சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை 5
by rammalar Today at 17:43

» பல்சுவை - 4
by rammalar Today at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Today at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Today at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Today at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Today at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Today at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Today at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Today at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

புற்றுநோய் மருந்து  Khan11

புற்றுநோய் மருந்து

+2
*சம்ஸ்
ahmad78
6 posters

Go down

புற்றுநோய் மருந்து  Empty புற்றுநோய் மருந்து

Post by ahmad78 Thu 13 Feb 2014 - 15:40

புற்றுநோய் என்றால் என்ன?

புற்றுநோய் (மருத்துவப் பெயர்: புற்றுத்திசு உடற்கட்டி) என்பது கட்டுப்பாடற்று கலங்கள் (செல்கள்) பிரிந்து பெருகுவதால் ஏற்படும் நோய் ஆகும். இந்தக் கலங்கள் பிரிந்து பரவி மற்ற தசைகளையும் தாக்குகின்றன. முதிர்ச்சியடைந்த நிலையில் இந்த புற்றுக்கலங்கள் குருதியின் வழியாகப் பரவுகின்றன. புற்று நோய் எந்த வயதினரையும் தாக்கும் எனினும் வயது கூடக்கூட புற்றுநோய் தாக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. மேலை நாடுகளில் இறப்பிற்கான முதன்மைக் காரணங்களில் இதுவும் ஒன்றாகும். செல்களில் துவங்கும் பல ஒன்றுக்கொன்று சம்பந்தமுடைய நோய்களின் தொகுப்பே புற்று நோய் ஆகும். உடலானது பல வகையான செல்களால் உருவாக்கப்பெற்றது. இயல்பாகவே உடலில் உள்ள செல்கள் வளர்ந்து பிரிந்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தேவையான அளவுக்கு பல செல்களை உருவாக்குகிறது. சில வேளைகளில், உடலுக்குத் தேவையற்ற பல புதிய செல்கள் தோன்றுகின்றன. உடலில் உள்ள பழைய வயதடைந்த செல்கள், இறக்க வேண்டிய நேரத்தில் இறந்து வெளியேறாமல் உடலிலேயே மிகுபடுகின்றன. இவ்வாறான அதிகப்படியான செல்கள், வளர்ச்சி அல்லது கழலை எனப்படும் திசுக்களின் கூட்டை ஏற்படுத்துகிறது.

புற்றுநோய் மருந்து  Lip-cancer-1024x768

எல்லாக் கழலைகளும் (டியூமர்) புற்று நோய் போன்றவையல்ல. கழலைகள் தீங்கில்லா கழலைகள் மற்றும் கேடுவிளைவிக்கும் கழலைகள் என இருவகைப்படும். தீங்கில்லா கழலைகள் புற்றுநோய் அல்ல. அவற்றை பொதுவாக உடலிலிருந்து நீக்கி விடலாம். பெரும்பாலான நிகழ்வுகளில் அவற்றை நீக்கிய பின்பு, மீண்டும் தோன்றுவது இல்லை. தீங்கில்லா கழலைகளில் உள்ள செல்கள் மற்ற உடல் பகுதிகளுக்கு பரவுவதில்லை. கேடு விளைவிக்கும் கழலைகள் என்பவை புற்று நோயாகும். கேடு விளைவிக்கும் கழலையில் உள்ள செல்கள் இயல்புக்கு மாறாகவும் எந்த கட்டுப்பாடுமின்றியும் பிரிவுற்று பெருகும். இப்படி ஏற்பட்ட புற்றுநோய் செல்கள் இதனை சுற்றியுள்ள திசுக்களுக்குள் சென்று அவற்றை அழித்துவிடும். புற்றுநோய் செல்கள் கேடு விளைவிக்கும் கழலைகளை உடைத்துக் கொண்டு அங்கிருந்து இரத்த ஓட்டம் அல்லது நிணநீர் மண்டலத்துக்குள் நுழைந்துவிடும்.

புற்றுநோய்களின் அறிகுறிகள் என்னென்ன?

நீண்ட நாட்களுக்கு வாயிலோ நாக்கிலோ வெள்ளையான தடிப்பு இருந்தால் வாய் புற்று நோய் வரும். இரத்தக் கசிவு மார்பிலிருந்தால் மார்பு புற்று நோய் உண்டாகும். மாதவிடாய் நின்றபின் இரத்தக் கசிவு மற்றும் வெள்ளைப்படுதல் இருந்தால் கருப்பை புற்றுநோய் அறிகுறியாகும். மூலமில்லாத இரத்தக் கசிவு, மலங்கழிக்கும் போது இருந்தால் குடல் புற்றுநோய் அறிகுறியாகும். நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கும் புண், தோல் புற்று நோயின் அறிகுறியாகும். உணவை விழுங்கும் போது ஏற்படும் அடைப்பு உணவுக் குழாய் புற்று நோயின் அறிகுறியாகும். திடீர் குரல் மாற்றம் மூச்சுக் குழாயின் புற்று நோயாக இருக்கலாம். மச்சம் பெரிதானால் புற்று நோயாகலாம். எந்த நோயும் இல்லாமல் உடல் எடை குறைதல், பசியின்மை, அஜீரணம் போன்றவை புற்றுநோயின் அறிகுறிகளாகவும் இருக்கலாம். தொடர்ந்து நீடித்த, நாளுக்கு நாள் அதிகமாகிற, மருந்துக்கு கட்டுப்படாத தலைவலி மூளைப் புற்று நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

சிகிச்சைக்கு குறையாமல் தொடருகிற காமாலை நோய் பித்தப்பை மற்றும் கணையத்தின் புற்றுநோய்களின் அறிகுறியாகும். திடீரென பெரிதாகின்ற, கரையாத நிணநீர் கட்டி புற்று நோயாக இருக்கலாம். இருமல், மூச்சிறைத்தல், கோழையில் இரத்தம் போன்றவை நுரையீரல் புற்றுநோயாக இருக்கலாம். வயிற்றுவலி, இரத்தவாந்தி, சாப்பிட இயலாமை, வாந்தியில் இரத்தம் போன்றவை இரைப்பை புற்றுநோயாக இருக்கலாம். வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல், வயிற்றுப்போக்கும் மலச்சிக்கலும் மாறி மாறி வருதல் வயிற்று வலி, வாந்தி போன்றவை பெருங்குடல் புற்று நோயாக இருக்கலாம். வலிப்பு, மயக்கம், தீராத தலைவலி, வாந்தி, கண்பார்வை குறைவு, கைகால்கள் செயலிழத்தல், போன்றவை மூளை புற்று நோயாக இருக்கலாம்.


புற்றுநோயை பற்றிய கருத்துக்கள்.


1. புற்றுநோய் ஒரு தொற்று நோயல்ல. புற்று நோயுள்ளவர்களை பராமரிப்பதால் யாருக்கும் பரவுவதில்லை.
2. ஆரம்பகால புற்றுநோயை எளிதில் அறியமுடியும். முழுவதும் குணமாக்க முடியும்.
3. பல்வேறு புற்று நோய்களுக்குக் காரணங்கள் இன்னும் தெரியாமலேயே இருக்கிறது.
4. புகைப்பிடித்தல், மது அருந்துதல், சரியான உணவு பழக்கமின்மை, செயற்கை உணவு பொருட்கள் போன்றவைகளைத் தவிர்த்தல் பலநோய்களை தடுக்கும் வழிகளாகும்.
5. இன்றைய நாகரீக உலகில் மாரடைப்பும், புற்றுநோயும் மனிதனின் இறப்பிற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.



புற்று நோய் வகைகள்


1.மார்பக புற்று நோய்
2.சினைப்பை புற்றுநோய்
3. கருப்பை வாய் புற்று நோய்
4.கருப்பை புற்றுநோய்
5 உணவுக் குழாய் புற்று நோய்
6. இரைப்பை புற்றுநோய்
7. மலக்குடல் புற்றுநோய்
8. கணைய புற்றுநோய்
9. கல்லீரல் புற்றுநோய்
10. சிறுநீரக புற்றுநோய்
11 சிறுநீர்ப்பை புற்றுநோய்
12. புராஸ்டேட் புற்றுநோய்
13. பியோகுரோமோ சைட்டோமோ
14.இரத்தப் புற்றுநோய்
15. நிணநீர் கட்டிகளின் புற்றுநோய்
16. குரல்வளை புற்றுநோய்
17. நுரையீரல் புற்றுநோய்
18. புளுரா (நுரையீரல் சவ்வு) புற்றுநோய்
19. சிறுவர்களின் எலும்பு புற்றுநோய்
20. எய்ட்ஸ் புற்றுநோய்-கபோசி சார்கோமா
21. மச்ச புற்றுநோய்
22. தோல் புற்றுநோய்
23. மூளையில் புற்றுநோய்


புற்று நோயை குணப்படுத்தும் பழங்கள்

புற்றுநோய் மருந்து  Tamil_Daily_News_27117121220

நாகரீகம் என்பது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பண்பாகக் கருதப்பட்டது. இன்று, அது நடைமுறையாக, பழக்கவழக்கங்களாகப் பார்க்கப்படுகிறது. உடைகள், உணவுகள், உடல் அலங்காரங்கள், பேச்சு மொழிகள், பயணம் செய்யும் வாகனங்கள் அனைத்தும் நாகரீகம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த நாகரீகம் தனி நபருக்கோ, சமூகத்துக்கோ உயர்வைத் தரவில்லை. மாறாக, பலவிதமானத் தொல்லைகளை உண்டுபண்ணுகிறது.

200 கிராம் திராட்சைப் பழத்தில் தொடங்கி இரண்டு கிலோ வரை உண்டு வந்தால், புற்று நோய் விரைவில் குணமாகும்.


தூய காற்றைச் சுவாசிக்கும் உரிமையை அடிப்படை உரிமையில் சேர்க்கச் சொல்லி, உலக சுகாதார நிறுவனம் அனைத்து நாடுகளையும் வற்புறுத்தி வருகிறது. இன்றைய நாகரிகத்தால் சுத்தமான சுவாசக் காற்றை அளிக்க முடிகிறதா?

மது, குடிப்பவரின் குடும்பத்தைப் பாதிக்கிறது. குடிப்பவரின் உடல்நலம் மட்டுமே பாதிப்புக்கு ஆளாகிறது. ஆனால், புகைப்பவர்கள் 90-க்கும் மேற்பட்ட நச்சுப் பொருட்களையும், 4,000-க்கும் மேற்பட்ட வேதிப் பொருட்களையும் காற்றில் கலந்துவிடுகின்றனர். இதன் மூலம் மற்றவர்களுக்கு சுவாசிக்கத் தூய காற்று இல்லாத நிலை ஏற்படுகிறது. இதன் விளைவு என்ன?

நம் நாட்டில் இன்று 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களில், 32 பேரில் ஒருவருக்கு மார்பகப் புற்று நோய் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சையின் மூலம் முதலில் ஒரு பக்கம் மார்பகம் நீக்கப்படும். ஒரு சிலருக்கு மறுபக்க மார்பகமும் சில காலம் கழித்து நீக்கப்படும். முடிவில் மிகுந்த மன உளைச்சலோடு துன்புறுகிறார்கள். தொண்டைப் புற்று, ரத்தப் புற்று, வயிற்றுப் புற்று போன்ற பல வகைப் புற்றுகளால் எண்ணற்றோர் பாதிக்கப்படுகிறார்கள்.


தொண்டைப் புற்றுநோய் கண்டவரை வெறும் ஆரஞ்சுச் சாறு மட்டும் குடித்துக் குணப்படுத்திவிடலாம் என்பது ஆச்சரியம். ஆனால் உண்மை. மற்ற வகை புற்று நோயாளிகளுக்குத் திராட்சைப் பழத்தை மட்டுமே கொடுத்து வந்தால், நோயை விரைவிலேயே குணப்படுத்த முடியும். 200 கிராம் திராட்சைப் பழத்தில் தொடங்கி இரண்டு கிலோ வரை உண்டு வந்தால், புற்று நோய் விரைவில் குணமாகும். தினமும் கேரட்டும், திராட்சையும் உண்டு வந்தால் புற்றுநோய் வராமல் தவிர்த்துக்கொள்ளலாம். வெறும் தேங்காயும், வாழைப் பழமும் மட்டுமே உணவாகக் கொடுத்து சிறிது காலத்திலேயே அனைவரையும் தொழுநோயிலிருந்து குணப்படுத்தி விடலாம்.

ஆனால், இன்று சந்தையில் கிடைக்கும் வாழைப்பழம், கேரட், திராட்சை, ஆரஞ்சு போன்றவை எந்த அளவுக்கு நோய் தீர்க்கவல்லவை? 150 நாட்களில் விளையும் கேரட் கிழங்குக்கு, 55 முறை நஞ்சு தெளிக்கிறார்கள். 10 மாதத்தில் பலன் தரும் வாழை மரத்துக்கு, நான்கு முறை ஊசி மூலம் நஞ்சை ஏற்றுகிறார்கள். 100 நாட்களில் பலன் தரும் திராட்சைக்கு, 17 முறை நஞ்சு தெளிக்கிறார்கள். இது விஞ்ஞானம் என்ற பெயரில் நடைமுறையில் உள்ள நாகரிகம். விஞ்ஞானம் ஒன்றே நமது துன்பங்களுக்கு எல்லாம் விடையளிக்க முடியும் என்ற தவறான சிந்தனை 20-ஆம் நூற்றாண்டில் மக்களுக்கு பெரும் துயரத்தை அளித்துள்ளது.

உணவே மருந்து என்பதுதான் நமது சித்தர்களின் வாக்கு. ஆனால், மருந்தாகக்கூடிய உணவே இன்று நஞ்சாகிக் கிடக்கிறது. நமது பழங்களையும், கொட்டைகளையும் நாடெங்கும் பரப்பவல்ல பறவைகள் மடிந்தன. பயிர்களைப் பாதுகாப்பதில் பறவைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
உரம் என்ற பெயரில் மண்ணில் இடப்பட்ட ரசாயனங்கள் மண்ணில் உள்ள உயிரினத்தை அழித்ததோடு, விளைச்சலையும் வீழ்த்தியது. கூடவே, நைட்ரஸ் ஆக்ஸைடை தோற்றுவித்து பூமி சூடாவதற்கும் முக்கியக் காரணியாகிறது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

புற்றுநோய் மருந்து  Empty Re: புற்றுநோய் மருந்து

Post by *சம்ஸ் Thu 13 Feb 2014 - 18:48

பகிர்விற்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

புற்றுநோய் மருந்து  Empty Re: புற்றுநோய் மருந்து

Post by பானுஷபானா Fri 14 Feb 2014 - 13:33

பயனுள்ள தகவல் நன்றீ
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

புற்றுநோய் மருந்து  Empty Re: புற்றுநோய் மருந்து

Post by ராகவா Fri 14 Feb 2014 - 19:26

பயனுள்ள தகவல்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

புற்றுநோய் மருந்து  Empty Re: புற்றுநோய் மருந்து

Post by rammalar Fri 14 Feb 2014 - 20:15

உணவே மருந்து என்பது பலனளிக்காது..!
-
இயற்கை உரம் போட்டு விளைவித்த காய் கனி
கிடைக்கும் வரை...!!
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24383
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

புற்றுநோய் மருந்து  Empty Re: புற்றுநோய் மருந்து

Post by மீனு Sun 16 Feb 2014 - 8:00

பயனுள்ள கட்டுரை நன்றி  )( 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

புற்றுநோய் மருந்து  Empty Re: புற்றுநோய் மருந்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» புற்றுநோய் கட்டி வளர்ச்சியை தடுக்கும் வலி நிவாரண மருந்து
» புற்றுநோய் கட்டி வளர்ச்சியை தடுக்கும் வலி நிவாரண மருந்து
» புற்றுநோய் கட்டி வளர்ச்சியை தடுக்கும் வலி நிவாரண மருந்து
» குழந்தைகளுக்கு ஏற்படும் பார்வை இழப்பை தடுக்க உதவும் புற்றுநோய் மருந்து கண்டுபிடிப்பு
» சூட்டுடன் டீ குடிப்போருக்கும் புற்றுநோய்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum