூல்முட்டையும் , ஆணினது விந்தும் கலவியினால் இணையும் போதே
கருவணு அல்லது நுகம் உருவாகி அவைகள் 2-4-8-16-32 என கருவணுவை நூறு சதவீத
ஒத்த பிரதிகளாக தொடர்ந்து பெருக்கமடைந்து முளையமாகிறது . கருக்கட்டல் நடந்த
9 ஆவது கிழமையில் அல்லது கருக்காலத்தின் 11 ஆவது கிழமையின் பின்னர்,
இம்முளையமானது முதிர்கரு என அழைக்கப்படுகிறது. முதிர்கருவானது ஒன்பது
மாதங்கள் கருவறையில் வளர்ச்சியடைந்த பின்னர், இறுதியில் முழு உயிராக அல்லது
குழந்தையாக குழந்தை பிறப்பு நிகழ்வின் மூலம் பிரசவிக்கின்றது.
செயற்கை கருத்தரிப்பு முறை:
பரிசோதனைக்குழாய் குழந்தை
சில
காரணங்களால் கலப்பின் போது ஆணின் விந்தும், பெண்ணின் முட்டையும் இணைந்து
கருவணு உருவாக்கத்தை ஏற்படுத்தாத போது விந்தையும், முட்டையையும் Petridish
எனப்படும் கண்ணாடி கிண்ணத்தில் வளர்ப்பூடகத்தில் இணைத்து கருவணுவை
உருவாக்கி பெண்ணின் கருப்பைக்குள் வைத்து வளர்க்கும் முறை
பரீட்சிக்கப்பட்டு எண்பதுகளில் இச்சோதனை வெற்றி பெற்று பரிசோதனைக்குழாய்
குழந்தைகள் உருவாக்கத்திற்கு வழி அமைத்தது.
-
கருக்கட்டலுக்குப் பின்னர் 8 கிழமைகளில் முதிர்கருவின் தோற்றம் [4]
-
கருக்கட்டலுக்குப் பின்னர் 18 கிழமைகளில் முதிர்கருவின் தோற்றம் [5]
-
கருக்கட்டலுக்குப் பின்னர் 38 கிழமைகளில் முதிர்கருவின் தோற்றம் [6]
-
ஒப்பீட்டளவில் முதலாம் மாத முதிர்கருவின் அளவு (எளிமையாக்கப்பட்ட விளக்கப்படம்)
-
ஒப்பீட்டளவில் மூன்றாம் மாதமுதிர்கருவின் அளவு (எளிமையாக்கப்பட்ட விளக்கப்படம்)
-
ஒப்பீட்டளவில் ஐந்தாம் மாத முதிர்கருவின் அளவு (எளிமையாக்கப்பட்ட விளக்கப்படம்)
-
ஒப்பீட்டளவில் ஒன்பதாம் மாதமுதிர்கருவின் அளவு (எளிமையாக்கப்பட்ட விளக்கப்படம்)
இயற்கை கருத்தரிப்பு முறை:
இயற்கையில்
பெண்ணினது சூல்முட்டையும் , ஆணினது விந்தும் கலவியினால் இணையும் போதே
கருவணு அல்லது நுகம் உருவாகி அவைகள் 2-4-8-16-32 என கருவணுவை நூறு சதவீத
ஒத்த பிரதிகளாக தொடர்ந்து பெருக்கமடைந்து முளையமாகிறது . கருக்கட்டல் நடந்த
9 ஆவது கிழமையில் அல்லது கருக்காலத்தின் 11 ஆவது கிழமையின் பின்னர்,
இம்முளையமானது முதிர்கரு என அழைக்கப்படுகிறது. முதிர்கருவானது ஒன்பது
மாதங்கள் கருவறையில் வளர்ச்சியடைந்த பின்னர், இறுதியில் முழு உயிராக அல்லது
குழந்தையாக குழந்தை பிறப்பு நிகழ்வின் மூலம் பிரசவிக்கின்றது.
செயற்கை கருத்தரிப்பு முறை:
பரிசோதனைக்குழாய் குழந்தை
சில
காரணங்களால் கலப்பின் போது ஆணின் விந்தும், பெண்ணின் முட்டையும் இணைந்து
கருவணு உருவாக்கத்தை ஏற்படுத்தாத போது விந்தையும், முட்டையையும் Petridish
எனப்படும் கண்ணாடி கிண்ணத்தில் வளர்ப்பூடகத்தில் இணைத்து கருவணுவை
உருவாக்கி பெண்ணின் கருப்பைக்குள் வைத்து வளர்க்கும் முறை
பரீட்சிக்கப்பட்டு எண்பதுகளில் இச்சோதனை வெற்றி பெற்று பரிசோதனைக்குழாய்
குழந்தைகள் உருவாக்கத்திற்கு வழி அமைத்தது.
Re: கருத்தரிப்பு...
செயற்கை விந்தூட்டல் முறை:
செயற்கையான
முறையில் விந்தை பெண்ணின் இனப்பெருக்க உறுப்பினுள் உட்செலுத்தும்
முறையாகும். இது குழந்தைப் பேற்றிற்காக செய்யப்படும் 'தூண்டிய
இனப்பெருக்கத் தொழில்நுட்பமுறை'களில் ஒன்றாகும். பெண்ணின் ஆண்
துணையிடமிருந்தோ அல்லது வேறு விந்து வழங்கியான ஒரு ஆணிடமிருந்தோ பெறப்படும்
விந்தானது, இங்கே பயன்படுத்தப்படும்.
படியெடுப்பு:
கருவணு
உருவாக்கத்திற்கு ஆணினது விந்து தேவையென்ற நிலையை தகர்த்த புரட்சியே அடுத்த
முக்கிய கட்டமான படியெடுப்பு இனப்பெருக்கமாகும். இதன் படி பெண்ணினது
முட்டையிலுள்ள கரு நீக்கப்பட்டு சாதாரண உயிரணுவிலுள்ள கரு செலுத்தப்பட்டு
கருவணுவை உருவாக்கி முளையமாக்கி பின்னர் கருவறையினுள் வளரச்செய்து
பிரசவிக்கும் முறையாகும். இதுவே படியெடுப்பு (Cloning) எனப்படுகிறது.
மனிதரில் படியெடுப்பு என்பது மிகவும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் ஒரு விடயமாகும்]]. [7] [8] [9]
Panayiotis
Zavos என்ற கருக்கட்டல் செயல்முறையில்நிபுணத்துவம் பெற்ற, சர்ச்சைகளுக்கு
உள்ளாகும், ஒரு அமெரிக்க மருத்துவர் , புதிதாகப் படியெடுக்கப்பட்ட முளையம்
ஒன்றை, தான் 35 வயது பெண்ணிற்கு மாற்றி இருப்பதாக 2004 ஆம் ஆண்டு ஜனவரி
17ஆம் திகதி ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தினார். அதே ஆண்டு பெப்ரவரி
மாதத்தில் அந்த முயற்சி தோல்வியடைந்ததாகவும், அந்தப் பெண்
கருத்தரிக்கவில்லை என்றும்அறியக் கிடைத்தது .
ஒத்த குழந்தைகள்
பரிசோதனைக்குழாய்
குழந்தைகளுக்கான முறையிலோ அல்லது படியெடுப்பு முறையிலோ கருவணுவை உருவாக்கி
அதனை வளர்பூடகத்தில் வளர்க்கும்போது முதல் ஓரிரு நாட்களில்2, 4, 8, 16, 32
என உருவாகும் முளையத்திலுள்ள குருத்தணுக்கள் எனப்படும் உயிரணுக்களை
மீண்டும் தனித்தனியாகப் பிரித்தெடுத்து வெவ்வேறாக வளர்த்து
பரீட்சிக்கப்பட்டபோது அவைகள் ஒவ்வொன்றும் தனித்தனி கருவணுவாகச்
செயற்பட்டுத் தனித்தனி முளையங்களைத் தோற்றுவித்தது.
