சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 8:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 8:01 pm

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 8:01 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 7:57 am

» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 7:46 am

» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 7:38 am

» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 7:18 am

» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon Jun 24, 2024 10:46 am

» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon Jun 24, 2024 10:40 am

» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon Jun 24, 2024 10:35 am

» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun Jun 23, 2024 2:56 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun Jun 23, 2024 10:27 am

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat Jun 22, 2024 7:55 pm

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat Jun 22, 2024 7:52 pm

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat Jun 22, 2024 7:50 pm

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat Jun 22, 2024 7:18 pm

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat Jun 22, 2024 7:17 pm

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat Jun 22, 2024 7:16 pm

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat Jun 22, 2024 7:15 pm

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat Jun 22, 2024 7:14 pm

» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat Jun 22, 2024 7:12 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat Jun 22, 2024 7:11 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat Jun 22, 2024 7:11 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat Jun 22, 2024 7:10 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat Jun 22, 2024 7:09 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat Jun 22, 2024 7:08 pm

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat Jun 22, 2024 4:54 pm

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat Jun 22, 2024 3:30 pm

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat Jun 22, 2024 3:14 pm

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat Jun 22, 2024 2:42 pm

» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat Jun 22, 2024 11:31 am

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri Jun 21, 2024 11:47 pm

» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri Jun 21, 2024 7:12 pm

» உலக இசை தினம்
by rammalar Fri Jun 21, 2024 8:47 am

» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri Jun 21, 2024 8:43 am

கோளாறு பதிகம் Khan11

கோளாறு பதிகம்

2 posters

Go down

கோளாறு பதிகம் Empty கோளாறு பதிகம்

Post by ராகவா Thu Sep 26, 2013 3:24 am

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி
சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 01


என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க
எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
*ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும்
உடனாய நாள்க ளவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
02

உருவலர் பவளமேனி ஒளிநீ றணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேன்
முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
திசை தெய்வ மானபலவும்
அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
03


மதிநுதல் மங்கையோடு வடபா லிருந்து
மறையோது மெங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர்
கொடுநோய்க ளான பலவும்
அதிகுண நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
04
நஞ்சணி கண்டனெந்தை மடவாள் தனோடும்
விடையேறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடு முருமிடியு மின்னு
மிகையான பூத மவையும்
அஞ்சிடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
05

வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர்
மடவாள் தனோடு முடனாய்
நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோளரி யுழுவையோடு கொலையானை கேழல்
கொடுநாக மோடு கரடி
ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
06
செப்பிள முலைநன்மங்கை ஒருபாக மாக
விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியுமப்பும் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
07


வேள்பட விழிசெய்தன்று விடமே லிருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
08
பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமக ளோடெருக்கு முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர்
வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
09


கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமு மதியுநாகம் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரொ டமணைவாதில் அழிவிக்கு மண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
10


தேனமர் பொழில்கொளாலை விளைசெந்நெல் துன்னி
வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே.
11
திருச்சிற்றம்பலம்.....

.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கோளாறு பதிகம் Empty Re: கோளாறு பதிகம்

Post by rammalar Thu Sep 26, 2013 9:06 am

கோளாறு பதிகம் அல்ல..கோளறு பதிகம்
என்பதே சரி...
-
மதுரையில் இருந்து மகாராணி
மங்கையர்கரசியாரிடமிருந்தும் அமைச்சர்
குலச்சிறையாரிடமிருந்தும் ஓலை வருகிறது

மதுரை ஆலவாய் அழகனை தரிசிக்க
திருஞான சம்பந்தரை அழைத்திருக்கிறார்கள்
-
அங்கே மன்னன் சமண சமயத்தினன், அதனால்
சம்பந்தருக்கு ஊறு நேரலாம், மேலும் இன்று
நாளூம் கோளும்  சரியில்லை எனக்கூறி
தடுக்கிறார் அப்பர்...
-

‘அப்பரே. நாளும் கோளும் அடியார்க்கு என்றும் மிக
நல்லவை என்று தாங்கள் அறியாததா. …
வேயுறு தோளி பங்கன் ….’
இப்படி தொடங்கியது தான் ‘கோளறு பதிகம்’ என்னும்
பத்துப் பாடல்களும்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24690
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கோளாறு பதிகம் Empty Re: கோளாறு பதிகம்

Post by ராகவா Thu Sep 26, 2013 12:09 pm

rammalar wrote:
Spoiler:
நன்றி ராமநாதன் அவர்களே!!
மிக அருமையான விளக்கம்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கோளாறு பதிகம் Empty Re: கோளாறு பதிகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum