சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

இலக்கியத்தில் முருகன் Khan11

இலக்கியத்தில் முருகன்

3 posters

Go down

இலக்கியத்தில் முருகன் Empty இலக்கியத்தில் முருகன்

Post by rammalar Thu 3 Jul 2014 - 2:19

இலக்கியத்தில் முருகன் Murugan3-300x181
-
-
முருகப் பெருமான் வரலாறு பற்றி முதன் முதலாகத்
தமிழில் படைக்கப் பெற்ற இலக்கியம்,
‘திருமுருகாற்றுப் படை’ ஆகும். பெரும் புலவர் நக்கீரர்,
முருகன் அருள் பெற்றுப் படைத்த சங்க இலக்கியமான
திருமுருகாற்றுப் படை, முருகப் பெருமான் கோயில்
கொண்டுள்ள ஆறு படை வீடுகளைப் பற்றித் தெளிவாக
எடுத்துக் கூறுகின்றது.

முருகன் அருள் பெற்ற புலவர், மற்றோர் புலவரை
முருகனிடம் ஆற்றுப் படுத்துவதே திருமுருகாற்றுப்
படை ஆகும். இதனால், திருமுருகாற்றுப் படைக்குப்
‘புலவர் ஆற்றுப் படை’ என்ற வேறு பெயரும் உண்டு.

‘இயற்கை அழகே முருகன்’ என்பது நக்கீரரின்
அழுத்தமான எண்ணமாகும். அதனால் முருகப்
பெருமானின் அழகைக் ‘கை புனைந்து இயற்றாக்
கவின் பெரு வனப்பு’ என்று கொண்டாடுவார்.

பழந்தமிழ் இலக்கண நூலாகத் திகழும் தொல்காப்பியர்
இயற்றிய தொல்காப்பியம், முருகப் பெருமானை
‘சேயோன்’ என்ற பெயரால் அழைக்கிறது.
‘சேயோன் மேய மைவரை உலகம்’ என்பது
தொல்காப்பிய சூத்திரத்தில் காணப்பெறும் தொடராகும்.
‘சேயோன்’ என்பதற்கு ‘இளையவன்’ என்ற பொருளும்
உண்டு. இளமை எங்குள்ளதோ அங்கே அழகும் கொஞ்சி
விளையாடும். ‘மைவரை உலகம்’ என்றால்
‘மழை மேகம் சூழ்ந்த மலைப் பகுதி’ என்பது பொருள்.

மலையும் மலை சார்ந்த பகுதியையும் குறிஞ்சித் திணை
என்று கூறுகிறது தொல்காப்பியம்.
ஆம்! குன்றிருக்கும் இடம் எல்லாம் குமரன் நின்று அருள்
பாலிப்பான்.
‘ஆற்றுப் படை’ என்பதே ‘ஆறுபடை’ எனத் திரிந்து
விட்டது என்றொரு கருத்துண்டு.
-
———————————–
–வாணிஸ்ரீ சிவகுமார் -(தினமணி)
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24110
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இலக்கியத்தில் முருகன் Empty Re: இலக்கியத்தில் முருகன்

Post by jasmin Thu 3 Jul 2014 - 12:30

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பது முருகனை வணங்கும் ஹிந்துக்களின் நம்பிக்கை
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

இலக்கியத்தில் முருகன் Empty Re: இலக்கியத்தில் முருகன்

Post by ராகவா Thu 3 Jul 2014 - 12:41

jasmin wrote:குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பது முருகனை வணங்கும் ஹிந்துக்களின் நம்பிக்கை
உண்மையக்கா..
செந்தமிழ்நாட்டின் சொந்தக்கடவுள் முருகன். மலையும், மலை சார்ந்த பகுதியுமான குறிஞ்சி நிலப்பகுதியின் தலைவன் முருகனே. குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று குவலயத்தோர் வழிபட்ட வரலாறு சங்க இலக்கியங்கள் பல இடங்களில் சொல்கின்றன. முருகவேளுக்கு உரிய மந்திரமாக சடாச்சரம் (ஆறெழுத்து) விளங்குகிறது. அது சரவணபவ என்னும் உயரிய மந்திரமே. முருகப்பெருமானுக்குரிய விரதங்களில், செவ்வாய், சஷ்டி, மற்றும் கிருத்திகை விரதங்கள் முக்கியமானவை. உலகெங்கும் குமாரக்கடவுளுக்கு கோயில்கள் இருந்தாலும், தமிழ்நாட்டில் உள்ள அறுபடை வீடுகளும் மிக சிறப்பானவை. முருகனின் சிறப்பான செயல்களை விளக்கும் வண்ணம் அமைந்தவை அறுபடை வீடுகள்.

1. தந்தைக்கு மந்திரம் சொன்ன சுவாமிமலை
2.பழம் வேண்டி ஆண்டியாய் நின்ற பழனி மலை
3. சூரபத்மனை போரிட்டு வென்ற திருச்செந்தூர்
4.சினம் தணிந்து தேவயாணியை திருமணம் புரிந்த திருப்பரங்குன்றம்
5.குறமகள் வள்ளியை திருமணம் புரிந்த திருத்தணிகை
6.இருதேவியரோடு அருளாட்சி புரிந்து வரும் பழமுதிர்சோலை என்பவை அறுபடை வீடுகளாம்.

சிவனாருக்கும், அன்னை உமைக்கும் இடையே சிறுகுழந்தையாய் குமரக்கடவுள் வீற்று இருக்கும் சோமாஸ்கந்த வழிபாடு, மற்றும் விழா புறப்பாடு தமிழகத்தில் மிகப்பழமையானதும், சிறப்பானதுமாகும்.

உற்சவர் மயில் மீது வள்ளி,தேவசேனா தேவியரோடு வரும் அழகு காட்சியாகும்.

பாரத தேசம் மட்டுமின்றி, இலங்கையின் கதிர்காமம், நல்லூர்,மாவிட்டபுரம்,பகுதிகளிலும், மலேசிய, சிங்கப்பூர் நாடுகளிலும் முருக வழிபாடு வெகு சிறப்பானது.

தமிழர் எங்கெல்லாம் இருக்கின்றார்களோ, அங்கெல்லாம் முருகனுக்கு கோயில் உண்டென்று சொல்லலாம்.

இலக்கியத்தில் முருகன் 10458779_302051036621170_4732893214340128441_n
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இலக்கியத்தில் முருகன் Empty Re: இலக்கியத்தில் முருகன்

Post by jasmin Thu 3 Jul 2014 - 12:45

நல்ல செய்தி ...தமிழரின் கடவுள் முருகன் என்பதும் உண்மைதான் அவருக்கு தமிழ் கடவுள் என்ற அடை பெயரே உண்டல்லவா
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

இலக்கியத்தில் முருகன் Empty Re: இலக்கியத்தில் முருகன்

Post by ராகவா Thu 3 Jul 2014 - 12:47

jasmin wrote:நல்ல செய்தி ...தமிழரின் கடவுள் முருகன் என்பதும் உண்மைதான் அவருக்கு தமிழ் கடவுள் என்ற அடை பெயரே உண்டல்லவா
முருகப்பெருமான் தமிழ்கடவுள் என்று ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு உதாரணங்கள் பல உள்ளன. உயிரெழுத்துக்கள் பன்னிரெண்டும் தோள்களாய், மெய்யெழுத்து பதிணெட்டும் கண்களாய், இன எழுத்து ஆறும் முகங்களாய் ஆய்த எழுத்து ஒன்று இறைவனின் வேலாய் காணப்படுகிறது.

ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இலக்கியத்தில் முருகன் Empty Re: இலக்கியத்தில் முருகன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum