Latest topics
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்றுby rammalar Today at 9:36
» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Today at 6:45
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Today at 6:15
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Today at 6:15
» உமையவள் திருவருள்…
by rammalar Today at 6:06
» பல்சுவை
by rammalar Today at 2:19
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Today at 2:09
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 2:07
» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Today at 2:02
» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Today at 1:55
» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Today at 1:48
» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Yesterday at 19:57
» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Yesterday at 19:45
» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Yesterday at 19:41
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Yesterday at 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Yesterday at 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Yesterday at 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Yesterday at 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Yesterday at 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Yesterday at 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Yesterday at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Yesterday at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sat 15 Jun 2024 - 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Sat 15 Jun 2024 - 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Sat 15 Jun 2024 - 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Sat 15 Jun 2024 - 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Sat 15 Jun 2024 - 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Sat 15 Jun 2024 - 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Sat 15 Jun 2024 - 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
ஐ.பி.எல்.: சென்னையை வீழ்த்தி மும்பை அணி முதல் முறையாக சாம்பியன்
3 posters
Page 1 of 1
ஐ.பி.எல்.: சென்னையை வீழ்த்தி மும்பை அணி முதல் முறையாக சாம்பியன்
கொல்கத்தா, மே 26-
ஐ.பி.எல். சீசன் 6-ன் இறுதிப்போட்டி இன்று இரவு 8 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டன் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார்.
தொடக்க வீரர்களாக டிவைன் சுமித்- டரே களம் இறங்கினார்கள். தொடக்க ஓவரே மும்பை அணிக்கு அதிர்ச்சியாக அமைந்தது. ஆட்டத்தின் 3-வது பந்தில் பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தில் கிளீன்போல்டாகி வெளியேறினார். அடுத்து 2-வது விக்கெட்டுக்கு டரேவுடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். 2-வது ஓவரை மோர்கல் வீசினார். முதல் பந்தில் டரே கிளீன்போல்டாகி வெளியேறினார் அடுத்து வந்த கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்கள் எடுத்த திருப்தியில் மோர்னே பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இந்த சீசனில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்காத ராயுடுவுக்கு அடுத்தடுத்து விக்கெட்டு வீழ்ந்ததால் விரைவில் களம் இறங்கினார். அவர் களம் இறங்கும்போது மும்பை அணி 3.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது விக்கெட்டுக்கு இருவரும் நிதானமாக விளையாடினார்கள். தினேஷ் கார்த்திக் 21 ரன்கள் எடுத்த நிலையில் மோரிஸ் பந்தில் ஆட்டம் இழந்தார்.
5-வது விக்கெட்டுக்கு ராயுடுவுடன் பொல்லார்டு ஜோடி சேர்ந்தார். ராயுடு 36 பந்தில் 37 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்தவர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனாலும் பொல்லார்டு சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். அவர் கடைசி ஓவரின் 5-வது மற்றும் 6-லது பந்தில் இரண்டு இமாலய சிக்சர் விளாசினார். இதனால் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது.
சென்னை அணி சார்பில் பிராவோ சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட் வீழ்த்தினார்.
149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி பேட்டிங்கை தொடங்கியது. ஹசி- விஜய் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை மலிங்கா வீசினார். முதல் ஓவரே சென்னை அணிக்கு பேரிடியாக அமைந்தது. ஹசி 4-வது பந்தில் கிளீன் போல்டானார். அடுத்த வந்த ரெய்னா முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். அடுத்த ஓவரை ஜான்சன் வீசினார். அந்த ஓவரில் 4-வது பந்தில் பத்ரிநாத் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். இதனால் சென்னை அணி 1.4 ஓவரில் 3 ரன்னுக்குள் 3 முக்கிய விக்கெட்டை இழந்தது.
அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆக சென்னை அணியின் தோல்வி உறுதியானது. கேப்டன் டோனி மட்டும் கடைசி வரை அவுட்டாகாமல் 63 ரன்கள் எடுத்தார். சென்னையில் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தது. இதனால் மும்பை அணி 23 ரன்களில் அபார வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஐ.பி.எல்.: சென்னையை வீழ்த்தி மும்பை அணி முதல் முறையாக சாம்பியன்
சொல்லி வைத்து சாம்பியன் ஆவதில் ஒரு பெருமையும் இல்லையே.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ஐ.பி.எல்.: சென்னையை வீழ்த்தி மும்பை அணி முதல் முறையாக சாம்பியன்
@.ahmad78 wrote:சொல்லி வைத்து சாம்பியன் ஆவதில் ஒரு பெருமையும் இல்லையே.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஐ.பி.எல்.: சென்னையை வீழ்த்தி மும்பை அணி முதல் முறையாக சாம்பியன்
ahmad78 wrote:சொல்லி வைத்து சாம்பியன் ஆவதில் ஒரு பெருமையும் இல்லையே.
யாரிடம் சொல்லி வைத்து அண்ணா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|