Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Yesterday at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
ஈழத்தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்: கருணாநிதி வேண்டுகோள்
3 posters
Page 1 of 1
ஈழத்தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்: கருணாநிதி வேண்டுகோள்
சென்னை, மே 24-
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கேள்வி:- இந்தோனேசியாவில் சிக்கியுள்ள தன் மகனை மீட்க உதவி கோரி, அவருடைய தாயார் குசலகுமாரி என்பவர் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வந்திருப்பதாகச் செய்தி ஒன்று வந்துள்ளதே?
பதில்:- 2009ஆம் ஆண்டு இலங்கையில் உச்சக்கட்ட போர் நடந்தபோது, தன் மகன் துஷ்யந்தனை (வயது 26) இந்தோனேசியாவிற்கு அவருடைய தாய் குசல குமாரி அனுப்பி வைத்திருக் கிறார். அங்கிருந்த அவருடைய மகன் பத்திரமாக இந்தோனேசியாவிற்கு வந்துவிட்டதாகவும், அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகில் கூடவந்த ஒன்பது தமிழர்களுடன் செல்லவிருப்பதாகவும் தொலைபேசியில் தெரிவித்திருக்கிறார்.
அதற்குப் பிறகு நான்காண்டுகளாக எந்தச் செய்தியும் மகனிடமிருந்து கிடைக்கவில்லையாம். கடந்த நான்காண்டுகளாக மகன் எங்கேயிருக்கிறான் என்று தேடி பலரிடம் உதவி கேட்டும் சோர்ந்து போயிருந்த நிலையில், தற்செயலாக இலங்கையில் வெளிவரும் “தினக்குரல்” நாளிதழில் தன் மகனின் புகைப்படத்தைப் பார்த்திருக்கிறார். அந்தப் புகைப்படம், இலங்கையிலிருந்து இந்தோனேசியா வந்துள்ள அகதிகளின் படம். அதிலே தனது மகன் துஷ்யந்தன் இருந்ததைப் பார்த்துவிட்டு, அந்தச் செய்தியைப் படித்தபோது, இந்தோனேசியா சிறையில் அந்த ஈழத் தமிழர்கள் வாழ்வதாகவும், அவர்களுக்கு கரப்பான் பூச்சிகளே உணவாகக் கொடுக்கப்படுகிறது என்றும் எழுதப்பட்டிருப்பதைப் பார்த்து விட்டு, எப்படியாவது சிறையிலிருந்து அவர்களை மீட்க வேண்டுமென்ற எண்ணத்தோடு அந்தத் தாய்
தமிழகத்திற்கு வந்திருப்பதாகவும் செய்தி படித்தேன். அந்தத் தாயின் துயரத்தையும், இந்தோனேசியாவில் உள்ள மற்ற ஈழத் தமிழர்களின் துயரத்தையும் தீர்க்க இந்திய அரசும், தமிழக அரசும் உரிய முயற்சிகளை எடுக்க வேண்டும்; எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.
கேள்வி :- இரண்டு லட்சத்து 60 ஆயிரம் இந்தியர்களுக்கு அமெரிக்கக் குடியுரிமை வழங்கக் கூடிய முக்கிய மசோதாவுக்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளிக்கப் போவதாகச் சொல்லப்படுகிறதே?
பதில்:- அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இன்றி 1 கோடியே 10 லட்சம் வெளிநாட்டினர் வாழ்ந்து
வருவதாகவும், அவர்களில் 2 லட்சத்து 60 ஆயிரம் பேர் இந்தியர்கள் என்றும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கு குடியுரிமை அளிக்க வகை செய்து மசோதா தயாரிக்கப்பட்டு, அமெரிக்க செனட் சபையின் நீதித் துறை குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்திருந்தார்கள். தற்போது நீதித் துறை உறுப்பினர்கள் அதைப் பரிசீலித்தபோது, மசோதாவுக்கு ஆதரவாக 13 வாக்குகளும், எதிராக 5 வாக்குகளும் விழுந்திருக்கின்றன. 8 வாக்குகள் அதிகம் பெற்று மசோதா நீதித் துறைக் குழுவின் ஒப்புதலையும் பெற்றுள்ளது. அடுத்த கட்டமாக இந்த மசோதா செனட் சபையின் ஒப்புதலுக்குச் செல்லும். 100 உறுப்பினர்களைக் கொண்ட செனட் சபையில் 60 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று மசோதா நிறைவேற வேண்டும்.
இந்தத் தகவலை நான் இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம், 26-9-2009 அன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில் தி.மு.கழகம் நிறைவேற்றிய 8-வது தீர்மானத்தில், தமிழகத்திலே அகதிகளாக தங்கியுள்ள 1 இலட்சத்திற்கு மேற்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமைச் சட்டம் மற்றும் தொடர்புடைய ஏனைய சட்டங்களின்கீழ் மறு குடியமர்த்தும் முயற்சியாக தமிழக அரசு மத்திய அரசோடு கலந்து பேசி, அவர்கள் தமிழகத் திலே நிரந்தரமாக குடியிருக்க வழிவகை செய்து தர வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தோம். கழகம் ஆட்சியில் இருந்தபோது தொடர் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
தற்போது அமெரிக்காவில் 2 லட்சத்து 60 ஆயிரம் இந்தியர்களுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்க முடிவு செய்திருப்பதைப்போல, இந்தியாவிலும் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமையினை - நிரந்தரமாகப் பாதுகாப்போடு வாழ்வதற்கான அனுமதியினை இந்திய அரசு வழங்கிட முன்வர வேண்டும் என்பது தான் நமது விருப்பமும் வேண்டு கோளும் ஆகும். இங்குள்ள ஈழத் தமிழர்களில், விரும்புவோர்க்குக் குடியுரிமை வழங்குவது, அவர்களது எதிர்காலத்திற்கு நாம் தருகின்ற உத்தரவாதமாக அமையும்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஈழத்தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்: கருணாநிதி வேண்டுகோள்
நல்ல யோசனை அரசு பரிசீலித்தால் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வில் ஒளி வீசும் இந்த முடிவு
Re: ஈழத்தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்: கருணாநிதி வேண்டுகோள்
பதவியிலிருக்கும்போது, இந்த சிந்தனை வராதது
ஏன்..?
-
ஏன்..?
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25138
மதிப்பீடுகள் : 1186
Re: ஈழத்தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்: கருணாநிதி வேண்டுகோள்
rammalar wrote:பதவியிலிருக்கும்போது, இந்த சிந்தனை வராதது
ஏன்..?
-
எலேச்டின் பயம் தான்
Similar topics
» பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: விஜயகாந்த் வேண்டுகோள்
» உள்ளாட்சி தேர்தல் பணிகளை உடனே தொடங்க வேண்டும்; தி.மு.க.வினருக்கு கருணாநிதி வேண்டுகோள்
» தமிழகத்தில் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும்: ஜெயலலிதாவுக்கு பேரறிவாளன் தாயார் வேண்டுகோள்
» இங்கிலாந்து தோற்க வேண்டும்: கோலிங்வுட் மகளின் வேண்டுகோள்
» என்னை கற்பழித்தவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும்: பெண் போட்டோகிராபர் ஆவேசம்
» உள்ளாட்சி தேர்தல் பணிகளை உடனே தொடங்க வேண்டும்; தி.மு.க.வினருக்கு கருணாநிதி வேண்டுகோள்
» தமிழகத்தில் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும்: ஜெயலலிதாவுக்கு பேரறிவாளன் தாயார் வேண்டுகோள்
» இங்கிலாந்து தோற்க வேண்டும்: கோலிங்வுட் மகளின் வேண்டுகோள்
» என்னை கற்பழித்தவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும்: பெண் போட்டோகிராபர் ஆவேசம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|