சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

100 கோடி கேட்டு சக்தி வாய்ந்த மனிதர்கள் மிரட்டல்: நித்யானந்தா பரபரப்பு பேட்டி Khan11

100 கோடி கேட்டு சக்தி வாய்ந்த மனிதர்கள் மிரட்டல்: நித்யானந்தா பரபரப்பு பேட்டி

2 posters

Go down

100 கோடி கேட்டு சக்தி வாய்ந்த மனிதர்கள் மிரட்டல்: நித்யானந்தா பரபரப்பு பேட்டி Empty 100 கோடி கேட்டு சக்தி வாய்ந்த மனிதர்கள் மிரட்டல்: நித்யானந்தா பரபரப்பு பேட்டி

Post by *சம்ஸ் Wed 2 Feb 2011 - 6:33

100 கோடி கேட்டு சக்தி வாய்ந்த மனிதர்கள் மிரட்டல்: நித்யானந்தா பரபரப்பு பேட்டி Large_178663
பெங்களூரு :""நூறு கோடி ரூபாய் கேட்டு, இரண்டு, "சக்தி வாய்ந்த' மனிதர்கள், என் சீடர்கள் மூலம் மிரட்டினர். அவர்கள் யார் என்பதை, தற்போது என்னால் சொல்ல முடியாது. இதை நான் தெரிவித்தால், என் உயிருக்கும், எனக்கும் பாதுகாப்பு இல்லாமல் போய்விடும். என் மீது கூறப்பட்ட புகார்களுக்கு, எந்தவித சாட்சிகளும் இல்லை. என் பாஸ்போர்ட், வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. இவை அனைத்தும் சட்டத்திற்கு புறம்பான செயலாகும். இதனால், சட்ட உதவியை நாட முடியவில்லை,'' என, சாமியார் நித்யானந்தா நேற்று கூறினார்.

நீண்ட நாட்களுக்கு பின், பிடதி ஆசிரமத்தில் சாமியார் நித்யானந்தா நிருபர்களுக்கு அளித்த பரபரப்பு பேட்டியில் கூறியதாவது:என்னைப் பற்றி வெளியிடப்பட்ட வீடியோவில் இருப்பது நானில்லை. முழுக்க, முழுக்க டிஜிட்டல் மூலம் அதை தயாரித்துள்ளனர்; லெனின் மட்டும் செய்த வேலையல்ல இது. லெனினுக்கு பின்னணியில், இரண்டு, "சக்தி வாய்ந்த' நபர்கள் உள்ளனர்.போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், நான் கற்பழித்ததாக கூறப்படும் பெண் யார் என்றே குறிப்பிடப்படவில்லை. இந்தியாவில் இது போன்ற குற்றப்பத்திரிகையை யாரும் தாக்கல் செய்திருக்க மாட்டார்கள்.நான் இதுவரை எந்த பெண்ணுடனும் தொடர்பு வைத்துக் கொண்டது கிடையாது. எனக்கு சிகரெட், குடி, போதை பழக்கம் எதுவும் கிடையாது; அசைவம் சாப்பிடுவதும் இல்லை.என் மீது வீண்பழி சுமத்தப்பட்டுள்ளது.

இதன் பின்னணியில் இருக்கும் இரண்டு சக்திவாய்ந்த மனிதர்கள் யார் என்பதை நீதிமன்றத்திலும், சி.ஐ.டி., விசாரணையிலும் கூறியுள்ளேன். நடிகை ரஞ்சிதா, கோபிகா ஆகியோரை சாட்சியாக ஆக்குவதற்கு எவ்வளவோ முயற்சித்தனர். போலீசார் கூறியதில் எந்தவிதமான உண்மையும் இல்லை. இந்துக்களில், நான் ஒரு மைனாரிட்டி இந்துவாக உள்ளேன்.சேனல் மூலம், என் தொடர்பான காட்சிகளை பலமுறை ஒளிபரப்பினர். வீடியோ காட்சியில், 2009 டிச., 25ம் தேதி, எடுக்கப்பட்டதாக காட்டப்பட்டுள்ளது. ஆனால், 2010 மார்ச் 3ம் தேதி தான் இதை ஒளிபரப்பு செய்துள்ளனர். இதன் உள்நோக்கம் என்ன. வீடியோ பதிவின் போது, காலை 8 மணி என்று காண்பிக்கிறது. ஆனால், அந்த அறையில் உள்ள கடிகாரம், 11 மணியை காண்பிக்கிறது. இதில், எதுவுமே உண்மையல்ல. இயேசு பிறந்த புனித தினமான, டிச., 25ஐ தேர்வு செய்ய, என்ன உள்நோக்கமோ தெரியவில்லை.

நக்கீரன் என்ற தமிழ் பத்திரிகையில், 60 முறை கட்டுரைகள் எழுதியுள்ளனர். அதில், மிகவும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தியிருந்தனர். அவர்கள் மீது நான் வழக்கு தொடர்ந்துள்ளேன்.

