Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Today at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
ராஜபாளையம் ஸ்பேசல்.....
Page 1 of 1
ராஜபாளையம் ஸ்பேசல்.....
வெளிநாடுகளுக்கு ராஜபாளையம் நாய்கள்!
ராஜபாளையம் : வெளிநாடுகளுக்கு ராஜபாளையம் நாய்கள் செல்லும் நிலையில் , நாய்குட்டிகள் உற்பத்தியில் போலிகள் புகுந்துள்ளதால் இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். உலகில் உள்ள 350 இன நாய்களில் இந்திய வகையில் 6 இனங்களே அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதில் ராஜபாளையம், சிப்பிபாறை, கன்னி, கோம்பை என நான்கு இனங்கள் தென்தமிழகத்தை சேர்ந்தவை. வீட்டு உணவை சாப்பிட்டு வளர்பவை. இதற்கு வெளிநாட்டு நாய்களை போன்று எஜமான் விசுவாசம், கீழ்படிதல், நுகர்வு தன்மை, சுறுசுறுப்பு உண்டு. வீட்டு காவலுக்கு ராஜபாளையம் நாய்கள், வேட்டைக்காக சிப்பிபாறை, கோம்பை, கன்னி வகை நாய்கள் பயன்படுகின்றன.
நன்றி:http://kavitamilan.blogspot.in/2011/08/blog-post_7984.html
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ராஜபாளையம் ஸ்பேசல்.....
ராஜபாளையத்தில் "கென்னல் கிளப்' அங்கீகாரம் இல்லாத சில பண்ணைகளும் உள்ளன. இங்கு குடிசை தொழில் போல் நாய்குட்டி உற்பத்தியும் மாறி வருவதால் சிலர் லாப நோக்குடன் , தெருநாய்களை கலந்து, கலப்பின குட்டிகள் உருவாக்குகின்றனர். இந்த கலப்பின குட்டிகளோ பார்வை கோளாறு, காது கேட்கும் தன்மை குறைவு போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றன. குட்டியாக இருக்கும்போது தெரியாத இந்த குறைகள், வளரும்போது தான் தெரிகிறது. இதில் ஏமாறும் பலரும் எங்கு புகார் செய்வது என தெரியாமல் உள்ளனர். ராஜபாளையம் வகை நாய்களுக்கு தேவை அதிகமாக இருப்பதால், இத்தொழிலை அரசு முறைப்படுத்தி, நாய் உற்பத்தியை பெருக்கலாம்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ராஜபாளையம் ஸ்பேசல்.....
ராஜபாளையம் கான்டம்: பிளேட் கென்னல் கிளப் நாய்பண்ணை உரிமையாளர் சுரேந்திரன்பாபு கூறியதாவது: ராஜபாளையம் வகை நாய்கள் அந்தந்த சீதோஷ்ண நிலைக்கு மாறும் தன்மை கொண்டவை. இதற்கு எதிர்ப்பு சக்தி அதிகம் உண்டு . ஜம்முவில் உள்ள பாராமுல்லா ராணுவ முகாம், அந்தமான் தீவிற்கு அனுப்பி உள்ளோம். வெளிநாட்டு மோகத்தால், நம்நாட்டு நாய்களுக்கு வாய்ப்பு இல்லாமல் இருந்த நிலையில், தற்போது கேரளாவில் வீடு, எஸ்டேட்களுக்கு இங்கிருந்து குட்டிகள் செல்கின்றன. ஆந்திரா, கர்நாடகாவிற்கும் குட்டி செல்கின்றன. இத்தொழிலை அரசு முறைப்படுத்தி, வங்கி கடனுக்கு ஏற்பாடு செய்தால், வேலை இல்லா இளைஞர்கள் பலர் இத்தொழிலில் ஈடுபடுவர், என்றார்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ராஜபாளையம் ஸ்பேசல்.....
ஊருக்குள் நுழையும்
பொழுதே "நாய்களின் நகரம்" உங்களை வரவேற்கிறது
என்றுதான் போர்டு வைத்திருப்பார்கள். அந்த அளவிற்கு
ராஜபாளையத்து நாய்கள் மிகவும் புகழ் பெற்றவை.
பல வருடங்களுக்கு முன்பு, ஆந்திராவிலிருந்து
'ராஜூக்கள்' என்னும் சமூகத்தினர் இங்கு புலம்பெயர்ந்து
ஆட்சிபுரிந்ததால் ராஜாக்களின் கோட்டை அதாவது
"ராஜபாளையம்" என்று அழைக்கப்படுவதாக
படித்திருக்கிறேன். மேலும் இங்கு சஞ்சீவி மலை என்ற ஒரு
மலை உள்ளது. இது லக்ஷ்மனனுக்காக, அனுமன் எடுத்து
வந்த சஞ்சீவி மலையின் ஒரு பகுதி என்கிறார்கள்.
ராஜபாளையத்திற்கு அருகில் அய்யனார்கோவில் என்ற
ஒரு இடம் உள்ளது. இது மேற்குத்தொடர்ச்சி மலையின்
அடிவாரத்தில் உள்ள ஒரு காட்டுப்பகுதி. இங்கு அருவியும், பல
அரிய வகை மூலிகைகளும், உயிரினங்களும் உள்ளன. இது
பிக்னிக் செல்வதற்கு ஏற்ற இடம். ராஜபாளையத்தைச் சுற்றி
பல காட்டன் மில்கள் உள்ளன. இங்குள்ள பெரும்பாலோர்
வேலை பார்ப்பது இந்த ஆலைகளில்தான்.
இந்த ராஜபாளையத்தைப் பற்றி சமீபத்தில் படித்த கட்டுரை :
சரித்திரங்களின் சங்கமம் ராஜபாளையம் :-
' தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை
அழித்திடுவோம்...' என்ற இந்த வரிகளுக்கு சொந்தக்காரரான
முண்டாசுக் கவிஞர் பாரதியார், ஒருமுறை பாழடைந்த தனது
வீட்டை சீரமைக்க எண்ணி, மனைவி செல்லம்மாள்
வற்புறுத்தலால், ராஜபாளையம் ஜமீன்தாரை பார்க்க வந்தார்.
அவர் ஊரில் இல்லாததால், பசியும், களைப்புமாய்
ராஜபாளையத்தில் எழுதிய அனல் வரிகள்தான் இவை. கி.பி.15
ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னரின் தலைமுறையைச்
சேர்ந்த சின்னராஜா இங்கு கோட்டை கட்டி ராஜ்ஜியம்
செய்ததால், இந்த ஊரின் பெயர் ராஜபாளையமாயிற்று.
பாளையம் என்றால் கோட்டை என்று பொருள்.
ஆரம்பத்தில் கீழராஜகுலராமன் என்ற பகுதியில் தங்கி நகரை
விரிவுபடுத்தினர். பின், கி.பி. 1483 ல் ராஜபாளையத்தில் உள்ள
சஞ்சீவி மலையில் இருப்பிடத்தை மாற்றினர்.
விஜயநகரத்தில் நடந்த கள்ளிக்கோட்டை போரால்
மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது. இதனால்
அங்கிருந்து ராஜூக்கள் சமூகத்தினர் ராஜபாளையத்தில்
குடியேறினர். இதன் அடையாளமாக தற்போதும்
சமுதாயசாவடி இருக்கிறது. இங்கு கி.பி.12 ம்
நூற்றாண்டின் இறுதியில் பாண்டிய மன்னர்களால்
விரிவு படுத்தப்பட்ட வெங்கடேசப் பெருமாள் கோவில்
உள்ளது. மதுரையை ஆண்ட முதலாம் ஜடாவர்ம
குலசேகரபாண்டியன் இக்கோயிலின் பராமரிப்பு
செலவுகளுக்கு நிலங்களைத் தானமாக வழங்கினார்.
இவ்விபரங்கள் கோயில் கர்ப்பகிரகத்தில் கல்வெட்டுகளாக
பொறிக்கப்பட்டுள்ளன. மேலும் தாமரைக்கண்ணன் என்பவர்,
தினமும் எண்ணெய் விளக்கேற்றும் செலவுக்காக, தனது
ஆஸ்தியை வழங்கிய விவரமும் கல்வெட்டில் உள்ளது.
