சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Today at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Today at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Today at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Today at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Today at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

ஒப்பனை Khan11

ஒப்பனை

Go down

ஒப்பனை Empty ஒப்பனை

Post by ராகவா Thu 26 Sep 2013 - 15:03


அவன் ஒரு ஏழைச்சிறுவன். வீடு வீடாகச் சென்று துணிகளை விற்று, அதனால் வரும் பணத்தைக் கொண்டு, ஸ்கூல் ஃபீஸ் கட்டி படித்து வந்தான். ஒருநாள் அவனிடம் ஒன்றுமே இல்லை. கடும்பசி. தனது பாக்கெட்டைத் துழாவினான். கையில் தட்டுப்பட்டதோ வெறும் ஐந்து ரூபாய் நாணயம். இதை வைத்து சாப்பாடு சாப்பிட முடியுமா? யோசித்தான். ஏதாவது ஒரு வீட்டில் இந்தக் காசைக் கொடுத்து சாப்பாடு வாங்கிச் சாப்பிடலாம் என்று முடிவு செய்து, அருகில் இருந்த வீட்டின் கதவைத் தட்டினான்.
“யாருங்க” என்ற இனிய குரலுடன் கதவைத் திறந்த இளம்பெண் தேவதையாகவே காட்சியளித்தாள். அவளிடம் சாப்பாடு கேட்க மனமில்லாமல், “கொ… கொஞ்… கொஞ்சம் குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா?” என்றான். அவனை ஏறஇறங்கப் பார்த்த அவள், அவன் கடும்பசியில் இருப்பதைக் குறிப்பால் உணர்ந்தாள். உள்ளே சென்று ஒரு டம்ளர் பாலை எடுத்து வந்து அவனுக்குத் தந்தாள். பாலை மெதுவாகக் குடித்து முடித்தான்.
“நான் எவ்வளவு காசு கொடுக்கணும்?” என்றான்.
“நீங்க எதையும் தர வேண்டாம்.

ஒருத்தருக்கு அன்போட ஒன்றைத் தரும்போது, அதற்கு பதிலா எதையும் வாங்கக் கூடாதுன்னு எங்கம்மா சொல்லிக் கொடுத்திருக்காங்க” என்றாள் கனிவுடன்.
“அப்படீன்னா என் அடி மனசில் இருந்து உங்களுக்கு ஒரு தேங்ஸ்”
ஆண்டுகள் பல கடந்தன. அன்று அழகு தேவதையாக இருந்தவள், இன்று படுக்கையில் வீழ்ந்த நோயாளி. உள்ளூர் மருத்துவர்கள் கைவிரிக்க, நகரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டாள். அவளுக்கு சிகிச்சையளிக்க, மருத்துவ நிபுணர் டாக்டர் ஹாவர்ட் கெல்லி அழைத்து வரப்பட்டார்.
நோயாளியின் கேஸ் ஷீட்டை மருத்துவர் படித்தார். அவருடைய புருவம் சுருங்கியது. அவள் எந்த நகரத்திலிருந்து வந்திருக்கிறாள் என்பதைத் தெரிந்து கொண்டவுடன் நாற்காலியைவிட்டு எழுந்து அவள் அறைக்கு விரைந்தார். அவளைப் பார்த்தவுடன் அவள் யார் என்று மருத்துவருக்குத் தெரிந்துவிட்டது. தன் அறைக்குத் திரும்பினார்.
அன்றிலிருந்து அவளுக்காகப் பிரத்யேக அக்கறை எடுத்துக்கொண்டார். பெரும் போராட்டத்திற்குப் பின் அவள் பூரணமாகக் குணமடைந்தாள்.

சிகிச்சைக்காகப் பில்லை, தான் பார்த்த பிறகு தான் அவளிடம் கொடுக்க வேண்டும் என்று அக்கவுண்ட்ஸ் பகுதிக்குக் கட்டளை பிறப்பித்தார். பில்லும் வந்தது. அதைப் பார்த்த மருத்துவர் அதன் மார்ஜினில் எதையோ எழுதினார். அவள் அறைக்கு அதை அனுப்பிவிட்டார்.
பில் இருந்த உறையை பார்த்தாள் அவள். “இந்த பில் தொகையை முழுவதுமாகச் செலுத்தி முடிக்க வேண்டும் என்றால் என் ஆயுள் முழுக்கச் செலுத்தினாலும் போதாதே!” என்று எண்ணினாள். நடுக்கத்துடன் உறையைப் பிரித்தாள்.
“ஒரு டம்ளர் பாலூக்கு ஈடாக இந்த பில்லுக்கு முழு கட்டணமும் செலுத்தப்பட்டுவிட்டது” டாக்டர் ஹாவர்ட் கெல்லி.
இந்தக் கதை நமக்கு உணர்த்துவது அன்பின் சக்தியை. ஒருமுறை நிபந்தனையற்ற அன்பை தயைக் காட்டுகிற கலங்கரை விளக்காகவும் அன்பு திகழ்கிறது. எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் செய்கிற நல்ல காரியம், இன்றோ, நாளையோ அல்லது பல வருடங்களுக்குப் பிறகோ நன்மையைக் கொண்டுவரும் என்பதே இக்கதையின் சாரம்.

பெறுவதன் மூலம் நாம் வாழ்கிறோம். கொடுப்பதன் மூலம் வாழ்விக்கிறோம் என்ற வின்ஸ்டன் சர்ச்சிலின் வரிகளை மனதில் கொண்டு, சூரியன் தரும் ஒளியைப் போலவும், ரோஜா வீசுகிற மணம் போலவும், மலை உருவாக்கும் நதியைப் போலவும் நம் ஒவ்வொருவரிடமும் நிபந்தனையற்ற அன்பு நிறைந்திருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் தற்போது இந்நிலை இருக்கிறதா? இல்லை. இத்தகைய நிபந்தனையற்ற அன்பு இல்லாததன் காரணமாகத் தான் கோபம், வன்முறை, குழப்பம் போன்ற எதிர்மறை உணர்வுகளை வெளிப்படுத்தும் மனிதர்கள் அதிகரித்துவிட்டிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட மனிதர்கள் வெளிக்காட்டும் ஈகோ என்ற மாயபிம்பம் நமது பிறப்பின் நோக்கத்தையே முடக்கிவிடுகிறது. நிபந்தனையற்ற அன்பை வளர்த்துக் கொள்வதன் மூலமே வன்முறையையும், அராஜகத்தையும் அழிக்க முடியும் என்பதை உணர வேண்டிய காலம் வந்துவிட்டது.
“மன்னிக்கும் மனோபாவத்தால் இன்னல்களிலிருந்து ஒருவரை விடுவித்துவிட முடியும்; அந்த ஒருவர் நீங்கள் தான் என்பதை உணருங்கள்” என்பதற்கு ஏற்ப ஆன்மாவுக்கு அழகைத் தரும் மன்னிக்கும் மனோபாவத்தை வளர்க்க வேண்டும். உங்களைச் சுற்றி இருப்பவர்கள் உங்களது காயத்துக்குக் காரணமாக இருக்கலாம். அதையே மனதில் நினைத்துக்கொண்டு கோபமும், வலியும் கொள்ளாமல் மன்னித்துவிட்டாலே நமது மனம் லேசாகிவிடும். கடந்த கால காயங்களில் இருந்து விடுபடுவதற்கு அன்பு ஒன்றே நல்ல தீர்வு.

நன்றி:தன்நம்பிக்கை
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum