Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
வசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி!
4 posters
Page 1 of 1
வசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி!
இன்றும் நினைவிலிருக்கிறது
அந்த இனிய நாள்!
மூன்றாம் வகுப்பை
முழு ஆண்டுத் தேர்வு எழுதி
முடித்து வைத்தபின்
முழுதாய்க் கிடைத்த
ஒரு மாத விடுமுறைக் காலமது!
நாங்கள் விளையாடிக் கிளப்பிய
புழுதி நெடியில்,
விட்டால் போதுமென்று
விடுமுறை நாட்களே
விரைந்தோடிய காலமது!
அது ஒரு ஞாயிற்றுக்
கிழமையென்றே ஞாபகம்!
காலைவெயில் எங்கள்
கதவிடுக்கில் நுழைந்து என்
கால்மாட்டில் விழுந்து காத்திருந்தது
நான் கண்விழிப்பதற்காக!
உரக்கக் கரைந்த காகம் ஒன்று
என் உறக்கம் களைத்த திருப்தியில்
சன்னல்விட்டு சந்தோசமாய்ப்
பறந்து சென்றது!
விளையாட்டு ஆர்வத்தில்
விழிகள் திறந்துகொள்ள
விருட்டென எழுந்தமர்கிறேன்!
என்ன அது? வடமேற்கு
மூலையில் வழவழப்பாய்?
கனசதுரப் பெட்டியொன்று
கம்பீரமாய் அமர்ந்திருந்தது
அந்த கனத்த மேசை மீது!
சந்தேகமேயில்லை! இது
தொலைக்காட்சிப் பெட்டிதான்!
அடுப்படியிலிருந்த அம்மாவிடம்
ஓடுகிறேன்! "என்னம்மா அது?"
"கலர் டி.வி டா"
அம்மா சொன்ன வார்த்தை
ஆனந்தமாய் ஒலித்தது!
இரவு என் கண்களில் படாதது,
இப்போதெப்படி வந்ததென்றேன்!
அம்மா சொன்ன கதை கேட்டு
அதிசயித்துப் போனேன்!
மூன்று வயது குட்டித் தம்பி
சொப்பனம் கண்டு
ஏதோ சொல்லியழ,
உற்றுக் கேட்ட அப்பா காதில்
டி.வி என்ற ஒற்றைச் சொல் விழ,
அடுத்த பேருந்தில் மதுரை சென்று
கடைசிப் பேருந்தில்
கலர் டி.வியுடன் திரும்ப,
புரண்டு படுக்கும் நேரத்திற்குள்
புருவம் உயர்த்தும்படி ஒரு புதுவரவு!
திடீரென்று தம்பி விழித்தால்
டி.வியில்தான் விழிக்கவேண்டுமாம்!
கேட்கக் கேட்க சிலிர்த்தது!
கேசரியாய் இனித்தது!
நேற்றுவரை நான் ரசித்த வானொலி
லேசாய் எங்களை முறைத்தது!
மூன்று தெருக்களுக்கும் சேர்த்து
முதல் தொலைக்காட்சிப் பெட்டி
இதுவென்பதால், என்
முன்நெற்றிவரை முட்டி நின்றது கர்வம்!
தெருவெங்கும் இச்செய்தி பரப்பாவிடில்,
தெறித்து விழுந்துவிடும் தலை!
ஒளிபரப்பக் காத்திருக்கும்
எங்கள் தொலைகாட்சி பற்றி
ஒலிபரப்பியபடி விரைகிறேன்
ஒவ்வொரு வீட்டின்முன்பும்!
சண்டியராய்த் திரிந்த, மற்றும்
நான் சண்டையிட்டுப் பிரிந்த
சகல நண்பர்களிடமும்
சத்தமாய் சொல்லிமுடித்தேன்
அந்த சர்க்கரைச் செய்தியை!
அடுத்த அரை மணி நேரத்தில்
அரைகுறையாய் கழுவிய முகங்களுடன்
அத்தனை நண்பர்களும்
ஆராவாரமாய் அமர்ந்திருந்தனர்
அனைத்து வைக்கப்பட்டிருந்த
அந்தத் தொலைக்காட்சிப் பெட்டிமுன்பு!
படம் தெரியும் நிமிடத்திற்காய்
படபடப்பாய்க் காத்திருக்கிறோம்!
அப்பா வந்து இயக்கினால்
அழகாய்த் தெரியும் நிகழ்ச்சிகள் என
அனைவருக்கும் சொல்லிவைக்க,
அப்பா வந்து வீசினார்
அந்த அணுகுண்டை!
ஆண்ட்டனா என்ற ஒன்று
அவசியம் வேண்டுமாம்!
அடுத்தவாரம் அது வந்தபின்தான்
அனைத்து நிகழ்ச்சியும் தெரியுமாம்!
அப்புறமென்ன...?
அத்தனை மகிழ்ச்சியும்
அசடு வழிய ஒத்திப்போடப்பட்டது
அடுத்த வாரத்திற்கு!
-நிலவை.பார்த்திபன்
அந்த இனிய நாள்!
மூன்றாம் வகுப்பை
முழு ஆண்டுத் தேர்வு எழுதி
முடித்து வைத்தபின்
முழுதாய்க் கிடைத்த
ஒரு மாத விடுமுறைக் காலமது!
நாங்கள் விளையாடிக் கிளப்பிய
புழுதி நெடியில்,
விட்டால் போதுமென்று
விடுமுறை நாட்களே
விரைந்தோடிய காலமது!
அது ஒரு ஞாயிற்றுக்
கிழமையென்றே ஞாபகம்!
காலைவெயில் எங்கள்
கதவிடுக்கில் நுழைந்து என்
கால்மாட்டில் விழுந்து காத்திருந்தது
நான் கண்விழிப்பதற்காக!
உரக்கக் கரைந்த காகம் ஒன்று
என் உறக்கம் களைத்த திருப்தியில்
சன்னல்விட்டு சந்தோசமாய்ப்
பறந்து சென்றது!
விளையாட்டு ஆர்வத்தில்
விழிகள் திறந்துகொள்ள
விருட்டென எழுந்தமர்கிறேன்!
என்ன அது? வடமேற்கு
மூலையில் வழவழப்பாய்?
கனசதுரப் பெட்டியொன்று
கம்பீரமாய் அமர்ந்திருந்தது
அந்த கனத்த மேசை மீது!
சந்தேகமேயில்லை! இது
தொலைக்காட்சிப் பெட்டிதான்!
அடுப்படியிலிருந்த அம்மாவிடம்
ஓடுகிறேன்! "என்னம்மா அது?"
"கலர் டி.வி டா"
அம்மா சொன்ன வார்த்தை
ஆனந்தமாய் ஒலித்தது!
இரவு என் கண்களில் படாதது,
இப்போதெப்படி வந்ததென்றேன்!
அம்மா சொன்ன கதை கேட்டு
அதிசயித்துப் போனேன்!
மூன்று வயது குட்டித் தம்பி
சொப்பனம் கண்டு
ஏதோ சொல்லியழ,
உற்றுக் கேட்ட அப்பா காதில்
டி.வி என்ற ஒற்றைச் சொல் விழ,
அடுத்த பேருந்தில் மதுரை சென்று
கடைசிப் பேருந்தில்
கலர் டி.வியுடன் திரும்ப,
புரண்டு படுக்கும் நேரத்திற்குள்
புருவம் உயர்த்தும்படி ஒரு புதுவரவு!
திடீரென்று தம்பி விழித்தால்
டி.வியில்தான் விழிக்கவேண்டுமாம்!
கேட்கக் கேட்க சிலிர்த்தது!
கேசரியாய் இனித்தது!
நேற்றுவரை நான் ரசித்த வானொலி
லேசாய் எங்களை முறைத்தது!
மூன்று தெருக்களுக்கும் சேர்த்து
முதல் தொலைக்காட்சிப் பெட்டி
இதுவென்பதால், என்
முன்நெற்றிவரை முட்டி நின்றது கர்வம்!
தெருவெங்கும் இச்செய்தி பரப்பாவிடில்,
தெறித்து விழுந்துவிடும் தலை!
ஒளிபரப்பக் காத்திருக்கும்
எங்கள் தொலைகாட்சி பற்றி
ஒலிபரப்பியபடி விரைகிறேன்
ஒவ்வொரு வீட்டின்முன்பும்!
சண்டியராய்த் திரிந்த, மற்றும்
நான் சண்டையிட்டுப் பிரிந்த
சகல நண்பர்களிடமும்
சத்தமாய் சொல்லிமுடித்தேன்
அந்த சர்க்கரைச் செய்தியை!
அடுத்த அரை மணி நேரத்தில்
அரைகுறையாய் கழுவிய முகங்களுடன்
அத்தனை நண்பர்களும்
ஆராவாரமாய் அமர்ந்திருந்தனர்
அனைத்து வைக்கப்பட்டிருந்த
அந்தத் தொலைக்காட்சிப் பெட்டிமுன்பு!
படம் தெரியும் நிமிடத்திற்காய்
படபடப்பாய்க் காத்திருக்கிறோம்!
அப்பா வந்து இயக்கினால்
அழகாய்த் தெரியும் நிகழ்ச்சிகள் என
அனைவருக்கும் சொல்லிவைக்க,
அப்பா வந்து வீசினார்
அந்த அணுகுண்டை!
ஆண்ட்டனா என்ற ஒன்று
அவசியம் வேண்டுமாம்!
அடுத்தவாரம் அது வந்தபின்தான்
அனைத்து நிகழ்ச்சியும் தெரியுமாம்!
அப்புறமென்ன...?
அத்தனை மகிழ்ச்சியும்
அசடு வழிய ஒத்திப்போடப்பட்டது
அடுத்த வாரத்திற்கு!
-நிலவை.பார்த்திபன்
Re: வசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி!
உண்மைதான் அந்த வயதில் டி வி யை பார்ப்பதற்காக ஒவ்வொரு வீடாக ஏறியது ஞாபகம் வருகிறது.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி!
-
ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே...
ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே...
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25138
மதிப்பீடுகள் : 1186
Re: வசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி!
ahmad78 wrote:உண்மைதான் அந்த வயதில் டி வி யை பார்ப்பதற்காக ஒவ்வொரு வீடாக ஏறியது ஞாபகம் வருகிறது.
ஒலியும் ஒளியும 25 பைசா படத்துக்கு 50 பைசா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|