Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?by rammalar Yesterday at 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
மழை..!!
2 posters
Page 1 of 1
மழை..!!
“தென் மேற்குப் பருவக் காற்று
வட கிழக்குப் பருவக் காற்று
மழை பொய்யும்;
புயல் சின்னமும்
வெப்ப சலனமுமே
மழை பெய்யும்”
என்கிறான் மாணவன்.
மழை வரும் காலத்தை
மன நுகர்வாலே கணித்து
மறைவான இடம் பெயரும்
மழையெறும்புகள் – இன்று
பிழையெறும்புகள்!
மாணவனும் மழையெறும்பும்
மண்ணின் மாறாத இளமையையும்
மழையின் வற்றாத காதலையும்
அறிவரோ?
மழைக் காலத்தில்
மழலைப் பருவத்தில்
ஆறுகளின் சிறு வடிவத்தை
தெருவிலே கண்டேன்.
வளைந்து, நெளிந்து,
குதித்து ஓடுமதில்
சாதாக் கப்பல், கத்திக் கப்பல்,
குடைக் கப்பல் என்று
விதவிதமாய் காகிதத்தில் செய்து
மிதக்க விட்டேன்.
அவை போகும் தூரத்தை
எங்கள் வீட்டுப் படியிலிருந்தே
பார்த்திருப்பேன்.
திடீரெனத் தெருவில்
வந்த மாட்டு வண்டியால்
எழுந்த அலைகளில்
கவிழ்ந்து போன கப்பல்களைப்
பார்த்து கவிழ்ந்திருப்பேன்.
“கப்பலா கவுந்து போச்சு? வீட்டுக்குள்ள வால”ன்னு
வெவரந் தெரியாத ஆத்தா சத்தம்
அடுப்படியிலிருந்து வரும்!
தீபாவளித் திருநாளில்
பொம்ம சுடப் போகும் சிறுசுக -
சோளத் தட்டை பருப்புல
அழகழகா பொம்ம,
மாட்டு வண்டி செய்வாக;
வண்டிக்குப் பைதா
ஒடஞ்ச மண்பான ஓடு!
“சோளப் பொறி சொங்குப் பொறி…”
என்று கார்த்திகைத் திருநாளில்
நெருப்பில் வைத்த
வரிச்சிக் கட்டைகளால்
அடித்து மகிழ்ந்தது -
ஆயிரம் கம்பி மத்தாப்பு தராத
அழகுப் பொறிகள்!
மாலை நிலவொளியில்
கூட்டாஞ் சோறு:
ஆவுடத்தாய், மாரியப்பன்,
வெயிலாட்சி, தங்கப்பாண்டி,
நவண்டா, கோணன்,
மூக்கம்மா, முப்புடாதி
எல்லாரும் ஒன்னாத்தான்!
அப்புறம் விளையாட்டு:
ஒருபுறம் –
நண்டூருது நரியூருது…
மறுபுறம் –
கொல கொலயா முந்திரிக்கா…
இன்னொரு புறம் –
ஒருகுடம் தண்ணி எடுத்து…
காட்டு வேலைக்குப் போயிட்டு வந்த
ஐயாவும் ஆத்தாளும்
வீட்டுப் படியில உக்காந்து சாப்பிட்டுக்கிட்டே
எங்கள ரசிப்பாக!
அவுக முன்னாடி
சிவன் கோயில் நந்தி மாதிரி
முன்னங் கால நீட்டிப் படுத்திருக்கும்
ராசு வீட்டு நாயி!
சாப்பிட்டுக்கிட்டே
அப்பப்ப சோறு போடுவா எங்காத்தா,
அது வால ஆட்டிக்கிட்டே தின்னும்.
வீட்டில் அழுத தம்பிய
முதுகில் சுமந்து கொண்டு
உப்பு மூட்டை வியாபாரம் செய்யும் முருகன்.
கொஞ்ச நேரம் கழித்து
அவன் வலக்காலை நீட்டிப் பிடித்து
தோட்டத்தில்
மருந்தடிக்கும் மிசினாய் மாற்றுவான்.
மாலை ஏழு மணிக்கு மேல
ஊர்க் கிணற்றில்
தண்ணி எடுக்கப் போகும்
மாரியக்கா, வேலமக்கா, பொன்னமக்கா.
தெரு விளக்குக்குக் கீழே
ஒன்னு கூடி
வீட்டுப் பாடத்தை எழுதிக் கொண்டிருக்கும்
எட்டாம் வகுப்புப் படிப்பாளிங்க!
காரவீட்டு மொட்டமாடியில்
வேப்பம்பழம் சாப்பிட்ட பறவைகளின்
எச்சத்தில் வந்த கொட்டைகள்
அங்கிட்டும் இங்கிட்டும் நெறைய கெடக்கும்.
மண் வீட்டுத் தரையை
பசுமாட்டுச் சாணம் வைத்து
மெழுகும் ராமாத்தா.
அவுக வீட்டு ஓலைக் கூரைகளுக்கு இடையே
கூடு கட்டி வாழ்ந்த குருவிகள்
கூட்டம் கூட்டமாய் பறக்கும்.
மின்னல் இடியுடன் பெய்த மழையிரவு
விடியுமுன்னே
எங்கய்யா காளான் பிடுங்க
காட்டுக்குக் கூட்டிட்டுப் போய்டுவார்.
“அட, நமக்கு முன்னாலயே நயினாரு வந்துட்டான்,
சீக்கிரந் தேடுல” என்பார்.
வேக வேகமா
வழுவழுப்பான வெள்ளைக் காளான்களை
தேடித் தேடி பிடுங்கி
கயிற்றில் கட்டிக் கொண்டு
வீடு திரும்புவோம்.
வெயிலு ஏறுமுன்னே
குழம்பு வெச்சிரணும், இல்ல கெட்டுடும்.
ஆத்தா கைப் பக்குவம்
தெருவே மணக்கும்.
கூனை கட்டி
கிணற்றுத் தண்ணீரை இறைக்கும்
மாடுகளுக்கு
பகலில் பசும்புல் மேய்ச்சல்;
மாலையில்
அரைச்ச பருத்திக் கொட்ட, புண்ணாக்கு;
அவ்வப்போது வைக்கோல்.
ஆடுகளுக்கோ
அகத்திக் கீரக் கட்டும், ஆமணக்கு இலையும்!
கணக்குப் பாராம உழைப்போர் உணவோ
கம்பு, சோளம், கேப்பக் கூழ்
கருவாட்டுக் குழம்புக்கு இழுக்கும்.
சாமி குருதோளின்னா
சாம்பாரே போதும்.
கசக்கிச் சாப்பிடும் கம்மங் கருது,
பல்லுல வழிச்சிச் சாப்பிடும்
உளுந்தங் காயும் தட்டாங் காயும்.
சுட்டுச் சாப்பிடும் சீனிக் கிழங்கு
பொறியாக்கிச் சாப்பிடும் சோளக் கருது.
தித்திக்கும் தின்பண்டம், திகட்டாது தினந்தோறும்.
அழகையாத் தேவருக்கு பருத்தியெடுக்க
போஸ்டாபீஸ் நாயக்கருக்கு பூப்பறிக்க
செல்லையா நாடாருக்கு கடலை ஆய
கிராம்சு வீட்டுக்கு களை பிடுங்க
இன்னும்…
பெருமாள் கோயிலு பக்கம்
தெக்கோயிலு பக்கமுனு
தெனந் தோறும் வேலை;
காட்டு வேலைக்குப் போகாதவுகளுக்கோ
குழந்தையம்மா தீப்பெட்டி.
வெறகு பெறக்கப் போன
வேம்பையாத் தேவரு
தண்ணி தவிச்சா
உப்போடை மண்ணுல
நாழியளவு தோண்டி வரும் தண்ணிய
தெளிய வச்சிக் குடிப்பாரு.
பங்குனி சித்திரை வைகாசியில்
ஊருக்கு வெளியே முகாமிடும்
குறவர் கூட்டம்.
காலையில்…
சாமியோவ்! காடை கெளதாரி.
பகலில்…
சாமியோவ்! பாசி ஊசி.
இரவில் பாவக்கூத்து.
ராமகதை, நல்ல தங்காள் கதை எல்லாம்
அங்குதான் தெரியும்.
உழுவாத்தலையனும் உச்சிக் குடுமியனும்தான்
அந்த வயதிலறிந்த
நகைச்சுவை இரட்டையர்கள்!
இவற்றோடு
குண்ணாங் குண்ணாங் குர்ர்ர்ர்… காத்தாடி
களிமண்ணில் செய்த ராட்டினம்
கருப்பு செவப்பு மண் சட்டிகள்
இன்னும் காணாமல் போனவை ஏராளம்!
இவைகளுக்கும்
மழைக்கும் சம்பந்தமுண்டு;
இவை
இல்லாமல் போனதற்கும்
மழைக்கும் சம்பந்தமுண்டு.
ஆனால்,
மழை இல்லாமல் போனதற்கு
மனிதனுக்கு மட்டுமே சம்பந்தமுண்டு!
மாணவனும் மழையெறும்பும்
மண்ணின் மாறிய இளமையையும்
மழையின் வற்றிய காதலையும்
அறிவரோ?
செட்டிகுறிச்சி நினைவுகளுடன்,
அசின் சார், கழுகுமலை...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|