முகமண்டபத்தின் தூண்கள் கிருஷ்ணமாராஜா மற்றும்
சோழராஜா என்பவர்களால் உருவாக்கப்பட்டன.
மதுரை ரோட்டில் வடுக ஊரணி என்னும் ஊரணி
உள்ளது. பாண்டிய மன்னர்களால் உருவாக்கப்பட்டதாக
கருதப்படும் இந்த ஊரணி சமீபத்தில் தூர்
வாரப்பட்டிருக்கிறது. அப்போது சிவலிங்கம், நந்திகள்
உட்பட பல சிலைகள் கிடைத்துள்ளன.
மேலும் 600 ஆண்டுகள் பழமையான மரம் ஒன்று
இன்றும் ராஜபாளையத்தில் இருக்கிறது. இதன் பெயர்
"ஆப்பிரிக்கன் போபாப்". ஆப்பிரிக்கக் காடுகளில் மட்டுமே
காணப்படும் இந்த மரம், அதிக வயதுடைய மரங்களில்
ஒன்று. பிற்கால பாண்டிய மன்னர்கள் தங்களது கடல்
பயணத்தின் மூலம் இதைக் கொண்டு வந்திருக்கலாம்
எனக் கூறப்படுகிறது.
சுதந்திரப் போராட்டக் காலத்தில், வீரர்கள் நமது
தேசியக் கொடியை சஞ்சீவி மலையின் உச்சியில் பறக்க
விட்டு புரட்சி செய்தனர். இவ்வாறு திரும்பும் இடமெல்லாம்
வரலாற்று சுவடுகளை தாங்கி நிற்கும் ராஜபாளையம்,
சரித்திரங்களின் சங்கமமாக உள்ளது.
நன்றி:http://vaarthaichithirangal.blogspot.in/2011/04/blog-post.html
பொழுதே "நாய்களின் நகரம்" உங்களை வரவேற்கிறது
என்றுதான் போர்டு வைத்திருப்பார்கள். அந்த அளவிற்கு
ராஜபாளையத்து நாய்கள் மிகவும் புகழ் பெற்றவை.
பல வருடங்களுக்கு முன்பு, ஆந்திராவிலிருந்து
'ராஜூக்கள்' என்னும் சமூகத்தினர் இங்கு புலம்பெயர்ந்து
ஆட்சிபுரிந்ததால் ராஜாக்களின் கோட்டை அதாவது
"ராஜபாளையம்" என்று அழைக்கப்படுவதாக
படித்திருக்கிறேன். மேலும் இங்கு சஞ்சீவி மலை என்ற ஒரு
மலை உள்ளது. இது லக்ஷ்மனனுக்காக, அனுமன் எடுத்து
வந்த சஞ்சீவி மலையின் ஒரு பகுதி என்கிறார்கள்.
ராஜபாளையத்திற்கு அருகில் அய்யனார்கோவில் என்ற
ஒரு இடம் உள்ளது. இது மேற்குத்தொடர்ச்சி மலையின்
அடிவாரத்தில் உள்ள ஒரு காட்டுப்பகுதி. இங்கு அருவியும், பல
அரிய வகை மூலிகைகளும், உயிரினங்களும் உள்ளன. இது
பிக்னிக் செல்வதற்கு ஏற்ற இடம். ராஜபாளையத்தைச் சுற்றி
பல காட்டன் மில்கள் உள்ளன. இங்குள்ள பெரும்பாலோர்
வேலை பார்ப்பது இந்த ஆலைகளில்தான்.
இந்த ராஜபாளையத்தைப் பற்றி சமீபத்தில் படித்த கட்டுரை :
சரித்திரங்களின் சங்கமம் ராஜபாளையம் :-
' தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை
அழித்திடுவோம்...' என்ற இந்த வரிகளுக்கு சொந்தக்காரரான
முண்டாசுக் கவிஞர் பாரதியார், ஒருமுறை பாழடைந்த தனது
வீட்டை சீரமைக்க எண்ணி, மனைவி செல்லம்மாள்
வற்புறுத்தலால், ராஜபாளையம் ஜமீன்தாரை பார்க்க வந்தார்.
அவர் ஊரில் இல்லாததால், பசியும், களைப்புமாய்
ராஜபாளையத்தில் எழுதிய அனல் வரிகள்தான் இவை. கி.பி.15
ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னரின் தலைமுறையைச்
சேர்ந்த சின்னராஜா இங்கு கோட்டை கட்டி ராஜ்ஜியம்
செய்ததால், இந்த ஊரின் பெயர் ராஜபாளையமாயிற்று.
பாளையம் என்றால் கோட்டை என்று பொருள்.
ஆரம்பத்தில் கீழராஜகுலராமன் என்ற பகுதியில் தங்கி நகரை
விரிவுபடுத்தினர். பின், கி.பி. 1483 ல் ராஜபாளையத்தில் உள்ள
சஞ்சீவி மலையில் இருப்பிடத்தை மாற்றினர்.
விஜயநகரத்தில் நடந்த கள்ளிக்கோட்டை போரால்
மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது. இதனால்
அங்கிருந்து ராஜூக்கள் சமூகத்தினர் ராஜபாளையத்தில்
குடியேறினர். இதன் அடையாளமாக தற்போதும்
சமுதாயசாவடி இருக்கிறது. இங்கு கி.பி.12 ம்
நூற்றாண்டின் இறுதியில் பாண்டிய மன்னர்களால்
விரிவு படுத்தப்பட்ட வெங்கடேசப் பெருமாள் கோவில்
உள்ளது. மதுரையை ஆண்ட முதலாம் ஜடாவர்ம
குலசேகரபாண்டியன் இக்கோயிலின் பராமரிப்பு
செலவுகளுக்கு நிலங்களைத் தானமாக வழங்கினார்.
இவ்விபரங்கள் கோயில் கர்ப்பகிரகத்தில் கல்வெட்டுகளாக
பொறிக்கப்பட்டுள்ளன. மேலும் தாமரைக்கண்ணன் என்பவர்,
தினமும் எண்ணெய் விளக்கேற்றும் செலவுக்காக, தனது
ஆஸ்தியை வழங்கிய விவரமும் கல்வெட்டில் உள்ளது.
முகமண்டபத்தின் தூண்கள் கிருஷ்ணமாராஜா மற்றும்
சோழராஜா என்பவர்களால் உருவாக்கப்பட்டன.
மதுரை ரோட்டில் வடுக ஊரணி என்னும் ஊரணி
உள்ளது. பாண்டிய மன்னர்களால் உருவாக்கப்பட்டதாக
கருதப்படும் இந்த ஊரணி சமீபத்தில் தூர்
வாரப்பட்டிருக்கிறது. அப்போது சிவலிங்கம், நந்திகள்
உட்பட பல சிலைகள் கிடைத்துள்ளன.
மேலும் 600 ஆண்டுகள் பழமையான மரம் ஒன்று
இன்றும் ராஜபாளையத்தில் இருக்கிறது. இதன் பெயர்
"ஆப்பிரிக்கன் போபாப்". ஆப்பிரிக்கக் காடுகளில் மட்டுமே
காணப்படும் இந்த மரம், அதிக வயதுடைய மரங்களில்
ஒன்று. பிற்கால பாண்டிய மன்னர்கள் தங்களது கடல்
பயணத்தின் மூலம் இதைக் கொண்டு வந்திருக்கலாம்
எனக் கூறப்படுகிறது.
சுதந்திரப் போராட்டக் காலத்தில், வீரர்கள் நமது
தேசியக் கொடியை சஞ்சீவி மலையின் உச்சியில் பறக்க
விட்டு புரட்சி செய்தனர். இவ்வாறு திரும்பும் இடமெல்லாம்
வரலாற்று சுவடுகளை தாங்கி நிற்கும் ராஜபாளையம்,
சரித்திரங்களின் சங்கமமாக உள்ளது.
நன்றி:http://vaarthaichithirangal.blogspot.in/2011/04/blog-post.html
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|