Latest topics
» பாட்டி - கவிதைby rammalar Today at 12:04
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15
தேநீர் வரலாறு
2 posters
Page 1 of 1
தேநீர் வரலாறு
டீ இன்றி விடியாது பொழுது எனப் புதுமொழியே சொல்லலாம். அந்தளவுக்கு அனேக மக்களின் விடியலை உறக்கத்திலிருந்து உற்சாகத்துக்கு மாற்றும் முதல் பானம் தேநீர்!
தேயிலையின் பூர்வீகம் சீனா. தேயிலையை சீனர்கள் மருத்துவ குணமுள்ள மூலிகையாகவே முதலில் அறிந்திருந்தனர். பின் சீனாவுக்கு புத்த மதத்தைக் கற்க வந்த ஜப்பானிய புத்தமதத் துறவிகள் மூலமாக கி.மு. 800களில் தேயிலை ஜப்பானுக்கு பரவியது. ஜப்பானிலிருந்து டச்சுக்காரர்கள் வழியாக இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் தேயிலை அறிமுகம் ஆனது. 1840-50களில் இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் வரவழைக்கப்பட்ட தேயிலை இலங்கையில் சோதனை முயற்சியாக பயிரிடப்பட்டது. அதன் பிறகு தென் கிழக்காசியா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு தேயிலை பரவியது.
சீனச் சக்கரவர்த்தி ஷென் நுங் பருகுவதற்காக வைக்கப்பட்ட சுடுநீரில் தேயிலைச் செடியின் இலைகள் பறந்து வந்து விழவும், அந்த நீரைப் பருகிய சக்கரவர்த்தி ஒரு வித உற்சாகமான சுகானுபவம் கிடைப்பதை உணர்ந்தார். இச்சம்பவத்தைத் தொடர்ந்துதான் டீயை ஒரு பானமாகக் குடிக்கிற பழக்கம் அறிமுகமானது என்ற வரலாற்றுத் தகவலும் உண்டு. இந்தியாவின் தேயிலைத் தொழிலுக்கு வயது சுமார் 180 ஆண்டுகள். உலகளவில் தேயிலை உற்பத்தியில் இந்தியாவுக்கு 2வது இடம்.
காபியுடன் ஒப்பிடும்போது, தேநீருக்கு மருத்துவக் குணங்கள் சற்று அதிகம் என்பது தெரிகிறது. டீ குடிப்பவர்களுக்கு புற்றுநோய், இதய நோய், அல்சீமர் நோய், கல்லீரல் நோய் போன்றவை பாதிக்கிற வாய்ப்புகள் குறைவு என்கிறது ஒரு புள்ளிவிவரம். சீனர்களின் சுறுசுறுப்புக்கும் இளமைக்கும் நீண்ட வாழ்வுக்கும் அவர்கள் தண்ணீர் மாதிரி நாள் முழுக்க கிரீன் டீ பருகுவதே காரணம். எல்லாவற்றுக்கும் காரணம் தேயிலையில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடன்ட். தேயிலைத் தகவல்களுக்கு மறுபடி வருவோம்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: தேநீர் வரலாறு
அதற்கு முன் தேநீர் ருசிக்கிற டீ டேஸ்ட்டிங் செரிமனிக்கு சென்று வரலாமா?
மேல்தட்டு பெரிய மனிதர்கள் சூழ, ஒரு நட்சத்திர ஓட்டலில், பிரபல டீ டேஸ்ட்டர் முன்னிலையில் பலவிதமான தேநீர் சுவைகளை ருசிக்கும் இந்த நிகழ்ச்சி யில் உண்மையில் என்னதான் நடக்கும் என்கிற கேள்வி பலருக்கும் இருக்கும். ஸ்ப்ளென்டா சார்பில் தென்னிந்தி யாவின் முன்னணி டீ டேஸ்ட்டர்களில் ஒருவரான ஸ்ரீராம் நாராயண ஸ்வாமி முன்னிலையில் நடத்தப்பட்ட டீ டேஸ்ட்டிங் செரிமனியை நேரில் காண்கிற வாய்ப்பு அமைந்தது. 4 விதமான தேநீரை நம் கண் முன்னே தயாரித்து ருசித்துப் பார்த்து வித்தியாசம் கண்டுபிடிக்கச் சொன்னார் ஸ்ரீராம்.
முதலில் ஒயிட் டீ. ஒயிட் டீ என்பது தேயிலை இனமல்ல... அது ஒரு பிராசஸ். இரண்டு இலைகளுடன் ஒரு மொட்டும் சேர்த்துப் பறிக்கப்படுகிற இந்த ஒயிட் டீ மிகவும் விலை உயர்ந்த தேயிலைகளில் ஒன்றாம். மிகவும் மிதமான வாசனை மற்றும் சுவையில் இருக்கிற அந்த டீயை எப்படிப் பருக வேண்டும் என்றும் விளக்கினார் ஸ்ரீராம்... ‘‘உங்க பலத்தையெல்லாம் திரட்டி, ஆழமா உறிஞ்சி, ஒரு நொடி தொண்டையில நிறுத்தி, அப்புறம் விழுங்குங்க. அப்பதான் டீயோட உண்மையான மணமும் சுவையும் தெரியும்!’’ அடுத்ததும் ஒயிட் டீ வகைதான்.
ஆனால், இது இலைகளைத் தவிர்த்து வெறும் மொட்டுக்களை மட்டுமே பறித்துத் தயாரிக்கப்பட்டதாம். முதல் வகையில் ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகம் என்றால், இதிலோ அது மிகமிக அதிகமாம். விலையைக் கேட்டால் மயங்கி விழுவீர்கள். ஒரு கிலோ ஒயிட் டீயின் விலை ரூ.10 முதல் 12 ஆயிரங்கள்... இந்த டீ, சரும நிறத்தைக் கூட்டும் குணம் கொண்டதாம்.அதனால்தான் சிவப்பழகு கிரீம் தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு இந்த டீயை கிலோ கிலோவாக அள்ளிச் செல்கின்றனவாம்.
அடுத்து ஸ்ரீராம் நமக்கு ருசிக்கக் கொடுத்தது கிரீன் டீ. இதிலும் ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகம் உள்ளதாம். கிரீன் டீயை குடித்த பிறகு நாவில் தங்கும் லேசான கசப்பும் கடுப்பும்தான் அதன் ஸ்பெஷலே!கடைசியாக ஆர்த்தோடாக்ஸ் வகை டீ. 6 ஆயிரம் அடிகள் உயரத்தில் விளைவிக்கப்படுகிற இதை பிளாக் டீயாகவோ, பால் சேர்த்தோ விருப்பப்படி பருகலாம். டீ சுவைக்கிற நிகழ்ச்சியின் முடிவில் ஸ்ரீராம் சொன்ன விஷயங்கள் டீ பிரியர்கள் கவனிக்க வேண்டியவை.
‘‘தமிழ்நாட்டுல, குறிப்பா சென்னை மக்கள்ல பலரும் காபி பிரியர்களா இருக்காங்க. டீ குடிக்கிறவங்களுக்கும் அது நல்ல கலரா இருக்கணுங்கிற விருப்பம் இருக்கு. அப்படி சேர்க்கப்படறது செயற்கையான கலர். அதனால உங்க மக்களுக்கு நல்ல, தரமான டீ வகைகளைப் பத்தி அதிகம் தெரியலை. பிரபலமான பிராண்ட் பலதும் ரெண்டாம்தர தேயிலையைத்தான் விற்பனைக்கு அனுப்பறாங்க. டீயோட உண்மையான மணம் மற்றும் சுவையோட குடிக்கணும்னு ஆசைப்பட்டீங்கன்னா, பிரத்யேக டீ விற்பனைக் கடைகள்ல குடிச்சுப் பாருங்க. சென்னையிலயேகூட ‘டீ பொக்கே’ கான்செப்ட் வந்திருச்சு. அந்த மாதிரி இடங்கள் உங்கள் விருப்பத்தை நிறைவேத்தும்’’ என்றார்.
சுவை பார்க்கும் படலம் முடிந்ததும், ஸ்ரீராமிடம் சில தேநீர் கேள்விகளை முன் வைத்தோம். ஒரு நாளைக்கு 200 கப் தேநீரை சுவைக்கிறதும், அத்தனை ருசியையும் நினைவுல வச்சுக்கிட்டு, சரி, தவறு களைச் சொல்றதும் எப்படி சாத்தியம்? ‘‘அது 35 வருஷ அனுபவம் தந்த திறமை. எத்தனை கப் குடிச்சாலும், எந்த கப்ல என்ன கோளாறு, குறைங்கிறதை எங்களைப் போல டீ டேஸ்ட்டர்களால மிகச்சரியா சொல்லிட முடியும். எங்களோட சுவை நரம்புகள் அதுக்கேத்தபடி பழகியிருக்கும். அந்தக் கோளாறு தயாரிப்பு சம்பந்தப்பட்டதாங்கிற வரைக்கும் துல்லியமா கண்டுபிடிக்க முடியும். இதுக்காக பிரத்யேக படிப்பே இருக்கு.
பெங்களூருல உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிளான்ட்டேஷன் மேனேஜ்மென்ட், டீ டேஸ்ட்டிங் படிப்பை சொல்லிக் கொடுக்கிறாங்க. விருப்பமிருக்கிற யார் வேணாலும் படிக்கலாம். ஒரே ஒரு கண்டிஷன்...டீ டேஸ்ட்டர்ஸ் ஸ்மோக் பண்ணக் கூடாது, மசாலா சேர்த்த சாப்பாடு சாப்பிடக் கூடாது. அப்பதான் அவங்களோட சுவை நரம்புகள் ஷார்ப்பா இருக்கும்!’’
மேல்தட்டு பெரிய மனிதர்கள் சூழ, ஒரு நட்சத்திர ஓட்டலில், பிரபல டீ டேஸ்ட்டர் முன்னிலையில் பலவிதமான தேநீர் சுவைகளை ருசிக்கும் இந்த நிகழ்ச்சி யில் உண்மையில் என்னதான் நடக்கும் என்கிற கேள்வி பலருக்கும் இருக்கும். ஸ்ப்ளென்டா சார்பில் தென்னிந்தி யாவின் முன்னணி டீ டேஸ்ட்டர்களில் ஒருவரான ஸ்ரீராம் நாராயண ஸ்வாமி முன்னிலையில் நடத்தப்பட்ட டீ டேஸ்ட்டிங் செரிமனியை நேரில் காண்கிற வாய்ப்பு அமைந்தது. 4 விதமான தேநீரை நம் கண் முன்னே தயாரித்து ருசித்துப் பார்த்து வித்தியாசம் கண்டுபிடிக்கச் சொன்னார் ஸ்ரீராம்.
முதலில் ஒயிட் டீ. ஒயிட் டீ என்பது தேயிலை இனமல்ல... அது ஒரு பிராசஸ். இரண்டு இலைகளுடன் ஒரு மொட்டும் சேர்த்துப் பறிக்கப்படுகிற இந்த ஒயிட் டீ மிகவும் விலை உயர்ந்த தேயிலைகளில் ஒன்றாம். மிகவும் மிதமான வாசனை மற்றும் சுவையில் இருக்கிற அந்த டீயை எப்படிப் பருக வேண்டும் என்றும் விளக்கினார் ஸ்ரீராம்... ‘‘உங்க பலத்தையெல்லாம் திரட்டி, ஆழமா உறிஞ்சி, ஒரு நொடி தொண்டையில நிறுத்தி, அப்புறம் விழுங்குங்க. அப்பதான் டீயோட உண்மையான மணமும் சுவையும் தெரியும்!’’ அடுத்ததும் ஒயிட் டீ வகைதான்.
ஆனால், இது இலைகளைத் தவிர்த்து வெறும் மொட்டுக்களை மட்டுமே பறித்துத் தயாரிக்கப்பட்டதாம். முதல் வகையில் ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகம் என்றால், இதிலோ அது மிகமிக அதிகமாம். விலையைக் கேட்டால் மயங்கி விழுவீர்கள். ஒரு கிலோ ஒயிட் டீயின் விலை ரூ.10 முதல் 12 ஆயிரங்கள்... இந்த டீ, சரும நிறத்தைக் கூட்டும் குணம் கொண்டதாம்.அதனால்தான் சிவப்பழகு கிரீம் தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு இந்த டீயை கிலோ கிலோவாக அள்ளிச் செல்கின்றனவாம்.
அடுத்து ஸ்ரீராம் நமக்கு ருசிக்கக் கொடுத்தது கிரீன் டீ. இதிலும் ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகம் உள்ளதாம். கிரீன் டீயை குடித்த பிறகு நாவில் தங்கும் லேசான கசப்பும் கடுப்பும்தான் அதன் ஸ்பெஷலே!கடைசியாக ஆர்த்தோடாக்ஸ் வகை டீ. 6 ஆயிரம் அடிகள் உயரத்தில் விளைவிக்கப்படுகிற இதை பிளாக் டீயாகவோ, பால் சேர்த்தோ விருப்பப்படி பருகலாம். டீ சுவைக்கிற நிகழ்ச்சியின் முடிவில் ஸ்ரீராம் சொன்ன விஷயங்கள் டீ பிரியர்கள் கவனிக்க வேண்டியவை.
‘‘தமிழ்நாட்டுல, குறிப்பா சென்னை மக்கள்ல பலரும் காபி பிரியர்களா இருக்காங்க. டீ குடிக்கிறவங்களுக்கும் அது நல்ல கலரா இருக்கணுங்கிற விருப்பம் இருக்கு. அப்படி சேர்க்கப்படறது செயற்கையான கலர். அதனால உங்க மக்களுக்கு நல்ல, தரமான டீ வகைகளைப் பத்தி அதிகம் தெரியலை. பிரபலமான பிராண்ட் பலதும் ரெண்டாம்தர தேயிலையைத்தான் விற்பனைக்கு அனுப்பறாங்க. டீயோட உண்மையான மணம் மற்றும் சுவையோட குடிக்கணும்னு ஆசைப்பட்டீங்கன்னா, பிரத்யேக டீ விற்பனைக் கடைகள்ல குடிச்சுப் பாருங்க. சென்னையிலயேகூட ‘டீ பொக்கே’ கான்செப்ட் வந்திருச்சு. அந்த மாதிரி இடங்கள் உங்கள் விருப்பத்தை நிறைவேத்தும்’’ என்றார்.
சுவை பார்க்கும் படலம் முடிந்ததும், ஸ்ரீராமிடம் சில தேநீர் கேள்விகளை முன் வைத்தோம். ஒரு நாளைக்கு 200 கப் தேநீரை சுவைக்கிறதும், அத்தனை ருசியையும் நினைவுல வச்சுக்கிட்டு, சரி, தவறு களைச் சொல்றதும் எப்படி சாத்தியம்? ‘‘அது 35 வருஷ அனுபவம் தந்த திறமை. எத்தனை கப் குடிச்சாலும், எந்த கப்ல என்ன கோளாறு, குறைங்கிறதை எங்களைப் போல டீ டேஸ்ட்டர்களால மிகச்சரியா சொல்லிட முடியும். எங்களோட சுவை நரம்புகள் அதுக்கேத்தபடி பழகியிருக்கும். அந்தக் கோளாறு தயாரிப்பு சம்பந்தப்பட்டதாங்கிற வரைக்கும் துல்லியமா கண்டுபிடிக்க முடியும். இதுக்காக பிரத்யேக படிப்பே இருக்கு.
பெங்களூருல உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிளான்ட்டேஷன் மேனேஜ்மென்ட், டீ டேஸ்ட்டிங் படிப்பை சொல்லிக் கொடுக்கிறாங்க. விருப்பமிருக்கிற யார் வேணாலும் படிக்கலாம். ஒரே ஒரு கண்டிஷன்...டீ டேஸ்ட்டர்ஸ் ஸ்மோக் பண்ணக் கூடாது, மசாலா சேர்த்த சாப்பாடு சாப்பிடக் கூடாது. அப்பதான் அவங்களோட சுவை நரம்புகள் ஷார்ப்பா இருக்கும்!’’
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: தேநீர் வரலாறு
கலப்பட டீயை எப்படி கண்டு பிடிக்கிறது?
‘‘ரொம்ப சிம்பிள். நீங்க உபயோகிக்கிற டீ தூளை கொஞ்சமா எடுத்து அரை டம்ளர் பச்சைத் தண்ணியில போடுங்க. கலப்பட டீயா இருந்தா, டீ தூளோட கலர், தண்ணிக்குள்ள இறங்கறதைப் பார்ப்பீங்க. கலப்படமில்லைன்னா, அப்படியே நிறம் மாறாம இருக்கும்.’’
சுவையான டீ தயாரிக்கிறது எப்படி?
‘‘100 மி.லி. தண்ணீரைக் கொதிக்க வையுங்க. கொதிச்சதும் அதுல 1 டீஸ்பூன், அதாவது, 5 கிராம் டீ தூளைச் சேர்த்து நல்லா கொதிக்க வையுங்க. தளதளனு கொதிச்சதும், அதுல பால் சேருங்க. ஒரு நிமிஷம் கொதிக்கவிட்டு இறக்கி, சர்க்கரை சேர்த்துக் குடிச்சுப் பாருங்க... பிரமாதமா இருக்கும். சிலர் டீ டிகாக்ஷனை தனியா தயாரிச்சு வச்சுக்கிட்டு, அதுல பால் சேர்த்துக் குடிப்பாங்க. அதுல டீயோட உண்மையான மணமும் சுவையும் மட்டுப்பட்டு, பாலோட சுவைதான் ஆதிக்கம் செலுத்தும்...’’
நன்றி : தினகரன்
‘‘ரொம்ப சிம்பிள். நீங்க உபயோகிக்கிற டீ தூளை கொஞ்சமா எடுத்து அரை டம்ளர் பச்சைத் தண்ணியில போடுங்க. கலப்பட டீயா இருந்தா, டீ தூளோட கலர், தண்ணிக்குள்ள இறங்கறதைப் பார்ப்பீங்க. கலப்படமில்லைன்னா, அப்படியே நிறம் மாறாம இருக்கும்.’’
சுவையான டீ தயாரிக்கிறது எப்படி?
‘‘100 மி.லி. தண்ணீரைக் கொதிக்க வையுங்க. கொதிச்சதும் அதுல 1 டீஸ்பூன், அதாவது, 5 கிராம் டீ தூளைச் சேர்த்து நல்லா கொதிக்க வையுங்க. தளதளனு கொதிச்சதும், அதுல பால் சேருங்க. ஒரு நிமிஷம் கொதிக்கவிட்டு இறக்கி, சர்க்கரை சேர்த்துக் குடிச்சுப் பாருங்க... பிரமாதமா இருக்கும். சிலர் டீ டிகாக்ஷனை தனியா தயாரிச்சு வச்சுக்கிட்டு, அதுல பால் சேர்த்துக் குடிப்பாங்க. அதுல டீயோட உண்மையான மணமும் சுவையும் மட்டுப்பட்டு, பாலோட சுவைதான் ஆதிக்கம் செலுத்தும்...’’
நன்றி : தினகரன்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» டீ கடை தேநீர்
» தேநீர் பருகுங்கள்!
» பாஸ்டன் தேநீர் விருந்து
» தேநீர் பொழுதுகள்- கவிதை
» வலி நீக்கும் மூலிகைத் தேநீர்
» தேநீர் பருகுங்கள்!
» பாஸ்டன் தேநீர் விருந்து
» தேநீர் பொழுதுகள்- கவிதை
» வலி நீக்கும் மூலிகைத் தேநீர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|