செயற்கையான
முறையில் விந்தை பெண்ணின் இனப்பெருக்க உறுப்பினுள் உட்செலுத்தும்
முறையாகும். இது குழந்தைப் பேற்றிற்காக செய்யப்படும் 'தூண்டிய
இனப்பெருக்கத் தொழில்நுட்பமுறை'களில் ஒன்றாகும். பெண்ணின் ஆண்
துணையிடமிருந்தோ அல்லது வேறு விந்து வழங்கியான ஒரு ஆணிடமிருந்தோ பெறப்படும்
விந்தானது, இங்கே பயன்படுத்தப்படும்.
படியெடுப்பு:
கருவணு
உருவாக்கத்திற்கு ஆணினது விந்து தேவையென்ற நிலையை தகர்த்த புரட்சியே அடுத்த
முக்கிய கட்டமான படியெடுப்பு இனப்பெருக்கமாகும். இதன் படி பெண்ணினது
முட்டையிலுள்ள கரு நீக்கப்பட்டு சாதாரண உயிரணுவிலுள்ள கரு செலுத்தப்பட்டு
கருவணுவை உருவாக்கி முளையமாக்கி பின்னர் கருவறையினுள் வளரச்செய்து
பிரசவிக்கும் முறையாகும். இதுவே படியெடுப்பு (Cloning) எனப்படுகிறது.
மனிதரில் படியெடுப்பு என்பது மிகவும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் ஒரு விடயமாகும்]]. [7] [8] [9]
Panayiotis
Zavos என்ற கருக்கட்டல் செயல்முறையில்நிபுணத்துவம் பெற்ற, சர்ச்சைகளுக்கு
உள்ளாகும், ஒரு அமெரிக்க மருத்துவர் , புதிதாகப் படியெடுக்கப்பட்ட முளையம்
ஒன்றை, தான் 35 வயது பெண்ணிற்கு மாற்றி இருப்பதாக 2004 ஆம் ஆண்டு ஜனவரி
17ஆம் திகதி ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தினார். அதே ஆண்டு பெப்ரவரி
மாதத்தில் அந்த முயற்சி தோல்வியடைந்ததாகவும், அந்தப் பெண்
கருத்தரிக்கவில்லை என்றும்அறியக் கிடைத்தது .
ஒத்த குழந்தைகள்
பரிசோதனைக்குழாய்
குழந்தைகளுக்கான முறையிலோ அல்லது படியெடுப்பு முறையிலோ கருவணுவை உருவாக்கி
அதனை வளர்பூடகத்தில் வளர்க்கும்போது முதல் ஓரிரு நாட்களில்2, 4, 8, 16, 32
என உருவாகும் முளையத்திலுள்ள குருத்தணுக்கள் எனப்படும் உயிரணுக்களை
மீண்டும் தனித்தனியாகப் பிரித்தெடுத்து வெவ்வேறாக வளர்த்து
பரீட்சிக்கப்பட்டபோது அவைகள் ஒவ்வொன்றும் தனித்தனி கருவணுவாகச்
செயற்பட்டுத் தனித்தனி முளையங்களைத் தோற்றுவித்தது.
Re: கருத்தரிப்பு...
அவைகளை வெவ்வேறு பெண்கள் மூலமாகக் கருத்தரிக்கச்செய்ய வைக்க முடியும்
என்பது உறுதிசெய்யப்பட்டது . இதன் மூலம் ஒரே நேரத்தில் இயல்பிலும்
தோற்றத்திலும் ஒத்த பலரை வெவ்வேறு பெண்கள் மூலமாகப் பிரசவிக்கச்செய்ய
முடியும்என்ற புரட்சியை அறிவியல் கொள்கையளவில் நிரூபித்தது. இக்
குருத்தணுக்கள் முளையக் குருத்தணுக்கள் (Embryonic Stem Cells) என
அழைக்கப்பட்டன. முளையக் குருத்தணு வளர்ப்பு தாவரவியலிலேயே பெரும் வரவேற்பை
பெற்றுள்ளது.
இரட்டைக் குழந்தைகள்:
ஒன்று போலிருக்கும் இரட்டை (Identical Twins):
கருக்கட்டலின்
பின்னர் தோன்றும் கருவணு , பிளவின் பொது (Clevage) சில சமயங்களில்
இயல்புக்கு மாறாக, முழுமையாக இரண்டாகப்பிரிந்து விடும். இவ்வாறு இரண்டாகப்
பிரிந்த கருவுயிர்க்கப்பட்ட முட்டைஇரு குழந்தைகளாக உருவாகின்றன. ஒரு வேளை
கருவுயிர்க்கப்பட்ட முட்டைசரியாக இரண்டாகப் பிரியவில்லையெனில் பிறக்கும்
குழந்தைகள் ஒட்டிப் பிறக்கின்றன. இங்குஒரு சூல் முட்டையும், ஒரு விந்துமே
இரு குழந்தைகளுக்கும் காரணமாக இருப்பதால் குழந்தைகளின் மரபுக்கூறும்
ஒன்றேயாகும். எனவே இக் குழந்தைகள் எல்லாப் பண்புகளிலும் ஒன்று போலவே
இருக்கின்றன. ஆனால் குழந்தையின் வளர்ச்சியில் சூழ்நிலையும்முக்கியப் பங்கு
வகிப்பதால் சூழ் நிலை வேறுபாட்டால் இத்தகைய குழந்தைகளுக்கிடையே சிறிய
வேறுபாடுகள் காணப்படலாம். சில சமயம் கருத்தரிப்புக் காலத்தில் தாயின்
கருப்பையினுள் இருக்கும்போதே, அவர்களுக்கு கிடைக்கும் வேறுபட்ட அளவிலான
ஊட்டச்சத்து காரணமாக இரு குழந்தைகளிடையேயும் வேறுபாடுகள் ஏற்படலாம்.
வேறுபாடுள்ள இரட்டை (Non Identical twins)
பெண்களுக்கு
ஒவ்வொரு மாதமும் ஒரு சூல் பையிலிருந்து ஒரு சூல்முட்டை வெளிப்படும்.
அபூர்வமாக சில சமயங்களில் இரண்டு முட்டைகள் வெளிப்படும். அல்லது
ஏதாவதுகாரணங்களால் சூல்முட்டை இரண்டாகப் பிளவுபட்டு விடும். இந்தச்
சமயங்களில் ஆண், பெண் சேரும் போது இரண்டு முட்டைகளும் இரு வேறு
விந்துக்களால் கருவுயிர்க்கப்பட்டு இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன. இங்கு
எப்போதுமே விந்துக்களும் முட்டைகளும் வெவ்வேறாக இருப்பதால் பிறக்கும்
குழந்தைகளின் மரபுக் கூறும் வெவ்வேறாக இருக்கும். எனவே
குழந்தைகளுக்கிடையில் உருவஒற்றுமையோ, பிற பண்புகளில் ஒற்றுமையோ, ஒன்று
போலிருக்கும் இரட்டைக் குழந்தைகள் போன்று, குறிப்பிடத்தக்கதாய்
இருப்பதில்லை.
என்பது உறுதிசெய்யப்பட்டது . இதன் மூலம் ஒரே நேரத்தில் இயல்பிலும்
தோற்றத்திலும் ஒத்த பலரை வெவ்வேறு பெண்கள் மூலமாகப் பிரசவிக்கச்செய்ய
முடியும்என்ற புரட்சியை அறிவியல் கொள்கையளவில் நிரூபித்தது. இக்
குருத்தணுக்கள் முளையக் குருத்தணுக்கள் (Embryonic Stem Cells) என
அழைக்கப்பட்டன. முளையக் குருத்தணு வளர்ப்பு தாவரவியலிலேயே பெரும் வரவேற்பை
பெற்றுள்ளது.
இரட்டைக் குழந்தைகள்:
ஒன்று போலிருக்கும் இரட்டை (Identical Twins):
கருக்கட்டலின்
பின்னர் தோன்றும் கருவணு , பிளவின் பொது (Clevage) சில சமயங்களில்
இயல்புக்கு மாறாக, முழுமையாக இரண்டாகப்பிரிந்து விடும். இவ்வாறு இரண்டாகப்
பிரிந்த கருவுயிர்க்கப்பட்ட முட்டைஇரு குழந்தைகளாக உருவாகின்றன. ஒரு வேளை
கருவுயிர்க்கப்பட்ட முட்டைசரியாக இரண்டாகப் பிரியவில்லையெனில் பிறக்கும்
குழந்தைகள் ஒட்டிப் பிறக்கின்றன. இங்குஒரு சூல் முட்டையும், ஒரு விந்துமே
இரு குழந்தைகளுக்கும் காரணமாக இருப்பதால் குழந்தைகளின் மரபுக்கூறும்
ஒன்றேயாகும். எனவே இக் குழந்தைகள் எல்லாப் பண்புகளிலும் ஒன்று போலவே
இருக்கின்றன. ஆனால் குழந்தையின் வளர்ச்சியில் சூழ்நிலையும்முக்கியப் பங்கு
வகிப்பதால் சூழ் நிலை வேறுபாட்டால் இத்தகைய குழந்தைகளுக்கிடையே சிறிய
வேறுபாடுகள் காணப்படலாம். சில சமயம் கருத்தரிப்புக் காலத்தில் தாயின்
கருப்பையினுள் இருக்கும்போதே, அவர்களுக்கு கிடைக்கும் வேறுபட்ட அளவிலான
ஊட்டச்சத்து காரணமாக இரு குழந்தைகளிடையேயும் வேறுபாடுகள் ஏற்படலாம்.
வேறுபாடுள்ள இரட்டை (Non Identical twins)
பெண்களுக்கு
ஒவ்வொரு மாதமும் ஒரு சூல் பையிலிருந்து ஒரு சூல்முட்டை வெளிப்படும்.
அபூர்வமாக சில சமயங்களில் இரண்டு முட்டைகள் வெளிப்படும். அல்லது
ஏதாவதுகாரணங்களால் சூல்முட்டை இரண்டாகப் பிளவுபட்டு விடும். இந்தச்
சமயங்களில் ஆண், பெண் சேரும் போது இரண்டு முட்டைகளும் இரு வேறு
விந்துக்களால் கருவுயிர்க்கப்பட்டு இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன. இங்கு
எப்போதுமே விந்துக்களும் முட்டைகளும் வெவ்வேறாக இருப்பதால் பிறக்கும்
குழந்தைகளின் மரபுக் கூறும் வெவ்வேறாக இருக்கும். எனவே
குழந்தைகளுக்கிடையில் உருவஒற்றுமையோ, பிற பண்புகளில் ஒற்றுமையோ, ஒன்று
போலிருக்கும் இரட்டைக் குழந்தைகள் போன்று, குறிப்பிடத்தக்கதாய்
இருப்பதில்லை.
Re: கருத்தரிப்பு...
கற்பமுற்றதைத் தீர்மானித்தல்
22 வார கருத்தரிப்பில் பெண்களின் வயிற்றில் காணப்படும் Linea nigra என்றழைக்கப்படும் கருமையான கோடு
ஒரு
பெண் கருப்பமுற்றிருப்பதைப் பல வழிகளில் கண்டுபிடிக்கலாம்.மருத்துவ
பரிசோதனகள் மூலமாகவோ, அல்லது அவ்வாறில்லாமலோ கருப்பத்தைக் கண்டறியலாம்.
மருத்துவ பரிசோதனையில் மருத்துவ தொழிலில் உள்ளவர்களின் உதவியுடனோ, அல்லது
இல்லாமலோ கண்டறிய முடியும்.
கருத்தரித்திருக்கும் பெண்களில்,
அதற்கான பல அறிகுறிகள் தோன்றும் . அவற்றில் குமட்டல் , வாந்தி , அளவுக்கு
மீறிய அசதி, களைப்பு போன்றன முக்கியமானவையாகும். அடிக்கடி, அனேகமாக இரவில்
சிறுநீர் கழிக்க வேண்டிய உணர்வு ஏற்படும். சிலருக்குகுறிப்பிட்ட உணவுகளில்
விருப்பம் அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
இவை தவிர பல
ஆரம்ப மருத்துவ அறிகுறிகள் தென்படும் . பொதுவாக அவை கருத்தரித்து சில
கிழமைகளில் கண்டுபிடிக்கக்கூடியதாக இருக்கும். இவற்றில் மிக முக்கியமானது
குருதியிலும் , சிறுநீரிலும் Human chorionic gonadotropin (HCG) என்னும்
வளரூக்கி காணப்படுதல். இதனை இலகுவாக மருத்துவச் சோதனைகள் மூலம்
கண்டுபிடிக்கலாம்.
பொதுவாக கருத்தரிப்பின்போது மாதவிடாய் நிகழ்வு
நின்றுவிடும். ஆனாலும் சிலருக்கு, கருப்பையில் கருபதியும்போது
குருதிப்போக்கு ஏற்படக்கூடும். இது பொதுவாகஇறுதி மாதவிடாய் வந்து 3ஆம்,
4ஆம் கிழமைகளில் நடக்கக் கூடும். சூல் முட்டை வெளியேறும்போது அடிநிலை உடல்
வெப்பநிலையில் ஏற்படும்அதிகரிப்பு வெளியேற்றம் நடந்து 2 வாரங்களின்
பின்னரும் தொடர்ந்திருக்கும். கருப்பைவாய் , யோனி , பெண்குறி போன்ற
பகுதிகள் கருநிறமடையும். கருப்பை வாய், கருப்பையின் ஒடுங்கியபகுதி, போன்றன
மென்மையாகும். வளரூக்கிகளில் ஏற்படும் மாற்றத்தால் நிகழும் நிறமூட்டலினால்
வயிற்றின் நடுக்கோட்டில் கருமையான கோடு தோன்றும். இந்தக் கோடு பொதுவாக
கருத்தரிப்பின் நடுப்பகுதியில் பார்க்கக் கூடியதாக இருக்கும்.). முலைகள்
மிருதுத்தன்மையை அடையும். இது பொதுவாக இளமையான பெண்களில் தெளிவாகத்
தெரியும் .
கருத்தரிப்பானது கருத்தரிப்பு பரிசோதனைகள் மூலம் உறுதி
செய்யப்படும். பொதுவாக இது புதிதாக கருப்பையினுள் உருவாகும்
சூல்வித்தகத்திலிருந்து தோற்றுவிக்கப்படும் வளரூக்கியை கண்டறியும் சோதனையாக
இருக்கும். குருதி , சிறுநீர் ஆகியவற்றில் செய்யப்படும் இந்த மருத்துவ
சோதனையானது பொதுவாக கருப்பதிந்து 12 நாட்களின் பின்னர் செய்யப்படும்.
சிறுநீரில் செய்யப்படும் சோதனையை விடவும் குருதியில் செய்யப்படும் சோதனையே
நம்பகத்தனை கூடியதாக இருக்கும் . வீட்டில் செய்யப்படும் சோதனையான
சிறுநீர்ச் சோதனை மூலம் கருக்கட்டலின் பின்னர் 12-15 நாட்களின் பின்னரே
முடிவைக் கண்டறியக் கூடியதாக இருக்கும். ஒரு அளவறி குருதிச் சோதனை மூலம்
முளையம் பதிந்த நாளை அண்ணளவாக நிர்ணயிக்கலாம்.
-
வீக்கிப்பீடியா
22 வார கருத்தரிப்பில் பெண்களின் வயிற்றில் காணப்படும் Linea nigra என்றழைக்கப்படும் கருமையான கோடு
ஒரு
பெண் கருப்பமுற்றிருப்பதைப் பல வழிகளில் கண்டுபிடிக்கலாம்.மருத்துவ
பரிசோதனகள் மூலமாகவோ, அல்லது அவ்வாறில்லாமலோ கருப்பத்தைக் கண்டறியலாம்.
மருத்துவ பரிசோதனையில் மருத்துவ தொழிலில் உள்ளவர்களின் உதவியுடனோ, அல்லது
இல்லாமலோ கண்டறிய முடியும்.
கருத்தரித்திருக்கும் பெண்களில்,
அதற்கான பல அறிகுறிகள் தோன்றும் . அவற்றில் குமட்டல் , வாந்தி , அளவுக்கு
மீறிய அசதி, களைப்பு போன்றன முக்கியமானவையாகும். அடிக்கடி, அனேகமாக இரவில்
சிறுநீர் கழிக்க வேண்டிய உணர்வு ஏற்படும். சிலருக்குகுறிப்பிட்ட உணவுகளில்
விருப்பம் அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
இவை தவிர பல
ஆரம்ப மருத்துவ அறிகுறிகள் தென்படும் . பொதுவாக அவை கருத்தரித்து சில
கிழமைகளில் கண்டுபிடிக்கக்கூடியதாக இருக்கும். இவற்றில் மிக முக்கியமானது
குருதியிலும் , சிறுநீரிலும் Human chorionic gonadotropin (HCG) என்னும்
வளரூக்கி காணப்படுதல். இதனை இலகுவாக மருத்துவச் சோதனைகள் மூலம்
கண்டுபிடிக்கலாம்.
பொதுவாக கருத்தரிப்பின்போது மாதவிடாய் நிகழ்வு
நின்றுவிடும். ஆனாலும் சிலருக்கு, கருப்பையில் கருபதியும்போது
குருதிப்போக்கு ஏற்படக்கூடும். இது பொதுவாகஇறுதி மாதவிடாய் வந்து 3ஆம்,
4ஆம் கிழமைகளில் நடக்கக் கூடும். சூல் முட்டை வெளியேறும்போது அடிநிலை உடல்
வெப்பநிலையில் ஏற்படும்அதிகரிப்பு வெளியேற்றம் நடந்து 2 வாரங்களின்
பின்னரும் தொடர்ந்திருக்கும். கருப்பைவாய் , யோனி , பெண்குறி போன்ற
பகுதிகள் கருநிறமடையும். கருப்பை வாய், கருப்பையின் ஒடுங்கியபகுதி, போன்றன
மென்மையாகும். வளரூக்கிகளில் ஏற்படும் மாற்றத்தால் நிகழும் நிறமூட்டலினால்
வயிற்றின் நடுக்கோட்டில் கருமையான கோடு தோன்றும். இந்தக் கோடு பொதுவாக
கருத்தரிப்பின் நடுப்பகுதியில் பார்க்கக் கூடியதாக இருக்கும்.). முலைகள்
மிருதுத்தன்மையை அடையும். இது பொதுவாக இளமையான பெண்களில் தெளிவாகத்
தெரியும் .
கருத்தரிப்பானது கருத்தரிப்பு பரிசோதனைகள் மூலம் உறுதி
செய்யப்படும். பொதுவாக இது புதிதாக கருப்பையினுள் உருவாகும்
சூல்வித்தகத்திலிருந்து தோற்றுவிக்கப்படும் வளரூக்கியை கண்டறியும் சோதனையாக
இருக்கும். குருதி , சிறுநீர் ஆகியவற்றில் செய்யப்படும் இந்த மருத்துவ
சோதனையானது பொதுவாக கருப்பதிந்து 12 நாட்களின் பின்னர் செய்யப்படும்.
சிறுநீரில் செய்யப்படும் சோதனையை விடவும் குருதியில் செய்யப்படும் சோதனையே
நம்பகத்தனை கூடியதாக இருக்கும் . வீட்டில் செய்யப்படும் சோதனையான
சிறுநீர்ச் சோதனை மூலம் கருக்கட்டலின் பின்னர் 12-15 நாட்களின் பின்னரே
முடிவைக் கண்டறியக் கூடியதாக இருக்கும். ஒரு அளவறி குருதிச் சோதனை மூலம்
முளையம் பதிந்த நாளை அண்ணளவாக நிர்ணயிக்கலாம்.
-
வீக்கிப்பீடியா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|