சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

வாணியம்பாடி தமிழனின் மனமாற்றம். (24-1-2013) Khan11

வாணியம்பாடி தமிழனின் மனமாற்றம். (24-1-2013)

Go down

வாணியம்பாடி தமிழனின் மனமாற்றம். (24-1-2013) Empty வாணியம்பாடி தமிழனின் மனமாற்றம். (24-1-2013)

Post by ராகவா Sat 14 Sep 2013 - 22:56

வாணியம்பாடி தமிழனின் மனமாற்றம். (24-1-2013) Viveka+24
வாணியம்பாடி தமிழனின் மனமாற்றம். (24-1-2013)

அப்போதைய வட ஆற்காடு மாவட்டம் நாட்டறாம்பள்ளி எனும் ஊருக்கு அருகில் இருப்பது வாணியம்பாடி. இந்த ஊரில் வெங்கடசாமி நாயுடு எனும் அன்பர் ஒருவர் இருந்தார். அந்தக் காலத்தில் அதாவது 1900ஆம் ஆண்டு வாக்கில் அவ்வூரில் இருந்த நாயுடு காரு ஒரு நாத்திகர். தமிழ் நாட்டில் நாத்திகர் என்போர் எப்படி இருந்திருப்பார் என்பது நமக்கெல்லாம் தெரியும் அல்லவா? அப்படிப்பட்ட இவருக்கு தமிழ் மொழி மட்டுமே தெரியும். அந்த காலகட்டத்தில் சுவாமி விவேகானந்தர் அமெரிக்க நாட்டில் சுற்றுப் பயணம் செய்து கொண்டு ஆங்காங்கே சொற்பொழிவுகளை ஆற்றிவந்தார். அந்தச் சொற்பொழிவுகள் ஆங்கிலத்தில் பத்திரிகைகள் வெளியிட்டன. அதனைச் சில பத்திரிகைகள் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வந்தன. அப்படி வந்த சுவாமிஜியின் சொற்பொழிவுகளை நமது வெங்கடசாமி நாயுடு படிக்கலானார். ஒவ்வொரு சொற்பொழிவையும் தமிழில் படிக்கப் படிக்க நாயுடுகாருவின் மனதில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. சுவாமிஜியின் பேச்சுக்களில், அவருடைய கருத்துக்களில் இவரது மனம் ஆர்வத்துடன் ஈடுபடலாயிற்று. படிப்பதோடு அந்தப் பேச்சின் சிறப்புக்களைத் தனக்கு வேண்டியவர்களிடமெல்லாம் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார். சுவாமிஜியின் கருத்துக்களை ஏகத்துக்கும் பாராட்டிப் பேசிவந்தார். தான் மட்டும் படித்துத் தெரிந்து கொண்ட செய்திகளை மற்றவர்களுக்கும் சொல்ல வேண்டுமென்கிற அவா அவருக்கு. நல்ல நினைவாற்றல் உள்ளவர் அவர். அதனால் சுவாமிஜியின் சொற்பொழிவுகளை மனதில் பதித்துக் கொண்டு, அவற்றை வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் பிறருக்கும் அப்படியே எடுத்துரைத்தார்.

சுவாமிஜியின் பேச்சுக்கள் மட்டுமல்ல, அவருடைய தோற்றமும், உடையும்கூட இவரை மிகவும் கவர்ந்தன. உடனே இவரும் சுவாமிஜியைப் போல உடை அணிந்து கொண்டு அதே வீரம் ததும்பும் தோற்றத்தோடு அவருடைய பேச்சுக்களை மற்றவர்களுக்கு எடுத்துரைக்கலானார். அன்றைக்குப் படித்த சொற்பொழிவை அப்படியே மனனம் செய்து கொண்டு சொல் மாறாமல் அப்படியே ஒப்பிப்பார். பேச்சை முடித்ததும், அமெரிக்க நாட்டில் நமது சுவாமி விவேகானந்தர் இப்படித்தான் உடையணிந்து, இப்படித்தான் பேசினார் என்று அறிவிப்பார்.

ஏழ்மையிலும் அறியாமையிலும் உழன்றுகொண்டிருந்த அந்தப் பகுதி மக்களிடம் அவருக்கு அனுதாபம் உண்டு. அவர்களுக்குத் தேவையான பல உதவிகளையும் அவர் செய்து வந்தார். தான் தனியொரு மனிதனாக உதவிகளைச் செய்வதைக் காட்டிலும் ஒரு அமைப்பைத் தோற்றுவித்து, அதன் மூலம் உதவிகளை மக்களுக்குச் செய்ய வேண்டுமென்கிற நோக்கத்தில் "விவேகானந்தர் வேதாந்த சங்கம்" எனும் பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்தினார். தான் இப்படியொரு அமைப்பை ஏற்படுத்தியிருப்பதையும், அதனைக் கொண்டு மக்களுக்குச் சேவை செய்யவிருப்பதையும் ஒரு கடிதத்தில் வெங்கடசாமி நாயுடு அமெரிக்காவில் இருந்த சுவாமிஜிக்கு தெரிவித்தார்.

அந்தக் கடிதத்தைக் கண்ட சுவாமிஜி நம்மூர் வெங்கடசாமி நாயுடுவுக்கு ஒரு பதில் கடிதம் எழுதினார். சுவாமிஜி வாழ்ந்த காலத்திலேயே, அவர் பெயரால் முதன்முதலில் தமிழ் நாட்டில் தோற்றுவிக்கப்பட்ட ஒரு சங்கம் இந்த சங்கம். தோற்றுவித்து வரலாற்றில் இடம்பெற்றிருப்பவர் வெங்கடசாமி நாயுடு.

அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த சுவாமிஜிக்கு, முன்பின் பழக்கமில்லாத ஒரு நபர் தமிழ் நாட்டிலிருந்து தங்கள் பெயரால் ஒரு சங்கம் தோற்றுவித்துச் சேவை செய்து கொண்டிருக்கிறேன் என்று எழுதியது புதுமையாக இருந்திருக்கலாம். இவர் யார் என்பது தெரியாததனாலோ, அல்லது தன் பெயரால் ஒரு சங்கம் என்றதும் ஏற்பட்ட கூச்சம் காரணமாகவோ, கடிதத்தில் நாயுடுவின் சங்கத்தின் பெயரை முழுமையாக விவேகானந்தர் சொசைட்டி என்று எழுதுவதற்கு பதிலாக சுருக்கமாக ஆங்கிலத்தில் viv.society என்று மட்டும் எழுதியிருந்தார். முழு விவரமும் தெரியாத நிலையில், தன் பெயரில் ஒரு சங்கம் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது என்ற செய்திக்கு என்ன பதில் எழுத முடியும்? அதனால்தான் இந்தக் கடிதமும் மிகச் சுருக்கமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் பின்னாளில் நாட்டறாம்பள்ளியில் ஸ்ரீராமகிருஷ்ண மடம் உருவாக இந்த வெங்கடசாமி நாயுடுவே இடத்தையும் கொடுத்து உதவினார் என்பது வரலாற்றில் இடம் பெற்றிருக்கிற செய்தி. வாழ்க வெங்கடசாமி நாயுடு புகழ்!

சுவாமி விவேகானந்தர் வெங்கடசாமி நாயுடுவுக்கு எழுதிய கடிதம்:--

"கே.வெங்கடசாமி நாயுடு
viv. society

அன்புடையீர்!
உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. வேத மதத்தைப் பரப்புவதற்காக நீங்கள் வெற்றிகரமாக ஒரு சங்கத்தை ஆரம்பித்திருப்பதற்கு எனது நல் வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் முயற்சிகள் எல்லாம் வெற்றி வாகை சூடட்டும். எல்லா அங்கத்தினருக்கும் எனது நன்றி. நல்வாழ்த்துக்கள்.

இறைவனில் என்றும் உங்கள்,
விவேகானந்த

நன்றி:பாரதிபயிலகம்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum