சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

சின்ன ஐயா சி.எம். ஆனால்.. Khan11

சின்ன ஐயா சி.எம். ஆனால்..

2 posters

Go down

சின்ன ஐயா சி.எம். ஆனால்.. Empty சின்ன ஐயா சி.எம். ஆனால்..

Post by Muthumohamed Mon 3 Jun 2013 - 3:08

சின்ன ஐயா சி.எம். ஆனால்.. P16

நேற்றிரவு பயங்கரமான கனவு. அன்புமணி ராமதாஸ் தமிழக முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டிருந்தார். அவரது மனைவி சௌமியா அன்புமணி, புதுச்சேரி முதல்வர். காணாக்குறைக்கு, காடுவெட்டி குரு, துணை முதல்வர். இதோ, யான் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்!

'வீரப்பன் வீர மரணமடைந்த, தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் 110 கோடியில் பிரமாண்ட சிலை அமைக்கப்படும். அருகிலேயே சந்தனக் காடும், யானைகள் காப்பகமும் அமைக்கப்பட்டு அதைப் பராமரிக்கும் பொறுப்பு பசுமைத் தாயகம் அமைப்பிடம் ஒப்படைக்கப்படும். அதேபோல தைலாபுரத்தில் 'பல்லவப் பேரரசர்’ போதி தர்மருக்கும், தஞ்சையில் 'வீர வன்னிய’ ராஜராஜ சோழனுக்கும் தலா 110 கோடியில் வானுயர்ந்த சிலை அமைக்கப்படும்’- என்ற அறிவிப்புகளில் முதல் கையெழுத்து போடுவார் முதல்வர் அன்புமணி ராமதாஸ். 'தருமபுரி பஸ் எரிப்பு சம்பவத்தில் தொடர்புடைய அ.தி.மு.க-வையும், மதுரையில் பத்திரிகை அலுவலகத்தை எரித்த தி.மு.க-வையும் தடை செய்ய வேண்டும்’ என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும். அதை எதிர்த்துப் பேச முயலும் தி.மு.க., அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் சகட்டுமேனிக்குத் தாக்கப்படுவார்கள்.

மட்டைப்பந்து (அதாங்க கிரிக்கெட்) முற்றாகத் தடை செய்யப்பட்டு, மாவட்டம் தோறும் சாதிச் சண்டை மைதானங்கள் அமைக்கப்படும். அந்தச் சண்டையில் பா.ம.க. உறுப்பினர்கள் மட்டும் அடித்து ஆடலாம்... மற்றவர்கள் தடுப்பாட்டம்தான் ஆட வேண்டும் என்று விதி இயற்றப்படும். மொழிப் போர் தியாகிகளுக்கு வழங்கப்படுவதைப் போல, சாதிக் கலவரத் தியாகிகளுக்கு பென்ஷனும், அவர்களது வாரிசுகளுக்கு அரசு வேலையும் வழங்கப்படும்.

மதுக் கடைகளுக்கும், குடிப்பகங்களுக்கும் பூட்டு போடப்படும். பின் பக்க வாசல் வைத்து வழக்கம்போல் வியாபாரம் நடக்கும் என்பதால், பாட்டாளி சொந்தங்கள் பயப்படத் தேவை இல்லை. நடிகர்கள் அரசியலுக்கு வரத் தடை விதிக்கப் படும். 'அடுத்த முதல்வர் நான்தான்’ என்று சொல்லும் நடிகர்கள் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்.

குடிசை மாற்று வாரியம்... குடிசை எரிப்பு வாரியமாகப் பெயர் மாற்றப்படும். இதேபோல மரம் வெட்டி வாரியம், படப்பெட்டி தூக்கி வாரியம் போன்றவையும் தொடங்கப்படும். பண்பாட்டு (கலாசாரம்) பாதுகாப்புத் துறை அமைச்சராக காடுவெட்டி குரு நியமிக்கப்படுவார். காதல் கவிதை எழுதுபவர்களின் கட்டை விரல் நறுக்கப்படும். காதல் பட இயக்குநர்கள் நாடு கடத்தப்படுவார்கள்.

மதுரை மாவட்டத்திற்குள் மருத்துவர் ராமதாஸ் நுழையத் தடை விதித்த கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, அமைச்சர் காடுவெட்டி குருவின் துறைக்கு செயலாளராக நியமிக்கப் பட்டு பழிக்குப் பழி வாங்கப்படுவார்.

அப்பாவிப் பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்யும் நாடகக் காதலை தடுக்கும் விதத்தில் பெண்களின் திருமண வயது 39 ஆகவும், ஆண்களின் திருமண வயது 49 ஆகவும் உயர்த்தப்படும். இருவரும் ஒரே சாதிதான் என்று சாதிச் சான்றிதழைக் காட்டினால்தான், சட்டப்படி திருமணம் பதிவுசெய்யப் படும். மற்ற திருமணங்கள் செல்லாது என்றும் அறிவிக்கப்படும்.

தமிழ்நாட்டில் தீண்டாமை என்பது முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. எனவே, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் கொடுப்பவர்கள் மீதே நடவடிக்கை எடுக்கும் வகையில் தமிழக சட்டசபையில் 'ஆண்ட சாதி’யினர் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்படும்.

பெற்ற தாயைத் தவிர வேறு யாரையும் அம்மா என்று அழைக்கக் கூடாது என்று சட்டம் இயற்றப்படும். போயஸ் கார்டன் வீட்டு முன்பு, அரசு செலவில் கண்ணகி சிலை அமைக்கப் படும். சேலம் மாம்பழத்திற்கு புவிசார் குறியீடு வழங்கும்படியும், சமூக நீதிக் காவலர் மருத்துவர் அய்யாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கும்படியும் ஒபாமாவிடம் போனில் பேசுவார் அன்புமணி. பொது இடத்தில் ஜீன்ஸ் பேன்ட் அணியத் தடை விதிக்கப்படும். தமிழ் மின் ஊடகங்களில் வரும் தொகுப்பாளர்கள், செய்தி வாசிப் பாளர்கள் அனைவரும் வேட்டி, சேலை மட்டுமே அணிய வேண்டும் என்று உத்தரவிடப்படும்.

மதுரை சித்திரை திருவிழாவின் போது வைகை ஆற்றில், சித்திரை முழு நிலவு மாநாடு நடத்தப்படும். இதேபோல வைகாசியில் ராமேஸ்வரம் கடற்கரை, ஆனியில் திருநெல்வேலி பொருட்காட்சித் திடல், ஆடியில் கன்னியாகுமரி கடற்கரை, ஆவணி யில் விருதுநகர் தேசபந்து மைதானம் என்று மாதம் ஓர் ஊரில் முழு நிலவு மாநாடு நடத்தப்பட்டு தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பேணிக் காக்கப் படும்!

- ராஜா செல்லம், கே.கே.மகேஷ்
டைம் பாஸ்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சின்ன ஐயா சி.எம். ஆனால்.. Empty Re: சின்ன ஐயா சி.எம். ஆனால்..

Post by rammalar Mon 3 Jun 2013 - 5:29

நல்லா டைம் பாஸ் பண்ற செய்தி..!!
-
சின்ன ஐயா சி.எம். ஆனால்.. 331844
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25191
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சின்ன ஐயா சி.எம். ஆனால்.. Empty Re: சின்ன ஐயா சி.எம். ஆனால்..

Post by Muthumohamed Wed 5 Jun 2013 - 7:28

rammalar wrote:நல்லா டைம் பாஸ் பண்ற செய்தி..!!
-
சின்ன ஐயா சி.எம். ஆனால்.. 331844

:”@: :”@: :”@:
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சின்ன ஐயா சி.எம். ஆனால்.. Empty Re: சின்ன ஐயா சி.எம். ஆனால்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum