Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
இத்தாலி வீரர்களிடம் டெல்லியில் விசாரணை: மத்திய அரசு நடவடிக்கை
2 posters
Page 1 of 1
இத்தாலி வீரர்களிடம் டெல்லியில் விசாரணை: மத்திய அரசு நடவடிக்கை
![இத்தாலி வீரர்களிடம் டெல்லியில் விசாரணை: மத்திய அரசு நடவடிக்கை D89a00a9-e562-4c7e-9099-90e6d2224f8e_S_secvpf](https://2img.net/h/mmimages.maalaimalar.com/Articles/2013/Mar/d89a00a9-e562-4c7e-9099-90e6d2224f8e_S_secvpf.gif)
புதுடெல்லி, மார்ச்.24
கேரள மீனவர்களை சுட்டுக்கொன்ற இத்தாலி கடற்படை வீரர்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் வழக்கு விசாரணையை எங்கு நடத்துவது என்ற சர்ச்சை உருவாகி உள்ளது.
அரபிக் கடலில் மீன்பிடித்த கேரள மீனவர்களை இத்தாலி கப்பலில் பாதுகாப்புக்கு வந்த கடற்படை வீரர்கள் கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுக் கொன்று விட்டனர்.
இதையடுத்து 2 இத்தாலி கடற்படை வீரர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கேரள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் இருவரும் இத்தாலி தேர்தலில் வாக்களிக்க பரோலில் தாய்நாடு சென்றனர். அவர்களை திரும்ப ஒப்படைக்க இத்தாலி அரசு மறுத்ததால் இரு நாடுகளிடையே கருத்து மோதல் ஏற்பட்டது.
தூதர்கள் பேச்சுவார்த்தைக்குப்பின் சுமூக தீர்வு ஏற்பட்டது. இருவரும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டனர். நேற்று முன்தினம் டெல்லி வந்த இத்தாலி வீரர்கள் அங்குள்ள தூதரக அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இத்தாலி வீரர்களிடம் மென்மையான போக்கை கடைப்பிடிக்குமாறும், கைது செய்து சிறையில் அடைக்காமல் வீட்டுக்காவலில் வைக்குமாறும் இத்தாலி கோரிக்கை விடுத்தது. மேலும் இந்தியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்படுவது பற்றியும் விளக்கம் கேட்டது. அரிய வழக்குகளில் மட்டுமே தூக்கு தண்டனை விதிக்கப்படுவதாக பதில் அளித்த மத்திய அரசு இத்தாலி வீரர்களுக்கு அதற்கு வாய்ப்பு இல்லை என்றும் உறுதி அளித்தது.
இதையடுத்து இத்தாலி சமாதானம் அடைந்தது. இத்தாலி வீரர்கள் மீதான வழக்கு விசாரணை எங்கு நடைபெறும் என்ற சர்ச்சை உருவாகி உள்ளது. வழக்கை விசாரிக்க தனி விரைவு கோர்ட்டு அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.
மத்திய அரசு டெல்லியில் தனி கோர்ட்டு அமைத்து இத்தாலி வீரர்கள் மீதான வழக்கு விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. அப்போதுதான் அவர்களை டெல்லியில் உள்ள இத்தாலி தூதர் அலுவலகத்தில் தங்க வைத்து விசாரணையை சந்திக்க வசதியாக இருக்கும் என்று மத்திய அரசு கருதுகிறது.
கேரள வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் சர்வதேச கடல் பகுதியில் நடந்ததால் சர்வதேச சட்டப்படி தங்கள் சொந்த நாட்டில்தான் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இத்தாலி கூறி வருகிறது.
கேரள முதல் மந்திரி உம்மன்சாண்டி தங்கள் மாநிலத்தில் கொல்லம் மாவட்டத்தில் தனி கோர்ட்டு அமைத்து விசாரணையை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சம்பவம் நடந்த இடம் கேரள பகுதி என்பதால் ஆரம்பகட்ட விசாரணை கொல்லத்தில் நடந்தது. எனவே கொல்லம் கோர்ட்டையே தனி கோர்ட்டாக மாற்றி விசாரணையை தொடரவேண்டும். வழக்கு தொடர்பான அனைத்து தஸ்தாவேஜுகளும் இங்குதான் உள்ளது. டெல்லி அல்லது வேறு இடத்தில் விசாரணை வைத்தால் இங்குள்ள சாட்சிகள் வெளியூர்களுக்கு சென்று வருவதில் சிரமம் உள்ளது. மொழிப்பிரச்சினை ஏற்படும். அது விசாரணையை மேலும் தாமதிக்கும் என்றும் உம்மன்சாண்டி குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் சுப்ரீம் கோர்ட்டு இது இருநாடுகள் சம்பந்தப்பட்டது. இதில் கேரள மாநில நீதித்துறை விசாரணை நடத்தக்கூடாது என்று கருத்து தெரிவித்து இருந்தது. மேலும் விசாரணையை காலதாமதம் செய்வது குறித்தும் சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியது.
எனவே டெல்லியில் தனி கோர்ட்டு அமைக்கும் முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளது. இதுதொடர்பான முடிவை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக சுப்ரீம் கோர்ட்டுக்கு தெரிவிக்கும். வருகிற ஏப்ரல் 2-ந் தேதிக்குள் தனி கோர்ட்டு அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கும் வகையில் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கும் என்று தெரியவந்துள்ளது.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இத்தாலி வீரர்களிடம் டெல்லியில் விசாரணை: மத்திய அரசு நடவடிக்கை
எதுவானாலும் தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும் இவர்கள் இதில் விதிவிலக்கு உள்ளவர்கள் என நான் நினைக்கிறேன்
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» ரயில் கட்டணத்தை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை: பியுஷ் கோயல்
» சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
» கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
» இத்தாலி சிறைகளில் வாடும் 109 இந்தியர்கள்: இந்திய அரசு மீட்குமா?
» முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம்
» சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
» கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
» இத்தாலி சிறைகளில் வாடும் 109 இந்தியர்கள்: இந்திய அரசு மீட்குமா?
» முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|