சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

 அழகு + ஆரோக்கியம்   Khan11

அழகு + ஆரோக்கியம்

Go down

 அழகு + ஆரோக்கியம்   Empty அழகு + ஆரோக்கியம்

Post by நண்பன் Fri 18 Feb 2011 - 1:45

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி.இந்த பழமொழியில் பல அர்த்தங்கள் புதைந்துள்ளன. முகம் அழகாக தோன்ற வேண்டுமானால் உடலில் உள்ளே உள்ள உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்க
வேண்டும்.


இன்றைய காலத்தில் அத்தியாவசியத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம், பொருள் இதன் பட்டியலில் அழகும் இடம்பிடித்து விட்டது.எனவே உடலை நன்கு பராமரித்தால்தான் இயற்கையான உண்மையான அழகைப் பெறமுடியும்.

இன்றைய நவீன உலகில் உணவு மாறுபாடு காரணமாக முகமும், சருமமும் பாதித்த நிலையிலேயே பலர் காணப்படுகின்றனர். இவர்களின் இந்த நிலையைப் பயன்படுத்தி பணம் குவிக்க பல அழகு நிலையங்கள் ஆங்காங்கே புதிது புதிதாய் முளைக்க ஆரம்பித்துவிட்டன.

முக அழகை பராமரிக்க மேலை நாட்டினர் இரசாயனம் கலந்த அழகுசாதன பொருட்களை மேல்பூச்சாக பூசி வந்தனர். நாளடைவில் மேலை நாட்டினரும் இயற்கையை நேசித்து, அதன் அருமையை புரிந்துகொண்ட இயற்கை மூலிகைகளை பயன்படுத்தி, இயற்கையான உணவுகளை சாப்பிட்டு இயற்கையாக உடல் அழகையும் முக அழகையும் பெற ஆரம்பித்துள்ளனர்.

ஆனால் நம் மக்கள் பலர் மேல்நாட்டு மோகத்தால் ரசாயன அழகு சாதனப் பொருட்களை உபயோகிக்க ஆரம்பித்துள்ளனர். பொதுவாக சருமத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

1. சாதாரண சருமம்

2. வறட்சியான சருமம்

3. எண்ணெய் பிசுக்கு கொண்ட சருமம்

வறட்சியான சருமம்

வறட்சியான சருமம் கொண்டவர்களின் முகம் மிகவும் கறுத்து களையிழந்து காணப்படும். இதற்குக் காரணம் இவர்களின் உணவு முறையே. வறட்சியான சருமம் கொண்டவர்களுக்கு மலச்சிக்கல் இருக்கும். இவர்கள் உணவில் அதிகம் புளி, தக்காளி போன்ற புளிப்புச் சுவையை விரும்பி சாப்பிடுபவர்களாக இருப்பார்கள். வறட்சியான சருமம் கொண்டவர்களின் முகம் பளபளக்க சில வழிமுறைகள் இதோ...

வெண்டைக்காய் பிஞ்சு - 2

காரட் - 1

இவற்றை எடுத்து நறுக்கி தேங்காய் பால் விட்டு அரைத்து முகம் மற்றும் உடல் எங்கும் பூசி சிறிது நேரம் ஊறவைத்து குளித்து வந்தால் வறண்ட சருமம் ஒளிபெறும்.

· செம்பருத்தி இலை, பயித்தம் பயறு இவற்றை சம அளவாக எடுத்து நீர்விட்டு அரைத்து முகத்தில் பூசிவந்தால் முகம் பளபளக்கும். · அகத்திக் கீரையை தேங்காய் பால் விட்டு அரைத்து முகம் மற்றும் உடல் முழுவதும்பூசி ஊறவைத்து பின் குளித்து வந்தால் முகமும், உடலும் வசீகரமாகும்.

· வறட்சியான சருமம் கொண்டவர்கள் புளிப்பு சுவை கொண்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. மேலும் மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

· சருமத்தை வறட்சியுறச் செய்யும் குளியல் சோப்புகளைத் தவிர்ப்பது நல்லது.

· பாதாம், முந்திரி, வேர்க்கடலை போன்ற பருப்பு வகைகளை உணவில் மிதமான அளவு சேர்த்துக்கொள்ள வேண்டும் . · வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

வெண்டைகாய் - 150 கிராம்

சிறுபயறு - 30 கிராம்

துத்தியிலை - 10 கிராம்

ஆவாரம் பூ - 1 கைப்பிடி

மிளகு - 5

சீரகம் - 5 கிராம்

பூண்டு - 2 பல் பெருங்காயம் - தேவையான அளவு இவற்றை அரை லிட்டர் நீரில் கொதிக்க வைத்து அந்த சாறினை வடிகட்டி அருந்தி வந்தால் வறட்சியான உடல் குளிர்ச்சியடைந்து பளபளப்பாகும். தொடர்ந்து ஒரு மண்டலம் இவ்வாறு செய்து வருவது நல்லது.

எண்ணெய் பிசுக்கு கொண்ட சருமம்

சிலருடைய முகம் எப்போதும் எண்ணெய் பசையுடனே காணப்படும். மேலும் அவர்கள் எவ்வளவுதான் முகத்தை கழுவினாலும் எண்ணெய் வடிவது போன்றே இருக்கும். இதற்கு காரணம் கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக உண்பதே. இவர்கள்... · தக்காளிச் சாற்றினை முகத்தில் தேய்த்து 15 நிமிடம் கழித்து முகம் கழுவி வந்தால் முகத்தில் எண்ணெய் பசை நீங்கும். · வெள்ளரிக்காயை எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி 10 நிமிடம் காயவைத்து பின் குளிர்ந்த நீரில் முகம் கழுவி வந்தால் முகத்தில் உள்ள எண்ணெய் பசை குறையும். · சின்ன வெங்காயத்தை நன்கு வேகவைத்து தயிர் கலந்து அரைத்து முகத்தில் தேய்த்தால் முகம் பளபளக்கும்.

ஆரஞ்சு ஜூஸ் - 100 மிலி எலுமிச்சை ஜூஸ் - 100 மிலி

நெல்லிச்சாறு - 100 மிலி

புதினா சாறு - 100 மிலி

சாத்துகுடி சாறு - 100 மிலி

இவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து அதனுடன் 300 மிலி தேனை சேர்த்து பதமாகக் காய்ச்சி இறக்கி வைத்துக்கொண்டு தினமும் காலை மாலை இருவேளையும் 200 மிலி தண்ணீரில் 15 மிலி அளவு கலந்து அருந்தி வந்தால் முகம் மற்றும் உடல் பளபளக்கும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum