Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Yesterday at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
ஜனாதிபதியால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட 8 பேரை தூக்கில் போட சுப்ரீம் கோர்ட்டு தடை
2 posters
Page 1 of 1
ஜனாதிபதியால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட 8 பேரை தூக்கில் போட சுப்ரீம் கோர்ட்டு தடை
புதுடெல்லி, ஏப். 7-
ஜனாதிபதியால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட 8 பேரை தூக்கில் போட சுப்ரீம் கோர்ட்டு 4 வாரங்களுக்கு தடை விதித்துள்ளது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கொடிய கொலை குற்றங்களை செய்த தூக்குத் தண்டனை கைதிகளான சோனியா அவரது கணவர் சஞ்சீவ், குர்மீத் சிங், பிரவீண்குமார், சுந்தர் சிங், ஜாபர்அலி, சுரேஷ், ராம்ஜி ஆகியோர் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார்கள்.
நீண்ட வருடங்களாக அவை பரிசீலனையில் இருந்து வந்தது. இந்த நிலையில் 8 பேர் கருணை மனுக்களையும் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி சில நாட்களுக்கு முன் நிராகரித்தார். இதையடுத்து அவர்களை தூக்கில் போடுவதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாநில சிறைத்துறை அதிகாரிகள் செய்து வந்தனர்.
இதை எதிர்த்து மக்கள் உரிமை குழு மற்றும் ஜன நாயக உரிமைக்கான மக்கள் குழு சார்பில் மூத்த வக்கீல் கொலின் கோன்சால் வேஸ் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். நீதிபதி சதாசிவம் வீட்டில் நேற்று இரவு இந்த மனுவை தாக்கல் செய்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
பஞ்சாப் தூக்கு தண்டனை கைதி தேவேந்தர்பால்சிங் புல்லரின் கருணை மனுவை ஜனாதிபதி நீண்ட தாமதத்துக்குப்பின் நிராகரித்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கில் தண்டனையை நிறைவேற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே காரணத்தை மேற்கோள் காட்டி வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கிலும் தண்டனையை நிறைவேற்ற தடை விதித்துள்ளது. இதேபோல் தற்போது 8 பேரின் கருணை மனுக்களும் 3 ஆண்டில் இருந்து 12 வருடத்துக்குப்பின்புதான் நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே இவர்களுக்கு தண்டனையை நிறைவேற்ற தடைவிதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
மனுவை நீதிபதிகள் சதாசிவம், எம்.ஒய். இக்பால் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் உடனே விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு 8 பேரையும் தூக்கிலிடுவதற்கு 4 வாரங்கள் தடைவிதித்து உத்தரவிட்டனர். 8 பேரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட தகவலை அவர்களது குடும்பத்தினருக்கு மத்திய - மாநில உள்துறை அமைச்சகங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டதா? என்பது குறித்து பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் போலீஸ் மற்றும் சிறைதுறை நிர்வாகங்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கருணை மனு நிராகரிக்கப்பட்ட 8 பேரில் சோனியா - சஞ்சீவ் இருவரும் கணவன் - மனைவி ஆவார்கள். 2001-ம் ஆண்டு சோனியாவின் பெற்றோர் உள்பட தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த 8 பேரை சொத்து தகராறில் கொலை செய்த குற்றத்துக்காக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. மற்றொரு கைதியான குர்மீத் 1986-ல் தனது குடும்பத்தைச் சேர்ந்த 13 பேரையும், ஜாபர் அலி என்பவர் தனது மனைவி மற்றும் 5 மகள்களையும் கொலை செய்தவர்கள். மற்ற இரு தூக்கு கைதிகளான சுரேஷ் - ராம்ஜி அண்ணன் தம்பிகள் ஆவார்கள். தங்களது மற்ற 5 சகோதரர்களை கொன்றதாக இருவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
மாலைமலர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஜனாதிபதியால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட 8 பேரை தூக்கில் போட சுப்ரீம் கோர்ட்டு தடை
காலம் கடத்தினால் இப்படித்தான் தண்டனை உடனே கொடுங்க #.
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Similar topics
» பூட்டோ தூக்கில் போடப்பட்டார்; கருணை காட்ட ஜியா மறுப்பு
» ராமேசுவரம் மீனவர்கள் 30 பேரை விடுவிக்க இலங்கை கோர்ட்டு உத்தரவு
» உ.பி. அரசின் உத்தரவை, சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது
» லோக்பால் மசோதாவில் பிரதமரையும் உள்படுத்த வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி
» ‘குட்கா’ பொருட்களுக்கு தடை: மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு இறுதி ‘கெடு’
» ராமேசுவரம் மீனவர்கள் 30 பேரை விடுவிக்க இலங்கை கோர்ட்டு உத்தரவு
» உ.பி. அரசின் உத்தரவை, சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது
» லோக்பால் மசோதாவில் பிரதமரையும் உள்படுத்த வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி
» ‘குட்கா’ பொருட்களுக்கு தடை: மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு இறுதி ‘கெடு’
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|