பல பத்திரிகைகள் மிகவும் பொறுப்பாக செயல்பட்டன. அதில், தமிழில் தினமலர், தினந்தந்தி, ஆனந்த விகடன், ஜெயா "டிவி' ராஜ் "டிவி' ஆகியவை, பொறுப்பான செய்தி வெளியிட்டன. அவர்களுக்கு என் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.இணையதளம், "யு டியூப்'பில் என்னைப் பற்றி தான் அதிகமாக தகவல் வெளியிடப்பட்டது.எனக்கு உலகம் முழுவதும், ஒரு கோடி பக்தர்கள் உள்ளனர். உலகம் முழுவதிலுமிருந்து பல அமைப்புகள் எனக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

நூறு கோடி ரூபாய் கேட்டு இரண்டு, "சக்தி வாய்ந்த ' மனிதர்கள், என் சீடர்கள் மூலம் மிரட்டினர். பின், 60 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டது. தவறு செய்யாத நான், "ஒரு பைசா கூட தர முடியாது' என்று கூறிவிட்டேன். இருந்தாலும், என் கவனத்துக்கு வராமலேயே, ஆசிரமத்திலிருந்தவர்களிடம் பணம் பெற்றுள்ளனர். ஆதற்கான ஆதாரங்களை திரட்டி வருகிறேன்.ஆரம்பத்தில், என் ஆசிரமமும், பக்தர்களும் தாக்கப்பட்டனர். இதை செய்தது முழுக்க, முழுக்க தமிழர்களே. தமிழகத்தில் தான் அதிகளவில் தாக்குதல் நடந்தது. கர்நாடகத்தில் தாக்கப்பட்டாலும், கன்னடர்கள் தாக்கவில்லை.

கன்னடர்கள் போர்வையில், மற்றவர்கள் தாக்கினர்.போலீஸ் விசாரணையில், "ஆணையும் விட, பெண்ணையும் விட உயர்ந்த ஸ்தானத்தில் உள்ளேன்' என, நான் கூறியதை, ஆண்மை இல்லாதவன் என்று போலீசார், பத்திரிகைகளுக்கு தெரிவித்து விட்டனர்.என் மீது கூறப்பட்ட புகார்களுக்கு, எந்தவித சாட்சிகளும் இல்லை. என் பாஸ்போர்ட், வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. இவை அனைத்தும் சட்டத்திற்கு புறம்பான செயலாகும். இதனால், சட்ட உதவியை நாட முடியவில்லை.வீடியோ காட்சிகளை, அமெரிக்க லேபில் பரிசோதித்த போது, இந்த வீடியோ முதலில் எடுக்கப்பட்டது முதல், தொடர்ச்சியாக பதிவு செய்யப்பட்டது எல்லாம் இருந்தால் தான், அது உண்மையா என்பதை தெரிவிக்க முடியும், என்று கூறியுள்ளனர்.

உலகத்துக்கு, என் அர்ப்பணிப்பை புரிந்து கொண்டு, அனைத்து இந்து அமைப்புகளும் ஆதரவளிக்க வேண்டும். எனக்கும், என் சீடர்களுக்கும் தொந்தரவு கொடுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு சாமியார் நித்யானந்தா கூறினார்.

100 கோடி கேட்டது யார்?:நூறு கோடி ரூபாய் கேட்டு மிரட்டியவர்கள் யார் என்று சொல்ல சாமியார் நித்யானந்தா மறுத்துவிட்டார்.

பிடதி ஆஸ்ரமத்தில் நிருபர்களின் கேள்விகளுக்கு, சாமியார் நித்யானந்தா அளித்த பதில்:
கே: உங்களை, 100 கோடி கேட்டு மிரட்டியது, தமிழக முதல்வர் கருணாநிதியா?
பதில்: இல்லை

கே: தமிழக அரசியல்வாதிகளா?
பதில்: குறிப்பாக தமிழகத்தை சார்ந்தவர்கள் என கூற முடியாது.

கே: லெனின் ஹிந்துவா? கிறிஸ்தவரா?
ப: தெரியாது. இங்கு வரும் யாரிடமும் ஜாதி, மதம் கேட்பது கிடையாது.

கே: ஆஸ்ரமம் செய்து வந்த, தர்ம காரியங்களை நிறுத்துவதற்கு காரணம் என்ன? நீதிமன்றம் தடை விதித்துள்ளதா?
ப: இல்லை. இன்னும் சில மாதங்களில் தொடரும்.

கே: நடிகை ரஞ்சிதா, லெனின் தன்னை கற்பழிக்க வந்ததாக புகார் கூறியுள்ளாரே. அச்சம்பவம் உங்களுக்கு தெரியுமா?
ப: ஆஸ்ரமத்தில் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். அனைவரையும் நான் கண்காணிக்க முடியாது.

கே: ஆஸ்ரமத்துக்கு வரும் பெண்களிடம் செக்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டதா?
ப: அப்படி எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை


நன்றி தினமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

100 கோடி கேட்டு சக்தி வாய்ந்த மனிதர்கள் மிரட்டல்: நித்யானந்தா பரபரப்பு பேட்டி Empty Re: 100 கோடி கேட்டு சக்தி வாய்ந்த மனிதர்கள் மிரட்டல்: நித்யானந்தா பரபரப்பு பேட்டி

Post by ஹனி Wed 2 Feb 2011 - 12:16

:”@:
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

Back to top

- Similar topics
» நித்யானந்தா, ரஞ்சிதா மீது ரூபா 50லட்சம் நஷ்டஈடு கேட்டு வழக்கு
» உலகின் சக்தி வாய்ந்த பெண்மணி: சோனியாவுக்கு 7-வது இடம்
» அரபுலகின் சக்தி வாய்ந்த இந்திய வணிகராக யூசுப் அலி...
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
» மும்பையில் பணம் கேட்டு நடிகருக்கு மிரட்டல் : மீண்டும் தாதாக்களின் கொடுமை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum