Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதைby rammalar Yesterday at 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Yesterday at 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Yesterday at 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Yesterday at 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Yesterday at 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
கே இனியவன் உழைப்பாளர் கவிதை
Page 1 of 1
கே இனியவன் உழைப்பாளர் கவிதை
அதிகாலையில் துயில் எழுந்து ...
தூரத்துபார்வை கூட தெரியாத பொழுதில் ...
தலையிலே ஒரு கம்பீர தலைப்பாகை ...
கமக்கட்டுக்குள் ஒருமுழ துண்டு ...
தோளிலே மண்வெட்டி -உன் உழைப்பையே
காட்டும் விவசாய பாரதி -நீ
யாருக்கு வரும் இந்த தைரியம் ....?
கொட்டும் மழையில் உடல்விறைக்க...
உழைப்பாய் - வாட்டும் வெயிலில் ...
குருதியே வியர்வையாய் வெளிவர ....
உழைப்பாய் - நட்டுநடு ராத்திரியில் ...
காவல் செய்யவும் புறப்படுவாய் ..
யாருக்கு வரும் இந்த தைரியம் ....?
பட்ட விவசாய கடனை அடைக்க
பட்டையாய் உடல் கருகி ....
விற்று வந்த வருவாயை ..
கடனுக்கே கொடுத்துவிட்டு ...
அடுத்துவரும் காலத்தில் சாதிப்பேன் ..!!!
அதுவரையும் காத்திருக்கும் -உன் துணிவு
யாருக்கு வரும் இந்த தைரியம் ....?
உச்ச அறுவடை பொழுதினிலே ...
உச்ச சந்தோசம் பொங்கிடும் வேளையிலே ..
நட்டுநடு ராத்திரியில் அடித்துபெய்யும்...
பேய் மழையால் -அறுவடைக்கு தயாரான ....
விளைபொருள் வெள்ளத்தில் மிதக்கும் .....
அப்போதும் சிரித்தமுகத்துடன் ....
அடுத்த காலத்தை நம்பிக்கையுடன் .....
இருக்கும் -உன் மனதைரியம்உன்னைவிட.....
யாருக்கு வரும் இந்த தைரியம் ....?
நச்சுபொருளுடன் நாளாந்தம் விளையாடுவாய் ...
இத்தனை துன்பம் வந்தாலும் நச்சு பொருளை....
உண்டு மடியாத -உன் மனதைரியம்...!!!
யாருக்கு வரும் இந்த தைரியம் ....?
காதலில் தோற்றால் நஞ்சு .....
பரீச்சையில் தோற்றால் நஞ்சு.....
நண்பனிடம் சண்டையிட்டால் நஞ்சு .....
இத்தனை துன்பம் வந்தபோதும்.....
தன் கையில் நஞ்சை அருந்தாத......
விவசாய தோழனை - நான் உணவு தரும் ......
கண்கண்ட கடவுள் என்பேன் வணங்குவேன் ...!!!
( இந்த கவிதையை விவசாயிகளுக்கு சமர்பிக்கிறேன் )
தூரத்துபார்வை கூட தெரியாத பொழுதில் ...
தலையிலே ஒரு கம்பீர தலைப்பாகை ...
கமக்கட்டுக்குள் ஒருமுழ துண்டு ...
தோளிலே மண்வெட்டி -உன் உழைப்பையே
காட்டும் விவசாய பாரதி -நீ
யாருக்கு வரும் இந்த தைரியம் ....?
கொட்டும் மழையில் உடல்விறைக்க...
உழைப்பாய் - வாட்டும் வெயிலில் ...
குருதியே வியர்வையாய் வெளிவர ....
உழைப்பாய் - நட்டுநடு ராத்திரியில் ...
காவல் செய்யவும் புறப்படுவாய் ..
யாருக்கு வரும் இந்த தைரியம் ....?
பட்ட விவசாய கடனை அடைக்க
பட்டையாய் உடல் கருகி ....
விற்று வந்த வருவாயை ..
கடனுக்கே கொடுத்துவிட்டு ...
அடுத்துவரும் காலத்தில் சாதிப்பேன் ..!!!
அதுவரையும் காத்திருக்கும் -உன் துணிவு
யாருக்கு வரும் இந்த தைரியம் ....?
உச்ச அறுவடை பொழுதினிலே ...
உச்ச சந்தோசம் பொங்கிடும் வேளையிலே ..
நட்டுநடு ராத்திரியில் அடித்துபெய்யும்...
பேய் மழையால் -அறுவடைக்கு தயாரான ....
விளைபொருள் வெள்ளத்தில் மிதக்கும் .....
அப்போதும் சிரித்தமுகத்துடன் ....
அடுத்த காலத்தை நம்பிக்கையுடன் .....
இருக்கும் -உன் மனதைரியம்உன்னைவிட.....
யாருக்கு வரும் இந்த தைரியம் ....?
நச்சுபொருளுடன் நாளாந்தம் விளையாடுவாய் ...
இத்தனை துன்பம் வந்தாலும் நச்சு பொருளை....
உண்டு மடியாத -உன் மனதைரியம்...!!!
யாருக்கு வரும் இந்த தைரியம் ....?
காதலில் தோற்றால் நஞ்சு .....
பரீச்சையில் தோற்றால் நஞ்சு.....
நண்பனிடம் சண்டையிட்டால் நஞ்சு .....
இத்தனை துன்பம் வந்தபோதும்.....
தன் கையில் நஞ்சை அருந்தாத......
விவசாய தோழனை - நான் உணவு தரும் ......
கண்கண்ட கடவுள் என்பேன் வணங்குவேன் ...!!!
( இந்த கவிதையை விவசாயிகளுக்கு சமர்பிக்கிறேன் )
Re: கே இனியவன் உழைப்பாளர் கவிதை
உடல் நாற்றம் மறைக்க
உள்ள வாசனையெல்லாம்
உடல் முழுக்க பூசி -உன்
உண்மை அழகை கெடுக்கும்
சுத்த வாங்களே....!!!
உன் வீட்டு கழிவு கிடங்கு
உடைந்து விட்டால் -உன்
மூக்கை நீயே பொற்றி...
வாந்தியும் எடுக்கிறாய் ...!!!
கழிவு அகற்றும் தொழிலாளியை
சற்று நினைத்துப்பார் -உன் கழிவை
தன் கழிவாக தன்னுடல் மேல்
சந்தனம் போல் பூசிவிட்டு வேலைசெய்யும்
சந்திர ஒளியனைபார் ....!!!
மனிதா உன்னிடம் நான் கேட்பது ...?
அவர்களுக்கு கொடுக்கும் மரியாதையை
வார்த்தையால் -கொடு ...
மனிதனாக அவர்களை பார் ...
அடிமை தொழில் செய்யும் அடிமையாக
பார்க்காதே ...!!!
செய்த வேலைக்கு ஊதியத்தை ...
மனமகிழ கொடு ...!!!
முற்பிறப்பில் அவர்கள் செய்தபாவம்..
என்று -பொருத்தமற்ற ஆன்மீகத்தை
பேசும் ஞானவான்களே ...?
அவர்கள் அழிவை உடலில் சுமக்கிறார்கள்
நீ மனதில் சுமர்ந்து கொண்டே இருக்கிறாய் ...!!!
( கழிவகற்றும் தொழிலாளர்களுக்கு இக் கவிதை
சமர்ப்பணம் )
உள்ள வாசனையெல்லாம்
உடல் முழுக்க பூசி -உன்
உண்மை அழகை கெடுக்கும்
சுத்த வாங்களே....!!!
உன் வீட்டு கழிவு கிடங்கு
உடைந்து விட்டால் -உன்
மூக்கை நீயே பொற்றி...
வாந்தியும் எடுக்கிறாய் ...!!!
கழிவு அகற்றும் தொழிலாளியை
சற்று நினைத்துப்பார் -உன் கழிவை
தன் கழிவாக தன்னுடல் மேல்
சந்தனம் போல் பூசிவிட்டு வேலைசெய்யும்
சந்திர ஒளியனைபார் ....!!!
மனிதா உன்னிடம் நான் கேட்பது ...?
அவர்களுக்கு கொடுக்கும் மரியாதையை
வார்த்தையால் -கொடு ...
மனிதனாக அவர்களை பார் ...
அடிமை தொழில் செய்யும் அடிமையாக
பார்க்காதே ...!!!
செய்த வேலைக்கு ஊதியத்தை ...
மனமகிழ கொடு ...!!!
முற்பிறப்பில் அவர்கள் செய்தபாவம்..
என்று -பொருத்தமற்ற ஆன்மீகத்தை
பேசும் ஞானவான்களே ...?
அவர்கள் அழிவை உடலில் சுமக்கிறார்கள்
நீ மனதில் சுமர்ந்து கொண்டே இருக்கிறாய் ...!!!
( கழிவகற்றும் தொழிலாளர்களுக்கு இக் கவிதை
சமர்ப்பணம் )
Re: கே இனியவன் உழைப்பாளர் கவிதை
சிற்பங்களை
வடிக்கும் சிற்பியே ...
உன் மனதை ...
கிழித்துப்பார்க்க ஆசை ...
பொன்முட்டையிடும்
வாத்து கதைபோல் ..
ஆகிவிடும் என் ஆசை ....!!!
எத்தனை எத்தனை
கற்பனைகள் ...
எத்தனை எத்தனை
நலினங்கள் ...
அத்தனையும் - உன் .
மனதில் வித்தையாய்
வடிக்கிறாய் -சிற்பியே ....!!!
நீ இல்லாத இடமேது ...?
கடவுளை கண்டேன் - உன்
கைவண்ணத்தில்
கடந்துசெல்லும் படியிலும்கண்டேன்
உன் கைவண்ணத்தை ...!!!.
தூக்கி செல்லும் வாகனத்தில் கண்டேன்
உன் கற்பனையை ....!!!
செதுக்குவது கல் அல்ல ...
நானும் நீயும் விரும்பும் உயிர் ...!!!
நீ
செதுக்கும் போது வருவது....
ஓசையல்ல...
உயிருக்கு உடல் ...!!!
(இந்த கவிதையை சிற்பாச்சாரியார்களுக்கு சமர்ப்பணம் )
வடிக்கும் சிற்பியே ...
உன் மனதை ...
கிழித்துப்பார்க்க ஆசை ...
பொன்முட்டையிடும்
வாத்து கதைபோல் ..
ஆகிவிடும் என் ஆசை ....!!!
எத்தனை எத்தனை
கற்பனைகள் ...
எத்தனை எத்தனை
நலினங்கள் ...
அத்தனையும் - உன் .
மனதில் வித்தையாய்
வடிக்கிறாய் -சிற்பியே ....!!!
நீ இல்லாத இடமேது ...?
கடவுளை கண்டேன் - உன்
கைவண்ணத்தில்
கடந்துசெல்லும் படியிலும்கண்டேன்
உன் கைவண்ணத்தை ...!!!.
தூக்கி செல்லும் வாகனத்தில் கண்டேன்
உன் கற்பனையை ....!!!
செதுக்குவது கல் அல்ல ...
நானும் நீயும் விரும்பும் உயிர் ...!!!
நீ
செதுக்கும் போது வருவது....
ஓசையல்ல...
உயிருக்கு உடல் ...!!!
(இந்த கவிதையை சிற்பாச்சாரியார்களுக்கு சமர்ப்பணம் )
Re: கே இனியவன் உழைப்பாளர் கவிதை
நித்தம் நித்தம் வேலை செய்து
அடுப்பு மூட்டும் அங்காடிகள் நாம்
நிலையற்ற தொழிலில் நிச்சயமற்ற
வருவாயில் வயிறு காக்கும் தினக்கூலி
அங்காடி குடும்பம் நாங்கள் .....!!!
மழை பெய்தால் வேலையில்லை
கடும் காற்றாடித்தால் வேலையில்லை
முதலாளி வராவிட்டால் வேலையில்லை
வேலையில்லாவிட்டால் வேலையில்லை
நிச்சய தொழிலில்லாத தினமும் அலையும்
தினக்கூலி குடும்பங்கள் நாம் ....!!!
ஆலயம் செல்வதில்லை -ஆனாலும்
ஆண்டவனிடம் மன்றாடுவோம்
இன்று மழைவரக்கூடாது
கடும் காற்று அடிக்க கூடாது
முதலாளி சுகநலத்தோடு வாழனும்
ஆகாயத்தை நம்பி ஆயுளை நடார்த்துகிறோம்
நோய் என்று இருக்க மாட்டோம்
வந்தாலும் சோரமாட்டோம்
ஒரு வேளை சோறு நாம் உருண்டால்
தானே உண்டதுண்டு -உலகிலேயே
அதிகமுறை உண்ணா நோன்பு இருந்தவர்கள்
நாமாகத்தான் இருக்கமுடியும் ....!!!
எங்களுக்கும் காலம் வரும்
தேர்தல் வரும் காலம் பொற்காலம்
இலவச உணவு உடுக்க உடை
படுக்க பாய் குடிக்க நீர் -அடிக்க தண்ணீர்
எங்களின் இயலாமையை நன்றாக பயன்
படுத்தும் அரசியல் வாதிகள் .....!!!
ஆயிரம் சட்டங்கள் அடுக்கடுக்காய் வரும்
ஒருசட்டம் கூட தினக்கூலியை
காப்பாற்றவில்லை
தினகூலியை காப்பாற்ற அரசியல் வாதியும்
விரும்புவதுமில்லை.....!!!
எம் மத்தியில்
ஒருவன் வீறு கொண்டு எழுவான்
தலைவனாவான் காலப்போக்கில்
அவனின் காது தங்க காதாகிவிடும்
நாம் கத்தும் அவலக்குரல் கேட்காது ....!!!
நாங்கள் என்றும் தினகூலிகளே ...!!!
அடுப்பு மூட்டும் அங்காடிகள் நாம்
நிலையற்ற தொழிலில் நிச்சயமற்ற
வருவாயில் வயிறு காக்கும் தினக்கூலி
அங்காடி குடும்பம் நாங்கள் .....!!!
மழை பெய்தால் வேலையில்லை
கடும் காற்றாடித்தால் வேலையில்லை
முதலாளி வராவிட்டால் வேலையில்லை
வேலையில்லாவிட்டால் வேலையில்லை
நிச்சய தொழிலில்லாத தினமும் அலையும்
தினக்கூலி குடும்பங்கள் நாம் ....!!!
ஆலயம் செல்வதில்லை -ஆனாலும்
ஆண்டவனிடம் மன்றாடுவோம்
இன்று மழைவரக்கூடாது
கடும் காற்று அடிக்க கூடாது
முதலாளி சுகநலத்தோடு வாழனும்
ஆகாயத்தை நம்பி ஆயுளை நடார்த்துகிறோம்
நோய் என்று இருக்க மாட்டோம்
வந்தாலும் சோரமாட்டோம்
ஒரு வேளை சோறு நாம் உருண்டால்
தானே உண்டதுண்டு -உலகிலேயே
அதிகமுறை உண்ணா நோன்பு இருந்தவர்கள்
நாமாகத்தான் இருக்கமுடியும் ....!!!
எங்களுக்கும் காலம் வரும்
தேர்தல் வரும் காலம் பொற்காலம்
இலவச உணவு உடுக்க உடை
படுக்க பாய் குடிக்க நீர் -அடிக்க தண்ணீர்
எங்களின் இயலாமையை நன்றாக பயன்
படுத்தும் அரசியல் வாதிகள் .....!!!
ஆயிரம் சட்டங்கள் அடுக்கடுக்காய் வரும்
ஒருசட்டம் கூட தினக்கூலியை
காப்பாற்றவில்லை
தினகூலியை காப்பாற்ற அரசியல் வாதியும்
விரும்புவதுமில்லை.....!!!
எம் மத்தியில்
ஒருவன் வீறு கொண்டு எழுவான்
தலைவனாவான் காலப்போக்கில்
அவனின் காது தங்க காதாகிவிடும்
நாம் கத்தும் அவலக்குரல் கேட்காது ....!!!
நாங்கள் என்றும் தினகூலிகளே ...!!!
Re: கே இனியவன் உழைப்பாளர் கவிதை
வாழ்க்கையின் பயணத்துக்கு
இறைவன் பார்த்த சாரதி
சாரதியாய் இருக்கிறார்
என்பது அவரவர் நம்பிக்கை ...!!!
நாளாந்த பிழைப்புக்காய்
நாம் பயணிக்கும் வாகன சாரதி
கண்கண்ட சாரதி ...
இயந்திரத்தின் வெப்பத்தை
தன் அடியில் தாங்கி
வீதியோரம் வரும் தூசியை
விரும்பாமல் கண்ணில் வாங்கி
முறையற்ற முறையில் வீதியில்
பயணிக்கும் பயணிகளின்
துன்பத்தை தன் இதயத்தில்
ஏற்று -எம் பயணம் வரை
எம் உயிரை பாதுகாக்கும்
வாகன சாரதிதான் -நான்
கண்ட பார்த்த சாரதி
இறைவன் பார்த்த சாரதி
சாரதியாய் இருக்கிறார்
என்பது அவரவர் நம்பிக்கை ...!!!
நாளாந்த பிழைப்புக்காய்
நாம் பயணிக்கும் வாகன சாரதி
கண்கண்ட சாரதி ...
இயந்திரத்தின் வெப்பத்தை
தன் அடியில் தாங்கி
வீதியோரம் வரும் தூசியை
விரும்பாமல் கண்ணில் வாங்கி
முறையற்ற முறையில் வீதியில்
பயணிக்கும் பயணிகளின்
துன்பத்தை தன் இதயத்தில்
ஏற்று -எம் பயணம் வரை
எம் உயிரை பாதுகாக்கும்
வாகன சாரதிதான் -நான்
கண்ட பார்த்த சாரதி
Similar topics
» கே இனியவன் படத்துக்கேற்ற கவிதை
» கே இனியவன் -கைபேசி கவிதை
» கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை
» கே இனியவன் சிறு கவிதை துளிகள்
» கே இனியவன் குறுங்காதல் கவிதை
» கே இனியவன் -கைபேசி கவிதை
» கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை
» கே இனியவன் சிறு கவிதை துளிகள்
» கே இனியவன் குறுங்காதல் கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|