சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

 பிறழ்ந்த பழமொழிகள்  Khan11

பிறழ்ந்த பழமொழிகள்

2 posters

Go down

 பிறழ்ந்த பழமொழிகள்  Empty பிறழ்ந்த பழமொழிகள்

Post by நண்பன் Fri 11 Feb 2011 - 15:50


ஊர்ல பெரியவங்க சொல்லி, கேட்டு இருப்பீங்க.'அர்த்தத்தை அநர்த்தம் ஆக்குறாங்'கன்னு.சரியான வழிகாட்டுதல் இல்லாம வேற அர்த்தம் எடுத்துக்குவோம். அதுல எனக்கு தெரிஞ்ச சிலத இப்ப பாப்போம்.

பந்திக்கு முந்தணும்! படைக்கு பிந்தணும்!!

பந்தினா, ஒன்று கூடல். அது ஊர்க் கூட்டமாவும் இருக்கலாம். போருக்கான ஆயத்தக் கூட்டமாவும் இருக்கலாம். சமபந்தினா, எல்லாரும் ஒரே அணியா ஏற்றத்தாழ்வு இல்லாம கூடுறது. அப்படிப்பட்ட ஒன்றுகூடல் எதுவானாலும் உடனடியா போகணும்.

படை அப்படீன்னா படைப்பது. படைப்பாளி, படையல், படையப்பன் இதெல்லாம் 'படை'யிலிருந்து வந்த சொற்கள். ஆக, குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் வழி விட்டு, படையலுக்கு பிந்தணும். இதுதான் இந்த பழமொழியோட சாராம்சம். அது மருவி, நேர் எதிர் அர்த்தம் தர்ற மாதிரி நாம பாவிக்க கூடாது.

வீட்டுக்கு வீடு வாசப்படி

'மேன்மையான வாழ்க்கை'ங்ற வீட்டுக்கு 'ஆன்மீகம்'ங்ற வீடு வாசற்ப்படி. அடுத்த வீட்டு பிரச்சினைகள் மாதிரி தான் நம்ம வீட்டு பிரச்சினைகளும்னு அர்த்தம் இல்லை.

கல்லைக் கண்டா, நாயைக் காணோம்! நாயைக் கண்டா, கல்லைக் காணோம்!!

செதுக்கி வச்சிருக்கும் நாய் போன்ற சிலையை, கலை கண்ணோட்டத்துல பாத்தா,நாய் தோற்றம் தெரியும்.கல்லா நினைச்சுப்பாத்தா நாய் தெரியாது. அதான்,'கல்லைக் கண்டா நாயைக் காணோம்.நாயைக் கண்டா கல்லைக் காணோம்'ங்றது. தெருவில் இருக்கிற நாயையும் கல்லையும் இணைச்சி அர்த்தம் கொள்ளக்கூடாது நாம. இதையே தான் திருமூலர் சொல்கிறார்:

மரத்தில் மறைந்தது மாமதயானை; மரத்தை
மறைத்தது மாமதயானை!

மரத்தை கண் கொண்டு பார்த்தால், யானை தெரியாது. யானையை மனதில் இருத்தி பார்த்தால்,யானையின் பின் இருக்கும் பெரிய மரம் தெரியாது.

பெண் புத்தி, பின் புத்தி

சலிப்பின் காரணமாகவும் அலுப்பு காரணமாகவும் பெண்களை வசை பாடுறதுக்குன்னே சிலர் இந்த பழமொழிய பயன்படுத்துவாங்க. ஆனா, பொருள் அதுவல்ல. பாட்டி, தாய், அக்கா, தங்கை, மனையாள்னு எல்லாருமே பின் வருவன அறிந்து செயல்படும் ஆற்றல் இருப்பதால், ஒட்டுமொத்த பெண் குலத்தின் புத்தியும் பின் வருவன தெரியும் புத்தி உடையவர்கள் என்றார்கள் தமிழ்ச்சான்றோர்.

பசிக்கு பனங்காயத் தின்னு

பசி எடுத்தால் பனங்காய தின்னுவது என்பது மட்டும் பொருள் அல்ல. பசி எடுத்தால் பனங்காயை வேண்டுமானாலும் தின்னலாம், ஆனால் யாசித்துச் சாப்பிடுவது சுயமரியாதைக்கு இழுக்கு.

புண்பட்ட மனத்தை, புக விட்டு ஆத்து

'ஏண்டா பீடி சிகரெட் குடிச்சே சாவறே'னு கேட்டா, நம்மாளு சொல்லுவான், 'வள்ளுவர் என்னா சொல்லி இருக்கார்? புண்பட்ட மனத்தை, புக விட்டு ஆத்துனு சொல்லி இருக்காருல்லே? அதான்'. நாம புகைப் பிடிக்கிறதுக்கு இந்த பழமொழி தானா கிடைச்சுது? ஆனா, விசயம் அதுவல்ல. புண்பட்ட தன் மனத்தை பிடித்த வேறொன்றில் புக விட்டு ஆற்றிக்கொள் என்பது அர்த்தம்.


விருந்தும் மருந்தும் மூணு நாள்

வழக்கத்தில சொல்லுறது பெரும்பாலும் என்னன்னா,
உபசரிப்பு குறுகிய காலத்துக்குதான்னு. அத சுட்டி
காட்டுறதுக்கு இத சொல்லுவாங்க. ஆனா, இந்த பழமொழி
என்ன சொல்லுதுன்னு பாத்தீங்கன்னா,குளிர்ந்த நாட்களான
திங்கள், புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகள் விருந்து
படைப்பதற்கும், ஞாயிறு செவ்வாய் வியாழன் ஆகிய
வெப்ப நாட்கள் மருந்து உட்கொள்வதற்கும் சரியான நாட்கள்.
அந்த நாட்களில உணவைக் கொறச்சி கூட சாப்பிடலாம்.
அதான் இந்த மூணு நாட்கள விரதம் இருக்க
தேர்ந்தெடுப்பாங்க. அது போக,சனிக்கிழமைய நீராடுவதற்கு
தலைக்கு எண்ணை வெச்சு). தேர்ந்தெடுத்தாங்க. அதான்
விருந்து மூணு நாள்,மருந்து மூணு நாள்!!!

இடத்தக் குடுத்தா, மடத்தப் புடுங்குவான்

ஒரு ஆள இருக்கவிட்டா, நம்ம கிட்ட இருக்குறத புடுங்கிகிட்டு போய்டுவாங்கங்ற அர்த்தத்தில இந்த பழமொழிய பாவிப்பாங்க. ஆனா, பழமொழி சொல்லுது பாருங்க "அறிவூட்டுற 'குரு'க்கு நம்ம மனசுல இடத்தக் குடுத்தா, மடமைங்ற அறிவின்மைய அவர் பிடுங்கிவிடுவாரு"ன்னு.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 பிறழ்ந்த பழமொழிகள்  Empty Re: பிறழ்ந்த பழமொழிகள்

Post by மீனு Fri 11 Feb 2011 - 19:03

 பிறழ்ந்த பழமொழிகள்  331844  பிறழ்ந்த பழமொழிகள்  331844  பிறழ்ந்த பழமொழிகள்  331844
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

 பிறழ்ந்த பழமொழிகள்  Empty Re: பிறழ்ந்த பழமொழிகள்

Post by நண்பன் Fri 11 Feb 2011 - 20:11

மீனு wrote: பிறழ்ந்த பழமொழிகள்  331844  பிறழ்ந்த பழமொழிகள்  331844  பிறழ்ந்த பழமொழிகள்  331844
:];: :];: :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 பிறழ்ந்த பழமொழிகள்  Empty Re: பிறழ்ந்த பழமொழிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum