சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

சொகுசு படகு... 40 கிலோ தங்கம்... பறிமுதல் - தமிழகத்தில் நடப்பது என்ன? Khan11

சொகுசு படகு... 40 கிலோ தங்கம்... பறிமுதல் - தமிழகத்தில் நடப்பது என்ன?

Go down

சொகுசு படகு... 40 கிலோ தங்கம்... பறிமுதல் - தமிழகத்தில் நடப்பது என்ன? Empty சொகுசு படகு... 40 கிலோ தங்கம்... பறிமுதல் - தமிழகத்தில் நடப்பது என்ன?

Post by ராகவா Tue 3 Sep 2013 - 15:23

சொகுசு படகு... 40 கிலோ தங்கம்... பறிமுதல் - தமிழகத்தில் நடப்பது என்ன? Tamil_News_large_794707
"தமிழகத்திற்கு கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவலாம்' என, திடீர் எச்சரிக்கைகள் வந்ததன் பின்னணி குறித்து, தற்போது விசாரணை நடந்து வருகிறது. கோடியக்கரை பகுதியில், 15 தினங்களுக்கு முன், கண்டுபிடிக்கப்பட்ட ஆளில்லாத சொகுசுப் படகில், வந்தது யார் என்பதும், வேதாரண்யத்தில் தற்போது பிடிபட்டு வரும் தங்கத்திற்கும், இந்த படகிற்கும் தொடர்பிருக்கிறதா என்பதும், விசாரணையில் உள்ளதாக கூறப்படுகிறது.

வடமாநிலங்களில் தான் நக்சல்கள், மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் அதிகளவில் உள்ளது. தென் மாநிலங்களில், தமிழகத்தை பொறுத்தவரை, ஊடுருவல் என்று கூறப்பட்டாலும், உடனடி நடவடிக்கை மூலம், அவை தடுக்கப்பட்டு வருகின்றன.இதனால், இதுவரை, மிகப்பெரிய அளவில் பிரச்னைகள் ஏதுமில்லாமல், "அமைதிப் பூங்கா' வாக உள்ளது.இந்நிலையில், சமீபத்தில் மூன்று முறை, மத்திய உளவுப்பிரிவு மற்றும் மத்திய உள்துறையில் இருந்து, "கடல் வழியாக தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவலாம்' என்று அளிக்கப்பட்ட எச்சரிக்கைகள், "ஊடுருவல் இருக்குமோ' என்று அனைவரையும் ஆச்சரியப்படச் செய்தது.மூன்று முறை தொடர்ந்து வந்த, எச்சரிக்கை, சற்றே தமிழகத்தை அசைத்து தான் பார்த்தது.பயங்கரவாதிகளின் பேச்சுக்கள் மற்றும் சங்கேத பாஷைகளை ஒட்டுக் கேட்ட, உளவுப் பிரிவினர், அதில், "மதுரை, மன்னார்குடி' என்ற வார்த்தைகள் இடம் பெற்றிருப்பதாக கூறி, அப்பகுதிகளுக்கு, கூடுதல் கவனம் செலுத்துமாறு தெரிவித்தனர்.

தொடர்ந்து, சென்னை, தூத்துக்குடி, எண்ணூர் துறைமுகங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, முதல்வர் உத்தரவுப்படி, தமிழகத்தில், 10 நாட்களுக்கும் மேலாக, கடலோர பகுதிகள் முழுவதுமாக, கடற்படை, கடலோர காவல்படை, கடலோர காவல் குழுமத்தினர், தொடர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும், முக்கிய கோவில்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.தொடர் எச்சரிக்கைகள் அடிப்படையில், அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல், தமிழகம் பாதுகாக்கப்பட்டது. இருந்தாலும், இந்த எச்சரிக்கைகளின் பின்னணி என்ன என்பது, தற்போது வரை புரியாத புதிராக உள்ளது.

பயங்கரவாத அமைப்புகளின் தகவல் பரிமாற்றத்தில், "மதுரை, மன்னார்குடி' இடம் பெற்றதன் காரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டிய கட்டாயம், தற்போது ஏற்பட்டுள்ளது.மேலும், சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு தொடர்பாக, தற்போது தேடப்பட்டு வரும், "போலீஸ்' பக்ருதீன் உள்ளிட்ட, நால்வருக்கும், இந்த மிரட்டல் விவகாரத்திற்கும் தொடர்பிருக்குமோ என்ற சந்தேகமும் தற்போது, எழுந்துள்ளது. இதற்கிடையில், உளவுத் துறையின் எச்சரிக்கை விவகாரத்திற்கு, மற்றொரு பின்னணியும் கூறப்படுகிறது.கடந்த, 15 தினங்களுக்கு முன், நாகை மாவட்டம், வேதாரண்யம், கோடியக்கரை பகுதியில், கடற்படையினர் ரோந்து செல்லும் போது, ஆளில்லா சொகுசுப் படகு ஒன்று நின்றதை கண்டுபிடித்துள்ளனர்.மீனவர்கள் பயன்படுத்த முடியாத அந்த படகு, அங்கு வந்தது குறித்து விசாரித்த நிலையில் தான், எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால், அந்த படகு, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பது, தற்போது போலீசாரின் சந்தேகமாக உள்ளது. வேதாரண்யம் பகுதியில், நேற்று முன்தினம், கோவிந்தராஜுலு என்பவரிடம் இருந்து, 12 கிலோ தங்கத்தை கைப்பற்றினர். இதே போல், இதுவரை, அப்பகுதியில் இருந்து, 40 கிலோவிற்கும் மேற்பட்ட தங்கம், கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் பிடிபட்ட தங்கம், இலங்கையில் இருந்து, அந்த சொகுசு படகில் கடத்தி வந்திருக்கலாம் எனவும், போலீஸ் மற்றும் வருவாய் புலனாய்வு பிரிவு வட்டாரத்தில் கூறப்படுகிறது. அவ்வளவு பெரிய படகில், 18 கிலோ தங்கம் மட்டுமே கொண்டு வரப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பதால், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

- நமது நிருபர் -
நன்றி-தினமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum