Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்by rammalar Today at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
நடிகை ஜியா கானின் 'திக் திக்' கடைசி நிமிடங்கள்
2 posters
Page 1 of 1
நடிகை ஜியா கானின் 'திக் திக்' கடைசி நிமிடங்கள்
மும்பை, ஜூன் 5-
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய 'கஜினி' இந்திப் பதிப்பு, அமிதாப் பச்சன் நடித்த 'நிஷாப்த்', 'ஹவுஸ் புல்' போன்ற இந்தி படங்களில் நடித்து பிரபலமானவர், நடிகை ஜியா கான்.
25 வயதான இவர் நபிசா கான் என்ற பெயரிலும் சில படங்களில் தோன்றியுள்ளார்.
இந்நிலையில், மும்பை ஜுஹு பகுதியில் உள்ள தனது வீட்டில் நேற்று இரவு ஜியா கான் துப்பாட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது கழுத்தில் ஏற்பட்டுள்ள தழும்புகளை வைத்து, அவர் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, ஜியா கான் கடைசியாக நடிகர் ஆதித்யா பஞ்சோலியின் மகன் சுராஜ் பஞ்சோலியுடன் தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்துள்ளது.
எனவே, அவரிடம் கண்டிப்பாக விசாரணை நடத்துவோம் என்று துணை கமிஷனர் விஷ்வாஸ் நாக்ரே பாட்டீல் தெரிவித்தார். மேலும் ஜியா கானுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் விசாரணைக்கு அழைக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.
ஜியா கான் சாவு பற்றி அவரது வீட்டின் பாதுகாவலர் கூறுகையில், ''என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. ஆனால், ஆம்புலன்ஸ் மற்றும் போலீசார் வந்தபோதுதான் அவர் இறந்தது தெரியவந்தது'' என்றார்.
ஜியா கான் மரணம் இந்தி திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதுபற்றி பற்றி கேள்விப்பட்ட நடிகர் அமிதாப் பச்சன் டுவிட்டர் தளத்தில் தனது துக்கத்தை பதிவு செய்திருந்தார். அதில், ''ஜியா கான் இறந்துவிட்டாரா? என்ன நடந்தது? இது சரியான தகவல்தானா? என்னால் நம்ப முடியவில்லை'' என்று அமிதாப் குறிப்பிட்டிருந்ததார்.
நடிகர் ஆதித்யா பஞ்சோலி மற்றும் அவரது மகன் சூரஜ் பஞ்சோலி ஆகியோரிடம் மும்பை போலீசார் நேற்று நடத்திய விசாரணையில் சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்கொலை முடிவை எடுப்பதற்கு முன்னர் ஜியா கான் விரக்தி நிலையில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்தது. அவரது வாழ்வின் இறுதி நிமிடங்களில் மிகுந்த மன உளைச்சலுக்கு அவர் உள்ளாகியிருந்தார் என்பதற்கான போதுமான ஆதாரங்கள் உள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.
இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது :-
கடந்த ஓராண்டு காலமாக சூரஜ்-ஜுடன் ஜியா கான் நெருக்கமாக இருந்துள்ளார். புதிய தோழியுடன் தனக்கு ஏற்பட்ட நெருக்கம் தந்த மயக்கத்தில் ஜியா கானை சூரஜ் சில நாட்களாக புறக்கணித்து வந்துள்ளார்.
அதுமட்டுமின்றி, சமீப காலமாக புதிய பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் ஜியா கான் விரக்தியடைந்து இருந்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த 1ம் தேதி புதிய தமிழ் படம் ஒன்றில் நடிப்பதற்கான நேர்காணலுக்கு ஜியா கான் ஐதராபாத் சென்றபோது உடல் எடை அதிகமாக இருந்ததால் வாய்ப்பு கைநழுவிப் போனது.
அன்று மாலை 7 மணியளவில் மும்பை திரும்பிய அவர் இரவு 9 மணியளவில் காந்திராம் சாலையில் உள்ள சூரஜ் வீட்டிற்கு சென்று அன்றிரவை அவருடன் கழித்தார்.
மறுநாள் (ஜூன் - 2) பகல் முழுவதும் அவருடன் இருந்துவிட்டு, இரவு 9 மணியளவில் ஜுஹு பகுதியில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் சூரஜ்ஜுடன் சாப்பிட்டார். சூரஜ் தனது காரில் ஜியா கானை அவரது வீட்டில் இறக்கிவிட்டு சென்றார்.
மறுநாள் (ஜூன் - 3) சூரஜ்ஜுடன் 10 முறைக்கு மேல் செல்போனில் பேசி, ஏகப்பட்ட மெசேஜ்களையும் ஜியா கான் அனுப்பியுள்ளார்.
மாலை 7 மணிக்கு மீண்டும் போன் செய்து தனக்கு 3 புதிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக சூரஜ்ஜிடம் கூறிகிறார். இரவு 9 மணியளவில் புதிய படவாய்ப்புக்கு வாழ்த்து தெரிவித்த சூரஜ், தனது உதவியாளரிடம் பூச்செண்டு கொடுத்தனுப்புகிறார்.
அதன்பிறகு, ஜியா கானின் செல்போன் அழைப்புகளை சூரஜ் நிராகரித்துள்ளார்.
9.15 மணிக்கு சூரஜ் தந்தனுப்பிய பூச்செண்டை வீட்டு காவலாளியிடம் தந்து அதை வெளியே வீசும்படி ஜியா கான் கூறுகிறார்.
9.30 மணிக்கு சூரஜ்ஜின் வீட்டிற்கு சென்று அவரை சந்திக்க முயற்சிக்கிறார். அவரது தந்தையான ஆதித்யா பஞ்சோலியிடம் சூரஜ் மிக மும்முரமாக பேசிக்கொண்டிருப்பதாக உதவியாளர் கூறுகிறார்.
10 மணியளவில் வீடு திரும்பிய ஜியா கான், 10.53க்கு மீண்டும் சூரஜ்ஜிற்கு போன் செய்து 2 நிமிடங்கள் அவருடன் பேசுகிறார்.
இதே நிலை நீடித்தால் நான் லண்டனுக்கு போய் விடுவேன் என்று இரவு 11.07க்கு சூரஜ்ஜிற்கு மெசேஜ் அனுப்புகிறார்.
11.07-லிருந்து 11.22 வரை தனக்கு போன் செய்யும்படி சூரஜ் அனுப்பிய 3 மெசேஜ்களுக்கு ஜியா கான் பதில் ஏதும் அளிக்கவில்லை.
வெளியே சென்றிருந்த ஜியா கானின் தாயார் ரபியா கான் 11.23-க்கு வீட்டுக்குள் நுழைகிறார். படுக்கையறையில் உள்ள மின் விசிறியில் ஜியா கான் பிணமாக தொங்கும் காட்சியைக் கண்டு பதறியபடி போலீசாருக்கு தகவல் அளிக்கிறார்.
போலீசார் நேற்று நடத்திய விசாரணையில் ஜியா கானின் தற்கொலை மரணம் காதல் தோல்வியால்தான் ஏற்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சூரஜ்ஜிடம் அடுத்தக்கட்ட விசாரணை நடைபெறும் போது மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என போலீசார் தெரிவித்தனர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நடிகை ஜியா கானின் 'திக் திக்' கடைசி நிமிடங்கள்
மேலும் பல தகவல்கள் வருவதை
எதிர்நோக்கலாம்...
-
எதிர்நோக்கலாம்...
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24039
மதிப்பீடுகள் : 1186
Re: நடிகை ஜியா கானின் 'திக் திக்' கடைசி நிமிடங்கள்
காத்திருப்போம் அண்ணா @.rammalar wrote:மேலும் பல தகவல்கள் வருவதை
எதிர்நோக்கலாம்...
-
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» 'கஜினி' இந்தி பதிப்பில் தோன்றிய நடிகை ஜியா கான் தற்கொலை
» அந்த கடைசி நிமிடங்கள்...
» பகத்சிங்கின் கடைசி நிமிடங்கள்
» கடைசி நிமிடங்கள் கடாபி...
» சதாம் உசேனின் கடைசி நிமிடங்கள்: அம்மலப்படுத்திய விக்கிலீக்ஸ்
» அந்த கடைசி நிமிடங்கள்...
» பகத்சிங்கின் கடைசி நிமிடங்கள்
» கடைசி நிமிடங்கள் கடாபி...
» சதாம் உசேனின் கடைசி நிமிடங்கள்: அம்மலப்படுத்திய விக்கிலீக்ஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|