Latest topics
» பல்சுவை- ரசித்தவை - 9by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
உங்கள் வீட்டு செல்லம் எப்படி?
3 posters
Page 1 of 1
உங்கள் வீட்டு செல்லம் எப்படி?
நம்முடைய குழந்தைகள் எப்போதும் நம்மை விட புத்திசாலிகளாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். எல்லாவற்றிலும் நம்பர் ஒன்னாக அவர்கள் பிரகாசிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். நோக்கம் என்னவோ நியாயமானது தான். ஆனால் அதற்காக நாம் அவர்களை எப்படியெல்லாம் பாடாய்ப்படுத்துகிறோம் தெரியுமா?
பிஞ்சு உள்ளங்களை நாம் புரிந்து கொள்ள சிறிதும் முயற்சிக்காமல், நம்முடைய கனவுகளை அவர்கள் மீது சுமத்தும் போது, அது அவர்களின் மனநலனை பெரிதும் பாதிக்கும். புத்திசாலித்தனம் என்பது குழந்தைக்கு குழந்தை மாறுபடும். அவர்கள் வளரும் சூழல், புரிந்து கொள்ளும் திறன், ரசிக்கும் ஆற்றல், கவனத்தை ஒருநிலைப்படுத்தும் திறன், பார்த்து, உற்று உணர்ந்து பகுத்தறியும் திறன் இதையெல்லாம் அடிப்படையாகக் கொண்டது தான் அறிவு.
நம் பிள்ளைகளிடம் இதையெல்லாம் மேன்மைப்படுத்த முயற்சிக்க வேண்டுமே தவிர, அதிகபட்ச விஷயங்களை அது பள்ளிப்பாடமாகவே இருந்தாலும் பல பரிமாணங்களில் மூளையில் திணிக்க முற்படக் கூடாது. அப்படி செய்வதால் யாரும் அறிவாளியாகி விட முடியாது. மாறாக மனம் குழம்பி மந்த நிலைக்கு தள்ளப்படுவார்கள். கல்வி என்பது புத்தகத்தில் மட்டுமே இருப்பதல்ல.
நாம் பார்க்கும் இந்த பரந்த உலகத்திலும் உள்ளது. நம்மை சுற்றி உள்ள விஷயங்களில் உள்ளது. அவற்றைப் பார்த்துப் புரிந்து கொள்ள அவர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட வேண்டும். சிந்தனையைத் தூண்டும் விஷயங்களை அவர்கள் முன் வைக்க வேண்டும். சிந்தித்து சுதந்திரமாக செயல்பட கற்றுத் தர வேண்டும். எந்த ஒரு விஷயமும் புரிதலை அடிப்படையாகக் கொண்டு தான் கணிக்கப்படுகிறது.
மனதில் பதிவாகும் ஒரு விஷயத்தை அவர்கள் புரிந்து கொள்ளும் விதம் சரியாக உள்ளதா என்பதை அவர்களிடம் பேசி பரிசோதித்துக் கொள்ளுங்கள். அவர்களுடைய நினைவாற்றலை ஸ்திரப்படுத்த திரும்பத் திரும்ப ஒரு விஷயத்தை கேட்டுப் பாருங்கள். எளிதாக நினைவில் வைத்துக் கொள்ளும் முறையையும் கற்றுக் கொடுங்கள்.
நினைவாற்றல் என்பது ஒரு பயிற்சி தான். அதற்காக புத்தகத்தில் உள்ள விஷயங்களை கற்றுக் கொடுத்து திரும்பத் திரும்ப படிக்க வைத்து அவர்களை ஒரு இயந்திரமாக மாற்றி விடாதீர்கள். பிள்ளைகளை வெளியில் அனுப்பினால் அவர்கள் படிப்பு கெட்டுப்போகும் என்ற எண்ணத்தில் வீட்டுக்குள் அன்புச்சிறை வைத்து விடாதீர்கள்.
அப்படி வீட்டிலேயே உட்கார வைத்திருப்பதால் யாரும் அறிவாளியாகி விட முடியாது. இந்த உலகம், சுற்று சூழல் அவர்களுக்கு பல விஷயங்களை போதிக்க காத்திருக்கிறது. அவர்களுக்கு வெளியுலகத்தை காட்டுங்கள். ஆர்வத்துடன் அவர்கள் பல விஷயங்களை ரசித்து எடுத்துக் கொள்வார்கள். அது அவர்களுடைய அறிவுக்கு வித்தாகும்.
அதுவே அவர்களுடைய சிந்தனைக்கு வழி வகுக்கும். அறிவை புகுத்தும் முறையில் அவசரமும், ஆவேசமும், அசரத்தனமும் இருக்கக்கூடாது. அது எதிர்மறையான விளைவுகளை சந்திக்க வைக்கும். எப்போதும் மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டுப் பார்த்து பதட்டமடையக் கூடாது. நம்முடைய குழந்தையின் திறமையும், ஆர்வமும் எப்படி இருக்கிறது என்பதை உத்தேசித்து தான் அறிவை வளர்க்க முடியும்.
நம்முடைய அவசரத்திற்கு குழந்தைகள் ஈடு கொடுக்க வேண்டும். குழந்தைகள் மகிழ்ச்சியான சூழ்நிலையில் தான் அறிவை வளர்க்க முற்படும். அந்த மகிழ்ச்சியான சூழலை அவர்களுக்கு ஏற்படுத்தித் தர வேண்டியது பெற்றோர் கடமை. பல பிரச்சினைகளுக்கு மத்தியில் வளரும் குழந்தைகளுக்கு அறிவு வளர்ச்சி சற்று குறைவாகவே இருக்கும்.
சுற்றிலும் பரபரப்பு, அதிக இரைச்சலுக்கு மத்தியில் வளரும் குழந்தைகளுக்கு கவனக் குறைவு இருக்கும். அவர்களைஅதில் இருந்து வெளிக்கொண்டு வர சிந்தனையை ஒருமுகமாக திருப்ப வேண்டியதும், அதை அன்பு கலந்து செய்ய வேண்டியதும் பெற்றோரின் தலையாய கடமை. பெற்றோர் நல்ல நண்பர்களாக இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.
பிள்ளைகள் சற்று ஓய்வாக இருக்கும் நேரத்தில் விளையாட்டுப் போல் ஆரம்பித்து சிந்தனையை தூண்டும் கேள்விகளை அவர்களிடம் கேட்பது நல்லது. அப்போது அவர்கள் மனதில் பதியும்படியான சுவாரசியமான கதைகளைச் சொல்ல வேண்டும். குழந்தையின் அறிவை வளர்க்கிறேன் என்று வன்முறையைத் தூண்டும் கதைகளையும் விஷயங்களையும் சொல்லக்கூடாது.
நினைவாற்றலை பெருக்கும் விதத்தில் சிறுசிறு பயிற்சிகளை அவ்வப்போது தர வேண்டும். வீட்டு முகவரி, தொலைபேசி எண்கள் போன்றவற்றைக் கொடுத்து நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அது அவர்களுக்கு பெருமையாகவும் இருக்கும். பள்ளிப் பாடத்தை திரும்பத் திரும்ப சொல்ல வைத்து போரடிக்கக் கூடாது.
முற்றிலும் புதிய ஒரு விஷயத்தைப் பற்றி சொல்லும் போது அவர்களுடைய புரிதலை நன்கு பரிசோதிக்க வேண்டும். வேண்டாத விஷயங்களைப் பற்றி பேசி அவர்களை புண்படுத்தக்கூடாது. குறிப்பாக அவர்கள் பற்றிய சின்னச் சின்ன புகார்களை பட்டியல் போட்டு வாசிக்கவே கூடாது.
அந்த வயதில் குறும்பு செய்யாமல் இருந்தால் தானே தப்பு. அவர்கள் ஏதேனும் ஒரு விஷயத்தில் ஆர்வம் காட்டினால் காரணமில்லாமல் அவர்களை தடை செய்யக்கூடாது. அது அவர்களுடைய அறிவை பாதிக்கும். அவர்கள் ஆர்வம் காட்டும் விஷயத்தை வைத்தே அவர்களுக்கு அறிவை புகட்ட முடியும்.
உதாரணமாக தொலைக்காட்சி, விளையாட்டு, ஊர் சுற்றுதல், வரைதல், பாடுதல், ஆடுதல், பேசுதல், இதெல்லாம் அறிவை வளர்க்கும் விஷயமே. அவர்களுடைய ஆர்வம் எதில் அதிகம் என்பதை முன் வைத்து. அதையே ஆரம்பமாகக் கொண்டு அறிவை புகட்டலாம். அதிக மார்க்குகள் ஒருவருடைய புத்திசாலித்தனத்தை நிர்ணயிக்காது.
அதனால் வெறும் மார்க்குகளுக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல், உண்மையான அறிவு வளர்ச்சிக்கு வழிவகுத்துக் கொடுங்கள். உங்கள் குழந்தைகளின் அறிவை வளர்க்க உங்களுக்கு பொறுமை தேவை. எந்த காலத்திலும் அவர்கள் முதலிடம் வரவேண்டும் என்று வற்புறுத்தாதீர்கள். அப்படி முடியாத பட்சத்தில் அவர்கள் மனநிலை பாதிக்கப்படுவார்கள்.
எப்படிப்பட்ட புத்திசாலி குழந்தைகளுக்கும் ஏதாவது ஒரு காலகட்டத்தில் பின்னடைவு ஏற்படும். மறதி ஏற்படும். அப்போது வாழ்க்கையே அஸ்தமித்து விட்ட தைப் போன்றதொரு உணர்வை அது ஏற்படுத்தும். அந்த நேரத்தில் அவர்கள் வேறு எதைப்பற்றியும் சிந்திக்காமல் தவறான முடிவுகளுக்குத் தள்ளப்படலாம்.
அதனால் அவர்களை இப்படிப்பட்ட சிந்தனைகள் தோன்றாமல் காப்பது நம் கடமை. அத னால் அறிவை புகுத்தும் போது எந்த கட்டாயமும் இருக்க கூடாது. அது ஒரு முயற்சிதான். முயற்சியில் ஏற்படும் பின்னடைவை ஒரு போதும் தோல்வி என்று எண்ணிவிட வேண்டாம். அடுத்தடுத்த அணுகுமுறைகளில் அவர்கள் உங்கள் அன்பின் வசப்படுவார்கள் என்பது நிச்சயம்.
தோல்விகளுக்குப் பின்னும் வாழ்க்கை தொடரும். தொடர வேண்டும். அது பல வெற்றிகளில் கொண்டு போய் விடும். அறிவு வளர்ச்சி என்பது ஒரு குழந்தையின் மனநிலையோடு சம்பந்தப்பட்டது. அதனால் அறிவு வளர்ச்சியுடன் மனநலத்தைப் பாதுகாக்கும் பணியும் நம்முடையது. அறிவு மனித வாழ்க்கையோடு இணைந்து வளர வேண்டியது.
ஒரு குழந்தை முன்னணியில் இருக்க வேண்டியது நம்முடைய ஆசையாக இருக்கலாம். ஆனால் அவர்கள் ஆசைப்பட்ட படியே அவர்கள் உருவாக வேண்டும். அது தான் சரி. நம்முடைய ஆசைகள் அவர்களுக்கு பாரமாக இருக்கும். அந்த பாரத்தை அவர்கள் மீது சுமத்தக்கூடாது. வெற்றியிலும், தோல்வி யிலும் அவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். நம் குழந்தைகளின் வெற்றி நமக்கு முக்கியம். அதைவிட அவர்கள் நமக்கு முக்கியம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உங்கள் வீட்டு செல்லம் எப்படி?
பயனுள்ள பகிர்வு நன்றி :#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உங்கள் வீட்டு செல்லம் எப்படி?
:# பகிர்வுக்கு :] சம்ஸ்
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: உங்கள் வீட்டு செல்லம் எப்படி?
மறுமொழிக்கு நன்றி அக்கா :]பானுகமால் wrote:பயனுள்ள பகிர்வு நன்றி :#
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» உங்கள் பெட்ரூமை எப்படி வைத்துக்கொள்கிறீர்கள்!
» உங்கள் பெட்ரூமை எப்படி வைத்துக்கொள்கிறீர்கள்!
» பெற்றோரே: படிப்பில் மந்தமா உங்கள் செல்லம்
» உங்கள் வீட்டு விருந்தாலியை இப்படி கவனிக்கனும்
» உங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன?
» உங்கள் பெட்ரூமை எப்படி வைத்துக்கொள்கிறீர்கள்!
» பெற்றோரே: படிப்பில் மந்தமா உங்கள் செல்லம்
» உங்கள் வீட்டு விருந்தாலியை இப்படி கவனிக்கனும்
» உங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|